Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label பெண்கள் மட்டும். Show all posts
Showing posts with label பெண்கள் மட்டும். Show all posts

July 30, 2017

பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று !


பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் பிரச்சனைகளில் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனையும் ஒன்று. அதிகமாக வெள்ளைப்படுவதை பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒருவிதமான துர்நாற்றத்துடன் அதிகப்படியான வெள்ளைப்படுதல் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட வஜினைட்டிஸ் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம். இதன்  காரணமாக அரிப்பும், கெட்டியான வெள்ளைப்படுதலும் ஏற்படும்.

பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தால் வெள்ளைப்படும் திரவம் மெலிதானதாகவும், பச்சை நிறத்திலும் இருப்பதுடன், துர்நாற்றமடிக்கவும் செய்யும். முறையான கவனிப்பு இல்லாமல் போனால் இந்த பிரச்சனை உங்களை UTI என்ற  பிரச்சனைக்குள் தள்ளிவிடும்.

பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது. இதற்கு தீர்வு கான இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்.

சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில்  விடுபட முடியும். ஆனால், இது உங்களுக்கு மிகவும் பிரச்சனையைத் தருவதாக நினைத்தால், தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடிச் செல்லவும்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி

July 26, 2017

முதுமையிலும் இளமையாக தெரியனுமா


ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்... கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.

நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

டை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

நீர்ச் சத்து குறைபாடு

முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.

கால்வெடிப்பு குணமாக

கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

கழுத்து சுருக்கம் போக்க

வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கண்ணக் குழி தவிர்க்க

இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

இயற்கையை ரசியுங்கள்

உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்... கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்.

July 25, 2017

உதட்டுக்கு மெருகூட்டும் லிப்ஸ்டிக் - அழகு குறிப்பு


மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலத்தான் உதடுகளுக்கும் உண்டு. அன்பை முத்தமாகவும் வெளிப்படுத்தலாம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சன்ஸ்கீரின் லோஷனை தடவினாலும், புண் மற்றும் கொப்புளங்கள் மறையும். கொழுப்புச் சத்து குறையும்போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால், உதடுகளில் வசேலின்( vaseline) தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிக வெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும், சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெய் உடன் ஆரஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவிவந்தால், வெடிப்புகள் சரியாக உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண் ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால், மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப்லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல் ஒரே, சீராக அழகாக இருக்கும். லிப் லைனர் பயன்படுத்தும்போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுகளுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரியதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும், உதடுகள் காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், எச்சிலில் இருக்கும் பாக்டீரியக்களால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும். இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன், நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

July 24, 2017

சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய 10 விஷயங்கள்!


சிசேரியன் செய்துக் கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது என நிறைய பேர் கூறுவதுண்டு. இதற்கான முக்கிய காரணம், தற்போதைய பெண்களுக்கு உடல் வலிமை அதிகமாக இல்லை. அதையும் தாண்டி அவர்களிடம் மன வலிமையையும் குறைவாக தான் இருக்கிறது.

எங்கு சுக பிரசவத்தின் போது வலி தாங்க முடியாமல் ஏதாவது ஆய்விடுமோ என்ற அச்சமும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே பல தம்பதிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை சிசேரியன் செய்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர்.

ஆனால், நீங்கள் நினைப்பது தவறு. குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் தான் சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.

01. சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளைதருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.

02. புரோபயாடிக்ஸ் உணவுகள்! சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு.

03. கீறல்கள்! சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

04. நடைப்பயிற்சி! ஆம், சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.

05. உணவுகள்! சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள். இவை, தசை வலிமை அடைய வெகுவாக உதவும் உணவுகளாகும்.

06. மலச்சிக்கல்! பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.

07. தாய்பால்! தாய்பால் தருவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதத்தில் இருந்து 1 ஆண்டு வரைக்குமாவது தாய்பால் கொடுங்கள்!

08. அதிக எடை! அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க வேண்டாம். இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.

09. க்ரஞ்சஸ்! ஜிம்மிற்கு செல்லும் பெண்கள், சிசேரியன் செய்த சில மாதங்கள் வரை க்ரஞ்சஸ் பயிற்சி செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.

10. உடலுறவு! சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

11. மனோதைரியம்! என்ன தான் உணவு, பயிற்சி என்று இருந்தாலும். கணவன், அம்மா போன்றவர்கள் உடன் இருந்து அந்த பெண்ணுக்கு மனோதைரியம் அளிப்பது தான்அவர்கள் வேகமாக ஆரோக்கியம் அடைய உதவும்.

குழந்தைக்கு தலையணை வைப்பது நல்லதா ?


குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்நேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது.  

குழந்தைக்கு தலையணை அவசியமா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள். குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.

தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வர சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது அது மூச்சுத்திணறலை உண்டாகும்.

மூச்சுத்திணறல் மட்டுமல்ல SIDS எனப்படுகின்ற Sudden Infant Death Syndrome ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தலையணையில் இருக்கும் பஞ்சு, பீட்ஸ் போன்றவை குழந்தைகள் முழுங்கிவிடக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன.

பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன.

இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும்.

இதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.

குழந்தைகளுக்கான தலையனை மிகவும் சாஃப்ட்டாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிருப்போம். குழந்தைகளுக்கு சாஃப்ட்டான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது.

சாஃப்ட்டான தலையணையில் தூங்க வைக்க தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் அது FHS எனப்படுகிற Flat Head Syndrome ஏற்பட காரணமாகிடும். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.

July 20, 2017

எலிவால் கூந்தலுக்கு எளிய சிகிச்சை


கூந்தல் உதிர்வு என்பது ஒருவருக்கு எத்தனை கவலைக்குரிய விஷயமோ, அதைவிட அதிக கவலை தரக்கூடியது கூந்தல் மெலிவு. அடர்த்தியான கூந்தல்தான் அழகு. எலிவால் போன்ற மெலிந்த கூந்தல் ஒருவரது தோற்ற அழகையே பாதிக்கக் கூடியது.

கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால் தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். ஒரு மாதத்தில் அரை இஞ்ச் அளவுக்குக் கூந்தல் வளர்வது இயல்பான கூந்தல் வளர்ச்சி சுழற்சி. வயதாக ஆக இது குறையும். கூந்தலுக்கு வயதாக ஆக, ஒரு கட்டத்தில் அது ஓய்வெடுக்கிற நிலைக்கு வந்து விடும். ரெஸ்ட்டிங் ஸ்டேஜ் எனப்படுகிற இதில், கூந்தலானது வளராமல் அப்படியே இருக்கும். இதன் விளைவாக கூந்தல் சீக்கிரமே உதிரும். மறுபடி வளராது. கூந்தல் மெலிவின் தீவிரத்தைப் பொறுத்தே கூந்தல் உதிர்வின் தன்மையைக் கணிக்க முடியும். வயதாகிற காரணத்தால் மட்டுமின்றி, கர்ப்ப காலம், ஊட்டமில்லாத உணவு, மண்டைப் பகுதியில் ஏற்படுகிற தொற்று, மருத்துவக் காரணங்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாறுதல்கள், பரம்பரைத் தன்மை மற்றும் சில வகை மருந்துகள் போன்றவற்றாலும் முடி உதிர்வும் மெலிவும் ஏற்படலாம்.

ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் (Female pattern  hair loss) Di hydro testosterone (DHT) என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை பாரம்பரியமாகத் தொடரக்கூடியது. ஃபாலிக்கிள் என சொல்லப்படுகிற கூந்தலின் நுண்ணறைப் பகுதி வரை ஊடுருவி, கூந்தலை மெலியச் செய்து, புதிதாக வளர்வதையும் தடுக்கக்கூடியது. சில பெண்களுக்கு இது மிக மிக மெதுவாக நடைபெறும். வேறு சிலரோ மிக வேகமாக மாற்றத்தை உணர்வார்கள். 35 வயதுக்கு மேலான 40 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது.
கூந்தல் மெலிவுக்கான வேறு சில காரணங்கள்..

Telogen Effluvium...  மன அழுத்தம், மருத்துவ சிகிச்சை, பூப்படைதல் அல்லது கர்ப்பம் போன்ற நிகழ்வுகளால் உண்டாகிற ஹார்மோன் மாற்றம் என எல்லாம் இதில் அடக்கம். Diffuse Hair loss... இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தம் தொடர்பான பிரச்னைகள், ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுவது. டெலோஜன் எஃப்லுவியம் (Telogen Effluvium) என்பது பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைக்கான மிகப் பரவலான காரணம். இதில் மண்டைப் பகுதியில் பரவலாக முடி உதிர்வு தென்படும். தீவிர மன அழுத்தம்   அல்லது ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவு பலருக்கும் இந்த அறிகுறியைக் காட்டும். எந்த வயதிலும் ஏற்படலாம்.

திடீரென ஆரம்பிக்கிற இந்தப் பிரச்னை சிலருக்கு ஆறு மாதங்களில் தானாகச் சரியாகலாம்   அல்லது சிலருக்கு மிக மோசமான நிலைக்கும் மாறலாம். பெரும்பாலும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு சொட்டை, வழுக்கை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கு பதில் கூந்தல் மெலிவே அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னை உள்ள பெண்கள் அதிக மனப்பதற்றம் கொண்டவர்களாகவோ, நரம்புக் கோளாறுகள் உள்ளவர்களாகவோ இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னைக்கும் கூந்தல் வளர்ச்சி சுழற்சி நிலைகளுக்கும் தொடர்புண்டு. கூந்தலின் வளர்ச்சி நிலையை ‘அனாஜன்’ என்கிறோம். இது 3 வருடங்களுக்கு நீடிக்கும். கூந்தல் வளராமல் அப்படியே இருக்கும் நிலையை ‘டெலோஜன்’ என்கிறோம்.

இது 3 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த டெலோஜன் ஸ்டேஜில் கூந்தலானது அதன் ஃபாலிக்கிளில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும். புதிதாக அந்த இடத்தில் இன்னொரு கூந்தல் முளைத்து, பழைய கூந்தலை வெளியே தள்ளினால்தான் உதிரும். நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் 15 சதவிகித முடியானது டெலோஜன் ஸ்டேஜில் இருக்கும். அளவுக்கதிகமான மன அழுத்தமானது, இந்த 15 சதவிகிதத்துக்கும் அதிகமான முடியை டெலோஜன் ஸ்டேஜுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து விடும். மூன்றே மாதங்களில் இப்படி டெலோஜன் நிலைக்கு வந்த அத்தனை முடியும் கொட்டிப் போகும். புதிய முடி வளரத் தொடங்கினால் மெலிந்த கூந்தலானது மறுபடி அடர்த்தியாக மாறும். மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னையை நிச்சயம் எப்போதாவது கடந்திருப்பார்கள்.

ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா (Androgenetic alopecia) என்பது 40 வயதுக்கு மேலான 50 சதவிகிதப் பெண்களை பாதிக்கக் கூடியது. மெனோபாஸ் காலத்துக்கு முன்பு 13 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னைக்குக் காரணம் Di Hydro Testosterone (DHT) எனப்படுகிற ஒருவித ரசாயனம். இது ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜனில் இருந்து தயாராவது. 5 ஆல்ஃபா ரெடக்டேஸ் எனப்படுகிற ஒருவித என்சைமின் செயல்பாட்டினால் ஆண்கள், பெண்கள் என எல்லோருக்குமே இது உற்பத்தியாகும். இந்த என்சைம் அதிகமுள்ளவர்களுக்கு ஞிபிஜி ரசாயனமும் அதிகம் உருவாகும். இது அதிகமானால் கூந்தல் மெலிவுக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு ஏற்படுகிற கூந்தல் உதிர்வானது, ஆண்களுக்கு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.   ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை இழக்கலாம். கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். கூந்தலில் புரதம், கொழுப்பு, நீர் மற்றும் கார்போஹைட்ரேட் எல்லாம் உண்டு.  ஓட்ஸ், வெல்லம், ஈரல் மற்றும் முழு தானியங்கள்   போன்றவை கூந்தல் உதிர்வைத் தடுக்கும் உணவுகள். வயதின் காரணமாக கூந்தல் உதிர்வும், மெலிவும் சகஜம் என்றாலும், சரியான ஊட்டம் நிறைந்த உணவுகள் கூந்தல் உதிர்வு மெலிவு மற்றும் வழுக்கைப் பிரச்னைகளைத் தவிர்க்கும்.

காரணமே தெரியாமல் முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்னைகளை உணர்பவர்கள் உடனடியாக ஒரு ட்ரைகாலஜிஸ்டை அணுகிக் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மினாக்சிடில் என்கிற ஒரு தயாரிப்பின் மூலம் மிகப் பாதுகாப்பான முறையில் பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

கணவரின் விந்தணுக்களை பலப்படுத்த இந்த 10 விஷயத்த மனைவி செய்யனும்!


குழந்தை என்றாலே அனைவருக்கும் சந்தோஷம் தான். அதிலும் நீங்களே ஒரு குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் என்றால், நினைக்கவே சந்தோஷமாக தான் இருக்கும் அல்லவா?

சரி, குழந்தை பெருவதற்கு முன் பெண் தனது ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே போல தான் ஒரு ஆணும் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதும்..!

நீங்கள் கருவுறும் பிரச்சனைக்காக மருத்துவமனை மருத்துவமனைகளாக அலைகிறீர்கள் அல்லது கோவில் கோவிலாக போய் பல பிராத்தனைகளை செய்கிறீர்கள்.

இவை எல்லாம் தேவையே இல்லை.. நீங்கள் அன்றாடம் செய்யும் சில செயல்களை சரியாக செய்தாலே போதும்! ஏன் நீங்கள் இது பற்றி நீங்கள் உங்களது கணவரிடம் பேசுவதில்லை..! இது பற்றி பேச வேண்டியது முக்கியமல்லவா?

பெண்களே! நீங்கள் கர்ப்பமடைய விரும்பினால் உங்களது கணவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். அவரின் விந்தணுக்கள் ஆரோக்கியம் பெற நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காணலாம்.

1. சுய இன்பம் : ஆண்களது விந்தணுக்கள் நீண்ட நாட்கள் வெளியேற்றப்படாமல் இருக்க கூடாது. விந்தணுக்களை வெளியேற்ற சுயஇன்பம் காண்பதில் தவறில்லை. உடல் விந்தணுக்களின் தேவை இருந்தால் மட்டுமே விந்தணுக்களை உற்பத்தி செய்யும். எனவே அவர் சுய இன்பம் கொள்வதால் உடலில் விந்தணுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் உடலுறவு வைத்துக்கொள்ளும் போது புதிய விந்தணுக்கள் உருவாகின்றன. இது பெண்கள் கர்ப்பமடைய உதவும்.

2. முழுமையான உணவு : ஆண்கள் சத்தில்லாத உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் எந்த பயனும் இல்லை. விட்டமின் சி, இ, மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகள் ஆண்களின் விந்தணுக்களை பலப்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரைடு புட் வகைகளை தவிர்க்க வேண்டும், சாக்லேட், வாழைப்பழம் ஆகியவற்றை உங்கள் கணவரை சாப்பிட வைப்பதன் மூலம் எளிதில் கர்ப்பமடையலாம்..!

3. மது வேண்டாம் : உங்களது கணவர் மது அருந்துபவராக இருந்தால், அதை கைவிட வலியுறுத்துங்கள். ஏனெனில் மது அருந்துவது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பதை மறக்க வேண்டாம். பீர் மற்றும் ஒய்ன் போன்றவற்றை கூட அருந்தக்கூடாது. இவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

4. புகைப்பழக்கம் : புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு மட்டுமல்லது சந்ததிகளுக்கும் கேடு விளைவிப்பதாகும். எனவே புகையிலை மற்றும் புகைப்பழக்கங்களை கைவிடுமாறு உங்கள் கணவரிடம் கூறுங்கள்.

5. பை சீட் வசதியா இருக்கா : தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் நீண்ட நேரம் இருக்கையில் அமரும் போது ஆணுறுப்பின் அடிப்பகுதி அழுத்தப்படுகிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைந்து, விந்தணுக்களின் உற்பத்தி குறைகிறது. எனவே இருக்கை வசதியாக இருப்பதும், நீண்ட நேரம் பயணிக்காமல் இருப்பதும் சிறந்தது.

6. ஸ்டீராய்டுகள் வேண்டாம் : ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது விந்தணு உற்பத்திக்கு கேடு விளைவிக்கும். இது விந்தணுக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும். தொடர்ந்து ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வது அதற்கு அடிமையாக்கிவிடும். எனவே இதனை தவிர்க்க சொல்லுங்கள்.

7. கழுவி சாப்பிட வேண்டும் ; காய்கறிகள் மற்றும் பழங்களை கட்டாயம் கழுவி தான் சாப்பிட வேண்டும். என்ன தான் இவை இயற்கையானவையாக இருப்பினும், சில பூச்சிக்கொல்லிகள் இவற்றை வளர்க்க பயன்படுத்தப்படும். இது விந்தணுக்களை கொல்லும். எனவே காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவி சாப்பிட வேண்டியது அவசியம்.

8. பாட்டில் உணவுகள் : கர்ப்பமாக முயற்சிக்கும் போது பாட்டில்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

9. இறுக்கமான உடை : ஆண்கள் பொதுவாக ஜீன்ஸ் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நம்ம ஊர் சூட்டுக்கு ஜீன்ஸ் அணிந்தால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். விந்தணுக்கள் 3 முதல் 4 டிகிரி செல்சியஸில் தான் நன்றாக வளரும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிந்தால் உடல் சூடாகி விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.

10. உடலுறவில் அழுத்தம் வேண்டாம் : நீங்கள் என்ன தான் கோபமாக இருந்தாலும், பெற்றோராக வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு கோபத்தை சற்று குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மன அழுத்தத்துடன் உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. மகிழ்ச்சியுடன் எந்த விஷயத்தை செய்தாலும், அது நன்மையில் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

July 19, 2017

லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடுகளை சிவப்பாக மாற்றுங்கள் !


உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்படுவார்கள். போடும் உடைகளுக்கும் மேட்சாக பாத்து பாத்து விதவிதமான லிப்ஸ்டிக் வாங்கி வந்து ஆசையா போடுவீங்க. ஆனால் கொஞ்ச வருஷம் கழிச்சு பார்த்தா உங்கள் உதடு கருத்து , வறண்டு போயிருக்கும். இதற்கு காரணம் நீங்கள் ஆசையா வாங்கி போட்ட லிப்ஸ்டிக் தான்.

என்னதான் தரமான லிப்ஸ்டிக் என்றாலும் அதில் பேராபின் கலந்திருப்பார்கள். அது உங்கள் உதட்டினை வறண்டு போகச் செய்யும். மேலும் ஹெமிக்கல் இல்லாத லிப்ஸ்டிக் அரிதுதான். அதுவும் விலை மலிவானது என்றால் இன்னும் மோசமாக இருக்கும்.

இப்போது மார்க்கெட்டுகளில் புதிதாக உதட்டு ஸ்க்ரப் என்று அறிமுகப்படுத்தியியோருக்கிறார்கள். உதட்டிலுள்ள இறந்த செல்களை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. உதட்டு ஸ்க்ரப்பை நாம் வீட்டிலேயே சிறந்த முறையில் தயாரிக்கலாம். பக்க விளைவுகளற்றது. உதட்டினை மிருதுவாக்கும்.

தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் :

தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப் வறண்ட உதடுகளுக்கு தீர்வினைத் தரும். இது கருமையையும் போக்கும். தேவையானவை : தேங்காய் எண்ணெய் -1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் தேன்- 1/2 ஸ்பூன் சர்க்கரை- 3 டீஸ்பூன்

செய்முறை :

தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாற்றினை கலக்கவும். பிறகு சர்க்கரையை சேர்த்து 5-8 நொடிகள் கலக்கவும். இப்போது இந்த கலவை கரைந்தும் கரையாமலும் சொரசொரப்புடன் இருக்கும். இதனை உதட்டில் தடவி மெதுவாய் தேய்க்கவும். 30 நொடி-1 நிமிடம் வரை தேய்க்கலாம். அதன் பின் ஒரு சுத்தமான துணியால் ஒத்தி எடுக்கவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்தால் உதட்டில் ஏற்பட்ட கருமை அகன்று, மிருதுவான உதடுகள் கிடைக்கும்.

முக அழகிற்கு குங்குமப்பூ


சிகப்பழகை பெறத்துடிக்கும் பெண்கள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை முக அழகிற்கு எப்படி பயன்படுத்துவது பற்றி சில டிப்ஸ்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர உதடுகள் நிறம் மாறும். உதடுகளில் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணெய் கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான், அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடத்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுகள் பால் விட்டு கலந்து குழைத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படந்துள்ள கருமை நிறம் குறையும்.

July 18, 2017

கர்ப்ப கால தூக்கமின்மைக்கு காரணமும் தீர்வும்


கர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொதுவாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அந்த காரணங்கள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டு தூக்கமின்மை நோயை குணப்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவதற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலாம்.

ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலி வரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப்பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.

ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமாளிப்பது :

கருவின் எடை காரணமாக உங்களுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலைகளில் தூங்க முயற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.

கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.

தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.

நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மைகளைத் தருகின்றது. இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

இரவு நேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது, உங்கள் மூளை அதிக அளவில் செரோட்டினை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.

எனவே, கர்ப்ப காலத்தில் தூக்கமின்மையை குணப்படுத்த மேற்கூறிய இந்த தந்திரங்களை முயற்சி செய்து நன்கு தூங்குங்கள். 

July 17, 2017

குண்டு பெண்களே இது உங்களுக்கு.........


*வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது.

*பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

*அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது?

*அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

*ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.

*தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.உடற்பயிற்சிகளை செய்ய மறக்காதிங்க...

பெண்கள் ஆன்லைனில் டேட்டிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரியுமா ?


பெண்கள் தங்கள் பார்ட்னருடன் ஆன்லைனில் டேட்டிங் செய்வதால் பலவிதமான பிரச்சினைகள் வந்து சேருகின்றனர். கண்காணித்தல், கட்டுப்படுத்துதல், அச்சுறுத்தல், மன அழுத்தம் போன்றவை டிஜிட்டல் மீடியாக்களால் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகமான உணர்வுப் பாதிப்புகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படுகின்றனர்.

எப்படி இருந்தாலும் டிஜிட்டல் டேட்டிங் பழக்கம் இளைஞர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இதற்கு பாலினம் என்பது முக்கியம் இல்லை என்று லாரன் ரீட், அசிஸ்டெண்ட் புராஜெக்ட் சைன்டிஸ்ட் அட் யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா - சான்டா பார்பரா விலிருந்து சொல்கிறார்.

ஆன்லைன் டேட்டிங்கில் செக்ஸஷூவல் செயல்களால் நீங்கள் பிறரால் கண்காணிக்கப்பட்டு கட்டாயப்படுத்தபடலாம்.

இதனால் ஏற்படும் மிரட்டல்கள் மற்றும் செயல்கள் உங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். செக்ஸ் போட்டோக்கள் அனுப்புதல், அச்சுறுத்தும் படியான மெசேஜ், உங்கள் தனிப்பட்ட விஷயங்களை உங்களுக்கே தெரியாமல் நோன்டுதல், நீங்க எங்கே சென்றாலும் அங்கே உங்கள் செயல்களை கண்காணித்தல் போன்ற மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த டிஜிட்டல் டேட்டிங் விஷயத்தில் ஆண்கள் பெண்களை செக்ஸ் ஆஃப்ஜெட்டாக பயன்படுத்துகின்றனர். தங்களுடைய செக்ஸஷூவல் உணர்ச்சியை பெண்களின் மேல் திணித்து அவர்களை கட்டாயப்படுத்துகின்றன என்று ரிச்சர்ட் டோல்மேன், புரபொசர் அட் தி யுனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகனிலிருந்து சொல்கிறார்.

பெண்களும் தங்கள் பார்ட்னர் தங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கனும் என்று மிகுந்த பொறாமையும், தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தையும் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் பார்ட்னரை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர் என்று டோல்மேன் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் அமெரிக்க நாளிதழான அடல்லெசன்ஸ்யில் வெளியிடப்பட்டது. அப்பொழுது அவர்கள் 703 US மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் டிஜிட்டல் டேட்டிங் பழக்கத்தால் ஏற்பட்ட அனுபவத்தை சேகரித்தனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சமமான அளவு டிஜிட்டல் மானிட்டரிங், கட்டுப்பாடு, டிஜிட்டல் ஆக்கிரமிப்பு போன்றவை ஏற்பட்டதாக சொன்னனர்.

டிஜிட்டல் ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும் வதந்திகள் இப்படி எதாவது ஏற்பட்டால் பெண்கள் தங்கள் தொடர்பை தடுத்துக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் டிஜிட்டல் டெக்னாலஜியை பாதுகாப்பாக உபயோகிக்கவும் மறந்துவிடாதீர்கள்.

யாருக்கு வாய்ப்புகள் அதிகம்: இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையா ?


இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

* உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

* ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

* முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும்.

எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு.

இங்கு யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று பார்க்கலாம்.

* கருவுறுதல் மருந்துகளை எடுத்து வரும் பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படியெனில் இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவருவதால், இந்நேரம் உறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

* இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்கும் அதிகமானோர் தான். மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும் இளம் பெண்களை விட, வயது அதிகமான பெண்களுக்கே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

* ஒரு பெண் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையை மேற்கொண்டால், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். எப்படியெனில் இம்முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகளை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில் ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுறச் செய்து, பின் மீண்டும் அந்த கருமுட்டையை பெண்ணின் கருப்பையினுள் வைக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்று கருப்பையினுள் செலுத்துவதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சில நேரங்களில் ஒரே ஒரு கருமுட்டை இரண்டாக பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகளாக உருவாகும்.

* உயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாம். மேலும் ஆய்விலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயரமான பெண்களின் உடலில் வளர்ச்சிக்கு காரணியான இன்சுலின் அதிகம் இருப்பது தான் என்று கூறுகின்றனர்.

July 16, 2017

தாய்பால் தருவதை நிறுத்துவதும் - அதற்கான முயற்சிகளும்


தாயான பின்பு தன் குழந்தைக்கு எத்தனை வயது வரை தாய்ப்பால் தருவது? தாய்பாலை எப்படி மறக்கடிக்கச்செய்வது என பல் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தாய்மார்கள் தவிக்கிறார்கள்.

குழந்தைக்கு தாய்பால் தருவது மிகவும் அவசியமானது. அலுவலக பணிக்கு செல்பவர்களுக்கு வசதியாக இன்றுபாலை பீய்ச்சி எடுக்க வசதியான கருவிகள் சுட வந்துள்ளன. எனவே குழந்தைக்கு தாய்பாலை உடனே கூட நிறுத்திவிட வேண்டிய அவசியமும் ஏற்படாது.

ஆயினும் சுற்றியிருப்பவர்கள் ஆறுமாதம் ஆகிவிட்டதா போதும் பால் தருவதை விடு என கூறிவிடுவர். ஆனால் குழந்தை அப்போது தான் தீவிரமாய் பால் குடி மறப்போனா? பார் என்ற சப்தமிட்டு சலனப்படுத்தும். எப்படி இருப்பினும் குழந்தைக்கு தாய்பால் தருவதும் அதனை நிறுத்துவதும் தாயிடம் தான் உள்ளது.

தாய்பால் நிறுத்தவேண்டிய காலம் :

குழந்தை ஆறு மாதத்திற்கு பின் சிறுசிறு உணவுகள் எடுத்து கொண்டாலும் உடனே தாய்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இதர உணவுடன் தாய்பாலும் ஓர் அவசியமான உணவே. மேலும் உலக சுகாதார நிறுவனம் இரண்டு வயது வரை கூட குழந்தைக்கு தாய்பால் தரலாம் என ஆலோசனை கூறியுள்ளது.

சில தாய்மார்கள் குழந்தை தான் நடக்க ஆரம்பித்துவிட்டதே ஏன் இன்னும் தாய்பால் தரவேண்டும் என்று நினைப்பார்கள். அது தவறு.

குழந்தை விருப்பத்திற்கு ஏற்ப அது மறக்கும் நிலை ஏற்படும் வரை தாய்பால் தரலாம். அதனால் தாய்க்கும் குழந்தைக்கும் ஏதும் பிரச்சனை இல்லை என்றால் போதும். குழந்தையை வெறுப்பேற்றும் வகையில் தாய்பாலை சட்டென நிறுத்திவிட்டு வேறு உணவுகளை ஊட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் குழந்தை அதனை மனதில் வைத்து வேறு உணவுகளை உண்பதை தவிர்ப்பது, அதனை தள்ளுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளும்.

எனவே தாய்பால் குடிப்பதை படிப்படியாக குறைக்க பார்க்க வேண்டும். குழந்தைக்கு பிடித்த வேறு ஆகாரங்களை அதிகப்படுத்திய பிறகே பால் கொடுப்பதை அதற்கேற்ப குறைத்திட வேண்டும். பால் தரும் நேர இடைவெளியை அதிகரித்திட வேண்டும். பிறகு பகல் நேரத்தில் பால் கொடுப்பதை பெரும்பாலும் குறைத்திட வேண்டும். குழந்தையின் மனநிலைக்கு ஏற்றபடி இதனை படிப்படியாக செய்திடல் வேண்டும்.

தாய்பால் தந்து கொண்டிருந்தால் எப்படி பணிக்கு செல்வது?

குழந்தைக்கு பிடித்தமான பாட்டிலில் தாய்பாலை சேகரித்து வைத்து தரலாம். மேலும் பொதுஇடத்தில் தாய்பால் தருவது கடினமாக உள்ளது என்று நினைத்தால் பகல் நேரத்தில் பால் தருவதை படிப்படியாக குறைத்து இரவு நேரங்களில் தாய்பால் கொடுக்கலாம்.

குழந்தை ஓரளவிற்கு தாய்பால் இன்றி தன் பணிகளை மேற்கொள்கிறது என நினைக்கும் போது தாய்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.

உடனே மாத்திரை ஏதும் எடுத்திட வேண்டாம். இயற்கையாகவே சில உணவுகளை உண்ணும்போது பால்சுரப்பது குறைத்து விடும்.

புரோட்டின் சார்ந்த உணவுகளை குறைப்பதன் மூலம் பால் சுரப்பது குறைந்து விடும். திடீரென பால் தருவதை நிறுத்தும் போது தாய்மார்களுக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். எனவே உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் குழந்தையின் மனநிலைக்கு ஏற்ப யோசித்து செயல்பட வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தாய்பால் நிறுத்துவது அமைவது அவசியம்.

July 15, 2017

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?


சுருட்டை முடி உடையவர்கள் சுந்தர அழகு மிக்க பாக்கியசாலிகள். அதை சிலர் இயற்கையாக பிறப்பிலேயே பெறுகின்றனர். இன்னும் சில சுருட்டை முடியை  பெருவதற்கு பியூட்டி பார்லர் சென்று, இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்த  முடியை கொண்டு நாம் எந்த வகை அலங்காரத்தையும் செய்ய முடியும். ஆனால் இத்தகைய தலை முடியை வாருவது சிறிது கடினம் தான்.

அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.

இத்தகைய முடியை உடைய பெண்கள், இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக  இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பு என்று குறிப்புகளை தற்போது  பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள்  கடைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது  மிகவும் பாதுகாப்பானதாகும்.

கண்டிஷனர் : படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளாவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை  போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள், சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.

சுருள் முடியை சீவுதல் : சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற  உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.

லிப்ஸ்டிக் போடுவதனால் ஏற்படும் உதட்டு கருமையை போக்க டிப்ஸ்


சிலர் அடிக்கடி லிப்ஸ்டிக் போடுவதால் அவர்களுடை உதடு கருமையாக காட்சியளிக்கும். அதனை போக்க எந்த விதமான கொமிக்கல் கலந்த பொருட்களையும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உதட்டினை பாதுகாக்கலாம்.

வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி உதட்டு கருமையை போக்கலாம் என்று பார்க்கலாம்.

* சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். லிப் பாமிற்கு பதிலாக தேனை உபயோகித்தால் நாளடைவில் வசீகரமான உதடுகள் கிடைக்கும். கருமையுன் வறட்சியும் மறைந்துவிடும். தினமும் இதை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

* வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் 20 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை படிப்படியாக மறையச் செய்யும்.

* கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை சிவப்பு நிறத்தில் மாற்றும்.

* தயிரில் எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும். லிப்ஸ்டிக் போடுவதால் உண்டாகும் கருமையை நீக்குவது நீக்கலாம்

July 14, 2017

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு மாத்திரையை எடுத்தாலும், அது தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் செல்லும். சில நேரங்களில் உங்கள் குழந்தையின் பால் பற்களில் கருப்பு நிற கறை இருப்பது போன்று தெரியும். அப்படி தெரிந்தால், அதற்குஅந்த மாத்திரை தான் காரணம். அதுமட்டுமின்றி, தாய் எடுத்த மாத்திரையின் பக்க விளைவு குழந்தைக்கும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்ட மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* பூண்டு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட, குழந்தைக்கு அது பிடிக்காமல் போகலாம். அப்படி உங்கள் குழந்தைக்கு பூண்டு பிடிக்கவில்லையெனில், தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கும். எனவே நீங்கள் பூண்டை உணவில் அதிகம் சேர்த்து, உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, நீங்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

* தாய்ப்பால் கொடுக்கும் போதும், மீன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

* காரமான உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையின் உடலினுள் சென்று, அவர்களின் செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் சில நேரங்களில் வாந்தியை கூட ஏற்படுத்தும். எனவே மிகவும் காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலில் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை தாய்மார்கள் உட்கொண்டால், அது குழந்தைகளையும் பாதிக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு வாயு உற்பத்தி செய்யும் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளான பீன்ஸ், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் இதுப்போன்ற வாயு உற்பத்தியை அதிகரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவிர்க்க வேண்டும்.

* பால் மற்றும் பால் பொருட்களால் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிறைய குழந்தைகளால் மாட்டுப் பாலின் புரோட்டீனை செரிக்க முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீஸ், தயிர் மற்றும் இதர பால் பொருட்கள் உட்கொண்டால், குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அடிவயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடும். எனவே குழந்தையின் நலனுக்காக இவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.



July 13, 2017

வீட்டிலேயே தெரிந்துகொள்வது எப்படி: கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா?


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர்.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு:வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக்:உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா?சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம். குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா?உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம். அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

சிவப்பு முட்டைக்கோஸ் சோதனை:சிவப்பு முட்டைக்கோஸ் வாங்கி, அதனை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் காலையில் முதன் முதலில் வெளியேற்றிய சிறுநீரை, அதற்கு சரிசமமாக ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றிய பின், அதன் நிறமானது பிங்க் அல்லுது சிவப்பு நிறத்தில் மாறினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே ஊதா நிறத்தில் மாறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

பேக்கிங் சோடா சோதனை:காலையில் வெளியேற்றிய சிறுநீரை ஒரு கப்பிலும், மற்றொரு கப்பில் பேக்கிங் சோடாவையும் வைத்துக் கொள்ளவும். பின் சிறுநீரை பேக்கிங் சோடாவில் ஊற்றும் போது, நுரை போன்று பொங்கினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே எந்த ஒரு வினைபுரியாமல் இருந்தால், பெண் குழந்தை என்று அர்த்தம்

July 12, 2017

கூந்தல் பராமரிப்பிற்கு எந்த ஷாம்பு சிறந்தது


சமீபகாலமாகக் கூந்தல் பராமரிப்புத் தொடர்பாக நம்மிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை அதிக விலையில் விற்கப்படும் கண்டிஷனர் ஷாம்புகளைத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறிவிடும் என்பதுதான்.

அதுவும் ஷாம்புவை தினமும் தேய்த்துக் குளிக்கலாம் என்று அந்த விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால், இது கூந்தலுக்குப் பெருத்த சேதத்தை விளைவிக்கும். இயற்கை பொருள்களான செம்பருத்தி இலை, புங்க மரத்தின் காய், சீயக்காய் ஆகியவற்றைத் தவிர, வேறு எதையும் தினமும் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லதல்ல.

மூலிகை ஷாம்பு போன்றவை 100% இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பு என்றாலும்கூட, அதை வாரத்துக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.