Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label க்ரைம். Show all posts
Showing posts with label க்ரைம். Show all posts

July 30, 2017

காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது: வரதட்சணை கொடுமையால் மருத்துவர் மனைவி கொலை வழக்கு !


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் மருத்துவரின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் இளஞ்சேரனின் மனைவி திவ்யா கடந்த 17 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து நடத்தப்பட முதற்கட்ட விசாரணையில் திவ்யா வரதட்சணை கொடுமையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, திவ்யாவின் கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த காவலர்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடித்தனர்.
இந்த நிலையில் திவ்யா கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்த காவலர்கள் , திருச்சி சிறையில் இருந்த திவ்யாவின் கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து மூன்று பேரையும் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆனால் நீதிபதி மூன்று பேரையும் 2 நாட்கள்  காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், திவ்யா கொலையில் மாமியார் ராணியின் அண்ணனும், திருவாரூர் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும், கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை தெரிய வந்தது.
கொலை நடைபெற்ற அன்று திவ்யா வீட்டில் தனியாக இருக்கும் போது அங்கு சென்ற ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூரை சேர்ந்த செந்தில்குமார் , முத்தழகன் ஆகியோர் திவ்யாவை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

திவ்யாவை கொலை செய்துவிட்டு இளஞ்சேரனுக்கு கூடுதல் வரதட்சணையுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் மூன்று பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

July 20, 2017

மன்னார்குடியில் இளம்பெண் அடித்துகொலை: வரதட்சணைக் கொடுமை ! - வீடியோ


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இளஞ்சேரன். இவர் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் என்பவரின் மகளுமான திவ்யாவிற்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு இரண்டரை வயது மகன் இருக்கிறான்.

அவர்களின் திருமணத்தின் போது 100 சவரன் நகையோடு ரூ.10 லட்சம் பணம்  மற்றும் அரைகிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்ற இளஞ்சேரனுக்கு பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஆனாலும், தன்னுடைய மகன் மருத்துவர் என்பதால், இன்னும் அதிகமாக வரதட்சணை தரவேண்டும் என இளஞ்சேரனின் பெற்றோர், அவ்வப்போது திவ்யா குடும்பத்தினரை வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும், திவ்யாவையும் கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய இளஞ்சேரன் தனது மனைவி திவ்யா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு, அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே திவ்யாவின் முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், இளஞ்சேரனின் பெற்றொர், அவரை அடித்து கொலை செய்துவிட்டனர், அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திவ்யாவின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இளஞ்சேரனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், திவ்யாவை அடித்து துன்புறுத்தியதில் அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இளஞ்சேரன், அவரின் பெற்றோர் என அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

July 7, 2017

பேருந்து நிலையத்தில் தீயில் கருகிய பரிதாபம்: காதலனை நம்பி வந்த பெண் !


தமிழகத்தின் பண்ருட்டியில் காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பேருந்து நிலையத்தில் கடந்த 1ம் திகதி பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்ததுடன் பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் சக்தி என்றும், சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி என்ற வாலிபரை காதலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பேஸ்புக்கின் மூலம் காதல் மலரவே, இருவரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஊர் ஊராக சுற்றியுள்ளனர்.

பண்ருட்டி அருகே சாலையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இரு வீட்டாரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தற்கொலை செய்து கொள்ள சக்தி முடிவெடுத்தார்.

ஆனால் இதற்கு முரளி சம்மதம் தெரிவிக்காததுடன், சக்தியின் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து முரளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, இவர் கிருஷ்ணகிரியில் உள்ள செல்போன் கடையில் இருப்பது தெரியவந்தது.

விரைந்து சென்ற அதிகாரிகள் முரளியை கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

July 6, 2017

தம்பி மனைவியுடன் செல்ஃபி எடுத்த அண்ணனை ஆத்திரத்தில் போட்டுத் தள்ளிய தம்பி! சென்னையில் பரபரப்பு!!


தனது மனைவியுடன் எடுத்த செல்ஃபியை மது விருந்தின் போது தன்னிடமே அண்ணன் காட்டியதால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்துள்ளார் தம்பி.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டிகிராமணி 1வது தெருவில் தனது மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார் 33 வயது புலேந்திரன். இவரது அண்ணன் ராஜேந்திரன் மும்பையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்கள் முன்பு பணி மாறுதல் கிடைத்து சிதம்பரம் வந்துள்ள ராஜேந்திரனின் மனைவி சுஜாதா மும்பையில் வசித்து வருகிறார். ராஜேந்திரன் மற்றும் புலேந்திரனின் கடைசி தம்பி வெங்கட்ரமணா தனது மனைவி பாவனாவுடன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் வெங்கட்ரமணா 20 நாட்கள் விடுப்பில் சென்னை வந்துள்ளார். சில நாட்களாக மூத்த தம்பி புலேந்திரன் வீட்டில் தங்கி இருந்துள்ளார் ராஜேந்திரன்.

இந்நிலையில் நேற்று இரவு கடைசி தம்பி வெங்கட்ரமணா அழைத்தன் பேரில் அண்ணன், தம்பிகள் மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ராஜேந்திரன், வெங்கட்ரமணாவின் மனைவி பாவனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட்ரமணா செல்போனிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

மனைவியுடன் அண்ணன் இருக்கும் செல்ஃபியை பார்த்ததும் வெங்கட்ரமணா ஆத்திரத்தில் அண்ணன் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அருகில் இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை, வெங்கட்ரமணா குத்திக் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திராவின் உடலைக் கைப்பற்றி, வெங்கட்ரமணாவை கைது செய்துள்ளனர். கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை திட்டமிட்டே நடத்தப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அல்லது மனைவியுடன் அண்ணன் நெருங்கிப் பழகுவது பிடிக்காமல் ஆத்திரத்தில் நடந்த கொலையா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் குண்டு வீசிய விஎச்பி யோகா மாஸ்டர் நாதாரி சரவணக்குமாரின் பின்னணி என்ன !


கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் வன்முறை பிரிவின் சரவணக்குமார் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த  சரவணக்குமார் ( வயது 31 ) இவர் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருக்கிறார். படித்து முடித்தவுடன் லண்டன் சென்று அங்கு பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு இந்தியா திரும்பியவர், ஆர்எஸ்எஸ், விஸ்வஇந்து பரிஷத் போன்ற அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக இயங்கி வந்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் ன் உட்பிரிவான விஸ்வஇந்து பரிஷத் அமைப்பின் கோவை வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வந்தவர். ஏற்கனவே மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்களுடனான மோதலுக்கு தூபமிட்டு முன்னணியில் இருந்து வருபவர் ஆவார்.

குறிப்பாக ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல்களை விமர்சிப்பவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதுதான் இவர்களுக்கான பிரதான பணி. இந்த தாக்குதல் என்பது முதலில் விமர்சிப்பவர்கள் குறித்து தவறான அவதூறு தகவல்களை பொதுமக்கள் மத்தியில் பரப்புவது. குறிப்பாக கடவுள் நம்பிக்கையுடையவர்களிடம்  கடவுளுக்கு எதிரிகள் என்றும், அவர்களை அழிப்பதுதான் கடவுளுக்கு செய்யும் காணிக்கை என்றும் வெறியூட்டுவது. அதன் பின்னர் யோக பயிற்சி என்ற பெயரில் வருபவர்களிடம் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல், முற்போக்காளர்களுக்கெதிராக விஷத்தை ஏற்றுவது இவர்களின் பிரதான பணியாக இருந்து வந்திருக்கிறது.

இந்த விஷ வித்துகளை விருட்சமாக்கும் வகையில், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலவச யோக பயிற்சி என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளித்து வந்திருக்கிறார். பயிற்சியின் போது, யோகா பெயரில் வருபவர்களிடம் முற்போக்காளர்களுக்கு எதிரான கருத்துகளை திணித்ததுடன், மதவெறியூட்டவும் செய்திருக்கிறார். முற்போக்காளர்களை எதிர்கொள்ள எப்படியெல்லாம் வன்முறையை கையாளுவது என்ற பயிற்சியையும் யோகாவின் ஒருபகுதியாக அளித்து வந்திருக்கிறார்.

இதற்கிடையில், தொடர்ந்து ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினரின் மதவெறி வன்முறைகளை அரங்கேற்ற விடாமல் அவ்வப்போது சிபிஎம் மக்களிடம் அம்பலப்படுத்தி வந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட போது, அதனை பயன்படுத்தி கோவை மாநகரத்தை வன்முறை களமாக மாற்ற பல்வேறு முயற்சிகள் பஜ்ரங்தள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. அதனை சிபிஎம் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து முறியடித்தது.  மேலும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் சிபிஎம் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தது. மேலும் சமீபத்தில் கோவை நகரம் முழுவதும் இலவச வீடு வாங்கித்தருவதாக பாஜகவினர் சாதாரண மக்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இதையும் பொதுமக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. இதில் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் குழுக்கள் கடுமையான ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாத நிலையில், சரவணக்குமார் தலைமையில் ஒரு குழுவினர் கோவையில் கூட்டம் நடத்தியிருக்கின்றனர். அதில் சிபிஎம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முதல் கட்டமாக பெட்ரோல் குண்டு வீசுவது என முடிவு செய்திருக்கின்றனர். அதற்காக முதற்கட்ட ஆலோசனை கூட்டம்  கோவை  இராமநாதபுரம் கொங்கு நகரில் உள்ள ஒரு விஎச்பி பிரமுகர் இல்லத்தில் நடந்திருக்கிறது. அதில் சரவணக்குமார் பங்கேற்று சில ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறார்.  அதன் பின்னர் வேறோரு இடத்தில் நடந்த இரண்டாம் கட்ட சதி திட்டத்தில் துல்லியமான தாக்குதலுக்கு திட்டமிட்டிருக்கின்றனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் சென்று தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவிப்பது என முடிவு செய்திருக்கின்றனர். அப்போது எப்போதும் அலுவலகத்தில் அதிகமான நபர்கள் இருப்பார்கள் அதற்காக பொருத்தமான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும் என தீர்மானித்திருக்கின்றனர். அதனடிப்படையில் மாவட்டக்குழு அலுவலகத்தில் எப்போது ஆட்கள் குறைவாக இருப்பார்கள் என கண்காணித்து வந்திருக்கின்றனர். அதில் அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில், அக்குழுவை சேர்ந்த ஒருவர் அதிகாலையில் அலுவலகம் வழியாக சென்று  அலுவலகத்தின் வெளியில் ஆட்கள் இல்லாததை உறுதி செய்திருக்கிறார். அந்த தகவலை பெட்ரோல் குண்டுடன், நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த சரவணக்குமார் குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து இருவர் மட்டும் நம்பர் பிளேட் இல்லாத டூவீலரில் முகத்தில் கர்சீப்பை ( கைக்குட்டை) கட்டிக்கொண்டு சென்றிருக்கின்றனர். பின்னர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் டீசல் டேங்க்கை குறிவைத்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

ஆனால் சரவணக்குமார் திட்டத்தின் படி பெட்ரோல் குண்டு வெடித்து எரிவதில், டீசல் டேங்க்கும் வெடித்து சிதறி மிகப்பெரிய சேதாரம் ஏற்படும். மேலும் அலுவலகத்தில் உள்ள நபர்களும் உயிரிழப்பார்கள் என எண்ணியிருக்கின்றனர். ஆனால் பெட்ரோல் குண்டை எறிந்ததில் குறி தவறி காரின் கதவு ஓரம் பட்டு கீழே விழுந்து வெடித்து எரிந்திருக்கிறது. இதில் காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல் சேதமடைந்தன.

இதையடுத்து விரைந்து வந்த கோவை காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்த கடைகளில் சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி விசாரணைக்கு கொண்டு சென்றனர். கொண்டு சென்ற சிறிது நேரத்தில், கோவையில் உள்ள பாஜக அலுவலகங்களுக்கு காவல்துறையினர் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

தொடர்ந்து, கைப்பற்றிய சிசிடிவி பதிவுகளை வைத்து, தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் இருந்து முன்னதாக அப்பகுதியில் சென்ற வாகனங்களை மிக நுட்பமாக ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் ஒரு வாகனத்தில் இரண்டு பேர் முகத்தில் கர்சீப் கட்டிக் கொண்டு, நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் சென்றது காவல்துறையினருக்கு  சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் அந்த வாகனம் தாக்குதல் நடத்திய பின்னர் எங்கு சென்றது என்ற ஆய்வில் ஈடுபடத்துவங்கினர்.  அதற்கு அந்த வாகனம் சென்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட  சிசிடிவி பதிவுகள் கைப்பற்றப்பட்டன. அதில் கோவையில் இருந்து தாக்குதல் நடத்தி விட்டு மேட்டுப்பாளையம் சென்றது சிசிடிவி பதிவில் அடிப்படையில்  உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த வாகனம் எங்கெங்கு செல்கிறது, எப்படி செல்கிறது என்று கண்காணிக்கப்பட்டது. அதில் ஜூன் 20ம் தேதி இரவு வாகனத்தில் மீண்டும் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு  பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த எண்ணை அடிப்படையாக கொண்டு வட்டார போக்குவரத்து துறையில் விசாரணை நடத்தி  தகவல்களை சேகரித்தனர்.

அதன் பின்னர் அனைத்து ஆவணங்களையும் ஒப்பிட்டு, சிசிடிவியின் பதிவில் உள்ளபடி வாகனத்தை இயக்கியவர், பெட்ரோல் குண்டு வீசியவர் இவர்கள்தான் என்பதையும் உறுதிசெய்தனர். அதன் பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று இரவு பெட்ரோல் குண்டு வீசிய குழுவை சேர்ந்த சரவணக்குமாரை காவல்துறையினர் கைது செய்து, பிரிவு 435 கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கோவையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில்  பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீச்சு சம்பவங்களிலும் இந்த ஆர்எஸ்எஸ் வன்முறை  கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்த புலன் விசாரணையும் ஒருபுறம் நடந்து வருகிறது.

June 21, 2017

சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவி மாயம்: கேரளாவில் பரபரப்பு


கேரளாவில் சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவியை கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளதாக அவரது காதலன் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சாமியாரின் மர்ம உறுப்பை மாணவி துண்டித்தார் என செய்திகள் வெளியாகின.
இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது மர்ம உறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இடனிடைய் இந்த வழக்கில் சாமியாரின் உறுப்பை தாம் துண்டிக்கவில்லை எனவும், காவல் துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மேலும் சமீபத்தில் மாணவி அளித்த மாற்று வாக்குமூலம் கூட சாமியார் ஆட்கள் மிரட்டுதலின் பேரில் தான் என்றும், சாமியாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியே அவரின் மர்ம உறுப்பை துண்டித்தது நிஜம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் அந்த மாணவியின் ஆண் நண்பர் ஐயப்பதாஸ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதல் திருமணம் செய்த ஜோடிகள்: 30 நிமிடங்களில் உறவினர்கள் செய்த செயல்




காதல் திருமணம் செய்த ஜோடிகள்: 30 நிமிடங்களில் உறவினர்கள் செய்த செயல

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து 30 நிமிடங்களே ஆன நிலையில், அவர்களை உறவினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(22). இவர் பி.பி.ஏ. முடித்து விட்டு, அங்குள்ள மினி பஸ் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் வடக்கூர் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன் பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் அபிநயா நேற்று வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு பாபநாசத்திற்கு சென்றுள்ளார். அங்கு ராஜேசும் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனால் அருகில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த விவரம் அபிநயாவின் குடும்பத்திற்க்கு தெரியவர உடனடியாக அவர்கள் தங்கள் உறவினர்கள் சிலரை அங்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொண்ட இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதில் சிலர் அவர்களை உருட்டுகட்டை வைத்தும் தாக்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.
இருவரையும் சமாதானப்படுத்தி விசாரணை செய்த பொலிசாரிடம், காதல் ஜோடிகள் தங்களுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததையும் தாங்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்டதையும் கூறியுள்ளனர்,
மேலும் அபிநயாவின் உறவினர்கள் ஜாதிப்பெயரை கூறி திட்டியதாக ராஜேஷ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

June 18, 2017

சென்னையில் பரபரப்பு.. அதிகாரிகள் அதிரடி ரெய்டில் அள்ள, அள்ள கிடைத்த ரூ.71 கோடி போதை மருந்து!


திருவள்ளூர்: செங்குன்றத்தில் கிலோ கணக்கில் 3 வகையிலான போதைப்பொருட்களை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைபற்றியுள்ளனர்.

மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 25 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் அந்த தனியார் கிடங்கில் வெளிநாடுகளுக்கு துணியை வடிவமைத்து கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று அவற்றை பேக்கிங் செய்யும் பணியும் அந்தத் தனியார் கிடங்கில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது வரை நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ மெத்தா பெட்டமைன், 90 கிலோ ஹெராயின், 56 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருள் குடோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்இந்தியாவிலேயே அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இவை தான். ஹெராயின் என்பது வழக்கமான போதைப்பொருளாக இருந்தாலும் மற்ற 2 போதை வஸ்துகளும் பார்ட்டிகளுக்காக பயன்படுத்தப்படுபவை. இது போன்ற உயர் ரக போதைப்பொருட்கள் இங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, வெளிநாடுகளுக்கு மறைத்து அனுப்பப்படுகிறதா என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதோடு, இதில் மேலும் பலரை இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுவரை மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 9 பேரிடம் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் எதிரில் தங்கைக்கு நேர்ந்த கொடுமை


திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண் ஒருவரை அவரது தாய்மாமனே கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (24), இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

தனலட்சுமியை தினமும் அவர் அண்ணன் முத்துக்குமார் பைக்கில் பள்ளிக்கு கொண்டு விடுவது வழக்கமாகும்.

அதன்படி நேற்று காலை இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, முத்துக்குமார் பைக்கை வழிமறித்துள்ளது.

காரில் நான்கு பேர் இருந்த நிலையில், மூன்று பேர் மட்டும் கீழே இறங்கினார்கள், அதில் ஒருவர் தான் வைத்திருந்த மிளகுப்பொடியை முத்துக்குமார் முகத்தில் வீசியுள்ளார்.

பின்னர் மூவரும் சேர்ந்து தனலட்சுமியை வலுக்கட்டாயமாக தூக்கி காரில் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து முத்துக்குமார் பொலிசில் புகார் அளிக்க தனலட்சுமியை, அவர் தாய் மாமன் கஜேந்திரன் (30) தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தியது தெரியவந்தது.

அதாவது, தனலட்சுமிக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கும் இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனலட்சுமியின் தாய் மாமன் அவரை திருமணம் செய்ய பெண் கேட்ட நிலையில், தனலட்சுமி குடும்பம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து தனலட்சுமியை கஜேந்திரன் கடத்தியுள்ளதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கஜேந்திரன் செல்போன் சிக்னலை வைத்து அவர் திருவாரூரில் இருப்பதை அறிந்த பொலிசார் அவர் காரை மடக்கி பிடித்தனர்.

காரில் இருந்த தனலட்சுமி மீட்கப்பட்ட நிலையில், துவாரகன்(21) அரவிந்த்(24) முகமது நசீர்(33) ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற கஜேந்திரனையும் பின்னர் பொலிசார் கைது செய்தார்கள்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் கஜேந்திரன் உள்பட 4 பேரையும் சிறையில் அடைத்தார்கள்.

பல பெண்களுடன் தொடர்பு: இளம்பெண்ணை கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் திருப்பங்கள்


தமிழ்நாட்டில் திருநாகேஸ்வரம் லாட்ஜில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் கொலை வழக்கில் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஞ்சாவூரின் திருநாகேஸ்வரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கடந்த 11ம் திகதி சுபாஷ்சந்திரபோஷ் என்பவர் பெண் ஒருவருடன் அறை எடுத்து தங்கினார்.

12ம் திகதி அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது, அன்று மாலை வரை கதவு திறக்கப்படாததால் மாற்று சாவியை கொண்டு அறையை திறந்த ஊழியர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் சடலமாக கிடந்தார், உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பெண் கும்பகோணம் திருப்புறம்பியத்தை சேர்ந்த கீர்த்திகா என்பதும், தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பதும் தெரியவந்தது.

இதனை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் குற்றவாளியான சுபாஷ்சந்திரபோஷை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சுபாஷ்சந்திரபோஷ் தற்கொலைக்கு முயன்றதுடன் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் பொலிசுக்கு தெரியவந்தது.

அங்கு சென்ற பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

சென்னையில் வேலை செய்து வரும் சுபாஷ்சந்திரபோஷ் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 1/2 வயதில் ஆண் குழந்தையொன்று உள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் தான் சுபாஷ்சந்திரபோசுக்கு, கீர்த்திகா என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இருவரும் ஒன்றாக சுற்றித் திரிந்துள்ளனர், அப்போது தான் சுபாஷ்சந்திரபோசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் கீர்த்திகா விலகி சென்றுள்ளார், இதில் ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஷ் கீர்த்திகாவை மிரட்டி லாட்சுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.

தானும் விஷம் வாங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது. இதையறிந்து கொண்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதற்கிடையே கீர்த்திகா கொலை செய்யப்பட்டது தெரிந்ததும் கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

June 17, 2017

ஆயுதப்படை போலீஸ்காரர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை - சந்தேகத்தால் நடந்த விபரீதம்


ஆயுதப்படை போலீஸ்காரர், தனது மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது நண்பருக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பி உள்ளார். பரபரப்பு கடிதமும் சிக்கியது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்தவர் பாலுதேவர். இவரது மகன் சவுந்திரபாண்டியன் (27). சென்னை வேப்பேரியில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த சசிகலா (23). இவருக்கும், சவுந்திரபாண்டியனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், சசிகலா, கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து சவுந்திரபாண்டியன், சென்னையிலேயே காவலர் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 3 மாதத்துக்கு முன் இருவரின் பெற்றோர்களும் சமரசம் பேசினர். அப்போது, தம்பதிக்கு அறிவுரை கூறி, ஒன்றாக வாழவேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் தனிக்குடித்தனம் வைத்தனர். ஆனாலும், அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது விரக்தியடைந்த சசிகலா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை, உறவினர்கள் மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சசிகலா வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று காலை சவுந்திரபாண்டியன், தனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ காட்சி அனுப்பினார்.

அதில், சவுந்திரபாண்டியன் ‘‘எனக்கும், என் மனைவிக்கும் வாழ பிடிக்கவில்லை. எங்களது சாவுக்கு காரணம் மாமா ஆறுமுகம், அவரது மனைவி பிரேமா, சசிகலாவின் சித்தப்பா கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், அம்மாஞ்சி ஐயா ஆகியோர்தான். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை அம்மா மன்னிக்க வேண்டும்’’ என பேசியது தெரிந்தது.

உடனே அந்த நண்பர், சவுந்திரபாண்டியனின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அனைவரும் அலறியடித்துக் கொண்டு சென்றனர். அங்கு கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஒரு அறையில் சவுந்திரபாண்டியன் தூக்கில் சடலமாக கிடந்தார்.

மற்றொரு அறையில் சசிகலா தூக்கு போட்டு, அந்த கயிறு அறுந்து கீழே சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சசிகலாவின் முகத்தில் பலத்த காயம் இருந்தது. இதனால், மனைவியை அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு, பின்னர் சவுந்திரபாண்டியன் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவலறிந்து எண்ணூர் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கடந்த 12ம் தேதி சசிகலா தற்கொலைக்கு முயன்றபோது, எண்ணூர் போலீசார் அவரிடம் விசாரித்தனர். அதில், ‘‘திருமணம் ஆன நாள் முதல், எனது கணவருக்கு என் மீது சந்தேகம் இருந்தது. இதனால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு என்னை அடித்து உதைத்தார். அவரின் சந்தேக புத்தியால் நான் தற்கொலைக்கு முயன்றேன்’’ என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் போலீசார்த, சவுந்திரபாண்டியனின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, சவுந்திரபாண்டியன் எழுதி வைத்த கடிதம் சிக்கியது.

அதில், ‘‘எல்லோருக்கும் வணக்கம். நான் போலீசாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இனிமேல் வாழ்வதற்கு முடியவில்லை. என்னுடைய சாவிற்கும், சசிகலாவின் சாவிற்கும் காரணம் எனது மாமா ஆறுமுகம், அவரது மனைவி பிரேமா.

முக்கியமாக என் மனைவியின் சித்தப்பா கிருஷ்ணன், அவரது மனைவி ரஞ்சிதம், அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் கார்த்தி, ஸ்ட்லீடி மற்றும் என் மனைவியின் அம்மாச்சி, அப்பா ஆகியோரே எங்களுடைய சாவிற்கு காரணம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு பா.சவுந்திரபாண்டியன்’’ என எழுதப்பட்டு இருந்தது.

June 16, 2017

ஆசிரியரை கண்டம் துண்டமாக வெட்டியது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்


வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரை அண்ணாமலை என்பவர் கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

ஆசிரியராக பணியாற்றும் லெட்சுமணனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில்தான் லெட்சுமணன் மர்மநபரால் கொலை செய்யப்பட்டார், இதுதொடர்பாக தீபக் மற்றும் வனிதா தம்பதியினரை பொலிசார் கைது செய்து விசாரித்ததில், வனிதாவின் கள்ளக்காதலன் அண்ணாமலைதான் இந்த செயலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள வாக்குமூலத்தில், லெட்சுமணனுக்கு கவிதா மற்றும் வனிதா ஆகிய இரு பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதில் பேருந்தில் வைத்து வனிதாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டோம், இதற்கிடையில் வனிதா மீண்டும் லெட்சுமணனுடன் நெருங்கி பழக ஆரபித்தார், இதனை விட்டுவிடுமாறு பலமுறை கூறியும் அவர் மறுத்துவிட்டார்.

மேலும் வனிதாவை, லெட்சுமணன் தனது பைக்கில் தினமும் அழைத்துச்சென்று வீட்டில் விட்டு வருவதும் தெரிந்தது.

கடந்த 12 ஆம் திகதி வனிதா வீட்டிற்கு திரும்பும் வழியில் மது அருந்திவிட்டு போதையில் காத்திருந்தேன்.

அப்போது வனிதாவை லெட்சுமணன் வழக்கம்போல் பைக்கில் அழைத்து வந்து தாயலூர் அடுத்த புத்தூர் அருகே மறைவான இடத்திற்கு சென்று உல்லாசமாக இருந்தனர்.

இதைப்பார்த்த நான் அரிவாளால் லெட்சுமணனை சரமாரியாக வெட்டியதில் அவர் அதே இடத்தில் இறந்தார், வனிதா அங்கிருந்து தப்பியோடினார் என்று பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

June 15, 2017

வேறு ஆணுடன் கள்ளக்காதல்: மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன்


மனைவிக்கு வேறு நபருடன் கள்ளக்காதல் இருந்ததை அறிந்த கணவர் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், இவர் மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஈஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேல்முருகன் ஈஸ்வரியை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலை கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன் ஈஸ்வரியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து பொலிசார் வேல்முருகனை கைது செய்தார்கள்.

June 14, 2017

கல்லூரி மாணவி லாட்ஜில் கொலை? அழைத்து வந்த மர்ம வாலிபர் யார்?


கும்பகோணம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் லாட்ஜில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கும்பகோணத்தில் நேற்று ஒரு வாலிபர் கல்லூரி மாணவி ஒருவருடன் லாட்ஜில் தங்கினார். பகல் முழுவதும் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அந்த அறை இரவில் வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்றுச்சாவி கொண்டு அறையை திறந்து பார்த்தபோது அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்.

உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அவருடைய அடையாள அட்டை மூலம் அவர் யார் என்பதை கண்டுபிடித்து அவருடைய பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்

இதுகுறித்து முதல்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவி கும்கோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரது 19 வயது மகள் கீர்த்திகா என்பதும் இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

விபத்து பற்றி கவிதை எழுதிய அழகுப் பெண் :ஆனால் எழுதிய அன்றே…! ஓ…இறைவா..


அந்த பெண் அழகான கல்லூரி மாணவி.. கலோரியில் பேச்சு,நாடகம், கவிதை, நாடகம், நடனம் என்று அத்தனையிலும் படு சுட்டி..!
விபத்து பற்றி கண்ணீர் கவிதை எழுதியவர். அவருக்கு நடந்த சோகம் இந்த உலகில் யாருக்கும் வரவே கூடாது..
அந்த மாணவியின் மரணம் கூட விபத்தில் தானா நடக்க வேண்டும்..!?
நண்பர்களே கவிதை படியுங்கள்…பகிருங்கள்…!

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!
விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று..
முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று..
கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள்
கண்மணி என்று.,…..
விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை……
ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்…..
காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை
விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை…,..
அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்
உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று……
அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்!
தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!
விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளை எல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,….?
அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்!
நீங்கள் ஒரு மகனாக இருந்தால்
ஒரு குடும்பத்தின் வாரிசு போச்சு!
கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு!
தந்தையாக இருந்தால் ஒரு குடும்பமே
இருண்டு போச்சு!
கண நேர கவனக் குறைவால் கதை முடிகிறது நண்பா!
கவனமாக செல் !
காத்திருக்கின்றன உறவுகள் உனக்காக!

June 12, 2017

பெற்ற மகனையே கொன்ற தாய் - உண்மையை வெளியே கொண்டு வந்த பிரியாணி


கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் ஹிரேகரூரை சேர்ந்தவர் வீரபத்ரா. இவரது மனைவி ரேகா. இருவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 7 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான்.
இந்நிலையில் ரேகா தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ரேகாவிற்கு திம்மேகவுடா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ள காதலாக மாறியுள்ளது.

இவர்களது உல்லாசத்திற்கு 7 வயது சிறுவன் இடையூறாக இருந்ததால் கள்ள காதலரின் ஐடியாவை கேட்டு மகனை கடத்தி வெட்டி ஆற்றில் வீசியுள்ளார் ரேகா. பின்னர் மகனை காணவில்லை என நாடகம் ஆடியுள்ளார்.

ஆனால் போலீசாருக்கு ரேகா மீது சந்தேகம் எழுந்ததால், ரேகாவிற்கு பிரியாணி வாங்கி கொடுத்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ரேகாவும் அவரது கள்ள காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

June 11, 2017

‘‘அமைச்சரின் அக்கா மகள் நான்’’ பல கோடி ரூபாய் அபேஸ் செய்த கில்லாடி பெண்!


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அக்கா மகள் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை மோசடி செய்த வழக்கில் காவல்துறையினர் மெத்தனப்போக்கில் இருந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இந்த மோசடி குறித்து செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது, "எனக்கு அக்காவே கிடையாது. எப்படி எனக்கு அக்கா பொண்ணு இருக்க முடியும்" என்று அதிர்ந்து போனார்.

ஜெயங்கொண்டம் அருகே கோவிந்தபுத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சக்தி. ஒரு ஆண்டுக்கு முன்பு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌமியா என்ற பெண் தவறுதலாக போனில் மிஸ்ட் கால் கொடுத்துள்ளார் சக்திக்கு. அந்த நம்பருக்கு சக்தி போன் செய்துள்ளார். அப்போது, இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இந்த பேச்சு இவருக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த பேச்சு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. செளமியா, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய மாமா என்றும், இவர் எனது காதலை பிரித்துவிடுவார் என்று கூறி சக்தியை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். பின்பு ஊர் மக்களுக்கு, செந்தில் பாலாஜியின் உறவினர்கள் என்று இவர்கள் நம்ப வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்.

பணத்தை கொடுத்து ஏமாந்த முகமது அலியிடம் பேசினோம். "கெமிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலையில்லாமல் வீட்டில் சும்மா இருந்தேன். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக எங்க ஊர்காரர்கள் சொன்னார்கள். அதன்பேரில் செந்தில் பாலாஜியின் அக்கா மகள் வேலைக்கு உத்தரவாதம் இருக்கும் என்பதால் திருச்சியிலுள்ள டி.என்.பில்.எல் பேப்பர் மில் கம்பெனியில் வேலை கேட்டு செளமியா-சக்தியிடம் பயோடேட்டாவை கொடுத்தேன். ஐந்து லட்சம் கேட்டார்கள். அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்சம் கொடுத்தேன். நான் மட்டுமில்லாமல் தா.பழூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ் என்பவர் கால்நடைத்துறையில் வேலை கேட்டு பத்து லட்சத்து ஐம்பதாயிரம் பணம் கொடுத்துள்ளார். அடுத்ததாக கோவிந்தபுத்தூரை சேர்ந்த சசி என்பவர் ஆசிரியர் பணிக்காக 9 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். தத்தனூர், வளவெட்டிக்குப்பம், தா.பழூர், கோவிந்தபுத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆசிரியர், கால்நடைத்துறை, காவல்துறையில் பதவி உயர்வு, பலதுறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி கோடி கணக்கில் வசூல் செய்தார்கள். கணவன், மனைவி இருவரும் நகைகளை அணிந்துகொண்டு ஆடம்பரமாக வலம்வந்துள்ளார்கள். பணத்தை கொடுத்தவர்கள் சந்தேகப்பட்டு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களுடைய பணத்தை திருப்பிக்கொடுங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கொஞ்ச நாளில் ரெடியாகிடும்" என்றார்கள்.


அடுத்தடுத்து எல்லோரும் கேட்கத்தொடங்கியதும் சௌமியா வளைகாப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் உள்ள டி.எஸ்.மஹாலில் நடைபெற உள்ளது. அங்கு எங்க மாமா செந்தில் பாலாஜி, போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் அங்கு வர உள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் அங்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கித் தருகிறேன் என்றார்கள். நாங்கள் நம்பவில்லை. அதற்கு அவர் இதோ பாருங்கள், அமைச்சர்கள் படத்தைப்போட்டு பத்திரிகையை அடித்துள்ளோம். அவர்களும் வருகிறார்கள் என்று எங்களிடம் காட்டினார்கள். அதைப்பார்த்து நாங்களும் உண்மை என்று நினைத்துக்கொண்டு போனோம். அடுத்தநாளே வீட்டில் சில பொருள்களை வாகனத்தில் ஏற்றினார்கள். தெருவில் உள்ள மக்கள் கேட்டதற்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கும்பகோணம் எடுத்து செல்கிறோம் என்றார்கள். அடுத்த நாள் டி.எஸ்.மஹாலில் போய்ப் பார்த்தபோது வேறொரு திருமணம் நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் தெரிந்தது நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று. பின்பு எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தோம். அவர் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி இனிக்கோ திவ்யனிடம் புகார் கொடுக்கச் சொன்னார். அவரிடம் நடந்ததைச் சொல்லி புகார் கொடுத்தோம். அவர் எடுத்த எடுப்பிலேயே பத்திரிகைகளுக்கு தகவல் சொன்னால் குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். யாரிடமும் சொல்லாதீர்கள். குற்றவாளிகளை பிடித்துவிடலாம் என்றார். நாங்கள் அவரிடம் பலமுறை போனில் பேசினோம். அதற்கு அவர் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், விரைவில் பிடித்துவிடுவோம் என்றார், டி.எஸ்.பி இனிகோ திவ்யன். அவர்சொல்லி நான்கு மாதம் ஆகிவிட்டது. அவரும் டிரான்ஸ்பராகிவிட்டார். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறோம். எங்களுக்கு டி.எஸ்.பி மீது சந்தேகமாக உள்ளது. வட்டிக்கு வாங்கின பணம். அதற்கு வட்டி கட்டமுடியவில்லை. தினம்தினம் சாகிறோம். குற்றவாளியை தப்பிக்கவிட்ட காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போகிறோம். மீண்டும் எங்கள் பணம் வரவில்லை என்றால் சாகும் போராட்டமும் நடத்தப் போகிறோம்" என்று எச்சரித்தார்கள்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பேசினோம். "முற்றிலும் தவறான செய்தி. எனக்கு அக்காவே கிடையாது. எப்படி எனக்கு அக்கா பொண்ணு இருக்க முடியும். எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அந்த செயல்களில் இதுவும் ஒன்று. இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" என்று முடித்துகொண்டார்.

ஜெயங்கொண்டம் முன்னாள் டி.எஸ்.பி இனிகோ திவ்யனிடம் பலமுறை போனில் தொடர்பு கொண்டோம். பதிலளிக்க மறுத்துவிட்டார். ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடியிடம் பேசினோம். "இப்போதுதான் இங்கு வந்துள்ளேன். இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதைப் பற்றி விசாரிக்கிறேன்" என்றார்.

June 4, 2017

நெல்லை அருகே பலாத்கார முயற்சி ஆசிட் வீசப்பட்ட இளம்பெண் சாவு: ஆட்டோ டிரைவர் மீது கொலை வழக்குப்பதிவு


பலாத்கார முயற்சியில் ஆசிட் வீசப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் மீது கொலை  வழக்குப்பதியப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முருகேஷ். இவர், டயர் கம்பெனியில் வேலை பார்த்து  வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி(28), நெல்லையில் செல்போன் கடையில் வேலை பார்த்தார். இந்நிலையில் சீவலப்பேரியைச் சேர்ந்த ஆட்டோ  டிரைவர் சின்னத்துரை என்ற சின்னராஜ்(28) என்பவர் ராமலட்சுமி வீட்டினருகே உள்ள தனது அக்காள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது  அவருக்கும், ராமலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 7.11.2016ல் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் உள்ள கோயிலுக்கு ராமலட்சுமியை ஆட்டோவில் சின்னத்துரை அழைத்துச் சென்றார். அங்கு  காட்டுப்பகுதியில் வைத்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு ராமலட்சுமி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த சின்னத்துரை தான்  வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராமலட்சுமி மீது ஊற்றினார். இதில் அவரது இரு கண்களும் பாதிக்கப்பட்டதோடு, உடலிலும் காயம் ஏற்பட்டது.  ராமலட்சுமி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். களக்காடு போலீசார் விசாரித்து  சின்னத்துரை மீது கடத்தல், பலாத்கார முயற்சி, ஆசிட் வீச்சு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்து கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில்  வெளிவந்த நிலையில், ராமலட்சுமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக  மாற்றப்பட்டுள்ளது.

June 1, 2017

ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன் ரயில்வே போலீஸ் சுக்லா


ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே போலீஸ் ஒருவன்  கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் யோகி ஆதித்யநாத்  ஆளும்  உத்திர பிரதேசம் மாநிலத்தின்   மீரட் பகுதியை சேர்ந்த 27 வயது இஸ்லாமிய  பெண் ஒருவர், சிகிச்சைக்காக லக்னோ சென்றார். அங்கு சிகிச்சைக்கு பின் ஊர் திரும்பு உள்ளார். அவர் சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் பயணம் செய்து உள்ளார். அவர் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியுள்ளார்.

அவரை விசாரித்த டிடிஆர், அப்பெண்ணை ஊனமுற்றோர் பெட்டிக்கு அனுப்பியுள்ளார். அந்த பெட்டியில் தனியாக இருந்த  ரயில்வே போலீஸ் சுக்லா என்பவன்   அந்த ரயில் பெட்டியின் கதவுகள் அனைத்தையும் மூடி அப்பெண்ணை கட்டிவைத்து சித்ரவதை செய்து கற்பழித்துள்ளார்.

பிஜ்னூர்  ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது பயணிகள் சிலர் ஊனமுற்றோர் பெட்டியில் ஏற  கதவை  திறக்க முடியாமல் திணறினர். பின்னர்  கதவை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர்.

அங்கு  பெண் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு  உள்ளதை கண்ட  மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்., பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மக்கள்  விசாரித்து உண்மையை அறிந்துள்ளனர். பின்னர், குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்துள்ளனர். இதனையடுத்து, சுக்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது  பின்னர் விடுவிக்க படுவான்

உத்திர பிரதேசம் மாநிலத்தில் தலித்  இஸ்லாமிய தாக்குதல்கள்  தொடர்ந்தவண்ணமே உள்ளது  எனப்து  குறிப்பிடத்தக்கது
இந்த கொடூர சம்பவத்தை  ஆளும்  பாஜக  கண்டு கொள்ளவே இல்லை
என்பது மிகவும் வேதனை அளிக்கிறது

விசாரணை என்பது ஒரு கண் துடைப்பாக மட்டுமே இருக்கும்
சிலகாலங்களில் இந்த சம்பவத்தை  மக்கள் மறந்து போவார்கள்... மறக்கடிக்க படுவார்கள் .......

May 31, 2017

சென்னை இன்ஃபோசிஸ் நிறுவன கழிவறையில் ஊழியர் மர்ம மரணம்..?!


சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையை அடுத்த மேகேந்திரா சிட்டி வளாகத்தில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதே வளாகத்தில் பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் கழிவறையில் இளையராஜா எனும் ஊழியர், உடலில் ஆடைகள் ஏதும் இன்றி நிர்வாணமாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.