Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label வயது வந்தவர்கள் மட்டும். Show all posts
Showing posts with label வயது வந்தவர்கள் மட்டும். Show all posts

July 30, 2017

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று !


பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையும் ஒன்று. அதிகமாக வெள்ளைப்படுவதை பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒருவிதமான துர்நாற்றத்துடன் அதிகப்படியான வெள்ளைப்படுதல் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட வஜினைட்டிஸ் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம். இதன்  காரணமாக அரிப்பும், கெட்டியான வெள்ளைப்படுதலும் ஏற்படும்.

பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தால் வெள்ளைப்படும் திரவம் மெலிதானதாகவும், பச்சை நிறத்திலும் இருப்பதுடன், துர்நாற்றமடிக்கவும் செய்யும். முறையான கவனிப்பு இல்லாமல் போனால் இந்த பிரச்சனை உங்களை UTI என்ற  பிரச்சனைக்குள் தள்ளிவிடும்.

பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது. இதற்கு தீர்வு கான இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்.

சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில்  விடுபட முடியும். ஆனால், இது உங்களுக்கு மிகவும் பிரச்சனையைத் தருவதாக நினைத்தால், தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடிச் செல்லவும்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி

தொட்டாலே ஷாக் அடிக்கக்கூடிய மின்சாரம்தான் ஆண்களின் செக்ஸ் !


ஆண்கள் மின்சாரம் தொட்டாலே ஷாக் அடிக்கக்கூடிய  மின்சாரத்தைத்தான் ஆண்களின்   செக்ஸ் நிலைக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்.
ஏனெனில், செக்ஸ் ஆசை ஆண்-பெண் இருவருக்கும் உண்டு என்றாலும், உடனடியாக ‘சட்’டென்று தூண்டப்படுவது ஆண்கள்தான்.

கவர்ச்சியான ஒரு புகைப்படத்தைப் பார்த்தால்கூட, உடனடியாக எழுச்சி அடையும் ஆண்கள், உடனடியாக செக்ஸ் அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.
எப்பாடு பட்டாவது காம ஆசையை நிறைவேற்றி உச்சகட்ட இன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

அந்த இன்பத்தை அனுபவிப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

அதனால்தான், இந்த உலகில் காம சுகத்துக்காகப் பெரும் குற்றங்களையும், அதிக அளவு கொலைகளையும் ஆண்கள் செய்திருக்கிறார்கள்.
ஆண்களின் செக்ஸ் ஆர்வமானது உடனடியாகத் தோன்றி, தீயைப்போல் உடல் முழுவதும் பரவி, படக்கென்று அணைந்துவிடக்கூடியது.

அதனால்தான், அவர்கள் முரட்டுத்தனமாகத் தன்னுடைய ஆசையை உடனே தீர்த்துக்கொள்ள ஏங்குகிறார்கள்.

ஆண்களின் உச்சகட்டம் என்பது விந்து வெளியேற்றம் என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.

ஆனால், விந்து வெளியேற்றம் மட்டுமே உச்சகட்ட இன்பம் கொடுத்துவிடுவதில்லை. ஏனென்றால், கலவி மேற்கொள்ளும் அனைத்து நேரங்களிலும் விந்து வெளியேற்றம் நிகழ்வதில்லை.

வயதுக்கு வராத சிறிய பையன்களும் உச்சகட்ட இன்பத்தை அவர்களது உறுப்பின் மூலம் அடைந்துவிட முடியும்.

அப்போது அவர்களுக்கு விந்து வெளியேற்றம் இருப்பதில்லை என்றாலும், அது இன்பத்துக்குத் தடையில்லை.

சில ஆண்கள், உச்சகட்ட இன்பத்தை அடைந்த சில நொடிகளுக்குப் பின்னரே விந்துவை வெளிப்படுத்துவார்கள்.

விந்து வெளிப்படுத்தமுடியாத நிலையில் இருக்கும் ஆண்களும் உச்சகட்ட இன்பத்தை அனுபவிக்க முடிகிறது.

சில ஆண்கள், தொடர்ந்து உறவுகொள்ளும்பட்சத்தில், இரண்டு அல்லது மூன்றாவது முறை விந்து வெளியேற்றம் இல்லாமலே உச்சகட்ட இன்பத்தை அனுபவித்துவிட முடிகிறது.

இது தொடர்பாக, ஆண்கள் மனத்தில் எழும் முக்கியமான சில கேள்விகளைப் பார்க்கலாம்.

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-13) ஆண் உறுப்பு நீளமாக இருந்தால் அதிக அளவில் இன்பம் கிடைக்குமா?
‘மூக்கு பெரிதாக இருப்பவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாகச் சுவாசிக்கிறார்கள்.

மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாகச் சுவாசிக்க முடிவதில்லை’ என்று சொல்வது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான், ஆண் உறுப்பின் நீளத்துக்கும் இன்பத்துக்கும் உள்ள தொடர்பு.

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மன்ன ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும் சில ஆண்கள், தன்னுடைய பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர்.

இது தேவையில்லாத ஒரு கவலையாகும்.
ஏனெனில், பொதுவாக ஒரு பொருளைப் பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளைத் தூர விலகி நின்று பார்க்கும்போது பெரிதாகத் தெரியும் (ஆக்டிகல் இல்லூஷன்).
மேலும், எல்லோருக்கும் எல்லா உறுப்புகளும் ஒரே அளவில் இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

14 செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்!

(உடலுறவில் உச்சம்!! – பகுதி-13) Telugu actress babilona photos 14இனி, ஆண் உறுப்பு பற்றிய நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்க்கலாம்.
முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறிதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
ஏனெனில், அப்போது அதனுடைய வேலை சிறுநீர் கழிப்பது மட்டும்தான்.
ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதால், விறைப்புத்தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

அதாவது, பெண் உறுப்பின் உள்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போது, பிறப்புறுப்பின் உள்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தி அடைகிறாள் என்பது நம்பிக்கை.

அதைவிட பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது.
இதன் அடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது.
ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது உண்மைதான்.

இனி விஞ்ஞான ரீதியான, மருத்துவ ரீதியான உண்மையான முடிவுகளைப் பார்க்கலாம்.

சராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பு இல்லாத ஆண் உறுப்பு இரண்டு அங்குலம் முதல் நான்கு அங்குலம் வரை இருக்கும்.
விறைப்படைந்த நிலையில் ஐந்து அங்குலம் முதல் ஆறு அங்குலம் வரை இருக்கும்.

ஆனால், பெண் உறுப்பின் முதல் இரண்டு அங்குலப் பகுதியில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை வெகுவாக அனுபவிக்கிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்தப் பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், எந்த உபயோகமும் இல்லை.

எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஓர் ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட இரண்டு அங்குலப் பிறப்புறுப்பு போதுமானது.

ஆனால், இதைவிட அதிகமான நீளம் கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்குப் பிறப்புறுப்பு அமைந்துள்ளது.
எனவே, ஆண் பிறப்புறுப்பு சிறிதாக உள்ளதா, பெரிதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.

ஒரு பெண், ஓர் ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ, அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவில் திருப்தி அடைகிறாள்.

ஒரு பெண், ஓர் ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்கவழக்கங்களைப் பொறுத்தது.

எனவே, பெண்ணைத் திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும்படியாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியம்.

ஆகவே, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றிக் கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது, தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! –ஆண் உறுப்பைப் பெரிதாக்க முடியுமா?

சிறிய உறுப்பு இருந்தால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாது என்று ஆண்களிடம் இருக்கும் பயத்தைப் போலி டாக்டர்களும், மருந்து தயாரிப்பாளர்களும் மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிறிய உறுப்பு கொண்டவர்களின் பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பணம் சம்பாதிக்கும் விஷயமாக மாற்றிக்கொள்வதற்கே, ‘ஆண் உறுப்பைப் பெரிதாக்க முடியும்’ என்ற ரீதியில் விளம்பரம் செய்கிறார்கள்.

‘சிறு வயதில் செய்த செக்ஸ் லீலைகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி இருக்கிறது.

மருந்து சாப்பிடவில்லை என்றால் மேலும் மேலும் சுருங்கிவிடும்’ என்று அதிகம் பயம் காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி பெரும்பாலும் நின்றுவிடுகிறது.

வளர்ந்த எந்த உறுப்பும் எக்காரணம் கொண்டும் சிறிதாகாது என்பதுதான் மருத்துவ நிதர்சனம்.

எந்த மருந்து மாத்திரைகள் மூலமும், உடற்பயிற்சி மூலமும் ஆண் உறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞானரீதியான உண்மை.
பொதுவாக, இதுபோன்ற பயங்களும், தாழ்வுமனப்பான்மையும் உள்ள ஆண்களுக்கு நம்பிக்கையை விதைக்க வேண்டியது முக்கியம்.
இந்த விஷயத்தில் பெண்களுக்கும் முழுமையான புரிதல் தேவை.
அப்போதுதான், ஆண்களின் உறுப்பைப் பற்றித் தவறான எண்ணங்கள் இருக்காது.

தன் உடலைக் காதலிக்க ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
என்ன இருக்கிறது, எந்த அளவில் இருக்கிறது என்பதல்ல, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதுதான் முக்கியம்.
நம்பிக்கையும், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் இருந்தால்போதும், உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். ஒரு சில ஆண்களுக்குப் பிறப்பிலேயே ஆணுறுப்பு நீளம் மிகக் குறைவாகவும், விதைப்பைகள் இல்லாமலும் இருக்கக்கூடும்.

இந்த நிலையைச் சரிசெய்ய போதுமான சிகிச்சை முறை இதுவரை உருவாகவில்லை.

‘ஜி ஸ்பாட்’ ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான்..

July 29, 2017

தூக்கத்தில் தானாக விந்து வெளியேறுகிறதா? சரிசெய்ய இதோ சில வழிகள்!



ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் பலரும் தவறாக நினைப்பது, எப்போதும் செக்ஸ் எண்ணத்துடன் இருப்பது என்று. ஆனால் உண்மையில், இது அதிகப்படியான உடல் சூடு, தூக்கமின்மை, உடுத்தும் உடை, தூங்கும் நிலை, உண்ணும் உணவுகள், சுய இன்பம் காணாமல் இருப்பது போன்றவற்றினால் தான் நிகழ்கிறது.

மேலும் ஆய்வுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தன் வாழ்நாளில் குறைந்தது ஒருமுறையாவது இப்பிரச்சனையை சந்தித்திருக்கக்கூடும் என்று சொல்கிறது. இப்பிரச்சனை அதிகமானால், அதனை சரிசெய்ய சில இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வந்தால், தூக்கத்தின் போது படுக்கையில் விந்து வெளிவருவதைத் தடுக்கலாம்.

 சரி, இப்போது தூக்கத்தின் போது படுக்கையில் தானாக விந்து வெளிவருவதை தடுக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.
 
தூங்கும் நிலை சில ஆண்களுக்கு தூங்கும் நிலையின் காரணமாகவும் விந்து வெளியேற்றப்படும். அதுவும் குப்புறப் படுக்கும் போது, ஆண்குறி படுக்கையுடன் உராய்ந்து, அதனால் விந்து வெளியேற்றப்படுகிறது. எனவே ஆண்கள் இந்த நிலையைத் தவிர்க்க பக்கவாட்டில் (வலது அல்லது இடது புறத்தில்) அல்லது மல்லாக்க படுக்க வேண்டும்.

உணவு வகைகள் காரமான உணவுகளை ஆண்கள் அதிகம் உட்கொண்டாலும், இரவில் தூக்கத்தில் விந்து வெளியேற்றப்படும். எனவே இப்பிரச்சனையை அதிகம் சந்திப்பவர்கள், இரவு நேரத்தில் காரமான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், மன அழுத்தம் மற்றும் டென்சன் குறையும். இதனால் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் படுக்கையில் தானாக விந்து வெளிவருவது குணமாகும்
சேஜ் டீ சேஜ் என்னும் மூலிகை தானாக விந்து வெளிவருவதற்கு நல்ல தீர்வைத் தரும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் சேஜ் மூலிகையைப் போட்டு தேநீர் தயாரித்து, இரவு உணவிற்கு பின் குடிக்க வேண்டும். இதனால் இரவில் நல்ல தூக்கமும் வரும்.

வெந்தயம் மற்றும் தேன் உங்களுக்கு அடிக்கடி படுக்கையில் விந்து வெளிவந்தால், இந்த எளிய இயற்கை வைத்தியத்தைப் பின்பற்றுங்கள். அது என்னவெனில், ஒரு கப் டீயில் 1 டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், இப்பிரச்சனையை குணமாக்கலாம்.
 
அதிமதுரம் அதிமதுரம் கொண்டு டீ தயாரித்துக் குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், அளவுக்கு அதிகமாக விந்தணு உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்தி, இரவில் படுக்கையில் ஏற்படும் விந்தது வெளியேற்ற பிரச்சனையைத் தடுக்கும்.

பூண்டு பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், இதயத்தை பலப்படுத்துவதோடு, ஆண்குறியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விந்து தானாக வெளியேறுவதைத் தடுக்கும். எனவே தான் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள்.

தயிர் தயிர் மற்றொரு சிறப்பான இயற்கை நிவாரணி. அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் தயிரை உட்கொண்டு வருவது, இப்பிரச்சனையைத் தடுப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவும்.

நெல்லிக்காய் நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், தானாக இரவில் விந்து வெளிவருவதைத் தடுக்கும். அதற்கு நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து கலந்து தினமும் சிறிது குடித்து வாருங்கள்.

வெங்காயம் பச்சை வெங்காயம் கூட தானாக விந்து வெளியேறுவதைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள அசிட்டிக் பொருள் தான் காரணம்.

சிவப்பு பழங்கள் உடல்நல நிபுணர்கள், சிவப்பு நிற பழங்களானது ஆண்களின் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு வழங்குவதாக கூறுகின்றனர். அதிலும் செர்ரிப் பழங்கள், மாதுளை, ஆப்பிள் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், இது இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக விந்தணு உற்பத்தியாவதைத் தடுக்கும். இதனால் இரவில் தூக்கத்தின் போது தானாக விந்தணு வெளியேறுவது தடுக்கப்படும்.

உடல் வெப்பத்தை தூண்டக்கூடிய பழங்கள் தூக்கத்தின் போது தானாக விந்து வெளியேறுவதைத் தூண்டும் பழங்களில் ஒன்று தான் அவகேடோ பழம். இதுப்போன்று உடல் வெப்பத்தைத் தூண்டக்கூடிய பழங்களான அன்னாசி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றையும் இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும்.
f

July 28, 2017

உடலுறவு விஷயத்தில் கில்லாடி யார்? ஆணா? பெண்ணா? இருவருக்கும் என்ன வித்தியாசம்?


உடலுறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான விஷயமாக இருப்பினும் அதில் ஆண், பெண் இருவரின் ஆசைகளும் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஆண்கள் விரும்பும் சில விஷயங்கள் பெண்ணுக்குப் பிடிக்காமல் போகலாம். அதேபோல் பெண்ணுக்குப் பிடித்த சில விஷயங்கள் ஆணுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

பொதுவாக ஆண்கள் உடலுறவு விஷயத்தில் மிக எளிதாகவும் வேகமாகவும் கிளர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களால் அப்படி உடனடியாகக் கிளர்ச்சியடைய முடியாது. ஆண்களின் செயல்பாடுகள், முன் விளையாட்டுகள் ஆகியவையே பெண்களை விரைவில் கிளர்ச்சியடையச் செய்யும்.

60 வயதுவரையிலும் உடலுறவில் ஆண்களுக்கு நாட்டம் இருந்துகொண்டே இருக்கிறதாம். அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உடலுறவு சார்நு்த எண்ணங்கள் அவர்களுக்கு வந்து போகிறதாம். ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண்களைவிட ஆண்களுக்குத் தான் உடலுறவில் இரண்டு மடங்கு ஆர்வம் இருக்கிறது.

ஆண்களுக்கு உடலுறவில் பேரார்வம் உண்டு. உடலுறவில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணத்தையும் தாண்டி, அதைப்பற்றிய தேடுதல் வேட்கை ஆண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது.
ஆண்களில் மூன்று பேரில் ஒருவர் நிச்சயம் சுயஇன்பம் பழக்கமுடையவராக இருக்கிறார்கள். மற்ற இரண்டு பேரில் பலரும் சுயஇன்பம் மேற்கொள்வதை ஒரு குற்ற உணர்வாகக் கருதிக் கொள்வதாலேயே தவிர்க்கிறார்கள்.

ஆண்களோடு ஒப்பிடுகையில் 40 சதவீதம் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் ஆண்களைப் போல் அடிக்கடி ஈடுபடுவதில்லை.

உடலுறவில் அதீத ஆர்வமுடையவர்கள், காம இச்சை அதிகம் கொண்டவர்கள் பணம் கொடுத்தாவது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் போய் தங்களுடைய இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

கிளர்ச்சியடையும் விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். யாரேனும் உடலுறவு பற்றியோ அல்லது உடலுறவு சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தாலே கூட ஆண்களுக்குக் கிளர்ச்சி உண்டாகும். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது.
பெண்கள் தங்களுடைய உடலோடு நேரடியாகத் தொடர்பு கொண்டால் தான், தங்களுடைய உடலில் நேரடியாகத் தீண்டுதல் செய்தால் தான் கிளர்ச்சி அடைகிறார்கள். உடலுறவு விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன.

July 27, 2017

அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?


அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு அடிக்கடி அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுகிறதா? அந்தரங்க உறுப்பில் புண் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அந்தரங்க உறுப்பு மிகவும் சென்சிவ்வானது. இப்பகுதியில் ஏதேனும் சிறு பிரச்சனை இருந்தாலும், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி பின் பயங்கர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். முதலில் அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை அவற்றை பட்டியலிட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் சில நேரங்களில் சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே அந்தரங்க பகுதியில் அதிகமாக சோப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏன் துணிகளில் உள்ள சாயங்களால் கூட சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்படலாம்.

அந்தரங்க பகுதியில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டாலும், அப்பகுதி காயமடையும். அந்தரங்க பகுதியில் ஹார்மோன் மாற்றங்கள், பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகளாலும் வறட்சி ஏற்படலாம்.

யோனியினுள் காயங்கள் மற்றும் கடுமையான எரிச்சலை உணர்ந்தால், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பாக உடலுறவு கொண்ட பின், இம்மாதிரி உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

பிறப்புறுப்பு ஹெர்பெஸ், கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பாலியல் நோய்களாலும் யோனியில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே அந்தரங்க பகுதியில் காயங்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே திசு வளர்ச்சி அடைந்திருந்தால், அதன் காரணமாகவும் யோனியில் காயங்களையும், வலியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

July 26, 2017

ஆண் எப்ப‍டி இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புவார்கள்


ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ‘ fair complexion’ உள்ள பெண்கள் கூட எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் ‘மீசை’க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ‘மீசை’ ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ‘ தாடி’ பிடிப்பதில்லை.

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ‘ ட்ரெஸ்ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர் ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் – டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம். முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது.

அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும். (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டார்கள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, தவிர ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

July 25, 2017

பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?


சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும். அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.

சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம்.

இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. ஆம், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், ஷானிங் டாட்டம் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் போன்றவர்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர். எதையெல்லாம், பிரபலங்களை கண்டு கடைப்பிடிப்பது என்பதற்கு வரையறையின்றி போய்விட்டது!!!

July 24, 2017

வெற்றிகரமான இல்லற வாழ்க்கையின் ரகசியங்கள்!!


வெற்றிகரமான வாழ்க்கையை வாழ நீங்கள் பெரிதாக எதையும் படிக்க தேவையில்லை, உறவுகளை தவிர. பெரிதாக பயிற்சி எதுவும் தேவையில்லை, விடா முயற்சி மட்டுமே போதுமானது. திருமணத்திற்கு முன்னர் வரை உங்கள் தாய், தந்தை செய்து வந்ததை திருமணத்திற்கு பிறகு நீங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

குடும்ப பொறுப்பு, பிள்ளை வளர்ப்பு, காதல், அரவணைப்பு, என கணவன், மனைவி உறவென்பது தான் இல்லறத்தின் ஆணிவேர். அது சற்று வலுவிழந்து போனாலும், ஒட்டுமொத்த குடும்பமும் ஆட்டம்கண்டுவிடும்.

பணம்

பணம் என்பது பொருளை வாங்க மட்டுமே உதவும், மனதையும், உறவையும் அல்ல என்பதை புரிந்து நடந்துக் கொள்ளுதல் வேண்டும்.

காதல்

அனைவர் மீதும் காதல் வைப்பது தவறல்ல. ஆனால், ஒருவருக்கு தெரியாமல், ஒருவர் மீது காதல் செலுத்துவது தான் தவறு. உறவுகளில் காதல் துரோகம் செய்தல் கூடாது.

பிள்ளை வளர்ப்பு

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன் னையின் வளர்ப்பினிலே ” என்ற பாடல் வரியை போல பிள்ளை வளர்ப்பில் சிறந்து விளங்க வேண்டும்.

குடும்ப அக்கறை

மனைவி, பிள்ளைகள், அவர்களது உடல்நலம், எதிர்காலம் போன்றவற்றின் மீது சரியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

50-50

தொழிலாக இருப்பினும், சரி அலுவலக வேலையாக இருப்பினும் சரி. குடும்பம், வேலை என இரண்டையும் இரு கண்களாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தாம்பத்தியம்

தாம்பத்தியம் என்பது புரிதலில் துவங்க வேண்டும். இருவரின் மனதும் அதற்கு இணைங்கி நடக்க வேண்டும்.

புரிதல்

உறவில் சந்தேகம் புகுந்துவிட்டால், சந்தோஷம் குலைந்துவிடும். முடிந்த வரை அனைத்தையும் மனதினுள் புதைத்து வைப்பதற்கு பதிலாக நேரடியாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய 10 விஷயங்கள்!


சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதிகமாக இல்லை. அதையும் தாண்டி அவர்களிடம் மன வலிமையையும் குறைவாக தான் இருக்கிறது.

எங்கு சுக பிரசவத்தின் போது வலி தாங்க முடியாமல் ஏதாவது ஆய்விடுமோ என்ற அச்சமும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே பல தம்பதிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை சிசேரியன் செய்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர்.

ஆனால், நீங்கள் நினைப்பது தவறு. குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் தான் சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.

01. சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளைதருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.

02. புரோபயாடிக்ஸ் உணவுகள்! சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு.

03. கீறல்கள்! சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

04. நடைப்பயிற்சி! ஆம், சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.

05. உணவுகள்! சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள். இவை, தசை வலிமை அடைய வெகுவாக உதவும் உணவுகளாகும்.

06. மலச்சிக்கல்! பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

07. தாய்பால்! தாய்பால் தருவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதத்தில் இருந்து 1 ஆண்டு வரைக்குமாவது தாய்பால் கொடுங்கள்!

08. அதிக எடை! அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க வேண்டாம். இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.

09. க்ரஞ்சஸ்! ஜிம்மிற்கு செல்லும் பெண்கள், சிசேரியன் செய்த சில மாதங்கள் வரை க்ரஞ்சஸ் பயிற்சி செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

10. உடலுறவு! சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

11. மனோதைரியம்! என்ன தான் உணவு, பயிற்சி என்று இருந்தாலும். கணவன், அம்மா போன்றவர்கள் உடன் இருந்து அந்த பெண்ணுக்கு மனோதைரியம் அளிப்பது தான்அவர்கள் வேகமாக ஆரோக்கியம் அடைய உதவும்.

ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23-ம் பெண்ணுக்கு 18-ம்


ஆணோ பெண்ணோ பருவம் அடைந்து விட்டாலும், ஆணுக்கு 23-ம் பெண்ணுக்கும் 18-ம் என, அரசாங்கம் நினைத்த வயதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். தன்னைவிட வயது குறைவான பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் ஏதும் இல்லை.

ஆனால், அதன் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளாமல் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து விட்டு, பின்னர் கவலைப்படக் கூடாது.
பெண்களின் தாம்பத்தியம் அவர்களின் மாத விடாய் நிற்கும் வரைதான். அதன் பின்னர், அவர்களுக்கு அதில் போதுமான நாட்டம் இருக்காது.
ஆனால், ஆண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சினை இல்லாததால் அவர்கள் திடகாத்திரமாக இருந்தால் எழுபது எண்பது வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட இயலும்.

25 வயது வாலிபன், 25 வயதுப் பெண்ணை அல்லது முப்பது வயதுப்பெண்ணை திருமணம் செய்தால் அப்பெண்ணுக்கு 45 வயதில் மாதவிடாய் நின்று விடும் போது, அந்த ஆணுக்கு 45 அல்லது நாற்பது வயது ஆக இருக்கும். இந்த வயது தாம்பத்தியத்தை அதிகம் நாடக் கூடிய வயதாகும். பெண்ணால் தாம்பத்திய சுகம் கொடுக்க முடியாததால், இவன் தவறான பாதையில் செல்லும் நிலை ஏற்படும்.

தேவை ஏற்பட்டால் கணவன் இன்னொரு திருமணம் செய்வதை அனுமதிக்கும் பெண்கள் அரபு நாடுகளில் உள்ளனர். ஆனால், இந்தியாவில் தன்னால் கணவனுக்கு சுகம் கொடுக்க முடியா விட்டாலும் அவன் இன்னொரு திருமணம் செய்வதை பெண்கள் ஒப்புக்கொள்வதில்லை.

இதனால், அவளை விவாகரத்து செய்யும் நிலை ஏற்படும். அல்லது கள்ளத்தனமான உறவுகள் மூலம் சுகம் அனுபவிக்கும் நிலை ஏற்படும். இதைப் பற்றியும் ஆலோசித்துக் கொண்டு மூத்த வயதுப்பெண்ணைத் திருமணம் செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இதைக்கவனத்தில் கொண்டுதான், ஆணைவிட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக இருக்கும் வகையில் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது.

பெண்கள் 15 முதல் 18 வயதுக்கு உள்ளேயும், ஆண்கள் 20 முதல் 25 வயதுக்கு உள்ளேயும் திருமணம் செய்தால் இருவருக்கும் சமகாலத்தில் தாம்பத்திய ஆசை குறைவதால் பிரச்சினைகள் வராமல் இருக்கும்.

மேலும், தள்ளாத வயதை அடைந்து விட்ட பெண்களுக்கு துணையாக கணவன் இல்லா விட்டாலும் பெண்களை, மற்ற பெண்கள் நல்லபடி கவனித்துக் கொள்வார்கள்.

ஆனால், மனைவியை இழந்த கணவன் தள்ளாத வயதை விட்டால் அவனை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஏனெனில், பெண்களிடம் தான் கவனித்துக் கொள்ளும் தன்மை இயல்பாகவே உள்ள து. படுக்கையில் மல ஜலம் கழிக்கும் முதிய வயது ஆணை எந்த ஆணும் கவனிக்க மாட்டார்கள். பெண்களாலும் கவனிக்க இயலாமல் போகும். ஆனால், பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் எப்படியும் கவனித்துக் கொள்வார்கள்.

மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், முதுமை அடைந்து மரணிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

இந்த நிலையில், வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், தள்ளாத வயதில் அவன் தனித்துவிடப்படும் நிலை ஏற்படும்.

ஆனால் தன்னைவிட குறைந்த வயதுப்பெண்ணைத் திருமணம் செய்தால் மனைவிக்கு முன்னர் கணவன் மரணிக்கும் வாய்ப்புகள் அதிகம். மனைவியின் கவனிப்பு இருக்கும் போது மரணிக்கும் வாய்ப்பு இருக்கும்.

இதுபோன்ற சாதக பாதகங்களையும் கவனத்தில்கொண்டு முடிவுசெய்வது நல்லது

July 22, 2017

சுய இன்பம் தப்பே இல்லை..! ஆனா அது எப்படின்னு தெரிஞ்சுக்குங்க ..!


இறைக்கிற கிணறுதான் ஊறும்”…என்று சுய இன்பம் அனுபவிக்கும் இளவட்டங்கள் தங்களைத்தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டாலும் இன்னமும் ஒரு பயம் அவர்கள் மனதிலிருந்து அகலவில்லைதான்…

கலவியறிவில் இந்த சுய இன்பத்தை பற்றிய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் விதமாக இதைப்பற்றிய உண்மைத் தகவல்களையெல்லாம் போட்டுடைக்க வேண்டியது இன்றைய தலைமுறைக்குத் தேவையான முக்கிய விஷய மெனக் கருதுவதால்  இதைப்பற்றி எழுதவேண்டிய கட்டாயம்…

சுய இன்பத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியத்தகவல்கள் என்னென்ன?…

Ø  சுய இன்பம் என்பது பொதுவாக ஒருவர் தனது உடம்பின் பாகங்களை, அதுவும் குறிப்பாக செக்ஸ் உறுப்புகளை செக்ஸூவல் மகிழ்ச்சி தரும் விதத்தில் தானே தொட்டும், தடவியும் இன்னபிற வகையிலும் செயல்பட்டு இன்பம் அனுபவித்தலாகும்.

Ø  சுய இன்பம் என்பது பொதுவானதொரு பாதுகாப்பான செக்ஸ் விளையாட்டுதான்.

Ø  சுய இன்பத்தினால் பல நல்ல ஆரோக்கியப்பலன்களும் இருக்கின்றன.

நம்மில் பலருக்கு சுய இன்பத்தை பற்றி பேசுவதென்பதே ஒரு பாவப்பட்ட, அசிங்கமான செயலாகத்தெரியலாம்.

பழங்காலத்திலிருந்தே சுய இன்பத்தை பற்றி நிலவி வரும் பல கருத்துக்களால் இன்றளவும்கூட நமது சமூகத்தில் சுய இன்பம் என்ற சொல் மூஞ்சை சுழிக்கச்செய்வதாகத்தான் உள்ளது.

இந்த பழைய கருத்துக்களால்தான் இன்னமும் சுய இன்பம் ஒரு அசிங்கமான உணர்வையும், தவறு செய்கிறோமோ என்ற உணர்வையும், ஒரு பய உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுய இன்பத்தை பற்றிய உண்மைத்தகவல்களை ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் அறிந்து தெளிதல் வேண்டும். சுய இன்பம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரு பொதுவான இயற்கையான விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

சுய இன்பம் சாதாரணமானதொரு செய்கைதானா?…

சுய இன்பம் மிகச்சாதாரணமான பொதுவானதொரு செய்கைதான். பெரும்பாலும் சுய இன்பம் உச்சகட்ட இன்பத்தில்தான் முடிகிறது. உலகின் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் பத்தில் ஏழு ஆண்களும், பத்தில் ஐந்து பெண்களும் சுய இன்பத்தை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றது. இது பெரும்பாலும் டீன் ஏஜ் தலைமுறையில் பொதுவாக நிகழ்வதாகும்.

வழக்கமாக சுய இன்பம் அனுபவிப்பது எந்த வயதில் தொடங்குகிறது?…

சுய இன்பம் அனுபவிப்பது ஒருவரது வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கும். பெரும்பாலான குழந்தைகள் தாங்கள் வளரும் போது, அதாவது தங்களது உடல் உறுப்புகள் வளர்ச்சியடைந்து மாற்றம் காணத்தொடங்கும் போது சுய இன்பத்தை ஆரம்பிக்கிறார்கள்

. ஆரம்பத்தில் அவர்கள் தங்களது குறிப்பிட்ட உறுப்புகளை தொடுவது ஒருவித மகிழ்ச்சியை கொடுப்பதாக உணருவார்கள். பெரும்பாலான கட்டுரைகள் குழந்தைகள் 3 முதல் 6 வயதிலிலேயே செக்ஸீவல் உணர்வில்லாத ஒருவித இன்பத்தை தங்களது உறுப்புகளை தொடுவதன் மூலம் அனுபவிப்பதாக தெரிவிக்கின்றன.

இளைய தலைமுறை சுய இன்பம் ஒரு சாதாரணமான விஷயம் என்பதையும், அது எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது முக்கிய விஷயமாகும்.

அது போலவே அவர்கள் சுய இன்பம் என்பது தனிமையில், மறைவாக அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

மக்கள் ஏன் சுய இன்பத்தை அனுபவிக்கிறார்கள்?…

பல்வேறு ஆய்வுகளில் சுய இன்பத்துக்கான காரணங்களாக மக்கள் தெரிவித்திருப்பது இதுதான்…

Ø  சுய இன்பம் செக்ஸீவல் டென்ஷனிலிருந்து விடுதலை அளிக்கிறது.

Ø  சுய இன்பம் செக்ஸீவல் ஆனந்தத்தை அளிக்கிறது.

Ø  துணை இல்லாதபோதும் செக்ஸ் சுகத்தை அனுபவித்துக்கொள்ள உதவுகிறது.

Ø  ரிலாக்ஸேசனை வழங்குகிறது.

பெரும்பாலும் செக்ஸ் பார்ட்னர் இல்லாதவர்களும், கல்யாணமாகதவர்களும்தான் சுய இன்பத்தை அனுபவிப்பதாக நினைக்கிறார்கள். இது மிகத்தவறானதொரு கூற்று.

திருமணமானவர்களும், சரியான செக்ஸ் பார்ட்னர் அமைந்தவர்களும்கூட ரெகுலராக சுய இன்பத்தையும் அனுபவிப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுய இன்பம் அனுபவிப்பதன் பலன்கள் என்னென்ன?…

சுய இன்பம் மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மனதில் எவ்வித குற்றவுணர்ச்சியும், குழப்பமுமில்லாமல் சுய இன்பத்தை அனுபவிப்பது பல்வேறு பலன்களை அளிக்கக்கூடியது.

சுய இன்பம் மட்டுமே அனுபவிப்பதனால் பால்வினை நோய் மற்றும் தேவையற்ற கர்ப்பம் போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

அது மட்டுமின்றி சுய இன்பம்தான் ஒருவரது செக்ஸீவாலிட்டி குறித்து அறிந்து கொள்ள உதவுவது. அதாவது எந்த உறுப்பு, எந்தவிதமான செய்கைகள் உச்சகட்ட செக்ஸீவல் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள உதவக்கூடியது.

இது செக்ஸ் பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸ் உறவிலும் உச்சகட்ட மகிழ்ச்சியை பெறுவதற்கான முன்னோட்ட வழிகளை தெரிவிக்கக்கூடியது.

சுய இன்பமானது…

  Ø  ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும்

  Ø  பார்ட்னருடன் வைத்துக்கொள்ளும் செக்ஸை, உடல் மற்றும் மனரீதியாக மேம்படுத்தும்

  Ø  ஒரு உடல் உச்சகட்ட செக்ஸ் இன்பத்தைப்பெறுவதற்கு எவ்வாறு மீட்டப்படவேண்டும் என்பதை அறிந்து கொள்ள உதவும்.

  Ø  உச்சகட்ட மகிழ்ச்சியை அடையும் வழிமுறைகளை மேம்படுத்த உதவும்.

  Ø  செக்ஸூவல் திருப்தியை அளிக்க உதவும்.

  Ø  தூக்கத்தை மேம்படுத்தும்.

  Ø  இதயத்துக்கும், நுரையீரலுக்கும் ஒரு சரியான உடற்பயிற்சியாய் அமையும்.

  Ø  செக்ஸூவல் துணை இல்லாதவர்களுக்கும் செக்ஸூவல் மகிழ்ச்சியை அளிக்கும்.

  Ø  தூக்கத்தில் வரும் செக்ஸ் கனவுகளினால் ஆடைகளும், பெட்ஷூட்டும் நனையும் வண்ணம் தானே வெளியேறும் விந்துவைக்கட்டுப்படுத்தும்.

  Ø  செக்ஸ் குறைபாடுகளுக்கான ட்ரீட்மெண்ட்டாக அமையும்.

  Ø  மன அழுத்தத்தை குறைக்கும்.

  Ø  செக்ஸூவல் டென்ஷனிலிருந்து விடுபட உதவும்

  Ø  எதிர்காலத்தில் ஆண்களுக்கு வரவிருக்கும் ப்ராஸ்டேட் கேன்சருக்கான வாய்ப்புகளைக்குறைக்கும்.

  Ø  மாதவிடாய் குறைபாடுகளையும், தசை வலிகளையும் நீக்கும்.

  Ø  பெண்களை கட்டுப்பாடில்லாமல் யூரின் கசியும் பிரச்சினை, கருப்பை இடம் மாறுதல்(Prolapse) பிரச்சினை போன்றவற்றிலிருந்து காக்கும்.

சுய இன்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?…

சுய இன்பத்தினால் ஒரு பாதிப்பும் ஏற்படாது என்பதுதான் உண்மை.

சுய இன்பத்தினால் ஏற்பட வாய்ப்புள்ள ஒரே பாதிப்பு ஸ்கின் எரிச்சல் மட்டும்தான்…ஆனால் அதற்கும் மார்க்கெட்டில் ஏகப்பட்ட லூப்ரிகண்ட்ஸ் குவிந்து கிடக்கின்றன.

சுய இன்பத்தின் அளவுகோலும், அளவுக்கதிகமான சுய இன்பமும்…

சுய இன்பம் அனுபவிக்கும் பெரும்பாலானவர்களின் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வி ‘’நாம் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிக்கிறோமோ?… நாம் சுய இன்பத்துக்கு அடிமையாகி விட்டோமோ?…’’ என்பதுதான்.

சுய இன்பத்துக்கு எவ்வித அளவுகோலும் கிடையாது. ஒரு சிலர் ஒரு நாளுக்கு ஒரு முறை என்றும், ஒரு சிலர் ஒரே நாளில் நாலைந்து முறை வரையிலும்கூட சுய இன்பத்தை அனுபவிப்பார்கள்.

அவரவரது செக்ஸூவல் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் பொருத்தது. தனது உடலுக்கு காயத்தை ஏற்படுத்தாதவரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் ஒரே நாளில் சுய இன்பத்தை அனுபவிக்கலாம்.

சுயஇன்பம் – கட்டுக்கதைகளும்… உண்மையும்…

காலகாலமாக சுய இன்பத்தை பற்றி நிலவும் கட்டுக்கதைகள் ஏராளம்… அவற்றின் உண்மை என்னவென்று பார்க்கலாமா?…

சுய இன்பமானது…  Ø  ஒரு போதும் உள்ளங்கையிலோ இல்லை இன்னபிற வித்தியாசமான இடங்களிலோ முடி முளைக்கச்செய்யாது…

  Ø  ஒரு போதும் பார்வைக்குறைபாடுகளை ஏற்படுத்தாது.

  Ø  ஒரு போதும் செக்ஸ் உறுப்புகளை சிறிதாக்கவோ, நிறம் மாறவோ, தோற்றம் மாறவோ செய்யாது.

  Ø  ஒரு போதும் உடல் வளர்ச்சியை தடுக்காது.

  Ø  ஒரு போதும் ஆண்மைக்குறைவையோ, மலட்டுத்தன்மையையோ ஏற்படுத்தாது.

  Ø  ஒரு போதும் ஒருவரை அடிக்ட் ஆக்கும் பழக்கமல்ல.

  Ø  ஒரு போதும் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல.

  Ø  ஒரு போதும் மனநிலையை பாதிக்காது.

  Ø  ஒரு போதும் ஒருவரை ஓரினச்சேர்க்கைவாதியாக்காது.

ஆகவே மக்களே சுய இன்பம் என்பது மனித உடலில் நிகழும் ஒரு சாதாரணமான விஷயம்தான் என்பதை புரிந்துகொண்டு இதில் யாரும் எவ்வித குற்றவுணர்விற்கும் ஆளாகவேண்டியதில்லை என்பதை தெரிந்து கொள்வதோடு, தெரியாத உங்கள் நண்பர்கள் யாராவது இருந்தால், இனி அவர்களுக்கும் விளக்கிச்சொல்லுங்கள்…

July 21, 2017

ஆண்களுக்கு ஏன் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது?


ஆண்களுக்கு மிக மோசமான பிரச்னையாக கருதப்படுவது விந்தணு குறைபாடு. இத்தகைய விந்தணு குறைபாடுக்கு நாமே தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆண்கள் மேற்கொள்ளும் ஒருசில பிரச்னைகளின் முடிவு தான் விந்தணு குறைபாடு. கருவுறுதலில் பிரச்னையை ஏற்படுத்தும் இந்த விந்தணு குறைபாடு, ஆரோக்கியமற்ற சில வாழ்க்கை முறையின் காரணமாகவும் ஏற்படுகிறது.

புகைப்பிடிப்பது:

விந்தணு குறைபாடுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைபிடிக்கும் பழக்கம். புகைப்பிடிப்பதால் அதில் உள்ள புகையிலை விந்தணுக்களை அழித்து, அதன் உற்பத்தியைக் குறைத்துவிடும்.

ஜங்க் உணவுகள்:

ஜங்க் உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய தேவையான சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.

தூக்கமின்மை:

தினமும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடலானது சோர்ந்து விடும். இவ்வாறு உடல் சோர்வடைந்தால், விந்தணுக்கள் செயல்படுவதற்கு போதிய ஆற்றல் இல்லாமல், அதன் சக்தி குறைந்துவிடும்.

இறுக்கமான உள்ளாடை:

உள்ளாடையை இறுக்கமாக அணிந்தால், விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு தடைப்படும். எனவே எப்போதும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.

செல்போன்களை பேன்ட் பாக்கெட்டில் வைப்பது:

செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் விந்தணுவின் உற்பத்தியும் தடைபடும்.

ஹார்மோன் உற்பத்தி:

நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு ஏற்படும்.

லேப்டாப்:

லேப்டாப்பை மடியில் வைத்து வேலை பார்ப்பதால் விந்தணு குறைபாடு ஏற்படும் என கூறப்படுகிறது.

இவை அனைத்தும் விந்தணு குறைபாடுக்கான காரணங்கள் தான். மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் விந்தணு உற்பதியை பெருக்கி கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.

July 20, 2017

கணவரின் விந்தணுக்களை பலப்படுத்த இந்த 10 விஷயத்த மனைவி செய்யனும்!


குழந்தை என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான். அதிலும் நீங்களே ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் என்றால், நினைக்கவே சந்தோஷமாக தான் இருக்கும் அல்லவா?

சரி, குழந்தை பெருவதற்கு முன் பெண் தனது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே போல தான் ஒரு ஆணும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும்..!

நீங்கள் கருவுறும் பிரச்சனைக்காக மருத்துவமனை மருத்துவமனைகளாக அலைகிறீர்கள் அல்லது கோவில் கோவிலாக போய் பல பிராத்தனைகளை செய்கிறீர்கள்.

இவை எல்லாம் தேவையே இல்லை.. நீங்கள் அன்றாடம் செய்யும் சில செயல்களை சரியாக செய்தாலே போதும்! ஏன் நீங்கள் இது பற்றி நீங்கள் உங்களது கணவரிடம் பேசுவதில்லை..! இது பற்றி பேச வேண்டியது முக்கியமல்லவா?

பெண்களே! நீங்கள் கர்ப்பமடைய விரும்பினால் உங்களது கணவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். அவரின் விந்தணுக்கள் ஆரோக்கியம் பெற நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காணலாம்.

1. சுய இன்பம் : ஆண்களது விந்தணுக்கள் நீண்ட நாட்கள் வெளியேற்றப்படாமல் இருக்க கூடாது. விந்தணுக்களை வெளியேற்ற சுயஇன்பம் காண்பதில் தவறில்லை. உடல் விந்தணுக்களின் தேவை இருந்தால் மட்டுமே விந்தணுக்களை உற்பத்தி செய்யும். எனவே அவர் சுய இன்பம் கொள்வதால் உடலில் விந்தணுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் உடலுறவு வைத்துக்கொள்ளும் போது புதிய விந்தணுக்கள் உருவாகின்றன. இது பெண்கள் கர்ப்பமடைய உதவும்.

2. முழுமையான உணவு : ஆண்கள் சத்தில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் எந்த பயனும் இல்லை. விட்டமின் சி, இ, மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களை பலப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரைடு புட் வகைகளை தவிர்க்க வேண்டும், சாக்லேட், வாழைப்பழம் ஆகியவற்றை உங்கள் கணவரை சாப்பிட வைப்பதன் மூலம் எளிதில் கர்ப்பமடையலாம்..!

3. மது வேண்டாம் : உங்களது கணவர் மது அருந்துபவராக இருந்தால், அதை கைவிட வலியுறுத்துங்கள். ஏனெனில் மது அருந்துவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பதை மறக்க வேண்டாம். பீர் மற்றும் ஒய்ன் போன்றவற்றை கூட அருந்தக்கூடாது. இவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

4. புகைப்பழக்கம் : புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்லது சந்ததிகளுக்கும் கேடு விளைவிப்பதாகும். எனவே புகையிலை மற்றும் புகைப்பழக்கங்களை கைவிடுமாறு உங்கள் கணவரிடம் கூறுங்கள்.

5. பை சீட் வசதியா இருக்கா : தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் நீண்ட நேரம் இருக்கையில் அமரும் போது ஆணுறுப்பின் அடிப்பகுதி அழுத்தப்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. எனவே இருக்கை வசதியாக இருப்பதும், நீண்ட நேரம் பயணிக்காமல் இருப்பதும் சிறந்தது.

6. ஸ்டீராய்டுகள் வேண்டாம் : ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது விந்தணு உற்பத்திக்கு கேடு விளைவிக்கும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும். தொடர்ந்து ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது அதற்கு அடிமையாக்கிவிடும். எனவே இதனை தவிர்க்க சொல்லுங்கள்.

7. கழுவி சாப்பிட வேண்டும் ; காய்கறிகள் மற்றும் பழங்களை கட்டாயம் கழுவி தான் சாப்பிட வேண்டும். என்ன தான் இவை இயற்கையானவையாக இருப்பினும், சில பூச்சிக்கொல்லிகள் இவற்றை வளர்க்க பயன்படுத்தப்படும். இது விந்தணுக்களை கொல்லும். எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிட வேண்டியது அவசியம்.

8. பாட்டில் உணவுகள் : கர்ப்பமாக முயற்சிக்கும் போது பாட்டில்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

9. இறுக்கமான உடை : ஆண்கள் பொதுவாக ஜீன்ஸ் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நம்ம ஊர் சூட்டுக்கு ஜீன்ஸ் அணிந்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். விந்தணுக்கள் 3 முதல் 4 டிகிரி செல்சியஸில் தான் நன்றாக வளரும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிந்தால் உடல் சூடாகி விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.

10. உடலுறவில் அழுத்தம் வேண்டாம் : நீங்கள் என்ன தான் கோபமாக இருந்தாலும், பெற்றோராக வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு கோபத்தை சற்று குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மன அழுத்தத்துடன் உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. மகிழ்ச்சியுடன் எந்த விஷயத்தை செய்தாலும், அது நன்மையில் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கணவரை நச்சரித்துக்கொண்டே இருக்கும் மனைவி


இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.

சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.

தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள். எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள்.

அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள். புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள்.

வேலைக்கு போகும் பெண்கள் தான் செய்யும் வீட்டு வேலைகளில் கணவரும் தனக்கு துணையாக வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அவ்வாறு மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய முன்வருவதில்லை.

இதுபோன்ற சமயங்களில் பெண்கள் குழந்தையை கவனிக்க வேண்டும், குழந்தையை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், சமைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும் போன்ற பல வேலைகளில் கணவன் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் செய்யாத போது அவர்களை நச்சரிக்க தொடங்கி விடுகின்றனர்.

இவ்வாறு நச்சரிக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. ஆண்கள் எப்போதும் மனைவிக்கு எந்த உதவியும் செய்யாமல் தனக்கு மனைவி எல்லாவற்றையும் தான் எதிர்பார்க்கும் முன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அதே போல் மனைவியும் நினைப்பது தவறில்லை என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

July 19, 2017

ஆண்கள் மனைவியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் செல்ல இதுதான் காரணமாம்..!


பூனையில் சைவம் கிடையாது, ஆண்களில் ராமன் கிடையாது என்று நம் ஊர் கவிஞர் ஒருவர் எழுதியிருந்தார். உலகம் முழுவதும் 2.7 மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். 

பணம், பொருள் மட்டுமல்ல பாலியல் உணர்வுகளும் தூண்டிவிடப்பட்டு ஆண்களையும், பெண்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் மரபு மீறிய செயல்களும், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே நேர்கிறது. என்னதான் தேவதை மாதிரி மனைவி இருந்தாலும், பிசாசு மாதிரி ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங் வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், ஆண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் வேறு பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளத் தயங்க மாட்டார்களாம்.

ஆண்களைப் பொறுத்தவரை போதும் என்ற மனமே இல்லை. ஆண்களின் ஆசையும், செக்ஸ் ஆசையும் முற்றுப்புள்ளி இல்லாத தொடர் கதையாகவே உள்ளது. எவ்வளவு செக்ஸ் கிடைத்தாலும் அதை அனுபவிக்கவே அவர்கள் முயலுகிறார்கள். போதும் என்று நிறுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. 

வேடிக்கைக்காகவும், ஆசைக்காகவும்தான் இந்த கள்ள உறவுகளை அவர்கள் நாடுகிறார்கள். செக்ஸ் விஷயத்தில் என்னதான் அழகான மனைவி இருந்தாலும் அல்லது காதலி இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால், பின்விளைவுகள் இருக்காது என்று உறுதியாகத் தெரிந்தால் இன்னொரு பெண்ணுடன் உறவு வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஆண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உணர்வு என்பது புற நிகழ்வுகளாகவே உள்ளதாக செக்ஸாலஜிஸ்டுகள் கூறுகிறார்கள். 

உணர்வுப்பூர்வமான செக்ஸ் உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. வெளி நிகழ்வுகளின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வை அவர்கள் அடைகிறார்கள். அந்த உணர்வை உடனடியாக வெளிப்படுத்தி விடவும் துடிக்கிறார்கள். இந்த போலியான உணர்வுகளுக்கு அவர்கள் காதல் என்றும் பெயர் வைக்கத் தயங்குவதில்லை. 

எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்தப் பெண்ணே சம்மதித்தாள், அதனால்தான் உறவு வைத்துக் கொண்டேன் என்று கூறும் ஆண்களே அதிகம். அதாவது பழியை பெண்கள் பக்கம் நைசாக திருப்பி விட்டு விடுகிறார்கள். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக மனைவிகள். தங்களது கணவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறன் மனை நோக்காதவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அத்தனை சீக்கிரம் புரிந்து கொள்வதில்லை. 

ஆண்களுக்கும், பெண்களுக்கும் செக்ஸ் விஷயத்தில் நிறைய வேற்றுமை இருக்கிறது. பெண்களின் நம்பிக்கையை குழி தோண்டிப் புதைப்பதைத்தான் ஆண்கள் முதலில் செய்கிறார்கள். யாருடனும் நாம் உறவு கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். அதை உரிமையாகாவும் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் பெண்கள் நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள். இவனை நாம் நம்பலாம், இவனிடம் நம்மைக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் ஒரு ஆணிடம் தங்களைக் கொடுக்க முன்வருகிறார்கள். 

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடல் வேட்கைக்காக மட்டுமல்ல, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இரு பாலினரும், குறிப்பாக ஆண்கள் புரிந்து கொள்வதுதான் நல்லது. இதற்கான எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்ல வரவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள். 

July 18, 2017

திருமணத்திற்கு முன்பு மகளுக்கு தந்தை கட்டிக் கொடுக்கும் “காதல் குடிசை”



திருமணத்திற்கு முன்பு மகளுக்கு தந்தை கட்டிக் கொடுக்கும் “காதல் குடிசை”

கம்போடியாவில் பெண்கள் திருமணத்திற்கு முன்பு, அவர்கள் விரும்பிய ஆண் மகனுடன் வசிக்கலாம். இதற்காக தந்தைகளே தனியாக குடிசைகள் கட்டிக் கொடுக்கும் வினோத பழக்கம் இருந்து வருகிறது.

கல்யாணத்திற்கு முன்பு உறவு என்பது சமூகத்தில் பெரும்பாலானவர்களால் தவறு என்று தான் கருதப்படுகிறது. ஆனால் கம்போடியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது.

இங்கு உறவு வைத்துக் கொண்ட பின்னர் தான், திருமணமே செய்கிறார்கள். அதுவும் 9 வயதிலேயே பெண்களுக்கு அந்த சுதந்திரத்தையும் கொடுத்து விடுகிறார்கள்.

குருயெங் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிராமத்தில் தான் இந்த வினோதப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கு பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அல்லது 9 வயதிலேயே தனியாக குடிசை போட்டு கொடுத்து விடுகிறார் அப்பெண்ணின் தந்தை.

அதன் பிறகு அந்தக் குடிசைக்குள் தனக்கு பிடித்த ஆணுடன் அந்தச் சிறுமி வசிக்கலாம்.

அவளது மனதுக்குப் பிடித்த ஒருவனைக் கண்டறிந்த பின்னர், அதுகுறித்து குடும்பத்திடம் தெரிவித்தால் அவனையே அப்பெண்ணுக்கு கட்டி வைத்து விடுகிறார்கள்.

இதுகுறித்து குடிசையில் வசித்து வரும் 17 வயது நாங் சான் கூறுகையில், இது எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரமாக கருதுகிறோம். இதில் தவறு ஏதும் இல்லை.

சுதந்திரமாக நாங்கள் எங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் உண்மையான காதலனை கண்டறியவும் இது உதவுகிறது.

இந்தப் பாரம்பரிய பழக்கத்தால் எங்களது பெண்கள் யாருமே தவறான வழிக்குப் போக வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்தக் கிராமத்தில் விவாகரத்து, பாலியல் கொடுமை, வரதட்சணைக் கொடுமை என எதுவுமே கிடையாது.

July 17, 2017

700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல் மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள்!


சுய இன்பம் என்பது ஆண், பெண் இருபாலினரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம். இது பெரிய தீயப் பழக்கம் என கூறிவிட முடியாது. மேலும், அறிவியல் ரீதியாக இரு உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது எனவும் சில ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.

உடல் அளவில் ஆரோக்கியம் அளிக்கிறது எனிலும், மனதளவில் எவ்வாறான தாக்கங்களை இது உண்டாக்குகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் மற்றும் ஒரு வேலையின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் கவனத்தை சிதற வைக்க இது முக்கிய காரணியாக இருக்கிறது என்றும் சில உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இனி, 700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல மற்றும் மனதளவில் தான் கண்ட மாற்றங்கள் பற்றி கூறியுள்ளதை பார்க்கலாம்..
சய இன்பம் காண்பதை கைவிட்ட நாளில் இருந்து அதிக கூரிய கவனம் மற்றும் அமைதியை உணர்ந்ததாக அந்நபர் கூறியுள்ளார். தான் சூப்பர்பவர்களை உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிக தன்னம்பிக்கை, ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துதல், எனர்ஜி அதிகரித்தது, சிரத்தை எடுத்து வேலை செய்ய முடிந்தது எனவும், இவற்றை சூப்பர்பவராக கருதுகிறேன் என்றும் அந்நபர் தெரிவித்துள்ளார்.

செக்ஸ் பற்றிய எண்ணங்களை நான் கட்டுப்படுத்த துவங்கிவிட்டால், அதற்கு அப்பாற்பட்டு இருக்கும் உலகின் பல முக்கிய விஷயங்களில் நாம் கவனம் செலுத்த முடியும்.

பெண்களின் உடல் சார்ந்த எண்ணங்கள், இச்சை உணர்வுகளை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டால், எந்த விஷயமாக இருந்தாலும், அதில் மாஸ்டராக திகழ முடியும் என அந்நபர் தெரிவித்துள்ளார்.

முன்பு நான் ஒரு நயவஞ்சகன் தான். வெளிப்படையாக உண்மையை பேசமாட்டேன், மற்றவரிடம் கூறுவது போல நடந்துக் கொள்ள மாட்டேன். ஆனால், நான் சுய இன்பம் காணுவதை கைவிட்ட நாளில் இருந்து நான் அடிக்ட் மற்றும் காதல் கொள்ள இந்த உலகில் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் மீண்டும் கைவிட்டதை தொடரலாம் என எண்ணம் வரும் தருணத்தில், அதை தவிர்த்து வேறு பாதையை தேர்வு செய்யும் போது, நான் அதிக தன்னம்பிக்கையை உணர்ந்தேன். மொபைல் பார்ப்பது, வேறு யாருடனாவது பேசுவது என எண்ணத்தை திசை திருப்பினேன்.

நம் வாழ்வில் நமக்கு சுய மரியாதையை விட, வேறு எதுவும் பெரிய சந்தோசத்தை கொடுத்துவிடாது என்பதை யும் இந்த நாட்களில் நான் பெரிதாக உணர்ந்தேன். சய இன்பம் காணுதல் மட்டுமல்ல, வேறு எந்த தீய பழக்கமும் உங்களுக்கு சுய மரியாதை தரும் அளவிற்கு சந்தோசத்தை அளிக்காது.

பலரும் சுய இன்பம் காணுதல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பழக்கம் என கூறுவார்கள். இது அறிவியல் ரீதியாக உண்மை என்ற போதிலும், இது தேவையற்ற அடிக்ஷன் என்று தான் நான் எண்ணுகிறேன் என அந்நபர் கூறியுள்ளார்.

நாம் அடிக்ஷனாக எடுத்துக் கொள்ள வேண்டிய பல நல்ல விஷயங்கள் இருக்கும் போது சுய இன்பம் காணுதல் அவசியமில்லை என இந்த 700 நாட்களில் உணர்ந்தேன். மன நிம்மது, மன தைரியம், தன்னம்பிக்கை, உடல் ரீதியாக, மன ரீதியாக பலசாலியாக உணர்கிறேன்.

இதை தவிர வேறு என்ன வேண்டும். இந்த சின்ன விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இறுகக் முடியவில்லை எனில், வேறு எந்த விஷயத்தில் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

ஆண்கள் அடையும் உச்சக்கட்ட இன்பம் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள்!


உடலுறவு என்பது அற்புதமான உணர்வை அனுபவிக்கக்கூடிய அதே சமயம் சவால் நிறைந்த ஒன்றும் கூட. ஏனெனில் உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆனந்தக்கடலில் குதூகலமாக நீச்சலடிக்க வைப்பதற்கு பல ட்ரிக்ஸ்களை கையாள வேண்டியிருக்கும்.

ஆனால் அனைவருமே அனைத்து நேரங்களிலும் உடலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடைவார்கள் என்று கூற முடியாது. குறிப்பாக இதில் பெண்கள் தான் அதிகமாக பொய் கூறுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

அந்த வகையில் ஆண்கள் அடையும் உச்சக்கட்ட இன்பம் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விந்துதள்ளல் மற்றும் உச்சக்கட்ட இன்பம் எப்போதும் ஒன்றாக நடக்காது
ஆம், இது உண்மையே. எப்போதுமே விந்து தள்ளலும், உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பது என்பதும் ஒரே சமயத்தில் நடைபெறாது. வேண்டுமானால் நன்கு கவனித்துப் பாருங்கள்.

ஆய்வுகளில் அடிக்கடி உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கும் ஆண்கள் ஆரோக்கியமாகவும், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

JAMA என்னும் பத்திரிக்கையில், ஒரு மாதத்தில் 20 முறைக்கு மேல் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கும் ஆண்களுக்கு, 4-5 முறை இன்பத்தை அனுபவிக்கும் ஆண்களை விட புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாக வெளிவந்தது.

சுய இன்பத்தினால் அனுபவிக்கும் சந்தோஷத்தை விட, துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது அடையும் உச்சக்கட்ட இன்பம் தான் அற்புதமான சந்தோஷத்தையும், உணர்வையும் தரும்.

உச்சக்கட்ட இன்பம் தலைவலியை சரிசெய்யும்
தலைவலி கடுமையாக இருக்கும் போது மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் சுரக்கப்படும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் தலைவலியை உடனடியாக சரிசெய்யும். வேண்டுமெனில்

முயற்சித்துப் பாருங்களேன்.
பொய்யான இன்பத்தை வெளிப்படுத்துதல்
பெண்கள் மட்டும் தான் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தது போல் நடிப்பார்கள் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஆண்களும் பொய்யான இன்பத்தை

வெளிப்படுத்துவதில் வல்லவர்கள்.
2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், உடலுறவில் ஈடுபடும் போது 25 சதவீத ஆண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தது போல் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமாக தன் துணை வருத்தப்படக்கூடாது என்பதற்காக என்றும் கூறுகின்றனராம்.

ஒருமுறை உறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் ஓர் ஆண் மீண்டும் உறவில் ஈடுபட 30 நிமிடங்கள் போதும். அதற்கு அவர்கள் தங்களது மூளையை போதுமான அளவு பயிற்சி அளிப்பதன் மூலம், ஒரே இரவில் பலமுறை உறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.

July 16, 2017

இது சாத்தியமா ? ஒரு முறை உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா ?


ஒரு முறைதான் உறவில் கர்ப்பமடைவது என்பது சாத்தியமா? இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.

பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை  உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம்.

ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால்  கர்ப்பமடைய முடியும்.

சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ பல முறை  கடந்த பின்பே கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும்  சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம். பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே உண்மை.

85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு  பல காரணங்கள் உள்ளன.

கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும்.