Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label வரலாற்று சுவடுகள். Show all posts
Showing posts with label வரலாற்று சுவடுகள். Show all posts

July 30, 2017

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்


நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ…..!!!

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக்… குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள்.

இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

July 24, 2017

ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு


அசோக சக்கரவர்த்தியின்  கண்டஹார் 
கல்வெட்டு (கி.மு. 250  )
ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம், ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது.

ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரஜைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.  இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராஜ்யத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன. ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டஹார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது.

அப்படியானால் அராமி மொழி? ஹீபுரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு கிறிஸ்து பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது. பாலஸ்தீனம் முதல், பாகிஸ்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிஸ்தானில், பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."  என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang)  ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. ஆப்கானிஸ்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிஸ்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.) பெரும்பான்மை இன மக்கள் பேசும் பஷ்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. பஷ்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பஷ்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிஸ்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிஸ்தான் தான். மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டஹார் நகரின் பழைய பெயர், காந்தாரம்!

கண்டஹார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது. காந்தர்வ மக்கள், இன்றைய பஷ்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிஸ்தானில் தான் தோன்றியது.

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம். இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது.

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பஷ்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஒரு பஷ்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பஷ்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப் பட மாட்டான். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பஷ்டூன் இனத்தை சேர்ந்த ஷா மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிஸ்தான் தலைநகரம், கண்டஹாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராஹுய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். அவர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராஹுய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன. பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராஹுய் மக்கள் இன்று இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாஷை" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாஷை மக்கள் தம்மை பஷ்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள். பாஷை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.)

வடக்கு ஆப்கானிஸ்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிஸ்தான் எல்லையோரம், "நூரிஸ்தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிஸ்தானி" மொழி பேசுகின்றனர். பார்சி, பஷ்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிஸ்தானி என்ற பெயர் வரக் காரணம் ஒரு தனிக்கதை. 

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிஸ்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். ரஷ்ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.) வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர். 19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்ஸ்தான்" என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிஸ்தான் என்று மாற்றப் பட்டது. 

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராஜ்யத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன. அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது. 

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது. "ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.  சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர். 

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.  "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம். ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், ஹீபுரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை. ஆனால், யூதர்களின் புனித மொழியான ஹீபுருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது. 

ஒரு காலத்தில், பாகிஸ்தானில் இருந்து பாலஸ்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். ஹீபுரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, ஹீபுரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிஸ்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள். 

1836 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை ஆண்ட மன்னர் தோஸ்த் மொஹமட் கான், இஸ்லாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலஸ்தீனா செல்லவில்லை. அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இஸ்ரேல் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள். 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை. மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹீபுருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், ஹீபுருவிலும் காணப் படுகின்றன. 

July 6, 2017

இன்றளவும் விடை தெரியாத ரகசியங்கள்: உலகில் தீர்க்கப்பட்டதாக சொல்லப்படும் மர்மங்கள் ?


இந்த உலகில் உள்ள பல எண்ணில் அடங்காத மர்மங்களை கண்டுப்பிடிக்க ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் முயற்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வாறு ஆராய்ச்சியாளர்களால் தீர்வு காணப்பட்டதாக சொல்லப்படும் 3 மர்மங்களை பற்றி இங்கு காணாலாம்.

தில்லியின் இரும்புத்தூண். (Iron Pillar of Delhi)

தில்லியின் இரும்புத்தூண் என்பது தில்லியில் உள்ள முக்கியமான நினைவுச்சின்னம் ஆகும். டெல்லியிலுள்ள இரும்புத்தூண் உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் மற்றும் உலோகவியல் ஆய்வாளர்களின் கவனத்தை பல ஆண்டுகளாக ஈர்த்துள்ளது.



ஏனெனில் இத்தூணின் அற்புத அமைப்பானது கடுமையான வானிலைகளால் அரிக்கப்படாமல் 1600 ஆண்டுகளாக நிலைத்து நிற்க கூடியதாக உள்ளது.பண்டைய இந்திய கொல்லர்களால் தூய இரும்பினைக் கொண்டு இத்தூண் வடிவமைக்கப் பட்டுள்ளது.இதில் 98 சதவீதம் தூய இரும்பு உள்ளது. மேலும் இது 23 அடி 8 அங்குலம் உயரமும் 16 அங்குலம் விட்டமும் கொண்டது.

இந்த தூண் மழையிலும் வெய்யிலிலும் மாறி மாறி நனைந்து காய்ந்தபோதிலும் இது துருப்பிடிக்கவேயில்லை. உலோகவியல் விஞ்ஞானத்தில் அந்தக்காலத்திலேயே இந்தியா இவ்வளவு முன்னேற்றம் கண்டது வியப்புக்குரியது.

2) ஸ்டோன் ஹெஞ்ச் (Stone Henge)

இங்கிலாந்தில் உள்ள பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றான ஸ்டோன் ஹெஞ்ச் இன்றளவும் விளக்க முடியாத பல மர்மங்களை கொண்டுள்ளது. மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள். இப்போது பிரச்சினை இந்தக் கட்டடம் அல்ல. அது எப்படிக் கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது என்பதுதான். ஒவ்வொன்றும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.



எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று ஆராச்சியாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

இருப்பினும் அந்த காலத்து மக்கள் எப்படி இதை செய்திருப்பார்கள் என்று செயல் முறை விளக்கத்தின் மூலம் ஆராச்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதாவது உருளக்கூடிய மரத்தில் ஆன அமைப்புகள் மீது கற்களை வைத்து எளிமையான முறையால் இதை அவ்வளவு தொலைவில் இருந்து இழுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த ஸ்டோன் ஹெஞ்ச் யாரால் எதற்காக கட்டப்பட்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

3) எகிப்து பிரமிடுகள்

நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிடு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடை கிடைக்கவே இல்லை.



பிரமிடுகளில் மிகப் பெரிய பிரமிடான கிசா பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது. இந்தக் கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள் அதாவது பிரமிடுகளை உருவாக்க பயணப்படுத்தப்பட்ட கற்கள் அனைத்தும் நீர்வழி போக்குவரத்து மூலம் கொண்டுவந்துள்ளதாகவும் மேலும் மண்ணில் நீரை ஊற்றி ஈரமாக்குவதால் உராய்வை குறைத்து எளிமையான முறையில் கற்களை நகர்த்தியதாகவும் இதனால் தான் பிரமிடுகள் நைல் நதியின் ஓரத்தில் கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் கற்களை எவ்வாறு அவ்வளவு உயரத்தில் கட்ட முடிந்தது என்பதற்கான பதில் அவர்களிடமும் இல்லை.


June 14, 2017

விழித்திடு தமிழா : பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகத்தை ஆண்டது நம் இனம் :


சூரியனே அஸ்தமிக்காத நாடு என்று பெயர் பெற்ற இங்கிலாந்து தேசத்தை கூட ஏசு பிறப்பதற்கு முன் அன்று ஜுலியஸ் சீசர் தலைமையிலான ரோம தேசம் அடிமைப்படுத்தியது.
இன்று அமெரிக்காவையே மிரட்டி கொண்டிருக்கும் சீன தேசத்தை அன்று மங்கோலியா என்கிற தம்மாத்துண்டு தேசம் அடிமைப்படுத்தியது.
எனக்கு World பூரா நண்பர்கள் இருக்காங்க. நான் இங்கிலாந்தில் வாழும், சைனாவில் வாழும் நண்பர்களிடம் Facebook, Whatsapp மூலமாக கேட்டேன்.
ஜுலியஸ் சீசர் அன்று இங்கிலாந்தை அடிமைப்படுத்தி ஆண்டதை பற்றி இன்று இங்கிலாந்தில் உள்ள மாணவ, மாணவிகள் சிலபஸில் படித்து கொண்டிருக்கிறார்களா? என்று. அதற்கு இங்கிலாந்து நண்பர் சொல்கிறார்.
இல்லை. இங்கிலாந்து மற்ற தேசங்களை அடிமைப்படுத்தி ஆண்ட வரலாறுகளை தான் இங்கே நாங்கள் படித்தோம், படித்து கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு மருந்தளவில் தான் எங்களுக்கு பாடங்களில் சொல்லப்படுகிறது.
இதே கேள்வியை நான் ஒரு சீனரிடம் கேட்டேன். செங்கிஸ்கான் என்னும் பேரரசன் தலைமையில் சின்னஞ்சிறிய மங்கோலிய தேசம் உங்கள் நாட்டை அன்று அடிமைப்படுத்தியதே.
அதை பற்றி சீன மாணவ, மாணவிகள் இன்று பாட புத்தகத்தில் படித்து கொண்டிருக்கிறார்களா?
அதற்கு அந்த சீனர் என்னிடம் கேட்டார்.
யார்? அந்த செங்கிஸ்கான்.
அதாவது சீன தேசம் அன்று அடிமைப்படுத்தபட்ட வரலாறு மருந்தளவுக்கு கூட சீனர்களின் பாட புத்தகத்தில் இல்லை.
ராஜேந்திர சோழன் அன்று மலேசியா முதல் ஜப்பான் வரை பல நாடுகளை வென்று அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபிகள்…
பின்னர் அங்கே வந்த ஆட்சியாளர்களால் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
அதே சமயம் நமது இந்தியாவில்.
Qutb-ud-din Aibak என்னும் அடிமை டெல்லியை தந்திரமாக கைப்பற்றி அதை கொண்டாடும் விதமாக…
அவன் அன்று எழுப்பிய வெற்றி ஸ்தூபியை இன்றும் நம் அரசு பாதுகாக்கிறது.
நான் டெல்லி டூர் சென்றிருந்த பொழுது Qutb மினாரை பார்த்தேன் Its Realy Beautiful யா என்று பெருமையாக பீத்தி கொள்ளும் நம் தேசத்து அடிமை மக்கள
தூ……………………………….
நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன். சொந்த வரலாறை இழந்த தேசம் புதிய வரலாறை படைக்க முடியாது.
நாம் நமது சுயத்தை இழந்து விட்டோம். பல ஆயிரம் ஆண்டுகள் பல தேசங்கள், பல கண்டங்களை ஆண்ட வரலாறை நாம் இழந்து விட்டோம்.
நாம் இழந்த நமது வரலாற்று பெருமையை மீட்டெடுக்க வேண்டியது தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியனின் கடமை.
Algeria, Andorra, Armenia, Azerbaijan,Bahrain, Cyprus, Egypt, Georgia, Iran, Iraq, Israel, Jordan, Kazakhstan, Kuwait, Kyrgyzstan, Lebanon, Libya, Morocco, Oman, State of Palestine Palestinian Authority, Portugal, Qatar, Saudi Arabia, Spain,Syria,Tajikistan,Tunisia, Turkey, Turkmenistan, United Arab Emirates, Uzbekistan, Western Sahara, Yemen ரஷ்யாஸின் பல பகுதிகளை முதற்கொண்டு
35 நாடுகளை ஒரே குடையின் கீழ் ஆண்ட, ஒரு கோடியே 50 லக்ஷம் கிலோ மீட்டர் நிலபரப்பை ஆண்ட ஆலாலப்பட்ட Umayyad Caliphate சாம்ராஜ்ய சக்கரவர்த்தி
Muhammad Bin Quasm லக்ஷம் வீரர்களோடு சிரியா தேசத்தில் இருந்து சீறி பாய்ந்து கிபி 715 இல் இந்தியா வந்தான்.
அவன் படையில் உள்ள ஒவ்வொரு வீரனும் 4 காட்டெருமைகளுக்கு சமமான பலம் கொண்டவர்களாம்.
அப்படியென்றால் அந்த ஒட்டுமொத்த படையையும் வழிநடத்திய Muhammad Bin Quasm மின் ஆற்றல் எத்தகையதாக இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.
அத்தகைய அந்த பலம் மிகுந்த கலிப்பா காட்டுமிராண்டி படையை வெறும் 40 ஆயிரம் வீரர்களை கொண்டு வென்ற உலக மாவீரர்களில் நம்பர் 1 வீரரான Bappa Rawal பற்றி ஸ்டேட் போர்ட் சிலபசில் இல்லை…
CBSC சிலபஸில் இல்லை. அப்ப CBSC சிலபஸை காட்டிலும் தரமானது என்று சொல்லப்படும் ICSC சிலபஸில் இல்லை.
பின்ன அவரின் வரலாறு வேறு எதில் தான் இருக்கு ???
குழந்தைகள் படிக்கும் அமர்சித்திர கதா காமிக்சில் இருக்கு…
வெட்கக்கேடு, அவமானம்….
முகலாயர், பிரான்ஸ் காரர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சு காரர்கள், இறுதியாக வெள்ளையர்கள் வரை…
நாம் அடிமைப்படுத்தப்பட்ட ஆயிரம் ஆண்டு வரலாறுகளை தான் நாம் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப படிக்கிறோம்…
9 ஆயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகத்தோடு நாம் வாழ்ந்த வரலாறை படிப்பதில்லை.
Bappa Rawal மட்டும் அன்று கலிப்பா காட்டுமிராண்டிகளை தோற்கடிக்காது இருந்திருந்தால் என்ன? ஆகி இருக்கும் தெரியுமா ???
கிபி 715 களிலேயே இந்தியா அரேபியர்களுக்கு அடிமை ஆகி இருக்கும்.
விஜயாலயன் தலைமையில் வீறு கொண்டு சோழ தேசம் எழுந்திருக்காது.
ராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டியிருக்க முடியாது…
ராஜேந்திர சோழன் ஒட்டுமொத்த தெற்காசியாவையும் ஆண்டிருக்க முடியாது. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம்.
காரணம் இந்த கலிப்பா சாம்ராஜ்யம் முகல் சாம்ராஜ்யத்தை பல மடங்கு வலிமை வாய்ந்த சாம்ராஜ்யம்.
14 ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கா கபூர்…
10 லக்ஷம் வீரர்களோடு இந்தியா மீது படை எடுத்து வந்து மதுரை, தஞ்சை, ஸ்ரீரங்கம் என பல இடங்களில் ரத்த ஆறை ஓட செய்தானே. ஞாபகம் இருக்கிறதா ???
14 ம் நூற்றாண்டில் நடந்த அதே கொடுமை எட்டாம் நூற்றாண்டில் நடந்திருந்தால் என்ன? ஆகி இருக்கும்.
சற்றே கற்பனை செய்து பாருங்கள்.
மாமன்னர் Bappa Rawal ராஜஸ்தானில் மேவாட் என்கிற சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தார்.
அவர் தோற்றுவித்த அந்த சாம்ராஜ்யம் தொடர்ந்து 500 ஆண்டுகள் நீடித்து நின்றது.
Bappa Rawal பயன்படுத்திய வீரவாளின் எடை 264 கிலோ…
நீங்கள் நம்புகிறீர்களா இல்லையோ. அவ்வளவு எடை உள்ள அந்த கத்தியை தான் அவர் ஒற்றை கையில் தாங்கி அதை வைத்து கலிபா படையை சுத்தி, சுத்தி அடித்தார்.
Bappa Rawal, லலிதாதித்ய முக்த பீடர் போன்ற இந்தியாவின் நிஜ ஹீரோக்களை வைத்து இயக்குனர் ராஜமௌலி அவர்கள் திரைப்படமாக எடுத்தால்.
அதன்மூலம் வீரம்மிகு இந்தியாவின் வரலாறை உலகமே பார்க்கும்.
பாகிஸ்தானில் இருக்கும் ராவல்பிண்டி என்கிற பெரிய நகரம். அன்று Bappa Rawal அவர்கள் தனது போர்வெற்றியை கொண்டாடும் விதமாக உருவாக்கிய நகரம்.
இன்னும் ஏராளம் ஏராளம்…!!!

May 4, 2017

கேமலின், வின்ஸ்டர், ஹீரோ முதல் பார்க்கர் வரை ஒரு நாஸ்டால்ஜிக் பேனா டூர்!


இப்பொதெல்லாம் பள்ளிப் பிள்ளைகளை 5 ஆம் வகுப்பிலிருந்தே ஜெல் பேனாக்களை கொண்டு எழுத அனுமதித்து விடுகிறார்கள். எங்களது பள்ளி நாட்களில் 6 ஆம் வகுப்புக்கு மேல் தான் இங்க் பேனா கொண்டு எழுத அனுமதிப்பார்கள். நட்ராஜ் பென்சிலில் இருந்து இங்க் பேனாவுக்கு மாறும் வைபவம் இருக்கிறதே... அட, அட, அடடா! அப்பாவுடன் பேனா வாங்க கடைக்குப் போவதே என்னவோ சென்னையின் மையப்பகுதியில் சொந்தமாக ஒரு ஃபிளாட் வாங்கப் போகும் முஸ்தீபுக்கு சற்றும் குறையாமல் இருக்கும். இங்க் பேனாவில் எழுதுவதை என்னவோ தலையில் கிரீடம் வைக்காத குறையாக பெருமையாக உணர வைத்த நாட்கள் அவை.

6 ஆம் வகுப்பில் முதன் முதலாக கேமலின் பேனா வாங்கித் தந்தார்கள். பேனாவின் கழுத்தைத் திருகிக் கழட்டி நேரடியாக இங்க்கை அதன் வயிற்றுக்குள் நிரப்பி எழுதும் பேனா வகை இது. மேக்கிங் நன்றாக அமைந்து, கன்னா, பின்னாவெனக் கையாளாமல் பதவிசாகப் பயன்படுத்தினால் ஓரிரு வருடங்களுக்கு நன்றாகவே உழைக்கக் கூடும். சிலர் வார இறுதி விடுமுறை நாட்களில் பேனாவை பார்ட், பார்ட் ஆகக் கழற்றி தண்ணீரி ஊற்றிக் கழுவிக் காய வைத்து துடைத்து எடுத்து மை ஊற்றி என அந்தப் பேனாவை ஒரு குழந்தை போலக் கூட சீராட்டி பெருமையாக வைத்துக் கொண்டது உண்டு. சிலருக்கோ வாரம் ஒரு கேமலின் பேனா வாங்க வேண்டிய லட்சணத்தில் யோகமிருக்கும். கேமலினோடு சரி சமமாய் அன்று போட்டியில் இருந்த மற்றொரு சாதாரணப் பேனா வகை எனில் அது வின்ஸ்டர். இதையும் கூட கேமலின் போலவே கையாளலாம். இதெல்லாம் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் வரை தான்.

பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த காலோடு பெரும்பாலானோர் ஸ்ரீஇராமரின் கோதண்டம் போலப் பாவித்துக் கொண்டு கையில் ஹீரோ பேனாவை ஏந்திக் கொண்டு திரிவார்கள். அதிலொரு சுகம். இந்த ஹீரோ பேனா இருக்கிறதே அதற்கு நடுத்தர வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளோடு ஒரு ஆத்மார்த்த பந்தம் இருக்கிறது. பரீட்சையில் முதல் மதிப்பெண் பெற்றால் உடனே பெற்றோர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களிடமிருந்து எப்படியாவது ஒரு ஹீரோ பேனா நமக்கு பரிசாகக் கிடைக்கும் எனும் உத்தரவாதம் இருந்த காலம் அது. வழக்கமாக ஹீரோ பேனா மூன்றே மூன்று வண்ணங்களில் தான் அப்போது கிடைத்தது. இப்போதும் அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன். அடிப்பகுதி மட்டுமே கருப்பு, சிவப்பு, பச்சை என வண்ணம் மாறும், ஆனால் எல்லாப் பேனாக்களுக்கும் ஒரே விதமான தங்க நிற மூடி தான் ஸ்பெஷல் அடையாளம். மாணவர்கள் மட்டுமல்ல அப்போது ஆசிரியர்களும் ஹீரோ பேனாக்கள் தான் பயன்படுத்தினர். நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பச்சை இங்குக்கு பச்சை நிற ஹீரோ பேனாவும், சிவப்பு இங்க்குக்கு சிவப்பு ஹீரோ பேனாவும் பயன்படுத்தினார். அந்தக் காலத்தில் அது ஒரு ஸ்டைல் என நினைத்துக் கொள்வோம் நாங்கள்.

என்னிடம் கருப்பு நிற அடிப்பாகமும் தங்க நிற மூடியும் கொண்ட ஒரு ஹீரோ பேனா இருந்தது. பரீட்சைகளுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவேன். பத்தாம் வகுப்பு என்பதால் பரீட்சைகளுக்குத் தான் பஞ்சமே இருக்காதே! தனியார் பள்ளி என்பதால் வருடம் முழுக்க பரீட்சைகள் தான். அந்தோ பரிதாபம் கடைசியில் என்ன ஆனது தெரியுமா? பொதுப் பரீட்சை அன்று காலையில் எனது ஹீரோ பேனா காணாமல் போனது. எப்படிக் காணாமல் போனது என்றெல்லாம் தெரியாது. ஆனால் போயும், போயும் பரீட்சை அன்று தானா என் பேனா தொலைந்து போக வேண்டும்? அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான என்னுடைய அதிர்ஷ்டப் பேனாவைக் காணோமென்றால் எப்படி இருக்கும் மனநிலை? இப்போதிருக்கும் குழந்தைகளைப் போலவா அன்று நாங்கள் வளர்க்கப்பட்டோம்? ஓவர் செல்லம் கொஞ்சலுக்கும், முரண்டு பிடித்து பொருட்களை வாங்குவதும் அன்றெல்லாம் இயலாத காரியம். பேனாவைக் காணோமென்றால் அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் தான் முதலில் வந்தது. அப்பாவைக் கூட சமாளித்து விடலாம். கூடப் படிக்கும் பிள்ளைகள் எல்லாம் ஹீரோ பேனாவில் பரீட்சை எழுதுவார்கள். நான் மட்டும் ஏப்பை, சாப்பையாக ஏதோவொரு கேமலினிலோ, வின்ஸ்டரிலோ பரீட்சை எழுதுவதா? அதுவும் என் எதிர்கால வாழ்வைத் தீர்மாணிக்கப் போகும் உயர்கல்வி (+2) பிரிவை தேர்ந்தெடுக்க உதவும் மதிப்பெண்களை அள்ளி வழங்கப் போகும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சாதாரணப் பேனாவில் எழுதி தேர்வின் மரியாதையையே கெடுத்து விடுவதா? என்று சகட்டு மேனிக்கு கழிவிரக்கம் பின்னி எடுக்க பரீட்சைக்கு முதல் நாள் பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் ஓவென்று அழுது கொண்டு நின்றேன்.

அவரவர்க்கு அவரவர் பிரச்னை. அம்மா ஆசிரியர் என்பதால் அவருக்கும் பள்ளிக்கு கிளம்பும் காலை நேர அவசரம் இருந்தது. அப்படியே வேறு பேனா வாங்கித் தருவதாக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் ஹீரோ பேனா வாங்கித் தர மாட்டார்கள். கேமலினோ, வின்ஸ்டரோ தான் கிடைக்கும். அது எனக்குத் தேவையே இல்லை. அப்பா வேறு வீட்டில் இல்லை. இப்போது உடனே பள்ளிக்குச் சென்றாக வேண்டும். பரீட்சை ஹாலுக்குள் நுழையும் முன் தேர்வைப் பற்றி பிரத்யேக குறிப்புகள் வேறு வழங்கித் தொலைவார்கள். எங்கள் பள்ளி ரொம்பவே ஸ்ட்ரிக்ட். எனக்கோ என்னை நினைத்து சுய ஆதூரம் தாங்கவில்லை. அம்மாவிடம் சொல்லி விசும்பி அழுது கொண்டிருந்தேன். நிம்மதியாக அழக்கூட விடாமல் யாரோ அந்நேரத்தில் சரியாக காலிங் பெல் அடித்தார்கள். நாம் அழும் போது பிறர் பார்க்கக் கூடாது என்று நினைக்கும் இன்றைய நாகரீகப் பிள்ளைகளைப் போல இல்லை அன்றெலாம்... யாரோ வந்து விட்டுப் போகட்டும், எனக்கென்ன? எனக்கு இப்போது என் ஹீரோ பேனா வேண்டும். அவ்வளவு தான். ஆனால் அதென்னவோ கிடைக்கப் போவதில்லை. அதில்லாமல் எப்படி நான் பரீட்சை எழுத முடியும்? என்று என் போக்கில் வந்தவர்களைக் கவனிக்காமல் என் பாட்டில் நான் அழுது கொண்டிருந்தேன். அம்மா என்னை சமாதானப் படுத்திக் கொண்டே கதவைத் திறந்தார்.

May 3, 2017

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!


இன்று தமிழை உச்சரிக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழர்களுக்கே தெரியாத, மறக்கடிக்கப்பட்ட உண்மை, இவ்வுலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் தான் என்பது.

நமது பழம்பெரும் இலக்கியங்களில் ஆங்காகே, அவ்வப்போது வந்து செல்லும் ஒரு வார்த்தை "குமரி". இது வெறும் இளம் மங்கையரை மட்டும் குறிக்கும் சொல்லல்ல. நாம் வாழ்ந்த, பிறந்த மண்ணைக் குறிக்கும் சொல்.

இன்று உலக அகழ்வாராய்ச்சியாளர்களால் "லெமுரியா" (Lemuria) என்றழைக்கப்படும் கண்டம் தான் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்புக் குமரிக் கண்டம் என்ற பெயருடன் மிக கம்பீரமாய் இருந்தது.
முச்சங்கம் வளர்ந்த இடமும் அதுதான், தமிழிசைப் பாக்களும், இயல், இசை, நாடகமும் என நாகரீகம், கலைகள், வீரம் அனைத்தும் விளைந்த இடம், குமரிக் கண்டம். தமிழ் வெறும் மொழி அல்ல பெரும் வரலாறு,

மனித இனத்தின் தோற்றம்
ஏறத்தாழ இருபதாயிரம் முதல் நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் அழிந்ததாகக் கூறப்படும் கண்டம், குமரிக் கண்டம். இங்கு தான் பல உயிரினங்கள் தோன்றின. ஆதி மனிதர்களும் தோன்றிய இடமும் இது தான்.

நாகரீக வளர்ச்சி
மனிதன் இவ்வாறு தான் இருக்க வேண்டும், குடும்பத்திற்கு என்று ஓர் இலக்கணம், உறவுகள், பந்தம், பாசம் என நாகரீக வளர்ச்சிக் கண்டெடுக்கப்பட்ட இடமும் குமரிக் கண்டம் தான்.

 மொழியின் பிறப்பு
அனைத்து மிருகங்களைப் போல வினோத ஓசைகளை எழுப்பியவாறுத் திரிந்துக் கொண்டிருந்த சமயத்தில் மனிதனுக்கு என்று ஓர் மொழிப் பிறந்த இடம் தான் குமரிக் கண்டம்.

 தமிழ் மொழியின் பிறப்பு
ஆதி மனிதன், தான் தோன்றிய இடமான குமரி கண்டத்தில் பேசிய மொழி "தமிழ்". உலகிலேயே பழமையான மொழி மட்டுமல்லாமல், தொன்மை வாய்ந்த மொழியும் தமிழ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


முச்சங்கம்
முச்சங்கம் வளர்க்கப்பட்ட இடம் தேனிக்கு அருகாமையில் இருக்கும் மதுரை அல்ல. குமரிக் கண்டத்தின் மிக முக்கியமான தலைநகராக திகழ்ந்துக் கொண்டிருந்த மாபெரும் நகர் "மதுரை". அந்த மதுரை மாநகரத்தில் தான் தமிழ் முச்சங்கம் வளர்த்து வளர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 கண்டங்களை இணைத்த கண்டம்
இடது பக்கம் ஆப்ரிக்கா, மற்றும் வலது புறம் ஆஸ்திரேலியா, மேல்புறம் ஆசிய போன்ற கண்டங்களை இணைத்து வைத்திருந்த கண்டம் தான் குமரிக் கண்டம்.

 பிரம்மாண்டம்
எவரெஸ்ட் சிகரம் எல்லாம், குமரிக் கண்டத்தில் இருந்த மலைகளுக்கு முன் வெறும் குன்று தான் எனவும். எவரெஸ்ட் போல பத்து மடங்கு பெரிய மலைகள், வானுயர் அருவிகள், ஆறுகள் என கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு இருந்த கண்டம் குமரிக் கண்டம்.


உயர் தொழில்நுட்பங்கள்
கட்டிடம், மருத்துவம், புவியியல், வானியல் என்று பல துறைகளிலும் உயர் தொழில்நுட்பத்தை அப்போது குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்கள் கையாண்டுள்ளனர்.

 பேரழிவு
அடுத்தடுத்து ஏற்பட்ட பேரழிவுகளினால் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம்.

 விரிவடைந்த மனித இனம்
பேரழிவுகளுக்கு பின் மூன்று திசைகளிலும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிரிந்து உலகம் முழுக்க சென்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் கூற்றுகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது ஒரு சான்றாக இருக்கிறது.


ஆராய்ச்சிகள்
கடந்த பத்து வருடங்களாக பல ஆய்வுகள் குமரிக் கண்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான ஆய்வறிக்கைகள், மூழ்கிய நிலையில் உள்ள கட்டிடங்களில் வடிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் தமிழோடு ஒத்துப்போவதாக ஊர்ஜிதம் செய்துள்ளார்கள்.








January 5, 2017

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு புதிய சலுகை.. ஆன்லைனில் புக் செய்தால் ரூ 5 தள்ளுபடி


சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆன்லைனில் பதிவு செய்து, பணம் செலுத்தினால் 5 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக, டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலம் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் சலுகை என்ற அறிவிப்பு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பாதாள ரகசிய நகரம் பர்லிங்டன்!



ஒரு நகரத்தை திட்டமிட்டு உருவாக்குவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், பூமிக்கடியில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது, வியப்பை ஏற்படுத்தும் அல்லவா?

அந்த பாதாள ரகசிய நகரம் இங்கிலாந்தின் பர்லிங்டன். 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் 1950 களின் இறுதியில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் பனிப்போர் நிலவி வந்த காலத்தில், அணுகுண்டு தாக்குதலில் இருந்து அரசு உயரதிகாரிகள், ஊழியர்களைக் காப்பதற்காகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டது. அவசர காலங்களில் அரசு தலைமையகமாகவும் இந்த நகரம் செயல்பட்டது. வெடிகுண்டுகளால் பாதிக்கப்படாத அளவுக்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்த இந்த நகரத்தைப் பற்றி, அந்நாட்டு குடிமக்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை.

பூமிக்கடியில் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் மருத்துவமனைகள், உணவகங்கள், அலுவலகங்கள், கிடங்குகள் என ஒரு நகரத்திற்குரிய அனைத்து வசதிகளும் இருந்தன. இவை தவிர குடிநீர் தேவைக்காக தற்காலிகமாக ஏரியும் உருவாக்கப்பட்டு இருந்தது. மற்ற பெருநகரங்களைப் போல் அல்லாமல் பூமிக்கடியில் இயங்கிய இந்த நகரில், காற்றின் ஈரப்பதம் குறையாதவாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

ஏறக்குறைய 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்நகரம் அமெரிக்கா- சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தவுடன் 1991 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டால் இந்நகரத்தை மீண்டும் புதுப்பித்து செயல்பட்டு கொண்டுவரும் திட்டத்தை பிரிட்டன் கைவசம் வைத்திருக்கிறது.

December 9, 2016

இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம்


வாஷிங்டன்:

உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் புதிய அப்கிரேடு சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக ப்ளூடூத் 5 அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்ப தளமாகவும், இனி வரும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தவும் ப்ளூடூத் 5 தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ப்ளூடூத் 5 தொழில்நுட்பத்தில் நீண்ட தூரம், அதிக வேகம் மற்றும் அதிகளவு பிராட்காஸ்ட் மெசேஜ் திறன் போன்றவை முக்கிய மேம்படுத்தல்களாக இருக்கின்றன. சிறப்பம்சங்களை பொருத்த வரை இரு மடங்கு அதிகமான, தரவு பரிமாற்ற வேகமும், நான்கு மடங்கு பரப்பளவு தூரமும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு வழக்கத்தை விட எட்டு மடங்கு அதிகளவு பிராட்காஸ்ட் மெசேஜ்களையும் அனுப்ப முடியும்.

ப்ளூடூத் 5 பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அணியக்கூடிய சாதனங்களான ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு இதர பயன்பாடுகளுக்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'வளர்ந்து வரும் IoT தலைமுறையில் ப்ளூடூத் 5, மற்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களுடன் எவ்வித சிரமமும் இன்றி இணைந்து வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது,' என ப்ளூடூத் நிர்வாக இயக்குனர் மார்க் பாவெல் தெரிவித்துள்ளார்.

December 1, 2016

"ரிங்கா ரிங்கா ரோஸஸ்" ரைம்ஸ் அல்ல...ஒரு வரலாற்று சோகம்!


" ரிங்கா ரிங்கா ரோஸஸ்..." என சின்ன வயதில் நாம் விளையாடிய விளையாட்டுக்கும், சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டெடுக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எலும்புக் கூடுகளுக்கும் ஓர் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? அந்தத் தொடர்பை தெரிந்து கொள்வதற்கு முன்னர்... மனித இனத்தின் ஒரு பேரழிவு நிகழ்வினை, வரலாற்றுத் துயரத்தை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது...

1300 களின் காலகட்டம்... சீனாவின் பல பகுதிகளிலும் மக்கள் ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாய்  உயிரிழந்தனர் . அது "பிளேக்" நோய் என்று அவர்கள் கண்டுபிடித்து முடிப்பதற்குள், அது வட இந்தியா வரை பரவி விட்டிருந்தது. எலிகளிடமிருந்து, ஃப்ளீ (Flea) என்ற பூச்சியினம் இந்த நோயை மனிதர்களுக்கு கடத்தியது . சீனா மற்றும் வட இந்தியக்  கடற் பகுதிகளில் வர்த்தகங்களை முடித்துவிட்டு தங்கள் நாடுகளுக்கு கப்பல்களில் கிளம்பினர் ஐரோப்பியர்கள். அவர்களின் கப்பல்களில் பிளேக்கால் பாதிக்கப்பட்ட எலிகள் இருந்ததை  அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. அதே நேரத்தில், ஒரு பெரிய மங்கோலியப் படையும் ஐரோப்பாவை நோக்கி கப்பல்களில் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் இவர்கள் சென்றடைந்த இடம், இத்தாலிய கடற் பகுதியில் இருக்கும் கஃப்ஃபா (Kaffa) நகரம் . மங்கோலிய படையிலிருந்த பலரும் அந்தப் பயணத்திலேயே பிளேக்கால் பாதிக்கப்பட்டனர். தரையிறங்கிய அந்தப் படை... பாதிக்கப்பட்ட நோயாளிகளை கலன்களில் கட்டி, கோட்டைச் சுவற்றைத் தாண்டி, கஃப்ஃபா நகரத்துக்குள் தூக்கியெறிந்தனர். என்ன ஏதென்று தெரியாமல் பக்கம் வந்த மக்களுக்கும் நோய் தொற்றியது . கஃப்ஃபா நகர மக்கள் பயந்து போய் ஊரை காலி செய்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு குடி பெயரத் தொடங்கினர். போகுமிடமெல்லாம் நோய் பரவத் தொடங்கியது. அதே சமயம் ஆசியாவில் இருந்து  ஐரோப்பாவின் பல்வேறு இடங்களுக்கு சென்றடைந்த வர்த்தக கப்பல்களில் இருந்த எலிகளும் நோய் பரவ முக்கிய காரணமாக இருந்தன.
ரிங்கா ரிங்கா ரோஸஸ்

இந்த இழப்புகள் இதுவரை மனித  இனம் சந்தித்திராத அளவுக்கு இருந்தது. ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 60% வரை இந்த நோயால் உயிரிழந்தனர். உலகம் முழுக்க கிட்டத்தட்ட 20 கோடி பேர் உயிரிழந்தனர். இந்தப் பேரழிவை ஆங்கிலத்தில் "பிளாக் டெத்" (Black Death) என்று குறிப்பிடுகிறார்கள். நோய் தாக்குதலுக்கு முன்னிருந்த உலக மக்கள் தொகையை மீண்டும் எட்டுவதற்கு கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆனது. இந்த பெரும் சோக நிகழ்வை உலகின் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களும், பல தடயங்களைக் கொண்டு ஆராய்ந்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த வாரத் தொடக்கத்தில், இங்கிலாந்தின் லிங்கன்ஷைர் பகுதியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 48 எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர். அதில் 27 எலும்புக் கூடுகள் குழந்தைகளுடையது.

எலும்புக் கூடுகளில் இருந்த பற்களை கனடாவிலிருக்கும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் "பிளேக்" நோயால் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற பிணக் குழிகளை கண்டு பிடித்திருந்தாலும், ஒரே குழியில் இத்தனை எலும்புக் கூடுகளை இப்போது தான் கண்டுள்ளனர். மேலும், இந்த எலும்புக் கூடுகள் குவியலாய் இல்லாமல் சீராக, பக்கம் பக்கமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு இவர்கள் நோய் தொற்று ஆரம்பித்த காலத்தில் இறந்தவர்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் ஆரம்பக் கட்டத்தில் இறந்தவர்களை, மக்கள் மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை செய்து புதைத்தனர். பின்பு, பலி எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க பிணங்களை குழியில் குவியலாய் கொட்ட ஆரம்பித்தனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது கிடைத்திருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு, இவர்கள் இறந்த காரணங்களைக் கண்டறிவது எளிது. ஆனால், இறப்பதற்கு முன்னரான இவர்களின் வாழ்க்கையைத் தேடுவதே மிக முக்கியம் என்று சொல்லியிருக்கிறார்கள் இங்கிலந்து ஆராய்ச்சியாளர்கள். அது நடந்தால் மனித இனத்தின் மிக முக்கிய வரலாற்றுப் பக்கங்கள் காணக் கிடைக்கும்... சரி இந்தக் கதைக்கும் "ரிங்கா ரிங்கா ரோஸஸ்..." விளையாட்டுக்கும் என்ன சம்பந்தம் ???
ரிங்கா ரிங்கா ரோஸஸ்

பிளேக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடலில் வட்ட வட்டமாக கொப்புளங்கள் வரும். அதற்கு அவர்கள் "Posies"" என்ற ஒரு நாட்டு மருந்தை உண்பார்கள். அது கைகொடுக்காத நிலையில் டிஷூம், டிஷூம் என்று தொடர் தும்மலால் பாதிக்கப்பட்டு, இறுதியில் இறந்து போவார்கள். இப்படி இறப்பவர்களுக்கான ஒப்பாரி பாடல் தான்..

" Ring of Ring of Rashes,
  Pocket full of Posies,
  Ai - tishoo, Ai - tishoo,
  All for down..." அழுது கொண்டே அவர்கள் பாடிய அந்த ஒப்பாரிப் பாடல் தான், கால மாற்றத்தில் குழந்தைகள் சிரித்து விளையாடும் ரைம்ஸ் பாடலாக மாறிப் போனது என்பது ஒரு சாராரின் கருத்து. இல்லை...ஆனால், பிளேக் நோயில் தும்மல் ஏற்படாது; அதனால் இது குழந்தைகளின் விளையாட்டுப் பாடல்தான் என்று வாதாடுபவர்களும் உண்டு !!!

November 29, 2016

இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு !


'உங்கள் ஊரில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. அதற்கு சில நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது' என வைத்துக்கொள்ளுங்கள். உடனே உங்கள் மனதில் என்ன தோன்றும்?. பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப்போலவே, 'இதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்களோ?' என்றும் தோன்றும் இல்லையா?. அது தான் தான் இன்றைய நிலை. இதற்கும் இந்த பாலங்கள் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் கட்டப்படுபவை. நம் பணத்தில் இருந்து நமக்கு பாலம் கட்ட கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் திருநெல்வேலியில் மக்களிடம் பணம் கேட்கக்கூடாது என நினைத்து, தன் சொத்துக்களை எல்லாம் விற்று பாலம் கட்டி கொடுத்திருக்கிறார் ஒரு மனிதர். 174 ஆண்டுகளாக இன்னும் மக்கள் பயன்பாட்டில் இருந்த அந்த பாலம், திருநெல்வேலிக்கு புகழ் சேர்க்கும் சரித்திரத்தோடு, அந்த மாமனிதர் பெயரையும் சொல்லி வருகிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பாலங்களில் நிச்சயம் இதற்கு முக்கிய இடம் உண்டும். திருநெல்வேலியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் தான் அது.

பாலமில்லாததால் அவதி...

‘ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்’ என்பார்கள். ஆனால், நெல்லையை சேர்ந்த சுலோச்சன முதலியார் தனது சொத்துக்களை எல்லாம் விற்று தாமிரபரணி ஆற்றில் போட்டு இருக்கிறார். அதன் மூலமாக அங்கே ஒரு பாலத்தை உருவாக்கி மக்களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார் அந்த மனிதர். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த இந்த நற்காரியம், பல தலைமுறைகள் கடந்தும் அவரின் புகழைச் சுமந்து நிற்கிறது. அது தான் ‘சுலோச்சன முதலியார் பாலம்’

இரட்டை நகரங்களான நெல்லையையும், பாளையங்கோட்டையும் பிரித்து இடையில் ஓடுகிறது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணியில், முன்பு ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பரிசல் மூலமாகவே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை. பரிசல் பயணத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியானவர்கள் மட்டுமே பத்திரமாக ஆற்றைக் கடக்க முடியும். மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிக்கடி உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன.

நெல்லை டவுனில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டதால், படகுத்துறை மூலமாகவே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். படகில் முதலில் இடம் பிடிக்க லஞ்சம் கொடுக்கும் நிலையையும் இது ஏற்படுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தகராறுகள் ஒரு புறமும், மறுபுறம் சமூக விரோதிகளால் கொள்ளை சம்பவங்களும் நடக்க... படகுத்துறை எப்போதும் குழப்பமான சூழலிலேயே காட்சியளித்தது.

பாலம் கட்ட கோரிக்கை : நிராகரித்த ஆங்கிலேய அரசு

"இப்பிரச்னைக்கு தீர்வு காண திருநெல்வேலி, பாளையங்கோட்டையை இணைக்கும் பாலம் கட்ட வேண்டும். அது அவசரமானதும், அவசியமானதும் கூட" என 1836-ம் ஆண்டு அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் கடிதம் ஒன்றை எழுதினார்.

ஆங்கிலேயர்கள் வளர்ச்சி திட்டங்களை தங்களின் வசதிக்காக மட்டுமே செய்து கொண்டனர். தங்களுக்கு பயன்படாத எந்த திட்டங்களையும் அவர்கள் செய்யவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இந்நிலையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு 1840 மார்ச் 5-ம் தேதி நெல்லை ஜில்லா கலெக்டராக பொறுப்பேற்றார் ஈ.பி.தாம்சன். அவர் பொறுப்பேற்ற ஐந்து நாட்களில் குறுக்குத்துறை படகுத்துறையில் பெரிய கலவரம் வெடித்தது. அங்கு நடந்த வன்முறையில் சிலர் கொல்லப்பட்டனர்.

இது கலெக்டர் தாம்சனை பாதித்தது. படகுத்துறை பகுதியில் ஒரு மேம்பாலம் இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது என நினைத்தார். உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தாசில்தார் அந்தஸ்துக்கு நிகரான சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார். படகுத்துறையில் நடக்கும் கலவரம் மற்றும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.



லண்டன் பாலத்தின் தோற்றத்தில் புதிய பாலம்

இதற்கான பொறுப்பு கேப்டன் ஃபேபரிடம் ஒப்படைக்கப்பட்டது.  760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றை தாங்க இரட்டை தூண்களுடன்  பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது. அந்த தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டியது. லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் இந்த வரைபடம் இருந்ததால், கலெக்டர் தாம்சனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், அதில் ஒரு சிக்கல்.. இந்த பாலத்துக்கான திட்ட மதிப்பீடு அரை லட்சம்!  அப்போது 50 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.

மக்களுக்காக கட்டப்படும் பாலம் என்பதால் மக்களிடம் வசூலித்து பணத்தை திரட்டலாம் என்றார் கலெக்டர் தாம்சன்.  பணத்தை வசூல் செய்யும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களிடம் பணத்தை பெற்றா இதை செய்வது என யோசித்தார். மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்கு மக்களிடமே பணம் பெறுவதா என்பதாக இருந்தது அவரது சிந்தனை.

 

பொன், பொருளை விற்று பாலம் கட்டினார்

இது தொடர்பாக மனைவி வடிவாம்பாளிடம் ஆலோசித்தார். நாமே இந்த பாலத்தை கட்டிக்கொடுத்தால் என்ன என மனைவியிடம் கேட்டார் சுலோச்சன முதலியார். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல், தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் கொடுத்தார். வீட்டில் இருந்த பணம், நகைகளை எல்லாம் கொடுத்து பாலப்பணிகளை துவங்கச் சொன்னார் சுலோச்சனா முதலியார், உடனடியாக பணிகளை தொடங்கச் சொன்னார். மூன்று வருடமாக கட்டப்பட்ட இந்த பாலத்தின் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.

இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பேசினோம். "இந்தப் பாலத்தை கட்ட தனிநபராக உதவிய சுலோச்சன முதலியாரை வெள்ளைய அரசு சிறப்பாக கௌரவித்து உள்ளது. திறப்பு விழாவின்போது யானை முன்னே நடந்து செல்ல அதன் பின்னால் மேளதாளம் முழங்க முதல் ஆளாக சுலோச்சன முதலியார் அந்தப் பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அவருக்கு பின்னால், பாலத்தை கட்டிய கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே ஆகியோர் சென்றுள்ளனர். அதன் பிறகே கலெக்டர் சென்றுள்ளார். அவர்களுக்கு பின்னரே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று இருக்கிறார்கள்.

 



ஆங்கிலேயர்கள் அளித்த கவுரவம்...

அத்துடன், சுலோச்சன முதலியாரை பாராட்டும் வகையில் அந்த பாலம் தொடங்கும் இடத்தில் 20 அடி உயத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கத்தில் தமிழும் மறு பக்கத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. அந்த பாலத்தை கட்டுவதற்கு சுலோச்சன முதலியார் உதவி செய்ததை குறிப்பிட்டு ஆங்கிலேயர்கள் அந்த கல்வெட்டை பதித்து இருந்தார்கள். 1970 வரையிலும் அந்த கல்வெட்டு இருந்தது.

இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் பழுதடைந்தது. பின்னர், வாகன நெருக்கடி காரணமாக இந்தப் பாலத்தை உடைத்து விட்டு, அருகிலேயே அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் உள்ள தூண்கள் உடைக்கவே முடியாதபடி மிகவும் உறுதியாக இருந்தன. பாலத்தை உடைப்பது இயலாத காரியம் என்பதால் அதே பாலத்தை அகலப்படுத்தினார்கள். அப்படி செய்யும்போது அங்கிருந்த கற்கோபுரத்தை தகர்த்து விட்டார்கள். அதில் இருந்த கல்வெட்டையும் எடுத்து வீசிவிட்டார்கள். ஆங்கிலேய அரசு தமிழனுக்கு செலுத்திய மரியாதையை நாம் மறந்து போனது இப்படித்தான்," என்றார்.

சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் இப்போதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணம் என்ற ஊரில் வசிக்கிறார்கள். தங்கள் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை பாலத்தில் போட்டு விட்டதாலோ என்னவோ வறுமையில் வாடுகிறார்கள். சுலோச்சன முதலியாரின் 6-ம் தலைமுறை வாரிசான அருணாச்சல முதலியார் என்பவர் அங்கு மருந்துக்கடை நடத்தி வருகிறார். ஆங்கிலேய அரசாங்கம் சுலோச்சன முதலியாரின் தியாகத்தை பாராட்டி வழங்கிய செப்புப் பட்டயம்,  ஆங்கிலேய அரசு அவருக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்ட வாழ்த்துப் பத்திரமும் அவரிடம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.



யார் இந்த சுலோச்சன முதலியார்?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமணம் என்கிற குக்கிராமத்தில், செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர், சுலோச்சன முதலியார். அவரது மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தந்தை ராமலிங்க முதலியார் காலத்தில் குடும்பம் நெல்லைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை, ஆங்கிலேயரான பானர்மேனிடம் (கட்டபொம்மனின் வழக்கை விசாரித்தவர்) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.

சுலோச்சன முதலியார் செல்வச்செழிப்பில் இருந்ததால் கவுரவத்துக்காகவே கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கலெக்டருக்கு இணையாக குதிரை பூட்டிய கோட்ச் வண்டியில் தினமும் அவர் அலுவலகத்துக்கு செல்வார். கறுப்பு கோட்டு, தலைப்பாகை, அங்கவஸ்திரம், வைரக்கடுக்கண் அணிந்து அவர் அலுவலகத்துக்கு செல்வார் என்கிறார்கள். தான் மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தினர் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்துதான் இந்த பாலத்தை கட்டினார் சுலோச்சன முதலியார்.

கடந்த சில வருடங்களாக எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பாலம் திறக்கப்பட்ட தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதன்படி 174 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்த பாலம். ஒரு ஊருக்காக, மக்களுக்காக நடந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், இந்த நாளை அரசு விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

November 26, 2016

80 வருடங்களில் 8 ஆயிரம் மரங்கள்...உலகின் செல்வாக்குமிக்க மனிதருக்கு வயது 105


கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டத்தில் குப்பி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சாலுமரடா திம்மக்கா. வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கியதில்லை. பத்து வயதில் இருந்து ஆடுமாடுகளை மேய்த்தார். பின்னர் கூலித் தொழில் பார்த்தார். இவரது கணவர் பெயர் சிக்கையா. கணவனும் மனைவியும் கூலி வேலை பார்த்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தனர். துரதிருஷ்டவசமாக குழந்தையும் பிறக்கவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் குழந்தையாக பாவித்துக் கொண்டனர்.

ஆனாலும் குழந்தை இல்லாதது தம்பதியரை மனதளவில் பெரியதாக பாதித்திருந்தது. 'குழந்தை இல்லையென்றால் என்ன?. மரங்களை உனது குழந்தையாக பாவித்துக் கொள்... ஊரெங்கும் சென்று மரங்களை நட்டு அதனை பத்திரமாக வளர்க்கலாமே  'என்று திம்மக்காவின் கணவர் மனைவிக்கு ஊக்கம் அளித்தார். கணவரின் வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த திம்மக்கா, மரக்கன்றுகளை குழந்தையாக பாவிக்கத் தொடங்கினார்.

காலையில் கணவரும் மனைவியும் சாப்பாட்டுக்காக உழைப்பார்கள். மாலையில் மரக்கன்றுகளை நடுவார்கள். முதன் முதலில் கல்லீகல் கிராமத்தில் இருந்து கூடூர் கிராமம் வரை,சாலையோரத்தில் 400 ஆலமர கன்றுகளை திம்மக்கா நட்டார். நட்டதோடு வேலை முடிந்து விட்டது என்று திம்மக்கா இருந்து விடவில்மலை. மரக்கன்றுகளைச் சுற்றிலும் வேலி ஏற்படுத்துவார். ஆடுமாடுகள் தின்று விடாமல் பார்த்துக் கொள்வார். மாலைவேளையில், நீரிட்டுப் பராமரிப்பார். மரங்கள் தானாக வளரும் வரை திம்மக்காவின் கண்காணிப்பு தொடரும். திம்மக்காவின் தீவிர கண்காணிப்பால் நடப்பட்ட 400 ஆலமரக்கன்றுகளில் ஒன்று கூட வீணாகிப் போகவில்லை. அத்தனையும் வளர்ந்து  விருட்சமாக மாறி இப்போது நிற்கின்றன. வெட்ட வெளியாக காணப்பட்ட அந்த சாலை இப்போது 400 ஆலமரங்களுடன் பசுமையாக காணப்படுகிறது.

மரக்கன்றுகளுடன் ஒரு குழந்தையையும் தத்தெடுத்து உமேஷ் என பெயரிட்டு வளர்த்தார். மரக்கன்றுகளுடன் சேர்ந்து அந்த குழந்தையும் வளர்ந்தது. சில வருடங்களுக்கு முன் கணவர் சிக்கையா தவறி விட. இப்போது மகன் நிழலில் தனது பணியை மேற்கொள்கிறார் திம்மக்கா. மகன் உமேசும் தாயுடன்சேர்ந்து கிராமம் கிராமமாக சென்று மரங்கள் நடும் பணியில் ஈடுபடுகிறார். 'மரங்களை எனது குழந்தையாக பாவித்தேன். அடுத்த தலைமுறைக்கு செய்யும் சேவையாகவும் நாட்டுக்கு செய்யும் சேவையாகவும் கருதினேன் ''என கடந்த 2013-ம் ஆண்டு அல்ஜசீராவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் திம்மக்கா.



திம்மக்காவுக்கு தற்போது 105 வயதாகிறது. இப்போதும் மரம் நடும் பணியை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த 80 வருடங்களாக மரங்கள் நடும் பணியில் ஈடுபடுகிறார். இந்த 80 வருடங்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் மரக்கன்றுகளைத் திம்மக்கா நட்டு வளர்த்திருக்கிறார். கர்நாடக அரசு முதியோருக்கான பென்ஷன் ரூ.500 தருகிறது. ஆனால், திம்மக்கா நட்டு வளர்த்த மரங்களின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா? சொன்னால் அதிர்ந்து போவீர்கள். அந்த மரங்களின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடியை நெருங்குகிறது. அதே வேளையில் அவற்றால்  சுற்றுச்சூழலுக்கு விளையும் நன்மைகளுக்கு விலை போட முடியாது.

தற்போது 'பூமியை காப்போம் ' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கி திம்மக்கா நடத்தி வருகிறார். அதன் மூலம் நர்சரி ஒன்றைத் தொடங்கி மரக்கன்றுகளையும் விநியோகிக்கிறார். இதுவரைக்கும் 5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளார். தள்ளாத வயதில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கெஸ்ட் லெக்சர் எடுக்கிறார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை திம்மக்கா சந்தித்திருக்கிறார். திம்மக்காவை உதாரணமாகக் கொண்டு இப்போது லட்சக்கணக்கானோர் உலகமெங்கும் மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திம்மக்காவின் செயலை கவுரவித்து சிபிஎஸ்ஈ பாடத்தில் அவரைப் பற்றிய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது. கர்நாடக அரசு பள்ளிப் பாடங்களில் திம்மக்காவின் வாழ்க்கை வரலாறு பாடமாக இடம் பெற்றுள்ளது.  திம்மக்காவின் சேவையைப் பாராட்டி இந்தியாவின் 'சிறந்த குடிமகள் விருது' வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு காட்ஃபிரே பிலிஃப்ஸ் விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது பிபிசி நிறுவனமும் திம்மக்காவின் சேவையை பாராட்டி உலகின் செல்வாக்குமிக்க 100 பெண்கள் பட்டியலில்  சேர்த்துள்ளது.
இதுவரை 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள திம்மக்கா, விருது மூலம் கிடைக்கும் நிதியை வைதது என்ன செய்து வருகிறார் தெரியுமா?. சொந்த கிராமமான குப்பியில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவமனைக் கட்ட முயற்சித்து வருகிறார்.

தன்னலமற்று சேவை புரிபவர்களுக்கு பணத்தை வைத்து வேறு என்ன செய்யத் தெரியும்?.

November 21, 2016

“டிரம்புக்கு அவகாசம் தாருங்கள்; மோசமானவர் என முடிவுக்கு வராதீர்கள்” உலக நாடுகளுக்கு ஒபாமா வேண்டுகோள்


லிமா,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு அவகாசம் தாருங்கள், இப்போதே அவர் மோசமானவர் என முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்று உலக நாடுகளுக்கு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



டிரம்ப் தகுதியற்றவர் என கூறிய ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக ஜனாதிபதி ஒபாமா நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ஜனாதிபதி பதவிக்கு டிரம்ப் தகுதியானவர் அல்ல என்று ஆவேசத்துடன் கூறி வந்தார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் ஓட்டுகளை ஹிலாரி கூடுதலாக பெற்றபோதும், ‘எலெக்டோரல் ஓட்டு’ என்று அழைக்கப்படுகிற தேர்தல் சபை வாக்குகளை அதிகமாக பெற்றதால், டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உலக நாடுகள் அச்சம்

தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப், மெக்சிகோவுடனான அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும்; அமெரிக்காவில் நுழைய ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கு தடை விதிக்கப்படும்; சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனால், டிரம்ப் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளில் நிலவி வருகிறது.

வேண்டுகோள்

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடந்த ஐரோப்பிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அனைவரும் டிரம்போடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இப்போது அவர் லத்தீன் அமெரிக்க நாடான பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நேற்று முன்தினம் இளைய தலைமுறையினர் மத்தியில் ஒபாமா பேசினார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் உங்களுக்கு விடுக்கக்கூடிய முக்கிய செய்தி, நான் ஏற்கனவே ஐரோப்பிய தலைவர்கள் உச்சிமாநாட்டில் விடுத்ததுதான். இப்போதே புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் (டிரம்ப்) மோசமானவர் என முடிவுக்கு வந்து விடாதீர்கள் என்பதுதான். புதிய நிர்வாகம் பதவி ஏற்கட்டும். அவர்கள் தங்களது கொள்கைகளை அறிவிக்கட்டும். அதுவரை அவர்களுக்கு அவகாசம் தாருங்கள். அதன்பிறகு அது, சர்வதேச சமூகத்தினர் அமைதியுடனும், வளத்துடனும் வாழ்வதற்கு பொருத்தமானதாக இருக்கிறது அல்லது இல்லை என்ற முடிவுக்கு வாருங்கள்.

உலக நாடுகளுக்கும் பொருந்தும்...

இது உங்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பொருந்தும். அனைவருமே உடனடி தீர்ப்புக்கு வராதீர்கள். புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், தனது அணியினருடன் பதவி ஏற்கட்டும். அவர்கள் பிரச்சினைகளை ஆராயட்டும். அவர்கள் தங்களது கொள்கைகளை நிர்ணயம் செய்யட்டும்.

ஏனென்றால், பிரசாரத்தின் போது கூறுவதும், ஆட்சிப்பொறுப்பின்போது கூறுவதும் ஒரே மாதிரியாக இருக்காது என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன்.

லத்தீன் அமெரிக்காவை பொறுத்தமட்டில், அமெரிக்காவின் கொள்கைகளில் புதிய நிர்வாகத்திடம் இருந்து நான் பெரிதான மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.