Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

July 26, 2017

ரூ 1500 போனும், அம்பானியின் சூட்சமமும்…!


அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்….

1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள #சூட்சமம் யாருக்காவது புரிகிறதா?
தோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்.

1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப கொடுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்துவிடுகிறது.

2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்.

3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்….. அதிலிருந்து லாபமும் பெற முடியும்….

4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது.

5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை.

6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்….!!!

#மாஸ்டர்_பிளான்… இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்….. அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது #சாமர்த்தியம் தான்…..!!!

ஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது… இதை ஏன் #bsnl செய்ய முன்வரவில்லை….?

-AK
26.07.17

நன்றி: தீக்கதிர்

July 25, 2017

மனிதர்களுக்கு உதவும் பாம்பு ரோபோ !


அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் பாம்பு ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளனர். உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்தனர்.

அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர். தற்போது பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ வளரக்கூடியதாக இருப்பதுடன் வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் அளவிற்கு மிக உண்மைத்தன்மையாக தயாரிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ நிறையுடைய இந்தப் பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர நேரத்தில் அதிகம் பயன்படும் என ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விபத்தின் போது ஒருவர் அறையினுள் மாட்டிகொண்டால் அவருக்கு சிறு குழாய் வழியாக தண்ணீர் கொடுக்க இந்த பாம்பு ரோபோ பயன்படும் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த பாம்பு ரோபோ எதிர்காலத்தில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாம்பு ரோபோ மணிக்கு 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்றும், காற்றின் மூலம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் ரோபோ வளரும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

July 20, 2017

என்ன கொடுமை சார் இது: வேலைப் பளு காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!


சமீபகாலமாக தற்கொலை என்ற கையோங்கி நிற்கிறது. காதல் தோல்வி, கல்வியில் தோல்வி, வீட்டு பிரச்சனை என எதற்கொடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ளத்தான் நினைக்கிறார்கள் பெரும்பாலான மனிதர்கள்.

இந்நிலையில், மனிதர்கள் தான் இப்படி என்று நினைத்தால் ரோபோக்களும் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் ஒரு ஆச்சர்யமான விடயம் நடந்து வருகிறது.

அதாவது, கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, நைட்ஸ்கோப் K5 (Knighscope K5)

இந்த ரோபோ வொஷிங்கடன் நகரில் உள்ள ஷொப்பிங் மால் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்தது.

இதன் வேலை, பார்க்கிங் ஏரியாவில் வரும் வாகனங்கள், வாகன் ஓட்டிகள் ஆகியவற்றை கண்காணிப்பதாகும். 136 கிலோகிராம் எடை, 5 அடி உயரம் உள்ள இந்த ரோபோ மணிக்கு 3 மைல் வேகத்தில் நடக்கும்.

இந்த ரோபோவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை பணியில் இருக்கும் போது அருகில் இந்த நீர் அலங்கார குட்டையை நோக்கிச் சென்று அதில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.

ரோபோவின் இந்த தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

July 17, 2017

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் ஃபேஸ்புக்


வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் பத்திரிகைகளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அனைத்து வேலை வாய்ப்பு குறித்தும் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக் ஏற்பாடு செதுள்ளது.

உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமான ஃபேஸ்புக் தற்போது பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி பல ஆக்கபூர்வமான செயல்களுக்கு உதவுகிறது. அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முதல்கட்டமாக கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி ஃபேஸ்புக்கில் இனிமேல் 'Jobs' என்ற புக்மார்கக்கை பேஸ்புக் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் இந்த பகுதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திறமையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

July 16, 2017

இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஐடி நிறுவனங்கள்..! எப்போது தீரும் இந்த பிரச்சனை..?


உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பல மடங்கு எளிமைப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் இத்துறை சார்ந்த நிறுவனங்களே இதன் ஊழியர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து, கடுமையாக்கி வருகிறது.

ஆம், கடந்த சில மாதங்களாக இந்திய ஐடி துறையில் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்புகள் இளைஞர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தடுமாறி நிற்கிறது.

புனேவில் இருக்கும் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர், பணிநீக்கத்தால் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வேதனையில் புதன்கிழமை, ஐடி துறையில் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதமில்லை, எனது குடும்பம் குறித்து நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது' என்று எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் மற்றொரு இடத்தில், 60வயதுடைய ஒருவர் கூறுகையில், தனது மகள் சமீபகாலமாக மிகவும் அமைதியாகிவிட்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து அவளை வெளியில் கொண்டுவர பெற்றோர்கள் அந்தப் பெண்ணைக் கவுன்சிலிங் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தான் தெரிந்துள்ளது அந்தப் பெண் தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதனை மறைக்க, தான் தினமும் வேலைக்குச் செல்வதைப் போலத் தினமும் வெளியில் சென்று வருகிறாள் என அவளது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் பணிநீக்கம் இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, காக்னிசென்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் சிறு சிறு நிறுவனங்களிலும் நிலவுகிறது.

குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இந்தப் பணிநீக்கத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது 25 - 35 வயதுடைய இளைஞர்கள் தான்.

மனமுடைந்த இளைஞர்கள் உறுதியற்ற மனநிலையில் தற்கொலை போன்ற மிகவும் மோசமான முடிவுகளை எடுக்கின்றனர். மறுபுறம் அதிகமானோர் சைக்காலஜி மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங் தளத்தை நாடி வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நிலவும் இந்த நிலையைச் சரி செய்ய யுவர்தோஸ்த் என்ற ஆன்லைன் கவுன்சிலிங் தளம் கடந்த மாதம் Fired to Fired Up எனச் சேவையை அறிமுகம் செய்யது. இதில் முதல் 3 நாட்களில் மட்டும் சுமார் 260 அழைப்புகள் மற்றும் 800 சாட்கள் வந்துள்ளது. (ஜூன் 29- ஜூலை1)

யுவர்தோஸ்த் அமைப்பிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்த நிலையில், 43 சதவீத அழைப்புகள் ஐடி துறையைச் சேர்ந்தது. மேலும் அதிகமான அழைப்புகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ளது.

கலைவாணி கூறுகையில், 10 வருடங்களுக்கும் அதிகமாக ஐடித்துறையில் பணியாற்றி வருகிறேன், தற்போது நிலவி வரும் பணிநீக்கத்தில் நான் பாதிக்கப்பட வில்லை என்றாலும், என்னுடைய நண்பர்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது என்னை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. நான் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் கவலை இல்லை, ஆனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கேள்வியை எதிர்கொள்வதே மிகப்பெரிய அளவிலான அச்சுருத்தலாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஐடித்துறையில் நிலவும் உண்மையான நிலையை உறுதிப்படுத்தும் வகையில் ராகேஷ் குமார் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.

தான் பணியாற்றும் பெரிய நிறுவனமாக இருந்தாலும், தனது மொத்த அணியையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இவர் ஐடித்துறையில் சுமார் 7 வருடம் பணியாற்றியுள்ளார்.

மகேஷ் யுவர்தோஸ்த் தளத்தில் கூறியுள்ள படி, தனது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறாள், 4 பேர் கொண்ட குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளத் தனக்கு இருக்கும் ஓரே வாய்ப்பு வேலையும் மாதாமாதம் கிடைக்கும் சம்பளம் தான்.

பணிநீக்கத்தைச் சந்தித்த மகேஷ் உறுதியாக அடுத்த வேலையைத் தேட துவங்கினாலும், தனது மனதில் இருக்கும் பாரத்தைக் குறைக்க யுவர்தோஸ்த் தளத்தை நாடியுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தற்போது தனது செலவுகளைக் குறைத்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் காட்டினால் போது, அதனால் தனது ஊழியர்கள் நிலையைச் சற்றும் பொருட்படுத்தாமல் பணியை விட்டு பல ஆயிரம் ஊழியர்களை நீக்கி வருகிறது.

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து பெயர்களும் பெயர் மாற்றப்பட்டவை.


July 15, 2017

ஆனா இது தெரியாமல் போச்சே.! இவ்வளவு வருடமா யூஸ் பண்றோம் !


"ஆமாம் காருக்கு எதுக்கு அச்சாணி.?" என்ற முத்து திரைப்பட பாணியில் எது எதற்கு பயன்படும் என்றுகூட தெரியாமல் நம்மில் பலர் சுற்றித்திரிக்கிறோம். அதிலொன்று தான் நாம் அனுதினமும் கம்ப்யூட்டர் கீபோர்ட மற்றும் லேப்டாப் கீபேடில் காணும் எப் கீஸ் எனப்படும் பன்க்ஷன் கீஸ் - இன்னும் விளக்கமாக கூறினால் எப்1 முதல் எப் 12 வரை உள்ள பொத்தான்கள்.!

ஒரு கணினியின்/ லேப்டாப்பின் விசைப்பலகை மேல் பக்கமாக வரிசையாக அமைந்துள்ள எப் கீஸ் எனப்படும் பங்க்ஷன் பொத்தான்கள் ஒன்றும் தூசி சேகரிப்பதற்காக அங்கு வைக்கப்படவில்லை. அவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்களைச் செய்யும், மிகவும் பயனுள்ள ஷார்ட்கட் பொத்தான்கள் ஆகும். அவைகள் என்னென்ன பயன்பாடுகளை வழங்குகிறது என்பதை கண்டறிவோம் வாருங்கள்.!

எப்1 மற்றும் எப்2

எப்1 : கிட்டத்தட்ட எந்தவொரு ப்ரோகிராம் ஆக இருந்தாலும் சரி, ஹெல்ப் ஸ்க்ரீன் ஓப்பன் செய்ய இந்த கீ உங்களுக்கு உதவும்.

எப்2: இந்த கீயை உபயோகிப்பதின் மூலமாக நீங்கள் தேர்வு செய்துள்ள போல்டர்களின் பெயரை மாற்றி அமைக்கலாம், அதாவது ரீநேம் செய்யலாம்.

எப்3 மற்றும் எப்4

எப்3 : நீங்கள் உலாவிக்கொண்டிருக்கும் ஆக்டிவ் ப்ரவுஸர்களில் சேர்ச் பாக்ஸை திறக்க இந்த கீ பயன்படும்.

எப்4 :இந்த கீ, விண்டோஸ் எக்ஸ்பி-யில் மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் பாரை திறக்க உதவும் மற்றும் ஆல்ட் உடன் இணைத்து பயன்படுத்தப்படும் பொழுது ஆக்டிவ் ஆக இருக்கும் விண்டோவை உதவும்.

எப்5 மற்றும் எப்6

எப்5 : ஒரு வலைப்பக்கத்தையோ அல்லது விண்டோவின் டாக்குமென்ட்டையோ ரீலோட் செய்யவோ அல்லது ரிப்பிரஷ் செய்யவோ இந்த கீ உங்களுக்கு உதவும்.

எப்6 : பெரும்பாலான இன்டர்நெட் ப்ரவுசர்களில் கர்ஸரை அட்ரஸ் பார் நோக்கி நகர்த்த இந்த கீ பயன்படுகிறது.

எப்7 மற்றும் எப்8

எப்7 : மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களில், டாக்குமென்டில் உள்ள எழுத்துப்பிழை மற்றும் இலக்கண பிழைகளை கண்டறிய இந்த கீ உதவும்.

எப்8 : கம்ப்யூட்டரை டர்ன் ஆன் செய்யும் போது விண்டோவில் பூட் மெனு அக்சஸ்தனை பெற இந்த கீ உங்களுக்கு உதவும்.

எப்9 மற்றும் எப்10

எப்9 : மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்குமெண்டை ரிப்பிரஷ் செய்யவும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் இமெயிலை அனுப்பவும் பெறவும் இந்த கீ உதவும்.

எப்10 : திறந்திருக்கும் அப்ப்ளிகேஷனில் மெனு பாரை ஆக்டிவேட் செய்ய மற்றும் ஷிப்ட் உடன் இணைய, ரைட் கிளிக் செய்யும் அதே செயல்பாட்டை செய்ய இந்த கீ உதவும்.

எப்11 மற்றும் எப்12

எப்11 : இண்டர்நெட் ப்ரவுஸர்களில் புல் ஸ்க்ரீன் மோட்தனை எண்டர் செய்யவும், எக்சிட் செய்யவும் இந்த கீ உதவும்.

எப்12 : மைக்ரோசாப்ட் வேர்ட் டாக்குமென்டில் சேவ் ஆஸ் டயலாக் பாக்ஸை திறக்க இந்த கீ உதவும்.

July 11, 2017

இந்தியா மாட்டிக்கொண்டது ! அமெரிக்கா தப்பித்தது !!


தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஒரு பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது, இதனால் தனது நிறுவனத்தில் பணிபுரிய உலகத் தொழிலாளர்களில் 3,000 நபர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பிறந்த சத்யா நதெல்லா தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மறுசீரமைப்பின் கீழ் பணிநீக்கம் செய்வதில் பெரும்பாலும் விற்பனை பிரிவை சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும், 3000 நபர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் சிஎன்பிசி தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கு மாற்றங்களை அமல்படுத்துவதாகக் கூறியுள்ளது.

சில பணியாளர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படுகின்றன அல்லது அவற்றின் நிலைகள் அகற்றப்படும் என்று அறிவிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் எல்லா நிறுவனங்களையும் போலவே, எங்கள் வணிகத்தை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோம், அதனால் சில இடங்களில் அதிக முதலீடு செய்யலாம், என்றும் ஊழியர்களை மாற்றி அமர்த்தலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் விற்பனை பிரிவில் இருந்து மொத்தமாக 10 சதவீதம் ஊழியர்களை வெளியேற்றலாம் என்றும் அதில் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் அமெரிக்காவைத் தவிரப் பிற நாடுகளில் உள்ளவர்கள் என்றும் நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது கிளவுட் தயாரிப்பான அஸ்யூர் மென்பொருளை விற்பனை செய்வதில் அதிகக் கவனம் செலுத்த இருப்பதாகவும், கடந்த சில காலாண்டுகளாகக் கிளவுட் பிரிவு தான் அதிக அளவில் வணிகத்தை அளித்துள்ளது என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

சென்ற காலாண்டில் மட்டும் மைக்ரோசாப்டின் அஸ்யூர் விற்பனை 93 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரம் அமேசான் மிகப் பெரிய போட்டியாளர்களாக உள்ளனர், எனவே மொக்ரோசாப்ட் தனது மென்பொருள் மறுசீரமைப்பை மேற்கொண்டு வருவதினால் சேவையாக உள்ள மென்பொருள் பிரிவை சேவை மற்றும் உள்கட்டமைப்பாக மற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களைக் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்காக அதிகப்படியாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்றும் அதனால் அதிகளவு விற்பனை நடக்கும் என்றும் கூறுகின்றது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 71,000 ஊழியர்கள் பணி புரிகின்றனர், பிற நாடுகளில் 121,000 ஊழியர்கள் பணி புரிவது குறிப்பிடத்தக்கது.

July 8, 2017

செல்போன் விற்பனையில் இந்தியாவில் 2வது இடத்தை பிடித்துவிட்ட சீன நிறுவனம் ! இதுல போர் பீதி வேற ?


சிக்கிம் எல்லையில், இந்தியா-சீனா நடுவே கடும் பதற்றம் நிலவி வரும் நிலையிலும், சீனாவை சேர்ந்த ஒரு செல்போன் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

சீனாவை சேர்ந்த லீ ஜுன் உருவாக்கிய ஜியோமி (எம்.ஐ) போன்கள்தான் இந்தியாவில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன. பல்வேறு வசதி, நீடித்து நிற்கும் சார்ஜ் போன்ற வசதிகளுடைய போன்களை பிற போட்டியாளர்களைவிட குறைந்த விலையில் தருவதால் எம்.ஐ போன்களுக்கு இந்தியாவில் கிராக்கி அதிகம்.

இந்தியாவின் ஜியோமியின் வருமான அதிகரிப்பு 328 சதவீதம் அதிகரித்துள்ளது என்றால், நீங்களே அதன் சந்தை மதிப்பை கணக்கிட்டுக்கொள்ளலாம். நடப்பாண்டின் 2வது காலாண்டில், சாதனை அளவாக ஜியோமி இந்தியாவுக்கு போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இக்காலகட்டத்தில் 2 கோடியே 30 லட்சம் அளவுக்கு போன்களை ஜியோமி ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்குள் அனுப்பி வைத்துள்ளது.

ரெட்மி நோட் 3, நோட்4 போன்றவை அதிகம் விற்பனையாகும் ஜியோமி போன்களாகும். இந்திய மார்க்கெட்டில் ஜியோமிக்கு இப்போது 2வது இடம். விரைவிலேயே முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு அதற்கு உள்ளது.

June 9, 2017

ஆப்பிளுக்கு ஆப்பு ரெடி - ரூ.32,999/-க்கு 1+ 5.!


ஜூன் 20-ஆம் தேதி மாபெரும் எதிர்பார்ப்புகளுக்குள் உள்ள ஒன்ப்ளஸ்4 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவை பொறுத்தம்மட்டில் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜூன் 22 அன்று அறிமுகமாகிறது.

வரவிருக்கும் இந்த பிளாக்ஷிப் கில்லர் சாதகமானது இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது - 6 ஜிபி ரேம் மற்றொன்று 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன். தாமதமாக வந்தாலும் ஒன்ப்ளஸ் 5 பற்றிய பல வதந்திகள் மற்றும் ஊகங்கள் முழுவதும் வெளி வந்துள்ளன. மேலும், ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பயன்பாடு போன்ற ஒரு சில அதிகாரப்பூர்வ உறுதிமொழிகளும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இப்போது ட்ரூடெக் வெளியிட்டுள்ள ஒன்ப்ளஸ் 5 பற்றிய ஒரு சுவாரஸ்யமான விவரத்தை காண்போம்.

விரைவில் வெளியாகவுள்ள இக்கருவியின் விலை நிர்ணயம் ரூ.32,999/- இருக்கலாம். அதாவது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்டிருக்கும் அடிப்படை மாறுபாடு ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட உயர் இறுதியில் மாதிரி ரூ.37.999/- விலை நிர்ணயம் பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்ப்ளஸ் 3டி அடிப்படை சாதனத்துடன் ஒப்பிட்டால் அதன் உயர்-முடிவு வகை கருவி ரூ.3,000 அதிக விலை நிர்ணயம் பெற்றது. ஆக தற்போது கசிந்துள்ள ஒன்ப்ளஸ் 5 மாறுபாடுகளுக்கு இடையிலேயான வித்தியாசம் ரூ.5,000/- ஆக உள்ளது. எனவே இதுவொரு நடைமுறையான ஒன்றாகவே தெரிகிறது.

ஜூன் 22-ஆம் தேதி இந்தியாவின் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் ரூ.999/- மதிப்புள்ள அழைப்பிதழை வாங்குவதில் மூலம் ரசிகர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். ஜூன் 12 அன்று அதிகாரப்பூர்வ ஒன்ப்ளஸ் ஸ்டோரிலிருந்து அழைப்பிதழ்களை நீங்கள் பெறலாம். மொபைல் அறிமுகம் ஆன அதே நாளில் நிறுவன்தான் இ-காமர்ஸ் கூட்டாளியான அமேசானில் மொபைலை வாங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியான தகவல்களின் கீழ் ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி 1080பி டிஸ்பிளே கொண்டு வெளியாகலாம் மற்றும் ஒரு ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பயன்படுத்துகிறது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது.

சாதனம் ஒரு இரட்டை லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு மற்றும் ஒளி குறைந்த நிலையில் கூட ஒரு ஈர்க்கக்கூடிய தரம் வழங்குவதற்கு போதுமான திறன் கொண்ட கேமரா மாதிரிகள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் மேம்படுத்தப்பட்ட டேஷ் சார்ஜ் அம்சத்துடன் இயங்குகிறது, இது 30 நிமிடங்களில் 0% முதல் 100% வரை சார்ஜ் செய்யும்.

June 3, 2017

பிங்’ தேடல் பொறியை பயன்படுத்தினால் உங்களுக்கு மைரோசப்ட் பணம் அளிக்கும்..!


இணையதள உலகில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்துபவர்களைப் பிங் தேடு பொறியைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் பயனர்களுக்குப் பணம் அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இப்படிப் பிங் பயன்படுத்தும் பயனர்களுக்குப் பணம் அளிப்பதன் மூலம் போட்டி நிறுவனமான தேடு பொறி ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தை எளிதாகப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்று மைக்ரோசாப்ட் திட்டம் தீட்டியுள்ளது.

வெகுமதிகள் திட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடு பொறியை பயன்படுகிறதும் பயனர்களுக்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கும், இந்த வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்தி இணையதளத்தில் இசை, திரைப்படம் மற்றும் பொருட்கள் வாங்குவது போன்றவற்றைச் செய்யலாம்.

 வெகுமதி திட்டம் எதற்காக?
வெகுமதி புள்ளிகள் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே உள்ள பிங் பயனர்கள் இதனால் நல்ல பயன் அடைவார்கள் என்றும் அதே நேரம் புதிய பயனர்களும் அதிகளவில் பிங் தேடு பொறியைப் பயன்படுத்துவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெகுமதி புள்ளிகள் எப்படிக் கிடைக்கும்?
வெகுமதி புள்ளிகளை மீட்டெடுத்துப் பயன்படுத்த இரண்டு நிலை உள்ளன. முதல் நிலையில் ஒரு நாளைக்கு 10 தேடல் என்ற விதத்திலும், இரண்டாம் நிலையில் ஒரு நாளைக்கு 50 தேடல் என்ற விதத்திலும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும்.
பயன்படுத்தப்படும் தேடல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படும்.

 எட்ஜ் உலாவி பயனாளிகளுக்கு அதிகப் புள்ளிகள்
எட்ஜ் உலாவி பயனாளிகளாக நீங்கள் இருந்தால் 60 புள்ளிகள் கிடைக்கும், இதுவே பிற உலாவி அதாவது க்ரோம், மொஜில்லா உள்ளிட்ட உலாவிகளில் பிங் தேடு பொறியில் தேடும் போது 30 புள்ளிகள் கிடைக்கும்.
இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து மைக்ரோசாப்ட் ஸ்டோரில் செலவு செய்யும் ஒவ்வொரு பவுண்டிற்கும் 1 புள்ளிகள் வெகுதமிகளாகக் கிடைக்கும்.

விரைவில் பிற நாடுகளில்
விரைவில் இந்த வெகுமதி திட்டம் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகின்றது.

May 30, 2017

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மால்வேர் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் எவ்வித மால்வேர் பாதிப்புகளிலும் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

உலகம் முழுக்க மால்வேர் சார்ந்த சைபர் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. சமீபத்திய ரான்சம்வேர் தாக்குதல்கள் இணைய உலகின் அபாயத்தை நமக்கு உணர வைத்தது. உலகின் பெரும் நிறுவனங்களும் மால்வேர் பாதிப்புகளில் சிக்கின.

கணினிகளை போன்றே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இண்டர்நெட் அத்தியாவசிய தேவையாகி விட்டது. இண்டர்நெட் நமக்கு பல்வேறு வசதிகளை வழங்கினாலும் அவை நமக்கு வம்பிழுக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு இண்டர்நெட் மூலம் ஏற்படும் அபாயங்களில் மால்வேர் தாக்குதல் முக்கியமானதாக உள்ளது. உங்களது ஸ்மார்ட்போன்களில் இதுபோன்ற மால்வேர் தாக்குதல்களை தவிர்க்க நீங்கள் முன்கூட்டியே செய்ய வேண்டிவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

பிரான்ட்டெட் செயலிகள்:
ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகளை எப்போதும் தரமான பிளே ஸ்டோர்களில் இருந்து மட்டுமே டவுன்லோடு செய்ய வேண்டும். பொதுவாக கூகுள், அமேசான், சாம்சங் மற்றும் சில நிறுவனங்கள் தங்களது பிளே ஸ்டோர்களில் உள்ள செயலிகளை பாதுகாப்பாக வைத்து கொள்கின்றன.

இதனால் நீங்கள் டவுன்லோடு செய்யும் செயலி பாதுகாப்பானதாகவும், சாதனத்திற்கு மால்வேர் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கவும் செய்யும். இதற்கென செயலிகளில் சீரான இடைவெளியில் அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.

போலி செயலிகள்:
ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்யும் செயலிகள் உண்மையானவை தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். போலியான செயலிகளை நம்ப முடியாத வசதிகள், குறைந்த வாடிக்கையாளர் மதிப்பீடு (ரீவியூ) உள்ளிட்டவற்றை கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

போலியான செயலிகளில் ஸ்மார்ட்போன் சாதனங்களை பாதிக்கும் மால்வேர்கள் அடங்கியிருக்கும். இவை எந்நேரத்திலும் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

செட்டிங்ஸ்:
மால்வேர் தாக்குதல்களை எதிர்கொள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளம் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஆண்ட்ராய்டு 2.2 மற்றும் அதற்கும் அதிகமான பதிப்புகளில் இருந்தே ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதுகாக்கும் வசதி வழங்கப்படுகிறது.

இதனால் பிளே ஸ்டோர்களில் இருந்து டவுன்லோடு செய்யப்படும் செயலிகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதனை கூகுள் ஸ்கேன் செய்து உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து விடும்.

இதே வசதியை கூகுள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றும் இயக்க முடியும். ஆண்ட்ராய்டு 4.2 மற்றும் அதற்கும் அதிகமான பதிப்புகளில் இந்த வசதியை இயக்க, செட்டிங்ஸ் -- செக்யூரிட்டி -- வெரிஃபை ஆப்ஸ் பகுதிக்கு சென்று பாதுகாப்பற்ற செயலிகளை கண்டறிய முடியும்.

மென்பொருள் அப்டேட்:
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் மென்பொருள் அப்டேட்களை சீரான இடைவெளியில் டவுன்லோடு செய்ய வேண்டும். ஸ்மார்ட்போன்களை அடிக்கடி அப்டேட் செய்யும் போது அவை அனைத்து வித மால்வேர் மற்றும் இதர பாதிப்புகளில் சிக்காமல் தவிர்க்க முடியும்.

ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நீங்கள் பயன்படுத்தும் பிளே ஸ்டோர்களுக்கு சென்று செயலிகளையும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். உங்களது சாதனத்தை போன்றே செயலிகளும் அப்டேட் செய்யப்பட்டிருப்பது, மால்வேர் தாக்குதல்களை தவிர்க்க உதவும்.

ஆண்டிவைரஸ் மென்பொருள்:
ஸ்மார்ட்போன்களில் ஆண்டிவைரஸ் போன்ற மென்பொருள்களை டவுன்லோடு செய்வது குறித்து பல்வேறு புரளிகள் இருந்தாலும், இவை சாதனங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது மட்டும் உறுதியானதாகும்.

மேலும் இதுபோன்ற மென்பொருள்கள் சாதனங்கள் ஏதிர்கொள்ளும் பாதிப்புகளை, தடுத்து நிறுத்துவதோடு சாதனத்தினுள் எவ்வித வைரஸ் மற்றும் மால்வேர்களையும் அனுமதிக்காது.

ஆண்டிவைரஸ் மென்பொருள்களை தேர்வு செய்வது அவரவர் விருப்பம் தான். எனினும் பிரபலமான ஆண்டிவைரஸ் நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது.

May 25, 2017

5ஜி : ஆப்பிளின் சுயநலமான மற்றும் இரகசியமான சோதனை.!



இன்டர்நேஷ்னல் கம்பெனிகளில் பிராண்ட் மதிப்பீட்டில் முதல் இடம் வகிப்பது ஆப்பிள் நிறுவனம் தான்.ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கென மக்களிடம் எப்பொழுதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பங்களை சோதிக்க  தயாராக உள்ளது. மேலும் 5ஜி என்று அழைக்கப்படுகிற இணையவேகத்தை செயல்படுத்த தீவிரமாக முயற்சி செய்துவருகிறது.

இந்த 5ஜி சேவை பொருத்தமாட்டில் ஆப்பிள்-ன் தனது மொபைல் மாடல்களுக்கு மட்டுமே சுயநலமாக இணையவேகத்தை அதிகரிக்க இந்த சோதனையை முயற்சி செய்து வருகிறது.

எப்சிசி அறிக்கை:
மில்லிமீட்டர் அலை எனப்படும் புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு பரிசோதனை உரிமத்திற்கான விண்ணப்பம் செவ்வாயன்று கையொப்பம் இடப்பட்டது. என எப்சிசி அறிக்கையில் கூறப்பட்டது.
 
ஆப்பிள் இன்க்:
ஆப்பிள் இன்க். செல்லுலார் இணைப்பு செயல்திறனை மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறது. இவை டிரான்ஸ்மிட்டர்கள் தொழிழ்நுட்பத்தை செயல்படுத்தி பனிகளை செய்துவருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த மதிப்பீடுகள், வயர்லெஸ் கேரியர்கள் கொண்டு எதிர்கால 5ஜி நெட்வொர்க்குகள் சாதனங்களின் செயல்பாட்டிற்கு பொருந்தக்கூடிய பொறியியல் தரவுகளை வழங்கும்.
 
மில்பிடாஸ்:
ஆப்பிள் கட்டுப்பாட்டு வசதிகளான கபெர்டினோ மற்றும் மில்பிடாஸ், சிஏ ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து ஆப்பிள் 5ஜி செயல்திறனை அனுப்ப விரும்புகிறது. இதன் மூலம் இன்டெர்நெட் வேகம் அதிகரிக்கும்.
 
ஜிஎச்இசெட் பேண்ட்:
ஆப்பிள் பயன்பாடு குறிப்பாக 28 மற்றும் 39 ஜிஎச்இசெட் பேண்ட் குறிப்பிட்டுள்ளது, எப்சிசி கடந்த ஆண்டு 5ஜி பயன்பாடுகள் வணிக பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற்றது. மேலும் ஏ.ஹெச் சிஸ்டம்ஸ் மற்றும் அனலாக் டிவைசஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் தொழில்நுட்பங்களை கொண்டு பல்வேறு சோதனைகளை செயல்படுத்துகிறது, ஆப்பிள் நிறுவனம்.
 
5ஜி ;
5ஜி அல்லது மில்லிமீட்டர் அலை தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய மாற்றங்கள் ஏறப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இவை நெட்வோர்க்கில் மிகப் பெரிய சாதனை ஏறப்படுத்தும் என தெரிகிறது.

May 20, 2017

வான்னாகிரை வைரஸ் மூலம் ஹேக்கர்கள் சம்பாதித்தது எம்புட்டு தெரியுமா?...


 வான்னாகிரை வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்களை முடக்கிய ஹேக்கர்கள் சம்பாதித்த தொகை வெறும் ரூ.32 லட்சம்தானாம்.

வான்னாகிரை என்ற ஹேக்கர் குழுவினர் வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்களை முடக்கிய ஹேக்கர்கள் அதற்கான கீயை கொடுத்து சம்பாதித்தது சொற்ப அளவிலான தொகை தானாம்.
உலக நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை வான்னாகிரை என்ற வைரஸ் ஒரு கை பார்த்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த வைரஸ் மூலம் கம்ப்யூட்டர்கள் படாதபாடு பட்டன.
இதனால் ஒரு லட்சம் கணினிகள் முடக்கப்பட்டன. இது வெளிநாடுகளில் உள்ள ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம் என்றும், பணம் பிடுங்கும் நோக்கில் இவர்கள் செயல்படலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

முடக்கத்திற்கான தீர்வு
கணினிகளை முடக்கும் ஹேக்கர்கள் அந்த கம்ப்யூட்டர்களை லாக் செய்து விடுவார்கள். அதை ஓபன் செய்யும் கீ அவர்களிடமே இருக்கும். அவர்கள் அதைக் கொடுக்க பணம் கேட்பார்கள். பணம் கொடுத்தால் கம்ப்யூட்டர்கள் தப்பும். இல்லாவிட்டால் அப்படியே கிடக்கும்.

99 நாடுகள்
இதைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 99 நாடுகளில் உள்ள கணினிகளில் வைரஸ் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான பணம் நஷ்டமாகிவிட்டதாக தொழில் நிறுவனங்கள் தெரிவித்தன. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கணினிகளும் முடக்கப்பட்டன. இதனால் தேவஸ்தானத்தின் இணையதளமும் முடங்கியது.

பரவுவது எப்படி?
சமீபத்தில் உருவெடுத்த 'வான்னாகிரை' ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை லாக் செய்து விடும். குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் மிரட்டி பணம் பறித்து வந்தனர்.

 எவ்வளவு பணம்
யாருக்கு பணம் போய் சேர்கிறது என்பதை எளிதாக கண்டறிய முடியாத ஃபிட்காயின் எனும் குறியாக்கம் செய்த பணங்களையே (encrypted money) இக்குழுவினர் பெற்று வந்த நிலையில், இவர்கள் சம்பாதித்தது எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை பிரிட்டனை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘வான்னாக்ரை' குழுவினர் பிட்காயின்களை பெற்றுக் கொள்ளும் முகவரியை கண்டறிந்துள்ள இந்நிறுவனம், அம்முகவரியில் உள்ள கணக்கில் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் 32 லட்சம் ரூபாய்) இருப்பதாக தெரிவித்துள்ளது.

செம காமெடி
வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான தொகைகளை இழந்துள்ளன. அவர்களிடம் ஹேக்கர்கள் கோடிக்கணக்கில் சம்பாத்திருப்பார்கள் என்று பார்த்தால் வெறும் 32 லட்சமே சம்பாதித்துள்ளது பெரிய காமெடியாக மாறியுள்ளது.

அட கிட்நா நாயே!
இதை பார்க்கும் போது உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்திய கடத்தல்காரன் மணிவணன் மற்றும் அவரது அசிஸ்டன்டுகளான செந்தில் மற்றும் பாண்டுவிடம் கவுண்டமணி, கார்த்திக் பேரம் பேசுவர். அந்த கிட்நா காமெடிதான் நினைவுக்கு வருது பாஸ்!

May 18, 2017

ஏர்டெல் பிராட்பேண்ட்: பழைய விலையில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு


ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் பழைய விலையில் முன்பை விட கூடுதல் டேட்டா பெற முடியும்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையில் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சலுகை திட்டங்களின் படி மாதாந்திர பிராட்பேண்ட் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் 100 சதவிகிதம் கூடுதல் டேட்டா பெற முடியும் என பாரதி ஏர்டெல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி ரூ.899 திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட 30 ஜிபி டேட்டாவுக்கு பதில் இம்முறை 60 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.1,099 திட்டத்தில் தற்சமயம் 90 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, முன்னதாக இந்த திட்டத்தில் 50 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது.

ஏர்டெல் ரூ.1,299 திட்டத்தில் புதிய சலுகையின் கீழ் 125 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது, முன்னதாக இந்த திட்டத்தில் 75 ஜிபி மட்டுமே வழங்கப்பட்டது. ரூ.1,499 திட்டத்தில் 100 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய சலுகையின் கீழ் 160 ஜிபி வழங்கப்படுகின்றது.



இதேபோன்ற கூடுதல் டேட்டா சலுகைகள் அனைத்து நகரங்களிலும் ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளது, இத்துடன் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் சேவையும் வழங்கப்படுகிறது என பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிவேக டேட்டா பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் அதிக தரமுள்ள வீடியோ ஸ்டிரீமிங், புகைப்படங்களை தரவிறக்கம் செய்வது மேலும் டேட்டாவினை ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ரேன்சம்வேர் வைரஸால் ஆதார் தகவல்களை திருட முடியாது: மத்திய அரசு விளக்கம்


எந்த வைரஸாலும் ஆதார் தகவல்களை அசைக்க முடியாது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. வான்னாகிரை எனப்படும் வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் இணையதள பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளின் இணைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதனிடையே இந்தியாவிலும் இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா, திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட இடங்களில் வான்னாகிரை எனப்படும் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே வான்னாகிரை வைரஸ் மூலம் 114 கோடி இந்திய மக்களின் ஆதார் தகவல் திருடப்பட்டுவிடும் என்று பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் எந்த வைரஸாலும் ஆதார் தகவல்களை அசைக்க முடியாது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் பதில் அளித்துள்ள தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவர் ஜே. சத்யநாராயணா ஆதார் தகவல்கள் என்கிரிப்ட் எனப்படும் குறியாக்க அடிப்படையிலான வடிவமைப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே இதில் பாதுகாப்புக் குறைபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மத்திய அரசு ஆதார் ஒழுங்கமைப்பில் ரூ.7000 கோடி செலவழித்திருப்பதாகவும், மோசடியாக பயன்படுத்தப்பட்ட அரசின் நலத்திட்டங்களைக் களையெடுத்ததன் மூலமாக, ரூ.50,000 கோடி வரை அரசிற்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

May 15, 2017

ஒரு அறையில் இரகசிய கேமரா உள்ளதென்பதை கண்டறிவது எப்படி ?


மிக எளிமையாக இரகசிய கேமரா கேமரா உள்ளதென்பதை கண்டறிவது எப்படி ?

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்று அறைகள் போன்ற இடங்களில் வைக்கப்படிருக்கும் கண்ணாடிகள் மூலம் நாம் நம்மை மட்டுமே பார்க்க இயலும் என்று நினைத்தால் அது தவறு.நமக்கு தெரியாமலே எதிரில் இருந்து வேறொருவர் நம்மை பார்க்க வாய்ப்புள்ளது.அப்படி அவர் நம்மை பார்ப்பது நமக்கு தெரியாது.மாறாக நமக்கு நம் பிம்பம் மட்டுமே பிரதிபலிக்கப்படும்.சரி இதனை எப்படி கண்டறிவது?
எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது மிக கவனமாக இருத்தல்வேண்டும். இரகசிய கேமரா பொருத்தமாட்டில் பல சம்பவங்கள் நம் செய்திகளில் பார்க்கமுடியும். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கேமரா தயாரித்து சிலர் தவரான காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.

செல்போன்:
அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும். பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கேமரா வைகப்பட்டிருகிறது.


கேமரா டிடெக்டர்:
நீங்கள் ஹோட்டல் அறையில் நுழையும்போது மிக கவனமாக கேமரா டிடெக்டர் பயன்படுத்தவும். கேமரா டிடெக்டர் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்.

 கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்:
அறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்கவேண்டும். பொதுவாக இரகசிய கேமரா அதில்தான் மறைத்துவைக்கப்பட்டிருக்கும். அறையில் தகுந்த பாதுகாப்பு கேடயங்கங்களைப் பயனபடுத்த வேண்டும்.

 ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கண்டறிய
உண்மையில் சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்கள் அனுதினமும் சிறப்பான ஒரு கருவியாக மாறிக்கொண்டே வருகின்றன. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உதவி செய்யும் உங்கள் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு ட்ரையல் அறையில் ரகசிய கேமிரா இருக்கிறதா இல்லையா என்பதையும் கண்டறிய உதவும்.

கரடிகள்:
பொதுவாக ஹோட்டல் அறையில் உள்ள கரடிகரங்களில் கேமரா மறைத்துவைக்கப்பட்டிருக்கும். மேலும் புத்தகங்கள், மேசை செடிகள், வீட்டு தாவரங்கள் போன்றவற்றிலும் கூட மறைத்துவைக்கப்பட்டிருக்கும். எனவே கேமரா டிடெக்டர் பயன்படுத்துவது நல்லது.

May 14, 2017

கதறடிக்கும் "வான்னாகிரை" வைரஸ்.. 99 நாடுகள் பாதிப்பு.. இந்தியாவிலும் பரவியது! #WannaCry


உலகம் முழுவதும் புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகிறது. வான்னாகிரை வைரஸ் என்ற இந்த வைரஸை, ஹேக்கர்கள் ஏவியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கில் இந்த வைரஸை இந்தக் கும்பல் ஏவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
படு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முழுமையான பாதுகாப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன்டர்நெட் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை பிரித்து வைப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்கிறார்கள்.
ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ் என எந்தத் தற்காப்பும் கை கொடுக்கவில்லையாம். அதைத் தாண்டி இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறதாம்.

 ஹேக்கர்கள் அட்டகாசம்
ஹேக்கர் கும்பலின் கைவரிசைதான் இந்த வைரஸ். இந்த வைரஸ் தாக்கும் கம்ப்யூட்டர்கள் லாக் ஆகி விடும். இதைத் தொடர்ந்து வைரஸை அனுப்பிய ஹேக்கர் கும்பல், அன்லாக் செய்ய உதவுகிறோம். பணம் கொடுங்க என்று மிரட்டி பண் பறிக்கிறார்களாம்.

வெள்ளிக்கிழமை முதல் பரவுகிறது
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த மிரட்டல் வைரஸ் பரவி வருகிறது. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கம்ப்யூட்டர்களை லாக் செய்து விட்டது. தற்போது லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இது லாக் செய்துள்ளது.

 பேரைப் பாருங்க
இந்த வைரஸுக்கு பெயர் வானாகிரிப்டோஆர் 2.0 அல்லது வானாகிரை என்பதாகும். இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளைத்தான் இது கடுமையாக பாதித்துள்ளது. மேலும் பல நாடுகளையும் இது தொடர்ந்து தாக்கி வருகிறது. 99 நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்தியாவிலும் தாக்குதல்
இந்தியாவிலும் கூட இந்த வானாகிரை வைரஸ் பரவியுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வங்கி நெட்வொர்க்கை குறி வைத்துத்தான் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பதால் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆன்லைன் சேவைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள உள்ள

May 11, 2017

ஆட்டத்தில் ஐடி? விப்ரோ, இன்போசிஸ் வரிசையில் டெக் மஹிந்திரா.. 1500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு



விப்ரோ, காக்னிசான்ட், இன்போசிஸ் உள்ளிட்ட பல முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. அந்தப் பட்டியலில் டெக் மஹிந்திரா நிறுவனமும் இணைந்துள்ளது.

அமெரிக்காவின் நிலையற்ற பொருளாதார கொள்கைகளால் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்தியர்களும் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அமெரிக்க நிழலில் ஓய்வெடுக்கும் இந்திய தலைமுறையை உருவாக்கிவிட்டது அந்த நாடு.
விசா கட்டுப்பாடு , ஐடி நிறுவனங்களின் எதிர்பாராத வீழ்ச்சியினாலும் ஐடி மற்றும் தொழில்தொடர்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு என்னும் டெர்மினேட் நடவடிக்கையில் இறங்கி ஊழியர்களின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டிவருகின்றன. இதனால் என்ன செய்வதென்ற குழப்பத்தில் தவிக்கிறார்கள் ஐடி நிறுவன வாசிகள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்தப் பதவிக்கு வந்த உடன் முதல்வேலையாக செய்தது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டதுதான். அவுட்சோர்ஸிங் வேலைக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதித்து இன்போசிஸ் நிறுவனத்தையே மிரள வைத்தார்.

விப்ரோ, இன்போசிஸ்
அந்த வரிசையில் விப்ரோ,காக்னிசான்ட், இன்போசிஸ் நிறுவனங்கள் பல ஆயிரம்பேரை வீட்டுக்கு அனுப்பி உள்ளன. அதே போல டெக் மஹிந்திரா சாப்ட்வேர் நிறுவனமும் 1500 பேரை வேலையைவிட்டு நீக்க முடிவெடுத்துள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு ஆபத்து
கேப்ஜெமினி நிறுவனம் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் தொழில்நுட்ப அதிகாரிகள், ஊழியர்கள் என 9000 ஊழியர்களை வெளியேற்றுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் தனது மும்பை அலுவலகத்தில் இருந்து 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இன்போசிஸ் நிலை
இன்போசிஸ் நிறுவனம் குரூப் புராஜெக்ட் மேனேஜர், சீனியர் ஆர்கிடெக்ட் என குரூப் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிகளில் இருக்கும் 1000 பேரை நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் இந்நிறுவனம் 500 ஊழியர்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விப்ரோ நிறுவனம்
நாட்டில் மூன்றாவது மென்பொருள் ஏற்றுமதியாளரான விப்ரோ நிறுவனமும் பிராஜெக்ட் லீடர் , மேனேஜர் பதவிகளில் இருப்பவர்களை நீக்க முதல்கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. டாடா தொழில்தொடர்பு நிறுவனம் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

 ஏர்செல் நிறுவனம்
நாடு முழுவதும் சுமார் 8000 ஊழியர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் , கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.லீ ஈகோ என்ற சீனா நிறுவனம் 85% இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.ஸ்நாப்டீல் நிறுவனம் 30% ஊழியர்கள் அதாவது சுமார் 1000 ஊழியர்களை கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்கம் செய்துள்ளது.

  சரிதான் என்கிறார்கள்
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து ஐடி நிறுவனத் தலைவர்கள், சிஇஓ-க்கள் தரப்பில்," இந்த மாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறையில் நிகழ்வதுதான். சரியான ஆட்களைத் தேர்வுசெய்ய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ஒன்றுதான்." என்று சப்பைக்கட்டு காட்டுகிறார்கள்.

May 10, 2017

அதிவேக குடிநீர் சுத்திகரிப்பு தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு


மக்களின் குடிநீர் தேவையை ஈடு செய்வதற்காக அதிவேக சுத்திகரிப்பு நுட்பம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அழுக்குப் படிந்த நீரில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, அவற்றை சுத்தமான குடிநீராக்கும் பணிக்கு மிகச்சிறந்த வழி சூரிய சக்தியைப் பயன்படுத்துவதுதான். கண்ணாடி பாட்டிலில் நீரை வைத்து சூரிய ஒளியில் 8 முதல் 48 மணி நேரங்கள் தொடர்ந்து சூரிய ஒளி படும் வகையில் வைத்தால் ஏறத்தாழ அதிலுள்ள கிருமிகள் அழிக்கப்படும். ஆனால் நீண்ட நேரம் சூரிய ஒளி சரிவர கிடைக்காமல் போனால் இது சாத்தியமில்லை.

இதற்கு மாற்று வழியாக 20 நிமிடத்தில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, மாசு படிந்த நீரை குடிநீராக்கும் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் ஆற்றல் வளத்துறை மற்றும் ஸ்டேன்ட்போர்டு பல்கலைக்கழக குழுவினர் இணைந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தி உள்ளனர். இது 99.99 சதவீதம் பாக்டீரியாக்களை அழிப்பதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அற்புதம் செய்யும் இந்தக் கருவி, ஸ்டாம்ப் அளவே இருக்கிறது. இந்த சிறிய பட்டை வடிவ கருவியை தண்ணீர் உள்ள குடுவையின் மீது பொருத்த வேண்டியதுதான் வேலை. ஆனால் அந்தக் குடுவை மாலிப்டினம் டை சல்பைடு, நானோ துகள்களால் ஆக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட வகையில் அடுக்கப்பட்டிருக்கும் இந்த நானோ அடுக்குகளுக்கு மெல்லிய தாமிர உறையும் கொடுக்கப்பட்டிருக்கும்.

சூரிய ஒளி படும்போது, மாலிப்டினம் டை சல்பைடும், தாமிரமும் வினைபட்டு ஹைட்ரஜன் பெராக்சைடையும், கிருமிகளை அழிக்கும் வேறுசில ரசாயனங்களையும் உருவாக்கும். அவை தண்ணீரின் மேல் படிவதால் நீரில் உள்ள கிருமிகள் கொல்லப்படுகின்றன. கிருமிகள் நீங்கியதும் அந்த ரசாயனங்கள் தானாகவே செயலிழந்துவிடும்.

சூரிய ஒளியின் இயற்கையான சுத்திகரிப்பு முறையைவிட பல மடங்கு வேகத்தில் இந்தக் கருவி செயல்படும். ஆனால் பாக்டீரியாக்களை மட்டுமே இந்த முறையில் அழித்து சுத்தமாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீரில் கலந்துள்ள வேறு ரசாயனங்களை இந்த முறையில் சுத்திகரிக்க முடியாது.

இருந்தாலும் நோய் பரப்பும் கிருமிகளை எளிதில் சுத்திகரிக் கும் நவீன முறையாக இது வளர்ச்சி பெறும் என்று நம்பப்படு கிறது. விரைவில் இந்த தொழில்நுட்பத்தில் செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் விற்பனைக்கு வந்துவிடும் என்று நம்பலாம்!

May 7, 2017

ஃபேஸ்புக் லாபம் 76.6% உயர்வு


கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டு வர்த்தகச் செயல்பாடு விவரங்களை, ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், லாபம் முந்தைய ஆண்டின் இதே காலத்தில் இருந்ததைவிட 76.6% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேகாலத்தில் ஒட்டுமொத்த வருமானம் 8.03 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும், விளம்பரங்கள் மூலமான வருமானம் 7.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தும் உள்ளது. இது ஒட்டுமொத்த வருமானத்தில் 85% பங்களிப்பை கொண்டுள்ளதாக, ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டின் முடிவில், விளம்பர வருமானம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ச்சிபெறும் எனவும் மதிப்பீடு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 194 கோடியாக உள்ளது. விரைவில், இது 200 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.