Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label சிந்தனைக்கு. Show all posts

July 15, 2017

வாழ்க்கையின் அறிந்துகொள்ள வேண்டிய 33 ?


அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

July 8, 2017

வேலைக்கு போகும் தம்பதியர் இடையே உறவை மேம்படுத்த வழிகள்


இன்றைய கால கட்டத்தில், மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள், தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர். வெளிப்படையான, உண்மையான மற்றும் நேர்மறையான உரையாடும் திறன் மட்டுமே ஒரு நல்ல மற்றும் சந்தோஷமான உறவு முறையை ஏற்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக அமையும். தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது, பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது. தனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

நீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லாவிடில், உங்கள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. உறவில் ரகசியமும், பொய்யும் இல்லாமலிருந்தால், எளிமையாகவும், சிக்கல் இல்லாமலும், குழப்பம் இல்லாமலும் உறவு விளங்கும்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய துணையிடம் பேசும் போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மரியாதை மற்றும் ஒத்துழைப்பு மரியாதைக் குறைவால் தான், பெரும்பாலான திருமணங்களில் சண்டைகளும் மோதல்களும் ஏற்படுகின்றன.

கட்டாயப்படுத்துதல் மற்றும் தொழிலில் தாழ்வு போன்றவைகளும் சில நேரங்களில் காரணங்களாகி விடுகின்றன. எனவே மரியாதை கொடுத்தலும், வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தலும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமான வழியாகும்.

June 21, 2017

பள்ளியில் கழிவறை இருந்திருந்தால்..! இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீர் கதை


'
தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 'கழிப்பறையோடு வீட்டை அமைப்போம்' என்று உறுதிபூண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், பிரதமர் மோடி. ஆனால் கல்வி கற்கும் பள்ளியில் கழிப்பறை இல்லாததால், கழிவறைக்குச் சென்ற இரண்டு குழந்தைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தில்தான் இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கிராமத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்கே அஞ்சுகிறார்கள் பெற்றோர்கள்.
இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய் சங்கீதாவிடம் பேசினோம். "எனது பிள்ளைகள் எங்களுக்கு கொள்ளிவைப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குக் கொள்ளிவைக்கும் துர்பாக்கியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்" என்று கண்ணீர் மல்கப் பேசத்தொடங்கினார். இது குக்கிராமம். விடுமுறை நாள்கள் என்றால்கூட பள்ளிக்குத்தான் குழந்தைகள் விளையாடச் செல்வார்கள். மே மாதம் 18ஆம் தேதி, எனது மகன் சஞ்ஜை, மகள் செந்தமிழ்செல்வி இருவரும் பள்ளிக்கு விளையாடச் சென்றார்கள். விளையாடிக்கொண்டிருக்கும்போது, எனது மகள் செந்தமிழ்செல்வி கழிவறைக்குப் போகவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். பள்ளியில் கழிவறை இல்லாததால், பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள பெரிய ஏரி ஓரம் மலம் கழிக்கச் சென்றுள்ளாள். பிறகு, கால் அலம்ப குளத்தில் இறங்கியபோது, குளத்துச் சகதியில் கால்கள் சிக்கி, 20 நிமிஷம் கத்திப் பரிதவித்திருக்கிறாள்.


தங்கச்சியைக் காணாததால், என் மகனும் போய் பார்த்திருக்கிறான். தண்ணீரில் தத்தளித்து மூழ்கிக்கொண்டிருந்த தங்கையைக் காப்பாற்றுவதற்காக சஞ்ஜையும் குளத்தில் குதித்துள்ளான். அவனும் சேற்றில் சிக்கி, வெளியே வரமுடியால் தத்தளித்துள்ளான். இருவரும் பலமணிநேரம் போராடியிருக்கிறார்கள். ஆனால் எந்த உதவியும் இல்லாமல், குளத்திலிருந்து தப்ப முடியாமல் பிணமானார்கள். எனக்கு இரண்டு குழந்தைகள்தான். இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிணமாகக் கிடந்தைப் பார்த்த துர்பார்க்கியவதி நான். இரு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்ததால எனக்கு சந்ததியே இல்லாம போயிருச்சு. நாங்கள் மிகவும் சிரமப்படும் குடும்பம். கழிவறை கட்டகூட வழியில்லை. எங்கள் ஏழ்மையே எங்கள் சந்ததியை அழித்துவிட்டது" என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார், குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்.
இது சம்பந்தமாக பா.ஜ.க மாவட்டசெயலாளர் சுப்ரமணியிடம் பேசினோம். "இரண்டு குழந்தைகள் பலியானதற்குக் காரணமே பள்ளியில் கழிவறைகள் இல்லாததுதான். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இயற்கை உபாதைகளுக்கு இந்தக் குளத்தைத்தான் பயன்படுத்திவருகிறார்கள். இந்தப் பள்ளியில் 146 குழந்தைகள் படிக்கிறார்கள். பள்ளியில் கழிவறைகள் இல்லாததால், இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட குழந்தைகள் பள்ளியின் பின்புறத்தில் உள்ள குளத்துக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கென்றும் தனி இடம் கிடையாது. ரோட்டின் அருகாமையில் பள்ளி அமைந்துள்ளது. வாகனங்கள் அடிக்கடி செல்வதால், இந்தப் பள்ளியே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.




எங்களுடைய கோரிக்கை என்னவென்றால், பள்ளியில் கழிவறை அமைத்து அதற்கான தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். குளத்தைச் சுற்றி இரும்புவேலி அமைக்கப்பட வேண்டும். பள்ளியின் வாசல் பகுதியை மாற்ற வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். எல்லா மாவட்டத்திலும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன்வருகிறார்கள். ஆனால், இங்கு அரசுப் பள்ளியென்றாலே அச்சப்படுகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று புகார் கொடுக்க இருக்கிறோம். மாற்றம் செய்யவில்லை என்றால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போகிறோம்" என்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரி ஒலியிடம் பேசினோம். "இந்தத் தகவலே இப்போதுதான் வந்துள்ளது. உடனே அந்தப் பள்ளியை ஆய்வுசெய்ய குழுவை அமைக்கிறேன். அந்தப் பள்ளியில் உள்ள குறைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முடித்துக்கொண்டார்.
தகவலைச் சொல்லி, கலெக்டர் (பொறுப்பு) டி.ஆர்.ஒ தனசேகரனிடம் பேசினோம். "இந்தத் தகவல், நீங்கள் சொல்லிய பிறகுதான் எங்களுக்குத் தெரியவருகிறது. அவர்கள் கேட்கும் கோரிக்கைகள் நியாயமானது. உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.

June 15, 2017

என் திருமணம் இப்படித்தான் நடக்கும் ஒரு ஆணின் வைராக்கியம் இப்படி இருக்க வேண்டும் !!


திருமணம் எப்படி நடத்த கூடாது & எப்படி நடத்த வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவு கண்டிப்பாக படியுங்கள் ஆண்களுக்கோ பெண்களுக்கோ திருமண வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்கபோகிறோம் என்று பெற்றோர் சந்தொஷப்படாமல் அதற்குரிய செலவை பற்றி கவலைப்படுகிறார்கள்

June 14, 2017

குழந்தையைக் காட்டி தினமும் 8000 சம்பாதிக்கும் பெண்..!


தொழில் விசயம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் போது ஒருதாயினால் வளர்க்குமாறு ஒப்படைக்கப்பட்ட மூன்று வயதான ஆண் குழந்தையை காட்டி பிச்சை எடுத்த பெண்ணொருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை புறக்கோட்டையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை, சிறுவர் மற்றும் பெண்கள் சீரழிவிற்கு உள்ளாவதை தடுக்கும் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிச்சை எடுக்கும் போது தன்னுடன் இருந்த குழந்தை தன்னுடையது என பெண் கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணிடம் விசாரித்த போது கணவன் கைவிட்டு சென்ற காரணத்தினால்,
தனது தங்கை குழந்தையை தன்னிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதாக பெண் பின்னர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது பிள்ளைகள் மற்றும் இந்த குழந்தையை பராமரிக்க முடியாத நிலைமையில் தான் பிச்சை எடுத்து பிள்ளைகளை பராமரித்து வருவதாக பெண் கூறியுள்ளார்.
குழந்தையை காட்டி தான் தினமும் 8 ஆயிரம் ரூபா சம்பாதித்து வருவதாகவும் பெண் குறிப்பிட்டுள்ளார்.

June 13, 2017

45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு


45,000 அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு 1.8 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் நான்கு வயது மற்றும் அதற்கு குறைவான ஒரு இலட்சம் குழந்தைகள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான திட்டங்கள் மூலம் குழந்தைகளுக்கான உயர்தர பராமரிப்புச் சேவைகளை பலரும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதுடன், தேவைப்படுவோருக்கு குழந்தைகள் பராமரிப்புக்காக கட்டண கழிவுகளும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கனடாவில் சிறுவர் பராமரிப்புக்காக அதிக அளவு கட்டணம் செலுத்தப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக ரொரன்ரோ பெரும்பாகம் இருந்து வருகின்றது. ஒரு குழந்தைக்காக மாதம் ஒன்றுக்கு 1,649 டொலர்கள் வரையில் செலுத்த வேண்டியிருப்பதாக கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கு சூடு வைத்து,வெந்நீர் ஊற்றி சித்ரவதை! கள்ளக்காதலனுடன் சிக்கிய தாய்க்கு வந்த நிலை



திருத்தணியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா (வயது 27) இவர்களுக்கு மகாலட்சுமி (11) என்ற மகளும், கார்த்திக் (10) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். இதையடுத்து, கவிதா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜன் கோவில் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடியேறினார். மகள் மகாலட்சுமி, 6-ம் வகுப்பு படிக்கிறார்.

மகன் கார்த்திக் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில், குடியாத்தத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கோபி (வயது 34) என்பவருடன் விதவையான கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். மனைவியாக்கிய கவிதாவுடன் தனிமையில் உல்லாசமாக இருப்பதற்கு முதல் கணவருக்கு பிறந்த மகள், மகனும் தடையாக இருப்பதாக கோபி எண்ணினார்.

இதனால் குழந்தைகளை கொடுமைப்படுத்தினார். கோபியுடன் சேர்ந்துக் கொண்டு பெற்றெடுத்த குழந்தைகள் என்ற இரக்க மின்றி கவிதாவும் சித்ரவதை செய்ய தொடங்கினார். கட்டாயப்படுத்தி வீட்டு வேலை செய்ய வைத்தனர். சமீபத்தில் தங்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில் 2 குழந்தைகளையும் அடைத்து வைத்தனர். தினமும் சமையல் செய்து வீட்டு, பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு, துணிகளை துவைத்த பிறகு, குடிசைக்கு சென்று படுத்துக் கொள்ள வேண்டும்.

அங்கேயே நீங்கள் தனியாக சமைத்து சாப்பிட்டு கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைகள் 2 பேருக்கும் உடம்பு முழுவதும் சூடு போட்டுள்ளனர். சூடு போட்டதற்கான காயங்கள் உடல் முழுவதும் உள்ளன.சொல்லும் வேலைகளை உடனடியாக செய்யவில்லை என்றால் சூடு போடுவதை தாயும், அவரது 2-வது கணவரும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று குழந்தைகள் முகத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றியுள்ளனர். இதில் அலறி துடித்த 2 குழந்தைகளும், வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து துடி துடித்தனர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து, குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ் பெக்டர் இருதயராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூரான், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குழந்தைகளை சித்ரவதை செய்த தாய் மற்றும் அவரது 2-வது கணவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தைகள் மகாலட்சுமி மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரையும் மீட்டு, கலெக்டரின் பரிந்துரையின் படி, சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

June 12, 2017

12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்


ருமேனியா நாட்டில் இளவயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் விபரப்படி, 2013ம் ஆண்டு ருமேனியாவில் 15.6 சதவிகிதமும், பல்கேரியாவில் 14.7 சதவிகித குழந்தைகள் இளவயது தாய்மார்களுக்கு பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 2212 பேர் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக ருமேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து Lorena என்ற சிறுமி கூறுகையில், கடவுள் எனக்கு அழகான குழந்தையை கொடுத்துள்ளார், இதில் என்னவொரு சிரமம் என்றால் நானும் குழந்தை தான் என தெரிவித்துள்ளார்.
தனது காதலனுடன் வசித்து வரும் Lorena, திட்டமிடாமல் வாழ்ந்ததே இதற்கு காரணம் என தெரிவிக்கிறார்.
மற்றொரு சிறுமியான Diana கூறுகையில், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் கதறி அழுததாகவும், தன்னுடைய வாழ்க்கையே நாடகத்தன்மை நிறைந்ததாக மாறிப்போயுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதற்கு காரணம் ரோமா என்ற சிறுபான்மை இன மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என நம்பப்படுகிறது.
ருமேனியாவில் Save TheChildren என்ற அமைப்பை நடத்தி வரும் Gabriela Alexandrescu என்பவர் கூறுகையில், புலம்பெயர்வு மற்றும் ஏழ்மையே இளவயது கர்ப்பத்திற்கு முதன்மை காரணம்.
அதுமட்டுமின்றி சிறுமிகளுக்கு போதிய உடல்நலம் சார்ந்த கல்வியறிவு இல்லாததும், அவர்கள் தாத்தா, பாட்டிகளின் அரவணைப்பில் வளர்வதும் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இளவயதிலேயே குழந்தையை பெற்றெடுப்பதால் மனநலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


June 11, 2017

பஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…?


என்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..!அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போது ஊரே திரண்டு விழா எடுத்தது.
சொந்த பந்தமெல்லாம் ஒன்று திரண்டு எருமைக் கடா விருந்து ஏற்பாடு ..சுடச் சுட சாராயம் காய்ச்சி, இரவு முழுக்க அந்தப் பெண்ணின் கையால் பரிமாற வைத்து குடித்து உருண்டார்கள்.
அடுத்த நாள் காலை போதையில் மட்டையாகி கிடந்த ஒரு பையனை எழுப்பி.. அனைவரும் சேர்ந்து மாலை போட்டு அந்தப் பெண்ணுக்கு நீதான் பொருத்தமானவன் என்றார்கள்.
அவனை தேர்ந்தெடுக்க காரணம் இரண்டு பானை சாராயத்தை ஒரே ஆளாகக் குடித்த பலசாலி. பரிமாறிய பெண் “இவன் தான் பலசாலி இவன் தான் எனக்கு கணவன்” என்று கூறி தேர்ந்தெடுத்து விட்டாள்.
அடுத்த வாரமே கல்யாணம் என்று கூறி முடிவெடுத்தார்கள். அந்த ஒரு வாரம் முழுக்க மணமகன் கிராமத்தில் இருக்க கூடாது.
அவர்களின் வழக்கப்படி சகோதரர்கள், நண்பர்களுடன் காட்டிற்கு வேட்டையாட செல்ல வேண்டும். ஆமாம் திருமணத்திற்கு வேண்டிய கடா விருந்துக்கு காட்டெருமைகளை அவன் தான் வேட்டையாட வேண்டும்.
தடல்புடலா ஏற்பாடு ஊருக்கே விருந்து, எப்படியும் முப்பது, நாற்பது கடா வேண்டும். சாராயமும் காய்ச்ச வேண்டும். காலையில் விருந்து, அப்புறம் கல்யாணம்.
அன்று இரவுதான் சூப்பர் கிளைமாக்ஸ்.
ஊரே ஒன்று திரண்டு, மைதானம் என்று கூறப்படும் ஊருக்கு நடுவே உள்ள பஞ்சாயத்து திடலில் கூடி உட்கார்ந்து விடும்.
ஆண்கள், பெண்கள்,குழந்தை- குட்டி ,வயதானவர்கள், என ஜே ஜேவென கூட்டம் கூடி இருக்க நடுவே அலங்கரிக்கப்பட்ட கட்டில் மெத்தை, பால் பழம் இருக்கும். மணமகன், மணமகள், அங்கு அழைத்து வரப்படுவார்கள்.
அனைவர் முன்னிலையிலும் சாந்தி முகூர்த்தம் நடக்கும். பெரியவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.எல்லாம் முடிந்து இருவரையும் ஒன்று சேர மஞ்சள், வேப்பிலை, துளசி கலந்த நீரால் குளிப்பாட்டுவார்கள்.
அப்படிக் குளிக்க வைத்தால் ஓ.கே, பெரியவர்களுக்கு இருவரும் சரியான ஜோடிகள் என்று அர்த்தம்.
பெண்ணை மட்டும் குளிக்க வைத்தால் அடுத்த நாள் காலை மீண்டும் எருமைக் கடா விருந்து வைத்து..தாலியை கழட்டிவிட்டு மணமகனை ‘ நீ அதுக்கு சரி வர மாட்டே’ என்று கூறி ஊரை விட்டு விலக்கி வைத்து விடுவார்கள்.
அதன் பின் மணமகன் அந்த ஊருக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது. பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பார்கள்.
இதெல்லாம் உண்மையா,எங்கே நடக்குது இந்த அக்கப்போர் என்று தானே கேட்கிறீர்கள். நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு இனத்தில் இன்றளவும் இந்த விநோதப் பழக்கம் இருப்பதாக கூறுகிறார்கள்.
என்னத்தை சொல்றது..!?

June 9, 2017

லஞ்சம் ஊழலில் ஆசியாவிலேயே இந்த நாடு தான் முதலிடம்: வெளியானது பட்டியல்


சமீபத்திய கருத்துகணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல்- லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 10 ல் 7 பேர் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகள் முடிய லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக
லஞ்சம் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக காவல்துறையில் லஞ்சம், முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை மீறுவதற்காக அதிகளவு லஞ்சம் வழங்கப்படுவதாகவும், சீனாவிலும் அரசு இயந்திரத்தை சட்டத்திற்கு விரோதமாக நகர்த்த லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கல்வி, மருத்துவம், சட்டம் ஒழுங்கு என்று அனைத்து முக்கியத்துறைகளிலும் லஞ்சம் அளிக்காமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை எனவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லஞ்சத்தால் அரசின் உதவிகள் கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஊழல் - லஞ்சமற்ற சமுதாயம் உருவாக்கப்படும் என்ற உறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதிகளை பதவியில் அமர்ந்தவுடன் மறந்துவிடுவதே இந்தியாவின் இந்நிலைக்கு காரணம் எனவும் குறித்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் லஞ்சத்தை ஊக்கவிக்காத நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் லஞ்சம் ஊழல் மிகுந்த 5 நாடுகளின் பட்டியல் இதோ:

  1. India: 69% bribery rate
  2. Vietnam: 65% bribery rate
  3. Thailand: 41% bribery rate
  4. Pakistan: 40% bribery rate
  5. Myanmar: 40% bribery rate

June 8, 2017

சூரியனை விட வெப்பான கிரகம் கண்டுபிடிப்பு: ஆச்சரிய வீடியோ


வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சூரியனை விட இரு மடங்கு பெரிதாகவும், வெப்பமாகவும் உள்ள கெல்ட் 9 பி என்ற கிரகத்தை
அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு, கிரகங்கள் குறித்த ஆய்வை கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.
அவர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் இதுவரையில்லாத அளவு மிக சூடான பெரிய வாயுக்கிரகம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெல்ட் 9 பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், வியாழன் கிரகத்தை விட 2.8 மடங்கு பெரியதாகும்.
மேலும், கெல்ட் 9 பி கிரகம் சூரியனை விட இரு மடங்கு பெரியது மற்றும் சூடானதாகும்.
கெல்ட் 9 பி கிரகத்தின் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ் ஆகும். இதை கெல்ட் வகை டெலஸ்கோப் மூலமே காணமுடியும்.
மற்ற நட்சத்திரங்களால் சூழப்பட்டுள்ள கெல்ட் கிரகத்தின் ஒரு பகுதியில் நீர், கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன் உள்ளிட்ட மூலக்கூறுகள் உள்ளது.
ஆனால் இந்த மூலக்கூறுகள் கிரகத்தின் மற்றொரு பகுதியில் உள்ள ஊதாக்கதிர்கள் காரணமாக நிலையாக அங்கு இல்லை என கூறப்பட்டுள்ளது.

June 7, 2017

தாலி கட்டினால் திருமணம் செல்லாது.! இதுவெல்லாம் செய்ய வேண்டுமாம்!


அண்மையில் வேலூர் மாவட்டம் திருப்த்தூரில் அண்ணனின் எதிர்கால மனைவிக்கு, மண மேடையிலேயே தம்பி தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த தாலியை கழற்றி வீசிவிட்டு, அந்த பெண்ணை கூட்டிச் சென்றனர்.
இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது என சட்ட நிபுணர்களிடம் விசாரித்தோம்.
இதுபற்றி தெரிவித்த வழக்கறிஞர் ஒருவர், இந்து திருமணச் சட்டத்தின்படி, மணமகன் மற்றும் மணமகள் இருவரும் சம்மதித்து தாலி கட்டினால் மட்டுமே சட்டப்படி திருமணம் செல்லும் என தெரிவித்துள்ளார்.
கட்டாயத்தின் பேரில் ஒரு பெண்ணின் கழுத்தில் ஒருவர் தாலி கட்டிவிட்டால், அதனை இந்து திருமணச் சட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் இந்து திருமணத்தில் தாலி கட்டாயம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

June 6, 2017

கண் தானம் செய்த விஜய் சேதுபதி:


நடிகர் விஜய் சேதுபதி தனது கண்களை தானமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கோலிவுட்டின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே டேட்ஸ் இல்லாமல் தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது.
மதுரையில் நடந்த தனியார் கண் மருத்துவமனையின் துவக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

கண்தானம்
மதுரை நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி தனது கண்களை தானம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். மேலும் தன்னை போன்று கண் தானம் செய்யுமாறு தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
ரசிகர்கள்
விஜய் சேதுபதியின் கண் தான அறிவிப்பை கேட்டு திரையுலகினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் சேதுபதியின் வழியில் கண் தானம் செய்ய ரசிகர்கள் பலர் முடிவு செய்துள்ளனர்.
 
கருப்பன்
விஜய் சேதுபதி மாதவனுடன் சேர்ந்து விக்ரம் வேதா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் கருப்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

யோகி பாபு
என் சகோதரர் விஜய் சேதுபதி கண் தானம் செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். சூப்பர் ஸ்டார் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


June 5, 2017

பெற்ற மகனை கொடூரமாக கொன்றது ஏன்? தாய் பரபரப்பு வாக்குமூலம்


கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மகனை தன் கணவருடன் சேர்ந்து கொலை செய்த தாய் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாறசாலை கொடவிளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் மனைவி சரஸ்வதி.
இவர்களுக்கு சந்தோஷ் (22) மற்றும் சஜின் (21) என இரு மகன்கள் உள்ளனர்.
சந்தோஷுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாகவும், நண்பர்களுடன் சேர்ந்து ரகசியமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சந்தோஷ் அடிக்கடி கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் தம்பியுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மூவரையும் சந்தோஷ் கத்தியால் வெட்ட முயல, அதிலிருந்து தப்பிக்க அவர்கள் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.
இதனையடுத்து விட்டில் தனியாக இருந்த சந்தோஷ், மறுநாள் காலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சந்தோஷின் சகோதரர் சஜின், தாயார் சரஸ்வதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சரஸ்வதி தனது கணவருடன் சேர்ந்து மகனை கொன்றதை ஒப்பு கொண்டதுடன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், போதை பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ் பெற்றோர், தம்பி என்பதை மறந்து கண்மூடித்தனமாக எங்களை அடித்து உதைத்தான்.
அவனை திருத்த பல முறை முயற்சித்தும் அது முடியாததால் அவன் மீது எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் எங்களை சந்தோஷ் கொன்று விடுவான் என நினைத்தோம். எனவே மனதை கல்லாக்கிக் கொண்டு, பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை கொல்ல நானும், என் கணவரும் முடிவு செய்தோம்.
ஏற்கனவே அவனை கொல்ல மூன்று முறை நாங்கள் முயற்சித்த நிலையில், சம்பவத்தன்று போதையில் தூங்கி கொண்டிருந்த என் மகனின் கால்களை துணியால் கட்டி அவன் முகத்தில் ஆசிட் வீசினோம்.
பின்னர் கத்தியால் பின்பக்க தலையில் வெட்டி கொன்றோம் என சரஸ்வதி வாக்குமூலம் அளித்துள்ளார்
இந்த கொலை தொடர்பாக ஸ்ரீதரனை பொலிசார் தற்போது வலைவீசி தேடிவருகின்றனர்.

June 4, 2017

கல்விக்கடன் பெற்றவர்கள் கழுத்தை நெறிக்கும் இந்திய வங்கிகள்: கதறி அழுத ஒரு தாய்:


நமது தேசம் எப்படிப் பட்டதாக இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு விஷயம் சான்றாக இருக்கிறது. சென்னையின் ஒரு ஏரியாவில் ஒரு இந்தியன் வங்கி  கிளை வாசலில்  ஒருவர் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

அவளின் கணவர் இறந்து  ஆறுவருடங்கள் ஆகியது. பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும் என்கிற வைராக்கியத்தில் அந்தத் தாய்.


எங்கெங்கோ அலைந்து சிபாரிசுகளைப் பிடித்து ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருந்த தனது மகனுக்கு இந்தியன் வங்கியில் கல்விகடன் வாங்கி இருந்தார்.

நன்றாகப் படித்த அந்த தாயின் மகன் இன்னும் வேளைக்கு போகவில்லை.

பல இடங்களில் இன்டர்வியூ அட்டன் பண்ணிக் கொண்டிருந்தார். இந்த நிலையில்  அவரின் வீட்டிற்கு திடீரென்று  வங்கி ஆட்கள் போய்நின்றார்கள்.

வரும்போது இவ்வளவு தொகை கொண்டு வர வேண்டும் என்று கறார் உத்தரவு போட்டார்கள். திடுக்கிட்டு போனார் அந்த தாய்.

அவர்கள் சொன்ன தொகைக்கு என்ன செய்வது என்று கலங்கிப் போனார். உறவினர்கள் வீடுகளில் கையேந்தினார். எங்கும் கிடைக்கவில்லை.

குறிப்பிட்ட தேதியில் வங்கி மீண்டும் மிரட்டி அழைத்தது. பயந்து நடுங்கியபடி வங்கிக்கு சென்றார் அந்த தாய். அவரைப் போலவே நிறைய பெற்றவர்கள் கலங்கிய நிலையில் நின்றார்கள்.

திடீரென்று அவகாசமே கொடுக்காமல் அழைத்து, ரிசர்வ் வங்கி பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள்.

வட்டி வேண்டாம் வாங்கிய  தொகையில், மாதம் இவ்வளவு கட்டியே  ஆகவேண்டும். அப்போதுதான் சலுகை என்கிறார்கள். படித்த பிள்ளைகளுக்கு இன்னும் வேலையே கிடைக்க வில்லை.

நாங்கள் மல்லையா போல ஓடிப் போகப் போவதில்லை. நாங்கள், எங்கள் பிள்ளைகள் இங்கு தான் வாழ்ந்து ஆகவேண்டும் லண்டனில் எங்களுக்கு யாரும் தெரியாது.

அப்படியே தெரிந்தாலும் லண்டனில் போய் ஒளிந்து கொள்ள எங்களுக்கு வசதி இல்லை என்கிறார்கள் கதறிய படி..!

அவர்களில் ஒரு தாய் சொன்னார். “அவசரத்திற்கு வங்கி கடன் கொடுத்து எங்கள் பிள்ளைகள் படிக்கச் உதவியது வங்கி அதை நாங்கள் மறக்கவே மாட்டோம். வாங்கிய கடனில் வட்டியில் பெரும் பகுதியை கட்ட வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இவ்வளவு குறுகிய  அவகாசம் கொடுக்காமல் இன்னும் கொஞ்சம் அதிகம் டைம் கொடுத்திருக்கலாம் என்கிறார்.

வாங்கியக் கடனை கொடுத்தே ஆகவேண்டும். அதற்கு  மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் ஏழைப்  பெற்றோர்கள்  நிலையைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாமே..!

தொடை விவகாரம்: பிரியங்கா சோப்ராவுக்கு யார் ஆதரவுன்னு பாரேன்!


பிரதமர் மோடியை சந்தித்தபோது கால் தெரியும்படி உடைந்த அணிந்ததற்காக விமர்சனத்திற்குள்ளான பிரியங்கா சோப்ராவுக்கு சன்னி லியோன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனது ஹாலிவுட் படமான பேவாட்சை விளம்பரப்படுத்த நடிகை பிரியங்கா சோப்ரா பெர்லின் சென்றிருந்தார். அப்போது அரசு முறை பயணமாக பெர்லின் வந்த பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது பிரியங்கா தொடை தெரியும்படி உடை அணிந்திருந்தார்.

விமர்சனம்
ஒரு நாட்டின் பிரதமர் முன்பு இப்படியா அரைகுறையாக உடை அணிந்து கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்று நெட்டிசன்கள் பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்தனர்.
 
பிரியங்கா
பிரியங்காவோ தானும், தனது அம்மாவும் தொடை தெரியும்படி உடையணிந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
 
சன்னி
நாம் மிகவும் ஸ்மார்டான மனிதரை தான் இந்திய பிரதமராக தேர்வு செய்துள்ளோம். மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவருக்கு பிரியங்காவின் உடையில் பிரச்சனை இருந்திருந்தால் நிச்சயம் கூறியிருப்பார். ஆனால் அவர் எதுவும் கூறவில்லை என்கிறார் சன்னி.
 
உடை
எனக்கு பிரியங்காவை தெரியும். அவர் மக்களிடம் நல்லவிதமாக பழகுபவர். சமூகத்திற்கு உதவி செய்பவர். அதனால் அவரின் நடவடிக்கைகளை வைத்து அவரை மதிப்பிடலாமே தவிர உடையை வைத்து அல்ல என சன்னி தெரிவித்துள்ளார்.

June 3, 2017

உலகளவில் அடிமட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 31%குழந்தைகள் இந்தியாவில்.........


இங்கிலாந்து: உலகளவில் அடிமட்ட நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 31% குழந்தைகள் இந்தியாவில் இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்ஸ்ஃபோர்ட் மனிதவள மேம்பாட்டு துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து நைஜீரியாவில் 8% ஏழை குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 7% ஏழை குழைந்தைகளும், பாகிஸ்தனில் 6% ஏழை குழந்தைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 103 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 50% குழந்தைகள் அடிமட்ட நிலை அதாவது ஏழை குழந்தைகளாகவே உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் இந்திய 37-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

June 1, 2017

நரேந்திர மோடி அரசின் மூன்றாண்டு சாதனை புகழ் மாலை - இது நமது எம் ஜி ஆர் டாக் ...


நடுவண் அரசா? நயவஞ்சக அரசா? என நரேந்திர மோடி அரசு மீது அ.தி.மு.க. நாளிதழ் கடும்
சாடி உள்ளது.

அ.தி.மு.கவின் எடப்பாடி ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் தினகரனுக்கு  ஆதரவாக இயங்கும்
அ.தி.மு.க. நாளேட்டில் மோடி அரசின் மூன்றாண்டு சாதனையை சித்ரகுப்தன் என்ற பெயரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

மோடி அரசின் மூன்றாண்டு.
இது- நாடு காக்கும் அரசா?
மாடு காக்கும் அரசா?
இது- சாதனை அரசா?
சி.பி.ஐ. சோதனை அரசா?

 டிஜிட்டல் இந்தியா....
மேக் இன் இந்தியா...
கிளீன் இந்தியா... என
வாயாலே வடைசுடும் அரசா?
வாக்களித்த மக்களுக்கு
விடை சொல்லும் அரசா?

சகலரும் வாழ்த்தும் அரசா?
சமஸ்கிருதம் வளர்க்கும் அரசா?
கண்ணீர் துடைக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை...
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்.. என வாக்குறுதி காத்த அரசா?
வாய்ஜாலத்தில் ஏய்த்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்...
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?
ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய ‘அநாவசிய போர்’ அரசா?
விலைவாசியை குறைத்த அரசா?
வெட்டிப் பேச்சில் திளைத்த அரசா?

ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு...
‘நீட்’ தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு...
ஹைட்ரோ கார்பனால் வாழ்வாதாரம் இழப்பு...
எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு...

வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு. ஆனாலும், எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

May 24, 2017

பிள்ளைங்களாடா நீங்க.. சாப்பாட்டுக்காக அலைய விட்ட மகன்கள்.. வேதனையில் தீக்குளித்தார் தாய்!


பெரியகுளம்: மகன்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு அலைந்ததாலும், தனக்கு முறை வைத்து சாப்பாடு போட்டதால் மனம் உடைந்ததாலும், வேதனை அடைந்த பெண்மணி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது வடுகபட்டி. அங்கு வசித்து வந்தவர் பாண்டியம்மாள். 58 வயதான இவரது கணவர் பெயர் பெரியகருப்பன். இவர்களுக்கு பால் பாண்டி, செல்வம் என இரு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. அதே ஊரிலேயே தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

இரு மகன்களும் தங்களது பெற்றோருக்கு முறை வைத்து சாப்பாடு போட்டுள்ளனர். அதாவது சாப்பாட்டு நேரத்துக்கு இவர்களின் வீடுகளுக்களுக்குப் போய் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் ஒரு மகன் வீடு, அடுத்த வாரம் இன்னொரு மகன் வீடு என.
இது பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பாண்டியம்மாள் செல்வம் வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போயுள்ளார். ஆனால மருமகள் வீட்டில் இல்லை. கதவைப் பூட்டி விட்டு போய் விட்டார்.

இதனால் பெரும் அவமானமடைந்த பாண்டியம்மாள் கடும் வேதனையில் வீடு திரும்பினார். இந்த வயிற்றுப்பாட்டுக்காக இத்தனை அவமானமா என்று கூனிக் குறுகிய அவர் தீக்குளித்து விட்டார். அவரை தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மனைவியின் சாவுக்கு மகன்களே காரணம் என பெரியகருப்பன் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிள்ளைங்களாடா நீங்க?

May 23, 2017

ஜாதியைச் சொல்லி திட்டுகிறார் .. "தாடி" பாலாஜி மீது மனைவி பரபரப்பு புகார்


 தனது ஜாதியைச் சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் என்று கூறி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தாடி பாலாஜி. லிங்கா படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார்.

இவரது மனைவி பெயர் நித்யா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மாதவரத்தில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. டிவி நிகழ்ச்சியில்தான் மோதல் வெடித்ததாக பலரும் நினைத்தனர். ஆனால் இவர்களுக்குள் சமீப காலமாகவே நிஜத்திலும் மோதல் இருந்து வந்துள்ளது.

போலீஸில் புகார்
இந்த நிலையில் தற்போது போலீஸ் நிலையம் வரை இவர்களது மோதல் வந்து விட்டது. மாதவரம் காவல் நிலைத்தில் பாலாஜி மீது நித்யா திடீரென பரபரப்புப் புகார் அளித்துள்ளார்.

 ஜாதியைச் சொல்லித் திட்டுகிறார்
அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார். அடிக்கிறார். கொடுமை செய்கிறார் என்று நித்யா பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார்.

சின்னத் திரையில் பரபரப்பு
நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி கொடுத்துள்ள இந்த பரபரப்பான புகாரால் சின்னத் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜாதியைச் சொல்லி பாலாஜி திட்டுவதாக அவரது மனைவியே கூறியிருப்பதால் இந்த விவகாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமாதான முயற்சிகள்
பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளையும் இருவருக்கும் வேண்டியவர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரச்சினை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. மாதவரம் போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.