Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label விழிப்புணர்வு தகவல்கள். Show all posts
Showing posts with label விழிப்புணர்வு தகவல்கள். Show all posts

July 17, 2017

யாருக்கு வாய்ப்புகள் அதிகம்: இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசையா ?


இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

* சர்க்கரைவள்ளிக் கிழங்கை தங்களது அன்றாட டயட்டில் சேர்க்கும் பகுதிகளில் வாழும் தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பெண்களின் கருவளத்தை அதிகரித்து, ஓவுலேசன் நிகழ்வை மேம்படுத்தி, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களின் வயது 30-திற்கு மேல் தான் உள்ளது. இதற்கு காரணம் 30 வயதிற்கு மேல் பெண்கள் இறுதி மாதவிடாயை நெருங்கிக் கொண்டிருப்பால், ஒவ்வொரு மாதமும் கருப்பையில் இருந்து ஒன்றிற்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் வெளியிடப்படுகின்றன. இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போது அக்கருமுட்டைகளில் விந்தணுக்கள் நுழைந்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவுகின்றன.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைப்பவர்கள், கர்ப்பமாக முயலும் போது ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த ஃபோலிக் அமிலம், பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி, அவகேடோ அல்லது வெண்ணெய் பழம், பசலைக்கீரை, வெண்டைக்காய், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருக்கும்.

* உயரத்திற்கு ஏற்ற எடை சில ஆய்வாளர்கள், ஒரு பெண் தான் கருத்தரிக்கும் போது, தன் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் நன்கு ஆரோக்கியமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

* இரட்டைக் குழந்தை வேண்டுமென்று நினைக்கும் ஆண்கள், ஜிங்க் சத்து நிறைந்த உணவுப் பொருட்களான கடல் சிப்பி, பச்சை இலைக் காய்கறிள், விதைகள் மற்றும் பிரட் போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரித்து, பெண்களின் உடலினுள் செல்லும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட விந்தணுக்கள் நீந்தி கருமுட்டையை அடையும். இதனால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

* ஒன்று அல்லது இரண்டு பிரசவத்தை சந்தித்த பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இரட்டை குழந்தை வேண்டுமென நினைக்கும் தம்பதிகள் முதல் குழந்தைக்கு பின் முயற்சியுங்கள்.

* முக்கியமாக தம்பதிகளின் குடும்பத்தில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்து, அத்தம்பதிகள் இரட்டை குழந்தைக்கு முயற்சித்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

* குட்டையான பெண்களை விட, உயரமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளது. அதுவும் 5 அடி 6 அங்குலம் கொண்ட பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.

இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும்.

எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு.

இங்கு யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று பார்க்கலாம்.

* கருவுறுதல் மருந்துகளை எடுத்து வரும் பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படியெனில் இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவருவதால், இந்நேரம் உறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

* இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.

* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்கும் அதிகமானோர் தான். மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும் இளம் பெண்களை விட, வயது அதிகமான பெண்களுக்கே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

* ஒரு பெண் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையை மேற்கொண்டால், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். எப்படியெனில் இம்முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகளை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில் ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுறச் செய்து, பின் மீண்டும் அந்த கருமுட்டையை பெண்ணின் கருப்பையினுள் வைக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்று கருப்பையினுள் செலுத்துவதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சில நேரங்களில் ஒரே ஒரு கருமுட்டை இரண்டாக பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகளாக உருவாகும்.

* உயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாம். மேலும் ஆய்விலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயரமான பெண்களின் உடலில் வளர்ச்சிக்கு காரணியான இன்சுலின் அதிகம் இருப்பது தான் என்று கூறுகின்றனர்.

July 5, 2017

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: செலவே இல்லாமல் விளம்பரம்செய்யலாம்


உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி' திரைப்படத்தின் புகைப்படங்களும் போஸ்டர்களும் விமானத்தின் வெளிபுறத்தில் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். இந்தியாவில் எந்த ஒரு நடிகரின் படத்தையும் இதேபோல் விமானத்தில் விளம்பரப்படுத்தியதில்லை. ஆக, தனிநபர் திறமையாக இருந்தாலும் சரி, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களானாலும் சரி, பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என எந்த ஓர் ஊடகமானாலும் அவை மக்களைச் சென்றடைய விளம்பரம் அவசியமாக உள்ளது.

விளம்பரம் அவசியம்

பத்திரிகைகளில் வெளியாகும் விறுவிறுப்பான தொடர்கள், எ.ஃப்.எம்.மில் ஒலிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள், சின்னத்திரையில் வெளியாகும் தொடர்கள், குறும்படங்கள் முதல் திரைப்படங்கள்வரை அத்தனைக்கும் விளம்பரங்கள் தேவையாக இருப்பதைப் பிரதான சாலைகளில் உள்ள பிரம்மாண்டமான பேனர்களும் சுவரொட்டிகளும் பறைசாற்றுகின்றன.

பத்திரிகைக்கு வானொலி-தொலைக்காட்சி விளம்பரங்கள், வானொலிக்கு பத்திரிகை-தொலைக்காட்சி விளம்பரங்கள், தொலைக்காட்சிக்கு வானொலி-பத்திரிகை விளம்பரங்கள். திரைப்படங்களுக்கோ பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என அத்தனை யிலும் விளம்பரங்கள். இப்படி ஊடகங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயம். தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், ஊடகங்களோடு இணையத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்ஸ் விளம்பரங்களும் சேர்ந்துகொண்டுள்ளன.

ஆட்டுவிக்கும் விளம்பரங்கள்

இன்று விளம்பரங்கள் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக உள்ளன. காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் செய்தித்தாள்களில், காலையில் சுப்ரபாதம் காட்சி கொடுக்கும் தொலைக்காட்சியில், கிசுகிசு குரலில் காதோடு பேசி நிகழ்ச்சிகளை நடத்தும் வானொலியில், வீட்டுத் தொலைபேசியில், கையில் உள்ள அலைபேசியில், சாலையில் திடீரென முளைக்கும் விளம்பரப் பலகைகளில், பஸ்-ரயிலுக்கான காத்திருப்புகளில் திணிக்கப்படும் பிட்நோட்டீஸ்களில், நாம் அணியும் சட்டைகளில், தொப்பிகளில், கடிதங்களில், விற்பனையாளர்கள் வீட்டு வாசலில் வந்து விற்கும் பொருட்களில் என அத்தனையிலும் விளம்பரங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாம் எந்த பிராண்ட் க்ரீம், பவுடர், சோப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தொடங்கி, எந்த மாடல் பைக், கார் வாங்க வேண்டும் என்பதுவரை நம்மை இயக்குபவை விளம்பரங்கள்தான். நாம் எந்த இடத்தில் வீடு வாங்க வேண்டும் என்பதையும் அவைதான் நிர்ணயம் செய்கின்றன. நம்மை மட்டும் அல்ல, நம் குழந்தைகளையும் விளம்பரங்கள்தான் வளர்க்கின்றன. அவர்கள் சாப்பிடும் டிபன் முதல் குடிக்கும் சத்து பானம் வரை அனைத்துமே விளம்பரங்களின் தாக்கம்தான்.

இமெயில், ஃபேஸ்புக், பிளாக், டிவிட்டர், யு-டியூப், வெப்சைட் என இணைய உலகையும் விளம்பரங்கள் விட்டுவைக்கவில்லை. சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதும், காலத்துக்கு ஏற்ப விளம்பரங்கள் தங்கள் ஆளுமையைச் செலுத்திவருவதும் இன்று பெருகிவருகின்றன.

இப்போதெல்லாம் பத்திரிகைகள் வானொலி,தொலைகாட்சிகளில் வரும் பெரும்பாலான கார்ப்பரேட் விளம்பரங்களில் அவற்றின் வலைதளம் மற்றும் சமூக வலைதள முகவரிகளைக் கொடுக்கிறார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போலப் பத்திரிகைகளில் நேரடியாக ஒரு பக்க விளம்பரம் கொடுத்துவிட்டு, மறைமுகமாகச் சமூக வலைதளத்தில் கணக்கிலடங்கா இணையப் பக்கங்களில் எழுத்துகளாகவும் படங்களாகவும் வீடியோக்களாகவும் விளம்பரம் செய்து கொள்ள இன்றைய தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

உதாரணத்துக்கு, ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் (amazon), பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் ஓ.எல்.எக்ஸ் (OLX), வெப்சைட் பெயரை ரெஜிஸ்டர் செய்ய உதவும் கோடாடி (Godaddy) போன்ற வெப்சைட்டுகளின் பெயர்கள் வயது வித்தியாசமின்றி நம் அனைவர் மனதிலும் ஏறி உட்கார்ந்துகொண்டதற்குக் காரணம் அவற்றுக்குக் கொடுக்கப்படும் தொலைக்காட்சி, எ.ஃப்.எம் / பத்திரிகை விளம்பரங்களே. www என்ற மூன்று எழுத்துகளில் உலகை ஆளும் வெப்சைட்டுகளும் உள்ளூரில் செல்லுபடியாக மீடியா விளம்பரங்களும் அவசியமாகின்றன. இப்போது நடந்துகொண்டிருப்பது விளம்பரப் புரட்சி.

கைகொடுக்கும் இலவச விளம்பரங்கள்

முன்பெல்லாம் நாம் ஒரு பிசினஸ் ஆரம்பித்தால் என்ன செய்வோம்? நம் பிசினஸின் தன்மைக்கு ஏற்ப அந்த பிசினஸ் நன்றாக இருக்கும் இடத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுப்போம். நாம் செய்யும் பிசினஸுக்குப் பொருத்தமான பெயரைச் சூட்டுவோம். பிறகு நம் பெயர், நம் பிசினஸின் பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றைத் தாங்கிய விசிட்டிங் கார்டைத் தயார்செய்வோம். இதுதான் நம் பிசினஸுக்கு முதல் கட்ட விளம்பரமாக இருந்தது. மிஞ்சிப்போனால் நம் பிசினஸைப் பற்றி விரிவாக பிட்நோட்டீஸ் அடித்து பிரபலப்படுத்துவோம். பின்னர், நம் நிதி நிலைமைக்கு ஏற்பப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் விளம்பரம் கொடுப்போம்.

ஆனால், இன்று நாம் செய்துகொண்டிருக்கும் பிசினஸுக்குத் தேவையான விளம்பரங்களை இன்டர்நெட் மூலம் பத்திரிகைகளில் வருவதுபோல எழுத்து வடிவிலும், வானொலியில் வருவதைப் போல ஒலி வடிவிலும், தொலைக்காட்சியில் வருவதைப் போல ஒளி வடிவிலும் நாமே செலவில்லாமல் செய்துகொள்ளவும் அல்லது குறைந்த செலவில் செய்துகொள்ளவும் உதவும் தொழில்நுட்பங்கள் விரல் நுனியில் காத்திருக்கின்றன.

நம் வீட்டிலோ அல்லது நம் சொந்தக் கடையிலோ / அலுவலகத்திலோ நேரடியாக நாம் செய்துகொண்டிருக்கும் பிசினஸுக்கு ஆன்லைனிலும் ஓர் அலுவலகம் தேவை. அதில் நடைபெறும் பிசினஸ்தான் ஆன்லைன் பிசினஸ்.

ஆன்லைனில் வேலை / பிசினஸ் என்பது யாரோ ஒருவர் உங்களுக்கு வேலை கொடுத்து அதை நீங்கள் ஆன்லைனில் செய்வதன் மூலம் சம்பாதிப்பது மட்டும் அல்ல. உங்கள் திறமை, படிப்புக்கு ஏற்ற பிசினஸை நீங்களாகவே உருவாக்கி, அதை ஆன்லைனில் விரிவுபடுத்தி, பிரபலப்படுத்திக்கொள்வதும் திறமையே! எனவே உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை பிசினஸ் ஆக்குங்கள்.

June 28, 2017

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறா?


பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது சரியா? தவறா? பெரும்பாலும் அனைவரும் சரி என்று தான் கூறுவார்கள். ஏனெனில், அவ்விடத்தில் முடி அதிகமாக வளர்ந்தால் வியர்வை சுரந்து பாக்டீரியாக்கள் அதிகம் பரவும் என சிலர் பதிலளிப்பதும் உண்டு. 

பெண்களின் பிறப்புறுப்பு உணர்ச்சிகள் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்!! 

ஆனால், இல்லை பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வது தவறு. தொடர்ந்து அவ்விடத்தில் சேவிங் செய்துக் கொண்டே இருப்பதால் தான் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு, புண், நச்சுக்கிருமி தொற்றுகள் போன்றவை ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்....

வைரஸ் நோய் தொற்று பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் 

வைரஸ் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறதாம். Molluscum contagiosum எனப்படும் சரும தொற்று இதனால் மிக எளிதாக பரவுகிறதாம். ஆய்வாளர்கள், "இதனால் பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு போன்றவை அதிகம் தோன்றுகிறது" என கூறுகின்றனர்.

பாதுகாப்பு 

பிறப்புறுப்பு பகுதியில் முடியை அகற்றாமல் இருப்பதால் தூசு, பாக்டீரியா போன்ற அயல் துகள் பொருட்கள் உடலுக்குள் செல்லாமல் தடுத்து பாதுகாக்கிறது. நீங்கள் பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் கிருமி தொற்றுகள் அண்டும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உடல் வெப்பநிலை 

பிறப்புறுப்பு முடி வேர்களில் சரும மெழுகு சுரப்பி (sebaceous gland) இருக்கிறது. இதில் இருந்து எண்ணெய் போன்ற திரவம் வெளிப்படும். இது சருமத்தில் ஒன்றி ஆவியாகி சருமம் அதிக சூடாகாமல் தடுக்கிறது. மேலும் இதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்காமல் பாதுகாக்க முடிகிறது.

பால்வினை தொற்று 

மேலும் பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் பால்வினை தொற்றுகளால் எளிதாக பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

பாலுண்ணி / மருக்கள் 

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் பாலுண்ணி / மருக்கள் உண்டாகும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறதாம். பெரும்பாலும் இது சரும நிறத்தில் தோன்றுவதால் வெளிப்படையாக தெரிய வாய்ப்புகள் குறைவு. 

ஷேவிங் செய்வதால் இவை உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஷேவிங் செய்யாமல் இருப்பதால் இதை முழுமையாக குறைத்துவிட முடியாது என்றும் சரும நிபுணர்கள் கூறுகிறார்கள். சருமத்தோடு பாலுண்ணி / மருக்கள் ஏற்படும் தொடர்பினை குறைக்க தான் உதவும்.

சரும பிரச்சனைகள் 

பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் எரிச்சல் மற்றும் கொப்பளம் அல்லது நுண்ணிய இரத்த கட்டிகள் உண்டாகலாம். தொடர்ந்து பிறப்புறுப்பு பகுதியில் ஷேவிங் செய்வதால் சருமம் மிருதுவாக இருக்கும் என சிலர் எண்ணுவதுண்டு ஆனால், இது நுண்ணுயிர் நோய்க்கிருமிகள் உண்டாவதற்கு காரணியாக இருக்கிறதாம்.

ட்ரிம் 

அளவிற்கு அதிகமாக பிறப்புறுப்பு பகுதியில் முடி வளர்ந்தால் ட்ரிம் செய்துக் கொள்ளலாம். ஆனால், முழுமையாக ஷேவிங் செய்து முடிகளை அகற்ற வேண்டாம். இதனால் தான் சரும கிருமி தொற்றுகள் எளிதாக அவ்விடத்தில் பரவுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

June 27, 2017

எச்சரிக்கை : உங்கள் வெப் கமெரா உங்களையே வேவு பார்க்கும் !


வெப் கமெராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கமெராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெப் கமெரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கமெராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது உங்கள் வீட்டு டெஸ்க் டாப்பில் உள்ள வெப் கமெரா நீங்கள் நினைத்தால்தான் ஆன் ஆகும். ரெக்கார்ட் செய்யும் என்பதில்லை.

ஒரு குறிப்பிட்ட சாஃப்ட் வேர் மூலம் உங்கள் வெப் கமெராவை வெளியில் இருந்து இயக்க முடியும். உங்களுக்குத் தெரியாமலே அது ஆன் ஆகி, உங்களைப் படம் பிடிக்கும்.

அது முழுவதையும் ஒரு வீடியோ தொகுப்பாகி வெளியிலும் ஷேர் செய்யவும் முடியுமாம். ஃபோஸ்காம் நிறுவனம் தயாரித்துள்ள வெப் கமெராக்களில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எஃப்-செக்யூர் நிறுவனம்,

இந்த குறைபாடுகள் தொடர்பாக ஃபோஸ்காம் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறியுள்ளது.

அசத்தும் ஆருயிர் நண்பர்களாக வாழ்ந்து வரும் சிங்கம் - புலி


கடந்த 2004ம் ஆண்டு சாலையோர பூங்காவிலிருந்து கேமரூன் என்ற சிங்கத்தையும், சாபு என்ற புலியையும் குழு ஒன்று மீட்டது. ஏனெனில், சிங்கம் மற்றும் புலியின் உரிமையாளர்கள், இவைகளை இனசேர்க்கையில் ஈடுபடுத்தி லைகர் குட்டிகளை உருவாக்க முயற்சித்ததால் குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிங்கம், புலியை மீட்டு வந்து 12 ஆண்டுகள் ஆகியும், இன்றும் ஆருயிர் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றன.

June 22, 2017

பாம்பு சாபத்தால் படிப்புக்கு தடா சத்தியமங்கலம் அருகே வினோதம்


'பாம்பு சாபத்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என, பெற்றோர் முரண்டு பிடிக்கும் வினோதம், சத்தியமங்கலம் அருகே நடக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொமராபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது நரிக்குறவர் காலனி. இங்கு, 50 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் சென்று தேன், பாசி மணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றனர்.காலனியில், படிக்கும் வயதில், 19 குழந்தைகள் உள்ளன. இவர்கள், அரை கி.மீ., துாரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., நகர் பள்ளிக்கு கடந்த ஆண்டு சென்றனர். சில நாட்கள் மட்டும் சென்ற குழந்தைகள், பின் பள்ளி பக்கமே வருவதில்லை.

சத்தியமங்கலம் வட்டார வள மைய அதிகாரிகள், நரிக்குறவர் காலனிக்கு சென்று, காலனி தலைவர் பன்குடியிடம், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறு கூறினர். அதற்கு தலைவர் உள்ளிட்ட பெற்றோர், 'எங்கள் இனத்தவர்களுக்கு பாம்பு என்பது சாபம். பாம்புக்கும் எங்களுக்கும் ஆகாது. பள்ளிக்கு செல்லும் அரை கி.மீ., துாரம் காட்டு பகுதி. இங்கு பாம்புகள் நடமாட்டம் உள்ளன. பாம்புகளால் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்பது எங்களின் எண்ணம்.

குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பாம்பு சாபத்தை நினைத்தால் பயமாக உள்ளது. பள்ளியில் குழந்தைகளுக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. நரிக்குறவர் காலனியிலேயே, ஒரு பள்ளி அமைத்து, ஆசிரியர் நியமனம் செய்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்' என்றனர்.

இதையடுத்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் சென்று, மீண்டும் நரிக்குறவர் காலனி பெற்றோரிடம் பேசினர். ஆனால், அவர்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.

June 6, 2017

சாப்பாட்டை சிந்தியதற்காக குழந்தையை இறக்கமின்றி அடிக்கும் பெண்.. கொலைநடுங்க வைக்கும் வைரல் வீடியோ!



6 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கடுமையாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று இரவு முதல் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. 2 .50 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் மரக்கட்டையை வைத்து 6 வயது மதிக்கத்தக்க குழந்தையை கடுமையாக அடிக்கிறார்.

 உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அந்த குழந்தை கீழேயும் சட்டை மேலும் உணவை சிந்தியதற்காக அந்தப் பெண் குழந்தையை சுமார் 30 முறைக்கும் அதிகமாக மாட்டை அடிப்பது போல அடித்துள்ளார்.

வலி தாங்காமல் கதறி துடித்து ஒரு மூளையில் போய் நின்று அழும் குழந்தையை மீண்டும் வந்து சட்டையை கழற்றி கொடூரமாக அடித்துள்ளார் அந்தப் பெண். ஒழுங்காக சாப்பிட மாட்டாயா செத்துப் போ, இங்கேருந்து போய் எங்கயாவது செத்துப் போ என்று கூறி அந்தப் பெண் குழந்தையை அடிக்கும் காட்சிகள் மனதை உறைய வைக்கிறது. நெஞ்சை பதைபதைக்கும் இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர். இதைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.

May 31, 2017

பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்


புகையிலை வியாபாரிகள் என்று சொல்வது புகையிலை பொருட்களை குடிசைத் தொழிலாக செய்து லட்சங்களை சம்பாதிப்பவர்களை மட்டுமல்ல கோடிகளை குவிக்கும் பெரு நிறுவனங்களையும் சேர்த்துதான். இவர்கள் ஒற்றை இலக்கு ‘யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு வருவாய் குவிய வேண்டும்’ என்பதுதான். அதனால் இவர்கள் இலக்காக வைத்து செயல்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்களைதான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களைதான்.

காரணம் மாணவர்களை புகையிலை பழக்கத்திற்கு அடிமையாக்குவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெருக்குவதுடன், நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களை நிரந்தரமாக்கிக் கொள்ளும் திட்டம்தான், ‘அதற்காக விதவிதமாக, குறைந்த விலையில் புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி அருகில் விற்கின்றனர்’ என்கிறார் புகையிலைக்கு எதிரான குழந்தைகளின் அமைப்பின் செயல் இயக்குனர் சிரில் அலெக்சாண்டர்.

அவர் மேலும் ‘தமிழக பள்ளிகளில் அருகில் ‘கூல் லிப்’ என்ற பெயரில் தடை செய்யப்பட்ட புகையிலை தூள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் 10 உறைகள் இருக்கும். விலை ரூ.15. பல வகையான புகையிலை பொருட்கள் மாணவர்களை குறி வைத்து விற்கப்பட்டாலும் இந்த கூல் லிப்தான் மாணவர்களை மட்டுமல்ல மாணவிகளையும் அதிகம் ஈர்க்கிறது.  சென்னையில் பள்ளிகளில் இருக்கும் கடைகளில் இந்த புகையிலை பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. கடைக்காரர்களே அதன் பெருமைகளை சொல்லி மாணவர்களிடம் விற்கின்றனர்.

சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா மேம்பாலம், வடபழனி, திநகர், கல்லூரிசாலை, கோபாலபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, ராயப்பேட்டை, கேகேநகர் பகுதிகளில் உள்ள 22 மாநகராட்சி, பிரபல தனியார் பள்ளிகளின் சுற்றுப்புறத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். எல்லா பள்ளிகளுக்கும் 100 கெஜத்திற்குள் புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. ‘எங்கும் புகைப்பிடிக்காதீர்; புகைப்பிடிப்பது குற்றம்’ என்ற அறிவிப்புகள் இல்லை.

மேலும் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிலும் சீருடையில் இருக்கும் மாணவர்கள் கேட்டாலும் புகையிலை பொருட்களை விற்கின்றனர். அதிலும் 66.7 சதவீத கடைகளில் புகையிலை பொருட்களை பளிச்சென தெரியும் வகையில் வைத்து விற்கின்றனர். மேலும் பள்ளிக்கு அருகில் இருக்கும் 84 சதவீத கடைகளில் முன்பாக நின்று பலரும் புகைத்தபடி இருக்கின்றனர். மேலும் 62 சதவீத கடைகளில் நோட்டு புத்தகங்கள், தின்பண்டங்களுடன் புகையிலை பொருட்களையும் சேர்த்து விற்கின்றனர். பெரும்பான்மையான கடைகளில் சிகரெட்களை 1, 2 என்று தனித்தனியாகவே விற்கின்றனர்.

ஏதோ ஒன்றிரண்டு பேர் இதற்கு பழகியிருக்கலாம் என தோன்றலாம். ஆனால் ஒரு வகுப்பில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் போது ஒரு மாணவனுக்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டால் மார்ச் மாதம் பள்ளி முடிவடையும் போது குறைந்தது 30 மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்’’ என்று எச்சரிக்கிறார்.

புகார் தெரிவிக்க...

புகையிலை பொருட்கள் விற்பனை, விளம்பரம், விநியோகம் செய்வது தொடர்பான சட்ட மீறல்கள் நடந்தால் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் 1800-110-456 என்ற இலவச அழைப்பு எண்ணையோ அல்லது 044-24320802 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

May 30, 2017

மேட்ரிமோனியல் வெப்சைட்டில் இப்படி ஒரு ஆபத்தா? பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நேர்ந்த சோகம்


 மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் பழக்கமாகிய பெண்ணுடன் உறவு வைத்துவிட்டு பிறகு கொலையும் செய்ய முயன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் சுபைன் பர்மன் (26). இவர் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினயராக பணியாற்றி வந்தார்.
திருமண வரன் தேடும், மேட்ரிமோனியல் வெப்சைட் ஒன்றின் மூலம், கொல்கத்தாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான 26 வயது இளம் பெண்ணுக்கு வலை விரித்துள்ளார் சுபைன்.

 ஒரே வீட்டில் கும்மாளம்
இருவருமே சாப்ட்வேர் இன்ஜினியர்களாக இருப்பதால் வருமானத்திற்கு பிரச்சினையில்லை என நம்பிய அப்பெண்ணும், திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். இதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து பழகியுள்ளனர். ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

 கல்தா கொடுக்க முயற்சி
திருமணம் செய்யும்படி அந்த பெண் வலியுறுத்தியதும், வேலை முடிந்த பிறகு ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற தொனியில் நடந்துகொண்டாராம் சுபைன்.

 கொலை முயற்சி
இதனால் இருவருக்கும் தகராறு அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் தலையணையை வைத்து மூச்சை நிறுத்தி அந்த பெண்ணை கொலை செய்ய சுபைன் முயன்றுள்ளார்.

மேட்ரிமோனியல் வெப்சைட்
இதையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் பெங்களூர், மாரத்தஹள்ளி போலீசார் சுபைனை கைது செய்துள்ளனர். பேஸ்புக் மூலமாகத்தான் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள் என்ற புகார்கள் வருகிறதென்றால், இப்போது மேட்ரிமோனியல் வெப்சைட்டும் இதில் சேர்ந்துவிட்டது.

May 28, 2017

குழந்தைகளின் மேதாவித்தனமும் அதனால் உருவாகும் துயரங்களும்


காட்சி 1: அந்த பிரபல டி.வி. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சிறுவன், நடுவர்களில் ஒருவரான பெண் பாடகியைப் பார்த்து, தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறான்.

காட்சி 1: அந்த பிரபல டி.வி. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சிறுவன், நடுவர்களில் ஒருவரான பெண் பாடகியைப் பார்த்து, தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறான். பாடகி ‘நாணுகிறார்’. பார்வையாளர்கள் ‘கொல்’லென்று சிரிக்கிறார்கள்.

காட்சி 2: அந்த நடனப் போட்டி நிகழ்ச்சியில், ஆபாச எல்லையை மீறும் பாடலுக்கு வாயசைத்து, இடுப்பை வளைத்து நெளித்து ஆடுகிறாள், அச்சிறுமி. நடன அசைவுகளும், பாடல் வரிகளும் ஆபாசம் என்பது அச்சிறுமிக்குத் தெரியாது. நிகழ்ச்சியின் நடுவர்கள், அதில் பங்கேற்றிருக்கும் பார்வையாளர்கள், பெற்றோருக்குக்கூடவா?

காட்சி3: பெரிய பெண் போன்று நிகழ்ச்சியில் நடித்த சிறுமி, நடித்து முடித்த பிறகு தான் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்று கண்ணீர் கசிய (நடிப்பில்) விவரிக்கிறாள். அப்போது அந்த சிறுமியின் விவரிப்பு, வார்த்தைகள் எல்லாமே பெரிய மனுஷத்தனம்.

‘டி.ஆர்.பி.’யை உயர்த்துவதற்காக தொலைக்காட்சிகள் பின்பற்றும் உத்திகளில், குழந்தைகளின் குழந்தைத்தனம் காணாமல்போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுகிறது. அது எந்த அளவு நிஜம்?

இதுகுறித்து அலசி ஆராய்ந்தால், முற்றிலுமாக உண்மையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இன்று எல்லா டி.வி.களிலும் எல்லா வகை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், அவை ஒன்றை ஒன்று முந்தும் முயற்சியில்தான், தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் குழந்தைத்தனத்தைப் பலி கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ‘உங்க அம்மா கோபப்படும்போது அவரை உங்கப்பா எப்படி சமாதானப்படுத்துவார்?’ என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, ‘அப்போ அப்பா, புஜ்ஜிம்மா, செல்லக்குட்டிம்மான்னு கொஞ்சுவார், உம்மா கொடுப்பார்’ என்று மழலைக் குரலில் கூறுகிறது, குழந்தை. பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருக்கும் அந்த அம்மாவும், அப்பாவுமே ரசித்துச் சிரிக் கிறார்கள்.

குழந்தைகளிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறோம், போட்டித் திறனை வளர்க்கிறோம், அதற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறோம் என்று டி.வி.கள் கூறினாலும், சின்னத்திரையில் குழந்தைகளின் அசத்தல்களுக்குப் பின்னே அவர்கள் எவ்வளவு அவஸ்தைகளை அனுபவிக் கிறார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒரு நடன நிகழ்ச்சியில் ஒரு குழந்தை காற்றில் சுழன்று, அடுத்தடுத்து குட்டிக் கரணம் அடித்து மின்னலாய் நடனம் ஆடுகிறது, இன்னொரு ‘சிங்கர்’ நிகழ்ச்சியில், கஷ்டமான ராகத்தில் கர்நாடக சங்கீதப் பாடல் பாடுகிறது, மற்றொரு நிகழ்ச்சியில் குட்டி சமையல் கலைஞராய் விதவிதமாய்ச் சமைக்கிறது.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நுழைத்து தங்கள் குழந்தையையும் பிரபலமாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள், பெற்றோர். அதைப் புரிந்து கொண்டு புதிது புதிதாய் பயிற்சி மையங்களும் முளைக்கின்றன.

குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறி பேசும், பாடும், ஆடும், செயல்படும் ‘ரியாலிட்டி ஷோக்கள்’ எதில் போய் முடியும்? நிகழ்ச்சியில் இருந்து ‘வெளியேற்றப்படும்’ பத்து வயது குழந்தை கண்ணீர் வழியப் பேசுவதை காட்சிப்படுத்துவதன் அவசியம் என்ன? உண்மையில் இதன் அபாயத்தை நாம் உணர்ந்திருக் கிறோமா?

“மேடைப் பயத்தை ஒழிக்கிறது, சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியத்தைத் தருகிறது என்ற வகையில் இந்த ‘ரியாலிட்டி ஷோக்களை’ பாராட்டலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், ஒருவருடன் ஒருவர் போட்டியிடும் குழந்தைகளின் மனோநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. டி.வி. நிகழ்ச்சி என்பது, பணம் சம்பாதிப்பது, அதற்காக டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. எனவே அங்கே குழந்தைகளின் மனநலம், உடல்நலம் குறித்தெல்லாம் அலட்டிக் கொள்வதே இல்லை. அவர்களுக்கு இடப்படும் ஒப்பனை, காமிரா முன் உதிர்க்கப்படும் கண்ணீர், சொல்லப்படும் ‘தீர்ப்பு’ வார்த்தைகள் எல்லாமே குழந்தைகளிடம் ஆழமான தாக்கத்தை ஏற் படுத்தும்” என்கிறார், குழந்தை உளவியல் நிபுணர் சீமா.

புன்னகை முக நடுவர்கள், ஜாலி என்ற பெயரில் எல்லை தாண்டும் தொகுப்பாளர்களின் கமெண்ட்கள், கைதட்டும், ஆரவாரித்து ஆடும் பார்வையாளர்கள் எல்லாமே ரியாலிட்டி ஷோக் களின் மாறாத அங்கங்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பாடுவது, ஆடுவதுடன், கொஞ்சம் ‘நடிக்கவும்’ வேண்டும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மிக இயல்பாக இருப்பது போலத் தோன்றினாலும் இந்திய ரசிகர்களின் உணர்வு களுக்கு ஏற்ப திறமையாக இயக்கப்படுபவை இவை என்பது பலருக்குத் தெரியாது.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறுவன், பெண் நடுவரிடம் ஜாலியாக பேசுவதுகூட சொல்லிக் கொடுக்கப்படும் வசனம்தான். உண்மையில் அதன் நிஜமான அர்த்தம், குறிப்பிட்ட குழந்தைக்குத் தெரியாது.

அந்தக் குழந்தை பாடி அல்லது ஆடி முடித்ததும், உருக்கமான கதை ஒன்றைக் கூறவும், முடிந்தால் கண்ணீர் சிந்தவும் கூட அறிவுறுத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் நடுவே ஏற்படும் ‘மோதல்’, சர்ச்சை போன்றவையும் டி.ஆர்.பி. யை எகிற வைக்கின்றனவாம்.

இதெல்லாம், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பருவ வயதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

“ஒரு குழந்தையின் மனம் என்பது வளர் நிலையில் உள்ளது. குழந்தையை ஒரு சீரான வாழ்க்கை முறையில் இருந்து பிடுங்கி, தீவிர போட்டிச் சூழலுக்குள் திணிக்கும்போது, பின்வரும் வருடங்களில் உணர்வு நிலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நாமே காரணமாகி விடுகிறோம்” என்று கூறுகிறார், மனோவியல் நிபுணர் தனுஸ்ரீ.

அவரே தொடர்ந்து, “புகழுக்காக வலுக்கட்டாயமாக இதுபோன்ற போட்டிகளுக்குள் குழந்தைகளைத் தள்ளுவது, அவர்களின் நடத்தை, மனோபாவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் தம்மைப் போன்ற சக சிறுவர், சிறுமியருடன் இயல்பாகக் கலந்து பழக வேண்டிய காலகட்டம் இது. ஆனால், டி.வி. நிகழ்ச்சிகள் போன்றவை அவர்களுக்கு ஏற்படுத்தும் ஒளிவட்டம், அதுபோன்ற தொடர்புகளையே துண்டித்துவிடுகிறது” என்கிறார்.

ஆனால் இந்த விஷயத்தில், டி.வி. நிர்வாகம், நடுவர்களை விட குழந்தைகளின் பெற்றோருக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பணம், புகழையே குறிவைக்கும் பெற்றோர், தங்கள் குழந்தை ஒரு மனிதப்பிறவி என்பதையே மறந்துவிடுகிறார்கள். பிற போட்டியாளர்களைத் தாண்டி ‘சாதிக்க வேண்டும்’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறித் தள்ளுவது, நெருக்கடி கொடுப்பது அவர்களின் உளவியலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடுகிறார்கள். படிப்பு, விளையாட்டு என்று தங்களின் வழக்கமான விஷயங்களுக்கு இடையில்தான் குழந்தைகள் இதுபோன்ற போட்டிகளுக்கும் தயாராக வேண்டியிருக்கிறது.

இந்த ரியாலிட்டி ஷோக்களில் ‘தோற்றதாக’ கருதப்படும் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையும், குறைந்த சுயமதிப்பு உணர்வும் குடியேறும் என்பதை பெற்றோர் உணர்வதில்லை.

May 25, 2017

பணத்திற்காக செக்ஸ் வெப்சைட்களால் தங்களையே விற்கும் இளம் பெண்கள்..! இதுதான் நவீன விபச்சாரம்..!


உலக அளவில் இருந்து வரும் நடைமுறை தற்போது இந்தியாவிலும் வந்து விட்டது. செக்ஸ் வெப்சைட் தற்போது 18 வயதிற்கு உள்ளான இளம் பெண்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அந்த இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிறது. இதுதான் தற்போது நவீன விபச்சாரமாகும்.

செக்ஸ் வெப்சைட்கள், தேர்வு செய்யும் இளம் பெண்களிடம் செக்ஸியாக பேசலாம். வெப் கேமிரா மூலம் அந்த இளம் பெண்கள், எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்வார்கள்.


நிர்வாணமாக நிற்கவும், பெண்களே சுய இன்பம் அனுபவிப்பது போல நடந்து கொள்ளவும் செய்வார்கள். இது லைவ்வாக அந்த சைட்டில் காட்டப்படும்.

தேவைப் பட்டால் அந்த பெண்களை சில ஆண்களுடன் உல்லாசமாக இருக்க வைப்பார்கள். அதனையும் லைவ்வாக சைட்டில் காட்டுவார்கள். இதற்கு ஏழை பெண்கள் பணத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காவும் தங்களை இழந்து வருகின்றனர்.

சுமாரான பெண்ணாக இருந்தால் அந்த செக்ஸ் வெப் சைட் ஒரு மாத்திற்கும், சற்று அழகான பெண்களாக இருந்தால் அவர்களை 3 மாத்திற்கும், சற்று கூடுதல் அழகான பெண்கள் என்றால் 6 மாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சூப்பரான பெண்களாக இருந்தால் அந்த பெண்களை 1 வருடத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனால் இந்த பெண்களுக்கு சுமார் மாதம் 2 லட்சம் வருமானம் வருகிறது.

இதில் பணிபுரியும் பெண்கள், தங்கள் தோழிகளையும், இந்த தொழிலில் இறக்கிவிடுகின்றனர்.

இதனால் அந்த வெப் சைட்களில் தினம் தினம் புதுப், புதுப் பெண்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

முதலில் அந்த பெண்கள் செக்ஸியாக பேசுவதற்கும், பின்னர் தங்கள் உடல் உறுப்புகளை காட்டுவதற்கும், தங்களாகவே சுய இன்பம் அனுபவிப்பதுபோலவும், பின்னர் ஆண்களுடன் உறவு கொள்ளவும். அதன் பிறகு பல ஆண்களுடன் உறவு கொள்ளவும் வைக்கின்றனர்.

இந்திய திருநாட்டு பெண்கள், பணத்திற்காக சீரழிந்து வரும் நிலை உருவாகி இருக்கிறது. இது போன்ற செக்ஸ் வெப்சைட்டுகளை கண்டறிந்து சீரழிந்து வரும் இளம் பெண்களின் வாழ்க்கையை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.

ஆனால் இதுதான் நவீன விபச்சாரம் என்கிறனர். இது தவறு இல்லை என்று கூறும் நபர்களும் உள்ளனர்.

அந்த பெண்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல் அவர்களால் அந்த வெசைட்டுகளுக்கு கோடி கோடியாக பணம் கொட்டுகிறது.

இவை அனைத்தும் பாங்காக்கில் வைத்து சூட் செய்யப்படுகிறது. அந்த பெண்களை அங்கு அழைத்து சென்று அவர்களின் அழகுக்கு தகுந்தார்போல் 1 மாதம் முதல் 1 வருடம் வரை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பரபரப்பாக பேசப்படுகிறது.

நெடுவாசலே நெருங்க விடாதே..! நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த நிலை வர வேண்டுமா..??


தமிழகம் அழிவடையாமல் பாதுகாப்பதற்காக நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழகம் பாதிப்படையும் என உணர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இப் போராட்டத்தை இந்திய மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
கண்டனம் தெரிவிப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டதென தமிழக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது.
மீதேன் வகை எரிவாயுக்கள், எண்ணெய் ஆகியவற்றின் கூட்டுக்கலவையைத்தான் ஹைட்ரோ கார்பன் என்பார்கள்.
பூமியின் கீழே சுமார் பத்தாயிரம் அடி ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கிடக்கும் வாயுவை வெளியே எடுத்து பெட்றோலியப் பொருட்களையும் எரிவாயுவையும் தனித்தனியாகப் பிரித்து எடுப்பார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் ஆபத்தில்லாத வேலை போன்று தான் தோற்றமளிக்கும். ஆனால், அதன் பின் விளைவுகள் மிக மிக ஆபத்தானவை.
உலகின் பல நாடுகள் இதற்குத் தடை விதித்துள்ளன. நெடுவாசலில் 2500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டொரு இடங்களில் துளையிடுவர்கள் நிலத்தடி நீர், சுண்ணாம்புக்கல், பாறை ஆகியவற்றை ஊடுருவி ஹைட்ரோகார்பன் பகுதியைச்சென்றடையும்.
அங்கிருந்து பக்கவாட்டில் செல்லும் குழாய்கள் எரிவாயுவை வெளியே இழுத்துவரும். இந்தச் செயற்பாட்டின்போது போது நிலத்தடி நீர் முற்றிலுமாக வெளியேற்றப்படும்.
அதனைச்செய்வதற்கு இரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படும். அக்கலவைகளால் புற்றுநோய், சுவாசக்கோளாறு, சிறுநீரக நோய் போன்றவை ஏற்படும். நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதால் விவசாய நிலம் பாலைவனமாகும்.
நிலத்தடியின் உறங்கிக்கிடக்கும் எரிவாயுவை வெளியே கொண்டு வருவதற்கு இரண்டு கோடி லீட்டர் தண்ணீர் தேவைப்படும்.
எரிவாயுவைப் பிரித்தெடுக்க கழிவுகளை அகற்றும் நடைமுறையை மிகப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும். சயனைட் வாயுக்கசிவில் பாதிக்கப்பட்டதில் இருந்து இந்தியா இன்னமும் மீளவில்லை.
நெடுவாசலில் பிரித்தெடுக்கப்படும் எரிவாயு குழாய் மூலம் 80 கி.மீ தூரத்தில் உள்ள கோவிக்கலப்பை என்ற இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்படும்.
20 வருடங்களுக்கு எரிவாயு எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எரிவாயு கிடைக்கும் அளவைப் பொறுத்து மேலும் 10 வருடங்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் நீடிக்கப்படலாம்.
இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு நாள் பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பிய சேதுபதி என்ற மாணவர்  ஹைட்ரோகார்பன் கழிவில் தவறி விழுந்ததாகவும் அதனால சேதுபதி உடம்பு முழுவதும் ஆசிட் அடிச்ச மாதிரி எறிந்து போனதாகவும் அந்த பகுதி மக்கள் சொல்லி இருக்காங்க..
இப்படி பட்ட ஆபத்தான கழிவ இன்னும் ஏன் சுத்தம் செய்யாம வச்சிருக்காங்க???
இதனால் அதன் அருகில் உள்ள விவசாய நிலங்களும் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.

May 18, 2017

என்னைய கூப்புடுவியா... அத்துமீறிய மேனேஜரை செருப்பால் அடித்து விளாசிய பெண்


பணிக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார் இளம் பெண் ஒருவர்.

சென்னை: அலுவலகத்தில் வேலைக்கு சென்ற பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார்

என்னைய கூப்பிடுவயா? உனக்கு கூடப்பிறந்த அக்கா தங்கச்சி இல்லையா என்று கேட்டுக்கொண்டே அந்த பெண் செருப்பால்  அடித்து இருக்கிறார் அங்கு இருப்பவர்களை  அதிர்ச்சிக்குள்ளாக்கி  பின் அவர்களும் சேர்ந்து அந்த மேலாளரை  கண்டித்துள்ளனர்


பணிபுரியும் இடங்களில் 65 சதவிகித பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் கொடுமை குறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. மீறி எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையிலேயே தன்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்த நபரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார்.

வீட்டு சூழல் காரணமாக கடும் சிரமத்திற்கு இடையே பெண்கள் பணிக்கு வந்தாலும் காம இச்சையோடு பார்க்கும் பல கொடூரர்களுக்கு இதுபோன்ற தண்டனை அவசியம்தான் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

May 17, 2017

உலகம் முழுவதும் இளம் பருவத்தினர் அதிக உயிரிழப்பிற்கு சாலை விபத்துகளே காரணம் உலக சுகாதார அமைப்பு


உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர் உயிரிழப்பதற்கு சாலை விபத்துகளே முதல் காரணமாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் காஸ்டெல்லோ கூறியதாவது:-

கடந்த 2015-ல் மட்டும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர், 11 லட்சம் பேர் (தினமும் சுமார் 3,000 பேர்) சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 72,655 பேர் மூச்சு திணறல் நோய்களாலும், 67,149 பேர் தற்கொலை செய்து கொண்டும், 63,575 பேர் வயிறு சம்பந்தமான நோய்களாலும், 57,125 பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ், மூச்சு திணறல், வயிற்று உபாதை ஆகியவை தான் இளம் வயதினரை அதிக அளவில் பலி கொண்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகம் தான் வயது வந்த இளம்பருவத்தினரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று  தெரிவித்துள்ளார்

May 16, 2017

சினிமா ஆசை, சீரழிக்கப்படும் 11 வயது சிறுமிகள்,


விபச்சாரம், இந்த வார்த்தையை கேட்டாலே, சிலருக்கு வெறுப்பு தான் வரும். இது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக தான் பார்க்கப்படுகிறது.

ஆனால், பெரும்பாலானோருக்கு தெரியாது சில நாடுகளில், இது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில் என்று. குறிப்பாக தன்கேய்ல் மாவட்டத்தின், கண்டப்பரா பகுதி தான் மிகவும் பிரபலம்.

இதுகுறித்து, உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக ஜெர்மன் நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் சாண்ட்ரா ஹாய்ன், தன்கேய்ல் மாவட்டத்திற்கு பயணித்து, அங்குள்ள பெண்களிடம் அவர்கள் வாழ்க்கை குறித்து கேட்டறிந்து, சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.

11 வயது முதல் 15 வயது சிறுமிகளாக இருக்கும் போதே பெண்கள் இத்தொழிலில் ஈடுப்படுகின்றனர். சிலர் குடும்ப கஷ்டத்திற்காக இதை செய்யும் போது, ஒரு சிலர் சினிமா ஆசையில் ஊரை விட்டு ஓடு வந்து, தெரியாதவர்களிடம் மாட்டிக்கொண்டு வலுக்கட்டாயமாக இதில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 1000 முதல் 2000 வரை சம்பாதிக்கும் இந்த பெண்கள், இதில் ஈடுவடுவதே அவர்களின் கனவுகளை நினைவாக்க தான். இத்தொழிலில் ஈடுப்படும் 70 % பெண்களுக்கு, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், சொந்தமாக வீடு ஒன்றை வாங்க வேண்டும் என பல கனவுகள் உள்ளது.

ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், அவர்கள் யாருக்காக இதை செய்கிறார்களோ அவர்களை கூட சென்று பார்க்க முடியாமல், தூரத்தில் இருந்தே அனைத்தையும் செய்கிறார்கள். மேலும், இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அதே இடத்தில் வளர்க்கப்பட்டு, பின்னர் அதே தொழிலில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.

இப்படி உடல் அளவிலும், மனதளவிலும் காயப்படும் இந்த பெண்களுக்கு, இந்த அடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலையே இல்லையா. இவர்களும் மரியாதையான ஒரு வாழ்க்கையை வாழ முடியாத என பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், இதற்கு பதில் யாரிடம் உள்ளது?…

May 14, 2017

நோயை குணப்படுத்துவதாக கூறி கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த சாமியார்


நோயை குணமாக்குவதாக கூறி கல்லூரி மாணவியை கடத்தி சாமியார் ஒருவர் கற்பழித்தார். இதற்கு உடந்தையாக இருந்த வசாய் நகராட்சி தலைவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி கற்பழிப்பு
பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகாவில் உள்ள குடெட் கிராமத்தில் திரிம்பக்முனி மங்கள்முனி தாஸ் என்ற சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது.

இந்த ஆசிரமத்திற்கு மொகடா பகுதியை சேர்ந்த நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் தனது நோய் தீர வந்து சென்றார். அப்போது சாமியார் மாணவியிடம் நோயை குணமாக்குவதாகவும், நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில், அண்மையில் தன்னை சந்தித்த அந்த மாணவியை சாமியார் குஜராத் மாநிலம் பிலாட் பகுதிக்கு கடத்திச்சென்று ஒரு கட்டிடத்தின் அறையில் அடைத்து வைத்து 5 நாட்களாக கற்பழித்து உள்ளார். இதனால் மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

7 பேர் கைது
அப்போது சாமியார் அந்த மாணவியிடம் உனது உடலில் பேய் புகுந்து உள்ளது, அதை விரட்டி சரி செய்ய வேண்டுமெனில் இவ்வாறு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இந்தநிலையில், மாணவி சாமியாரிடம் இருந்து தப்பி வந்து மொகடா போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் தன்னை கடத்தி கற்பழித்த சாமியார் மீதும், தன்னை கடத்தி கற்பழிப்பதற்கு சாமியாருக்கு உடந்தையாக இருந்த சிவசேனாவை சேர்ந்த மொகடா நகராட்சி தலைவி மங்கலா சவுத்ரி, அவரது கணவர் பாண்டுரங், மகன் சந்திப் உள்ளிட்டோர் மீதும் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கலா சவுத்ரி, அவரது கணவர், மகன் உள்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சாமியார் உள்ளிட்ட சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கதறடிக்கும் "வான்னாகிரை" வைரஸ்.. 99 நாடுகள் பாதிப்பு.. இந்தியாவிலும் பரவியது! #WannaCry


உலகம் முழுவதும் புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகிறது. வான்னாகிரை வைரஸ் என்ற இந்த வைரஸை, ஹேக்கர்கள் ஏவியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கில் இந்த வைரஸை இந்தக் கும்பல் ஏவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
படு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முழுமையான பாதுகாப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன்டர்நெட் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை பிரித்து வைப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்கிறார்கள்.
ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ் என எந்தத் தற்காப்பும் கை கொடுக்கவில்லையாம். அதைத் தாண்டி இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறதாம்.

 ஹேக்கர்கள் அட்டகாசம்
ஹேக்கர் கும்பலின் கைவரிசைதான் இந்த வைரஸ். இந்த வைரஸ் தாக்கும் கம்ப்யூட்டர்கள் லாக் ஆகி விடும். இதைத் தொடர்ந்து வைரஸை அனுப்பிய ஹேக்கர் கும்பல், அன்லாக் செய்ய உதவுகிறோம். பணம் கொடுங்க என்று மிரட்டி பண் பறிக்கிறார்களாம்.

வெள்ளிக்கிழமை முதல் பரவுகிறது
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த மிரட்டல் வைரஸ் பரவி வருகிறது. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கம்ப்யூட்டர்களை லாக் செய்து விட்டது. தற்போது லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இது லாக் செய்துள்ளது.

 பேரைப் பாருங்க
இந்த வைரஸுக்கு பெயர் வானாகிரிப்டோஆர் 2.0 அல்லது வானாகிரை என்பதாகும். இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளைத்தான் இது கடுமையாக பாதித்துள்ளது. மேலும் பல நாடுகளையும் இது தொடர்ந்து தாக்கி வருகிறது. 99 நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்தியாவிலும் தாக்குதல்
இந்தியாவிலும் கூட இந்த வானாகிரை வைரஸ் பரவியுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வங்கி நெட்வொர்க்கை குறி வைத்துத்தான் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பதால் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆன்லைன் சேவைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள உள்ள

May 11, 2017

மருத்துவ கொள்ளை - சிந்தனைக்கு


இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.

"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"

நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...

என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...

என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...

கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம்
தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார்.

அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது...
எனக்கு ஆச்சரியம்…
"உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்.

அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

இந்த மருந்தை பற்றி 40 வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன்

Urinary infection க்கு தலைசிறந்த மருந்து,

"ஏன் டாக்டர் இந்த மருந்தை யாரும் prescibe செய்வதில்லை?" என்று கேட்க...

அவரோ சிரித்துக் கொண்டே "பின்பு எப்படி  லட்சங்களை கறப்பது?" என்றவர்

"நம் நாட்டின் மிகப் பெரிய எதிரிகள் மருந்துக் கம்பெனிகள் மருத்துவ மனைகள், இவர்களை சரி செய்தாலே பலர் ஏமாற்றப்படுவது குறையும்" என்றவர், பல மருத்துவமனைகள் எனக்கு எதிராக செயல்படுகின்றன என் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்!
I am agaist exploitation of innocent patients!" என்று முடிக்க அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் டாக்டர் நீங்கள் எப்போதுமே கறுப்பு கலரிலேயே உடை அணிகிறீர்கள்? உங்கள் காரில் சே'குவாரா ஸ்டிக்கர் இருக்கிறதே?"
என கேட்க...

"நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான், ஆனால் Anti Establishment... சுரண்டலுக்கு எதிரனவன் அதனால் சே' குவாரா பிடிக்கும்" என்றார்.

25 வருடங்களாக இன்சுலினிலேயே வாழ்ந்து வந்த எனக்கு சக்கரை நோயை ஒரே வருடத்தில் ஒழித்து... என்னை டசன் கணக்கில் 'இமாம்_பசந்த்' மாம்பழங்களை சாப்பிடும் அளவிற்கு  குணமாக்கிய டாக்டர் இவர் தான்... இவர் ஒரு ஆங்கில மருத்துவர் MS படித்தவர் அவருடைய அனுமதியுடன் அவருடைய தொடர்பு தகவல்களை வெளியிடுகிறேன்.

Dr. V.Madhavan MD (Int. Med) Consultant Diabetologist/Physician*l

#CARE_CLINIC

For Appointments 044  65551839   24483314 (between 9 am and 1 pm)

At Chennai T Nagar, Thiruvanmiyur, Nanganalur. …

அவரைப்பார்க்க செல்லும் போது சமீபத்தில் நல்ல தரமான Labல் எடுக்கப்பட்ட FF , PP , HbA1c (3 மாத சராசரி சக்கரை அளவீடு) தகவல்களுடன் செல்லவும்!

May 8, 2017

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி


தமிழ்நாட்டில் தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

4 மாவட்டங்களுக்கு அனுமதி
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுற்று வட்டார பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்ட சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி.), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மக்கள் போராட்டம் இல்லை...
இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகள், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காக தோண்டப்பட உள்ளன.

மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்தவில்லை என்று எண்ணெய் நிறுவனத்துக்கு, தமிழக அரசு பிரமாண பத்திரம் வழங்கியதாக தெரிகிறது.

இந்த பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டித்தான் மத்திய அரசிடம், எண்ணெய் நிறுவனத்தினர் ‘ஹைட்ரோ கார்பன்’ சோதனைக்கான அனுமதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம் இல்லை என்று மாநில அரசை நிர்பந்தித்து  பிராமண பாத்திரம் வாங்கியதாக எதிர் கட்சியினர் குற்றம் சாற்றி வருகின்றனர்  
என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்  மீத்தேன் திட்டம் உறுதி என்பதே இதில் இருந்து தெரிகிறது  என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது

May 6, 2017

சிபிஎஸ்இ பள்ளிகளில்... நர்சரி வகுப்பு சேர்க்கையில் தில்லுமுல்லு..!


நர்சரி வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் விதிமீறல்.

அங்கீகாரமற்ற எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் நடத்தப்படுவது, பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும், 18 ஆயிரத்து, 500 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், 660 பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகின்றன; அங்கீகாரம் பெறாமல், 2,000க்கு மேற்பட்ட பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 - 18ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது; லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படிப்புகளில், குழந்தைகளை சேர்த்தவர்கள், கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு காரணம், அந்த வகுப்புகளுக்கு, சி.பி.எஸ்.இ., அங்கீகாரமே இல்லை என்பது தான். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் என்பது, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே உள்ளது. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளை, மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை.

எனவே தான், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகள் கிடையாது. ஆனால், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பல பள்ளிகள், எல்.கே.ஜி யு.கே.ஜி., போன்ற மழலையர் வகுப்புகளையும் நடத்துகின்றன. இந்த வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிககட்டணங்களை வசூலிக்கின்றன.
இந்த விபரம் எதுவும் தெரியாமல், கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர் கூறியதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் புத்தகங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இந்த வகுப்புகளில் சேர்ந்த, எங்களின் குழந்தைகளுக்கு, வேறு புத்தகங்கள் தரப்பட்டன. அதுபற்றி விசாரித்தபோது தான், உண்மை தெரிய வந்தது.

இந்த விபரங்களை, பள்ளிகள் முன்கூட்டியே தெரிவிக்காதது தான், எங்களை போன்றவர்கள் ஏமாந்ததற்கு காரணம்.
இனிமேலாவது, இந்த விவகாரத்தில், சி.பி.எஸ்.இ., முறையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஏமாற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பெற்றோர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் கே.ஜி வகுப்புக்களுக்குத்தான் இப்போதெல்லாம் லட்சக்கணக்கில் டோனேஷன் வசூலிக்கப்படுகிறது. லட்சணக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாறும் பெற்றோர்களே இனியாவது ஜாக்கிரையாய் இருங்கள்.