Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label உபயோகமான தகவல். Show all posts
Showing posts with label உபயோகமான தகவல். Show all posts

July 26, 2017

முதுமையிலும் இளமையாக தெரியனுமா


ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்... கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.

நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

டை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

நீர்ச் சத்து குறைபாடு

முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.

கால்வெடிப்பு குணமாக

கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

கழுத்து சுருக்கம் போக்க

வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.

கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கண்ணக் குழி தவிர்க்க

இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

இயற்கையை ரசியுங்கள்

உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்... கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள் அப்புறம் என்ன ஐம்பது வயதிலும் அழகு ராணி நீங்கள்தான்.

July 25, 2017

உதட்டுக்கு மெருகூட்டும் லிப்ஸ்டிக் - அழகு குறிப்பு


மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலத்தான் உதடுகளுக்கும் உண்டு. அன்பை முத்தமாகவும் வெளிப்படுத்தலாம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சன்ஸ்கீரின் லோஷனை தடவினாலும், புண் மற்றும் கொப்புளங்கள் மறையும். கொழுப்புச் சத்து குறையும்போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால், உதடுகளில் வசேலின்( vaseline) தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிக வெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும், சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெய் உடன் ஆரஞ்ச் பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவிவந்தால், வெடிப்புகள் சரியாக உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண் ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால், மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப்லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல் ஒரே, சீராக அழகாக இருக்கும். லிப் லைனர் பயன்படுத்தும்போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுகளுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரியதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும், உதடுகள் காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், எச்சிலில் இருக்கும் பாக்டீரியக்களால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும். இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன், நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

July 20, 2017

எலிவால் கூந்தலுக்கு எளிய சிகிச்சை


கூந்தல் உதிர்வு என்பது ஒருவருக்கு எத்தனை கவலைக்குரிய விஷயமோ, அதைவிட அதிக கவலை தரக்கூடியது கூந்தல் மெலிவு. அடர்த்தியான கூந்தல்தான் அழகு. எலிவால் போன்ற மெலிந்த கூந்தல் ஒருவரது தோற்ற அழகையே பாதிக்கக் கூடியது.

கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால் தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். ஒரு மாதத்தில் அரை இஞ்ச் அளவுக்குக் கூந்தல் வளர்வது இயல்பான கூந்தல் வளர்ச்சி சுழற்சி. வயதாக ஆக இது குறையும். கூந்தலுக்கு வயதாக ஆக, ஒரு கட்டத்தில் அது ஓய்வெடுக்கிற நிலைக்கு வந்து விடும். ரெஸ்ட்டிங் ஸ்டேஜ் எனப்படுகிற இதில், கூந்தலானது வளராமல் அப்படியே இருக்கும். இதன் விளைவாக கூந்தல் சீக்கிரமே உதிரும். மறுபடி வளராது. கூந்தல் மெலிவின் தீவிரத்தைப் பொறுத்தே கூந்தல் உதிர்வின் தன்மையைக் கணிக்க முடியும். வயதாகிற காரணத்தால் மட்டுமின்றி, கர்ப்ப காலம், ஊட்டமில்லாத உணவு, மண்டைப் பகுதியில் ஏற்படுகிற தொற்று, மருத்துவக் காரணங்கள், மன அழுத்தம், ஹார்மோன் மாறுதல்கள், பரம்பரைத் தன்மை மற்றும் சில வகை மருந்துகள் போன்றவற்றாலும் முடி உதிர்வும் மெலிவும் ஏற்படலாம்.

ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் (Female pattern  hair loss) Di hydro testosterone (DHT) என்கிற ஹார்மோன் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னை பாரம்பரியமாகத் தொடரக்கூடியது. ஃபாலிக்கிள் என சொல்லப்படுகிற கூந்தலின் நுண்ணறைப் பகுதி வரை ஊடுருவி, கூந்தலை மெலியச் செய்து, புதிதாக வளர்வதையும் தடுக்கக்கூடியது. சில பெண்களுக்கு இது மிக மிக மெதுவாக நடைபெறும். வேறு சிலரோ மிக வேகமாக மாற்றத்தை உணர்வார்கள். 35 வயதுக்கு மேலான 40 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது.
கூந்தல் மெலிவுக்கான வேறு சில காரணங்கள்..

Telogen Effluvium...  மன அழுத்தம், மருத்துவ சிகிச்சை, பூப்படைதல் அல்லது கர்ப்பம் போன்ற நிகழ்வுகளால் உண்டாகிற ஹார்மோன் மாற்றம் என எல்லாம் இதில் அடக்கம். Diffuse Hair loss... இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தம் தொடர்பான பிரச்னைகள், ஹார்மோன் கோளாறுகள், மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுவது. டெலோஜன் எஃப்லுவியம் (Telogen Effluvium) என்பது பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைக்கான மிகப் பரவலான காரணம். இதில் மண்டைப் பகுதியில் பரவலாக முடி உதிர்வு தென்படும். தீவிர மன அழுத்தம்   அல்லது ஹார்மோன் மாறுதல்கள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் விளைவு பலருக்கும் இந்த அறிகுறியைக் காட்டும். எந்த வயதிலும் ஏற்படலாம்.

திடீரென ஆரம்பிக்கிற இந்தப் பிரச்னை சிலருக்கு ஆறு மாதங்களில் தானாகச் சரியாகலாம்   அல்லது சிலருக்கு மிக மோசமான நிலைக்கும் மாறலாம். பெரும்பாலும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு சொட்டை, வழுக்கை போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கு பதில் கூந்தல் மெலிவே அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்னை உள்ள பெண்கள் அதிக மனப்பதற்றம் கொண்டவர்களாகவோ, நரம்புக் கோளாறுகள் உள்ளவர்களாகவோ இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னைக்கும் கூந்தல் வளர்ச்சி சுழற்சி நிலைகளுக்கும் தொடர்புண்டு. கூந்தலின் வளர்ச்சி நிலையை ‘அனாஜன்’ என்கிறோம். இது 3 வருடங்களுக்கு நீடிக்கும். கூந்தல் வளராமல் அப்படியே இருக்கும் நிலையை ‘டெலோஜன்’ என்கிறோம்.

இது 3 மாதங்களுக்கு நீடிக்கும். இந்த டெலோஜன் ஸ்டேஜில் கூந்தலானது அதன் ஃபாலிக்கிளில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும். புதிதாக அந்த இடத்தில் இன்னொரு கூந்தல் முளைத்து, பழைய கூந்தலை வெளியே தள்ளினால்தான் உதிரும். நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் 15 சதவிகித முடியானது டெலோஜன் ஸ்டேஜில் இருக்கும். அளவுக்கதிகமான மன அழுத்தமானது, இந்த 15 சதவிகிதத்துக்கும் அதிகமான முடியை டெலோஜன் ஸ்டேஜுக்கு வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து விடும். மூன்றே மாதங்களில் இப்படி டெலோஜன் நிலைக்கு வந்த அத்தனை முடியும் கொட்டிப் போகும். புதிய முடி வளரத் தொடங்கினால் மெலிந்த கூந்தலானது மறுபடி அடர்த்தியாக மாறும். மன அழுத்தம் மற்றும் உடல்நலமின்மை காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் டெலோஜன் எஃப்லுவியம் பிரச்னையை நிச்சயம் எப்போதாவது கடந்திருப்பார்கள்.

ஆண்ட்ரோஜெனிடிக் அலோபேசியா (Androgenetic alopecia) என்பது 40 வயதுக்கு மேலான 50 சதவிகிதப் பெண்களை பாதிக்கக் கூடியது. மெனோபாஸ் காலத்துக்கு முன்பு 13 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னைக்குக் காரணம் Di Hydro Testosterone (DHT) எனப்படுகிற ஒருவித ரசாயனம். இது ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜனில் இருந்து தயாராவது. 5 ஆல்ஃபா ரெடக்டேஸ் எனப்படுகிற ஒருவித என்சைமின் செயல்பாட்டினால் ஆண்கள், பெண்கள் என எல்லோருக்குமே இது உற்பத்தியாகும். இந்த என்சைம் அதிகமுள்ளவர்களுக்கு ஞிபிஜி ரசாயனமும் அதிகம் உருவாகும். இது அதிகமானால் கூந்தல் மெலிவுக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு ஏற்படுகிற கூந்தல் உதிர்வானது, ஆண்களுக்கு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.   ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை இழக்கலாம். கூந்தல் என்பது பல்வேறு சத்துகளால் ஆனது. இந்தச் சத்துகள் புதுப்பிக்கப்பட்டால்தான் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக மாறும். கூந்தலில் புரதம், கொழுப்பு, நீர் மற்றும் கார்போஹைட்ரேட் எல்லாம் உண்டு.  ஓட்ஸ், வெல்லம், ஈரல் மற்றும் முழு தானியங்கள்   போன்றவை கூந்தல் உதிர்வைத் தடுக்கும் உணவுகள். வயதின் காரணமாக கூந்தல் உதிர்வும், மெலிவும் சகஜம் என்றாலும், சரியான ஊட்டம் நிறைந்த உணவுகள் கூந்தல் உதிர்வு மெலிவு மற்றும் வழுக்கைப் பிரச்னைகளைத் தவிர்க்கும்.

காரணமே தெரியாமல் முடி உதிர்வு அல்லது முடி மெலிவு பிரச்னைகளை உணர்பவர்கள் உடனடியாக ஒரு ட்ரைகாலஜிஸ்டை அணுகிக் காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். மினாக்சிடில் என்கிற ஒரு தயாரிப்பின் மூலம் மிகப் பாதுகாப்பான முறையில் பெண்களின் முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

July 19, 2017

முக அழகிற்கு குங்குமப்பூ


சிகப்பழகை பெறத்துடிக்கும் பெண்கள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை முக அழகிற்கு எப்படி பயன்படுத்துவது பற்றி சில டிப்ஸ்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர உதடுகள் நிறம் மாறும். உதடுகளில் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணெய் கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான், அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடத்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுகள் பால் விட்டு கலந்து குழைத்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படந்துள்ள கருமை நிறம் குறையும்.

July 17, 2017

குண்டு பெண்களே இது உங்களுக்கு.........


*வாழ்நாள் முழுவதும் புகை பிடித்துத் திரிவதும், அளவுக்கு மிக அதிகமான எடையுடன் இருப்பதும் ஒரே மாதிரியான பாதிப்பைத் தரும் என அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் யூகே ஆராய்ச்சியாளர்கள்.உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது.

*பல்வேறு நாடுகளும் ஏதேனும் செய்து இந்த சிக்கலிலிருந்து மீண்டு வரவேண்டும் என முயன்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று இங்கிலாந்து.இந்த ஆராய்ச்சி சுமார் 90 ஆயிரம் பேரை வைத்து மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் முடிவாக, அளவுக்கு மிக மிக அதிகமாக எடையுடன் இருப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் பத்து ஆண்டுகளை இழக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

*அதாவது சாதாரணமான உடல் எடையை விட 18 கிலோ அதிகமாய் இருப்பவர்களுக்கு வாழ்நாளில் மூன்று ஆண்டுகள் குறையும். சாதாரண உடல் எடையை விட சுமார் 40 கிலோ அதிகமாய் இருந்தாலோ ஆயுளில் 10 ஆண்டுகள் குறையும் என கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

எது சரியான எடை என எப்படிக் கண்டு பிடிப்பது?

*அதற்கு BMI எனும் அளவையை வைத்திருக்கிறார்கள். இத்தனை உயரமெனில் இந்த எடை சரியானது எனும் கணக்கே அது.சுமார் ஐந்தடி உயரமுள்ள மனிதர் 45 கிலோ எடையுடன் இருப்பது ஆரோக்கியமானது. ஐந்தரை அடி உயரமெனில் 55 கிலோ, ஆறடி உயரமெனில் எழுபது கிலோ என உத்தேசக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

*ஆண்கள் பெண்கள் வேறுபாட்டில் இவை சற்றே மாறுபடும்.(எடை (பவுண்டில்) x 4.88) / (உயரம் – அடி )2 என்னும் சூத்திரத்தை BMI கண்டறிய பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ என்பது 2.2 பவுண்ட்வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதும், உடல் எடை அதிகமாய் இருப்பதும் ஒரே போன்ற அச்சுறுத்தல் என்பது புதிய தகவல் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய ரிச்சர்ட் பீட்டோ என்பவர்.

*தேவையற்ற மேலைநாட்டு உணவுப் பழக்கங்களை தவிர்த்து, இயற்கை உணவுக்கும், சுகாதார வாழ்க்கை முறைக்கும் மாறுவதும், உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதுமே இந்தச் சிக்கலில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும்.உடற்பயிற்சிகளை செய்ய மறக்காதிங்க...

July 15, 2017

சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?


சுருட்டை முடி உடையவர்கள் சுந்தர அழகு மிக்க பாக்கியசாலிகள். அதை சிலர் இயற்கையாக பிறப்பிலேயே பெறுகின்றனர். இன்னும் சில சுருட்டை முடியை  பெருவதற்கு பியூட்டி பார்லர் சென்று, இதை போன்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது. இந்த  முடியை கொண்டு நாம் எந்த வகை அலங்காரத்தையும் செய்ய முடியும். ஆனால் இத்தகைய தலை முடியை வாருவது சிறிது கடினம் தான்.

அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.

இத்தகைய முடியை உடைய பெண்கள், இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக  இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பு என்று குறிப்புகளை தற்போது  பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள்  கடைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது  மிகவும் பாதுகாப்பானதாகும்.

கண்டிஷனர் : படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளாவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை  போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள், சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.

சுருள் முடியை சீவுதல் : சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற  உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.

July 9, 2017

செய்து பாருங்கள்! - அழகிய நோட்புக் அட்டை!-குட்டீஸ் ஸ்பெஷல்


வருங்கள் குட்டீஸ்... சாதாரணமாக இருக்கிற உங்கள் நோட்டு புத்தக அட்டையினை நம் கற்பனைத் திறமை பயன்படுத்தி அழகுபடுத்தலாம்! உங்கள் பிரண்ட்ஸ் எந்த கடையிலடா வாங்கினேனு கேப்பாங்க.. அப்போ உங்க பெயரைச் சொல்லி அந்த கடையில வாங்கினேன்னு சொல்லி அசத்துங்க!

தேவையான பொருட்கள்: பென்சில், ரூலர், பிளெயின் மற்றும் டிசையிண்ட் பேப்பர், சாதா மற்றும் ஜிக் ஜாக் சிசர்ஸ், கம் ஸ்டிக்.

செய்முறை:

1. முதலில் பென்சில் மற்றும் ரூலரை பயன்படுத்தி 1 மற்றும் ஒன்றரை செ.மீ. அகலத்தில் கோடு வரைந்து அதை பிளெயின் மற்றும் ஜிக்-ஜாக் சிசர்ஸ் ஆல் கட் செய்து கொள்ளவும்.

2. பிளெயின் பேப்பரால், நோட் புக் அட்டை பகுதி முழுவதும் ஒட்டிவிட்டு. அதன் மேல் சிறிய ரிப்பன் போல் வெட்டி வைத்துள்ள கலர் பேப்பர்களை வரிசையாக ஒட்டவும்.

3. வெளியே நீட்டிக் கொண்டிருக்கிற பகுதியை நன்கு க்ளு தடவி மடித்து உள்பக்கமாக ஒட்டி விடவும்.

4. உட்புறமுள்ள அட்டையை சரியாக அளந்து இரண்டு பேட்டர்ன்ட் கலர் பேப்பரை வெட்டி எடுத்து உட்புற அட்டையில் ஒட்டி விடவும்.

இப்போ பாருங்க உங்க நோட்டு புத்தகத்தை... அச்சோ சூப்பரோ சூப்பரா!

July 8, 2017

இனிமையான உதடுகளைப் பெற வேண்டுமா?


தன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

* உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம்.

* சிகிச்சை முறைகள்:

* பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

* வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

* சிலருக்கு தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.

* கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

* மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும். சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

* வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

* லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

* லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

* உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

* உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

July 5, 2017

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்?


'கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்' என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா...

திருமணத்திற்கு முன்...

* அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.

* உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.

* முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.

* திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.

* தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.

* கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ­ர் கொண்டு கழுவி விடுங்கள்.

* இரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

* நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

* திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.

* மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.

மேக் அப் போடுவது எப்படி?

* மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.

* அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.

* கண்களைச் சுற்றி ஐலைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப 'ஐஷேடோ'வைத் தேர்ந்தெடுங்கள்.

* மேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

* கன்னத்திற்கு போடப்படும் 'ரூஜ்' தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரிசெய்திட முடியும்.

* மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட...பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.

* மேக் அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.

சிகையலங்காரம்:

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு 'ப்ரண்ட் செட்' என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச்சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.

திருமணப் புடவை:

திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.

போட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு 'ரா' சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.

July 3, 2017

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு


*பெண்கள் எல்லோரும் அழகு மட்டும் போதாது அதற்கேற்றவாறு உடல் எடையும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
ஓல்லியாக இருப்பவரையும் குண்டாக இருப்பவரையும் யாரும் அழகு என்று குறிப்பிடமாட்டார்கள்.எல்லா பெண்களும் உடலுக்கேற்ற அளவு எடை வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

*பெண்கள் ஒவ்வொரு வயதையும் எட்டும் போதும் அவர்களின் வயதுகேற்ப உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது.நீங்களும் அழகான, அம்சமான உடல் அழகை பெற வேண்டுமா? பொறுமையாக படியுங்கள், பொறுமையைக் கடைப்பிடிப்பதும் அழகுக்கும் இளமைக்கும் உதவும் என்கிறது ஆய்வுகள்.

*இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைபாடு இவர்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி என்று கருதப்படும் தியாமின் ஆகியவற்றின் குறைபாடும் ஓரளவுக்கு இருக்கிறது.

*வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடையை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறதோ இல்லையோ, இவர்கள் அதில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

நீங்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் சாப்பாடு வகைகள்

*டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ள காய்கறிகள் சத்தான உணவு என்ற அடிப்படையில் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

1.பச்சை இலை காய்கறிகள்.
2.வேரில் விளைபவை. கேரட், பீட்ருட், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
3.கிழங்குகள் - தானியங்களுக்கு ஓரளவு மாற்றாக இவை அமைகின்றன.
4.குருப் -1 காய்கறிகள். நார்ச்சத்து மிகுந்த வெள்ளரி போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
5.குருப் - 2 காய்கறிகள், பீன்ஸ், பயறு வகைகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

*10 முதல் 12 வயதின் முற்பகுதியில் உள்ள வளர் இளம்பெண்கள் பச்சை இலை காய்கறிகள் 100 கிராமும், வேரில் விளைம் மற்றும் கிழங்கு வகைகளை 25 கிராமும், குருப் - 1 மற்றும் 2 காய்கறிகளை 50 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகமொத்தம் 175 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*16 முதல் 18 வயதின் பிற்பகுதியை சேர்ந்த வளர் இளம்பெண்கள் 275 முதல் 350 கிராம் வரை இந்த உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது, பச்சை இலை காய்கறிகள் 100 முதல் 150 கிராம் வரையும், வேரில் விளையும் மற்றும் கிழங்கு வகைகளை 50 முதல் 75 கிராம் வரைம், கு 1 மற்றும் 2 காய்கறிகளை 75 முதல் 100 கிராம் வரைம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*காய்கறிகளை போன்று பழங்களிலும் டானிக் மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துகள் நிறைய உள்ளன. அவற்றைம் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

*இந்த உணவு முறையை வளர் இளம் பெண்கள் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அழகாகவும் ஜொலிக்கலாம்.

July 1, 2017

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?


நேற்றுவரை கண்ணாடி மாதிரி பளபளத்த சருமத்தில், இன்று திடீரென சின்னதாக ஒரு கரும்புள்ளியோ, பருவோ வந்தால் அது தரும் மன உளைச்சல் மிகவும் பெரியது. அதிலும் அந்தக் கரும்புள்ளியோ, பருவோ வந்தோமா, போனோமா என இல்லாமல், வந்துவிட்டுப் போனதன் தடமாக தழும்பை விட்டுச் சென்றால்?

தழும்புகளைப் பார்க்கும் போதெல்லாம் தன்னம்பிக்கை குறையும். தூக்கம் தொலையும். தழும்புகளற்ற சுத்தமான சருமத்துக்கு மனது ஏங்கும். ‘‘சரியான காரணம் தெரிந்து, சிகிச்சை அளித்தால், தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம் என்கிறார் அழகுக் கலை நிபுணரும், அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். தழும்புகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றி லிருந்து தப்பிக்கவும் ஆலோசனைகள் சொல்கிறார் அவர்.

‘‘அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.

சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது.

- சிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகண்டு, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும். இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம்.

இதெல்லாம் வராமல் தவிர்ப்பதற்கான வழிகள்.

ஏற்கனவே பரு வந்து, தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்?

வெறும் ஃபேஷியல் மட்டுமே தழும்புகளைப் போக்காது. மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோதெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் இவர்களுக்குப் பலன் தரும். தழும்பு ஏற்பட்டவர்களது சருமத்தில் குழிகள் காணப்படும். மைக்ரோடெர்மாப்ரேஷன் என்கிற சிகிச்சை, சருமத்தை சமன்படுத்தி, குழிகளை மறைக்கும். 95 சதவிகிதம் தழும்புகள் மறையும். 100 சதவிகிதம் தெரியாமலிருக்க ஸ்கின் பீல் சிகிச்சை மட்டுமே தீர்வு. சருமத்தின் ஒரு லேயரை அப்படியே உரித்தெடுத்து, சருமத்தைப் புதுப்பிக்கச் செய்கிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சூரிய வெளிச்சமோ, வீட்டுக்குள் பல்பு வெளிச்சமோகூட படக்கூடாது. வெளிச்சம் பட்டால், ஸ்கின் பீல் செய்யப்பட்ட சருமம் கருப்பாகி, அது நிரந்தரமாகத் தங்கி விடும்.

மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோ தெரபி சிகிச்சை களை 20 வயதுக்கு மேலானவர்கள் செய்து கொள்ளலாம். 30 வயதுக்கு மேலானவர்கள் வாரம் 2 முறை மைக்ரோடெர்மாப்ரேஷன் செய்து கொள்ளலாம். தழும்புகளை நீக்குவதில் அரோமாதெரபி சிகிச்சைக்குப் பெரும் பங்கு உண்டு. அது சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவும்.மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையுடன், சைப்ரஸ் ஆயில், நட்மெக் ஆயில், பெர்கமாட் ஆயில், பெடிட்க்ரெயின் ஆயில், சாண்டல்வுட் ஆயில் ஆகியவை கலந்த அரோமா தெரபியையும் சேர்த்துக் கொடுக்கும் போது, தழும்புகள் நீங்கி, சருமம் புத்துணர்வு பெறுவது துரிதப்படுத்தப்படும்.

வீட்டிலேயே என்ன செய்யலாம்?

தழும்புகள் சின்னதாக இருக்கும்போதே கவனித்து, சில சிகிச்சைகளைச் செய்ய ஆரம்பித்தால், அவை பெரிதாகாமலும் நிரந்தரமாகத் தங்காமலும் காக்கலாம்.

நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம் ஆகியவற்றை காய்ச்சாத பாலில் குழைத்துக் கொள்ளவும், இரவு படுக்கப் போவதற்கு முன் சருமத்தில் தழும்புகளின் மேல் தடவிக் கொண்டு தூங்கவும். மறுநாள் காலையில் அதைத் தேய்த்துக் கழுவவும். சில நாட்களுக்குத் தொடர்ந்து இப்படிச் செய்து வர, சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

முகச் சருமத்தை லேசாக, மிக மென்மையாகக் கிள்ளி விடுகிற சிகிச்சையை 20 வயதுக்கு மேல் எல்லோருமே ஒரு பயிற்சியாகச் செய்யலாம். சருமத்தின் மூன்றாவது அடுக்கான சப்கியூட்டேனியஸ் லேயரில்தான் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் இருக்கின்றன. லேசாகக் கிள்ளி விடுவதன் மூலம் இந்த செல்கள் தூண்டப்பட்டு மேலெழுந்து வரும். கன்னம் ஒட்டிப் போனவர்கள் கூட இந்த கிள்ளி விடுகிற பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், கன்னங்கள் ஓரளவு உப்பிப் பூரிக்கும். முகத் தசைகள் விரிவடைகிற போது, தழும்புகளின் அளவு சுருங்கும். பார்வைக்கு உறுத்தலாகத் தெரியாது.

தினசரி காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளவும். வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு துப்பவும். இப்படிச் செய்வதாலும் கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும்.


மேலே சொன்னதெல்லாம் பருக்களால் உண்டான தழும்புகளுக்கு...

அடுத்தது அம்மைத் தழும்புகளுக்கான சிகிச்சை

அம்மை வந்த பிறகு ஏற்படுகிற தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. லேசர், ஸ்கின் பீல் மாதிரியான நவீன சிகிச்சை களால் கூட 100 சதவிகிதம் போக்க முடியாது.

தழும்புகள் ஆழமாவதற்கு முன்பே அக்கறை எடுத்துக் கொண்டால், ஓரளவு இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். அம்மை வந்து கொப்புளங்கள் ஆறிய உடனே அந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் தழும்புகள் ஆழமாகி விடும். கொப்புளங்கள் ஆறிய நிலையில் சருமமானது மிகவும் மென்மையாக இருக்கும். அம்மை வந்ததில் இருந்தே தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்துக்குத் தேவையான தண்ணீர் சத்தையும் தக்க வைக்கும்.

கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன், புதினாவை காயவைத்து அரைத்த தூள் 1 டீஸ்பூன், மர மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், நட்மெக் ஆயில் 2 சொட்டு, ரோஸ்மெர்ரி ஆயில் 1 சொட்டு, சிடர்வுட் ஆயில் 1 சொட்டு எல்லாவற்றையும் சிறிது தண்ணீரில் குழைக்கவும். அம்மைத் தழும்புகளின் மேல் மென்மையாகத் தடவவும். அதை முற்றிலும் காய விடக் கூடாது. லேசான ஈரத்துடன் இருக்கும் போதே குளிர்ந்த தண்ணீர் விட்டு, மென்மையாகக் கழுவி விட வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இப்படிச் செய்து வந்தாலே தழும்புகள் மறைந்து விடும்.

June 29, 2017

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?


கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும்,  தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும் பலருக்கு வழக்கம். அதேபோல  மீன் வாங்கும்போது... அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ்சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு  வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப்போய்... வீட்டுல திட்டு வாங்கி... வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயிருக்கும். எப்படி நல்ல மீன் வாங்குறதுனு  தெரிஞ்சிக்க,

கடல் மீன்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்கிற மீனவர், புது கல்பாக்கம் எஸ்.நாகராஜனை சந்திச்சுக் கேட்டு வந்தோம். அவர் தந்த யோசனைகள் இதோ...

1. மீன், பார்க்கும்போது புதுசா, ப்ரெஷ்ஷா இருந்தா நல்ல மீன்.

2. மீனின் செவுளைத் திறந்து பார்த்தா, செந்நிறமா  இருக்கணும். சாம்பல் நிறமா இருந்தா, அது கெட்டுப்போன மீன்.

3. உங்களுக்குப் பிடிச்ச மீனாக இருந்து, அதை வாங்கியே ஆகணும்னு நீங்க நினைக்கும்போது, அதில் எங்காவது அடிபட்டிருந்தா,  வேண்டாம் விட்டுருங்க.

4. மீனின் கண்கள் மங்கலா இல்லாம, தெளிவா இருக்கணும்.

5. ஐஸ் அதிகம் சேர்ந்த மீன் ஆகாது. ஐஸ் அதிகம் சேர்ந்திருந்தா, மீனின் மேல் விரலால் கோடு போட்டா தெரிஞ்சுடும்.





6. நீங்கள் வாங்கும் மீன் கெட்டுப்போனதா இருந்தா, அது ஃபுட் பாய்ஸன் ஆகும்.

7. செதில் அதிகமா இருக்கிற மீனும், உள்ளே முள் அதிகமா இருக்கிற மீனும் ருசியா இருக்கும். ஆனா, குழந்தைகள் சாப்பிட முடியாது.

8. மீனைத் தொட்டுப் பார்க்கும்போது, நொள நொளனு இருக்கக் கூடாது.

9. நண்டை  கையில் எடுத்துப்பார்க்கும்போது வெயிட்டா இருக்கணும்.

10. பூச்சியைப் போல சிவப்பு நிறத்துல இருக்கிற இறாலை வாங்காம, ஃப்ரெஷ்ஷா, தெளிவா இருக்கிறதை வாங்குறது நல்லது.

இப்படியெல்லாம் நீங்க சரிபார்க்க மார்க்கெட்ல அவகாசம் கிடைக்குமா... மீனைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பாங்களா? அது, உங்கள் சாமர்த்தியம்!

உங்க வீட்டிலும் இனிமே சூப்பர் மீன்குழம்புதான்னு சொல்லுங்க.

June 28, 2017

கண்ணாடி அணியும் பெண்களுக்கு சில மேக்-அப் டிப்ஸ்:


முகத்தின் அழகை மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். ஆனால் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள்  மூக்கு கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் மூக்கு கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான  பொருளாக மாறிவிட்டது. இப்படி கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக் அப் போட வேண்டும் என்ற டிப்ஸ்கள்  கூறப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றி பயன் பெறுங்கள்.

நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்து தான். உங்கள் புருவங்கள் சீர்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை கவனியுங்கள்.  உங்கள் கண்ணாடி புருவத்துடன் போட்டி போட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் புருவங்கள் சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான  வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள். இந்த வகையில் உங்கள் கண்களுக்கு மேக் அப் அங்கீகரிக்கப்படும்.

நல்ல ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள், கறை மற்றும் இழுவுதல் இல்லாமல் சரியாக  இருக்கும். கண் இமை ரோமங்களை சுருட்டி விடுங்கள். மஸ்காராவில் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. அடிப்படை கர்லர் ஒன்றே போதும்  உங்கள் பணியை திறம்பட செய்துமுடித்திட. இதனால் கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களின் கண்களுக்கான மேக்-அப் சிறப்பாக அமையும்.

முடிந்தால் ஐ-ஷேடோ போடுவதை தவிர்க்கவும். நாங்கள் அதை கண்டிப்பாக வேண்டாம் என்று தான் கூறுவோம். அதற்கு காரணம் அது உங்கள்  கண்ணாடியின் பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தங்கள் கண்களுக்கு மேக் அப் போடும் போது இதனை தவிர்க்க  வேண்டும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து  பாருங்கள்.

கண்ணாடி அணிந் திருக்கும் உங்களுக்கு, அதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போகும். உங்கள் கண்களுக்கு அழகு சேர்த்திடும். கண்ணாடி அணிந்திருக்கும்  நீங்கள் கண்களுக்கு மேக்-அப் செய்யும் போது, நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை(மெல்லியது அல்லது தடியானது) என்பதை தெளிவாக கூற  வேண்டும். ஒருவேளை உங்கள் கண்கள் பெரியதாக தெரிந்தால், அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு,  கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற, சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.  கண்ணாடி அணிந்தவர்கள் கண்களுக்கு மேக் அப் போடும் போது அதிக முயற்சி இல்லாமல் இது உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும்.  ப்லஷரை மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக் அப் செய்யும் போது கன்னங்களில் பிங்க் நிற ப்லஷரை  பயன்படுத்தினால் உங்கள் மேக் அப் சோடை போகாது. உங்கள் தோற்றமும் பனித்துளியை போல விளங்கும்.

June 27, 2017

தொப்பையை குறைக்க உதவும் கொள்ளு ! - வீடியோ


கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல், கொழுப்பு தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளு பருப்புக்கு உண்டு. மேலும், இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளு பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.  கொள்ளு பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.

உடல் உறுப்புகளை பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். பெண்களுக்கான வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும். மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும், அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியை தூண்டும். தாதுவை பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக்கூடியது. கடினமான பணிகளை செய்யும் குதிரைக்கு நம் முன்னோர் கொள்ளு அளித்தனர். இதில் இருந்தே அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

குளிர்காலத்தில்தான் அதிகம் சளிபிடிக்கும். இந்த காலங்களில் கொள்ளு சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து, பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.

நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து, அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.

பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கேமராக்கள்


பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமரா மூலம் படமெடுத்து அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகிவருகிறது.

ஆடை விலகிய நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருகிறதா என்பதில் கவனம் செலுத்தவும்.

பொது கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொது குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் போது வேலை நிமித்தமாக அங்கு ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும் கழிப்பறை குளியலறைளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும்.

தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கேமராக்க்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம் கவனம் தேவை.
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளை போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும்.

அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளை பயன்படுத்தும் பெண்கள் மிகமிக கவனமாக இருக்கவேண்டும்
அங்கு கண்டிப்பாக தங்களை கண்காணிக்க கேமராக்க்கள் பொருத்தப்பட்டிருக்கும். வேறுநோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும்.

கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு. இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும், ஆனால் மறுபக்கதிலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் நம்மை காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.
இந்த உடைமாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கருத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலே நம்மை படம், வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது.

இதுபோன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக்கொள்ளவும் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அபூர்வ குரங்கு பெண்



மெக்சிகோ நாட்டின் சினாலோ என்னுமிடத்தில் அபூர்வ மரபு நிலையுடன் முகம் மற்றும் உடல் முழுக்க முடியுடன் ஒரு பெண் வாழ்ந்து வந்தார்.
வித்தியாசமான உடல் அமைப்புடன் 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜூலியா பாஸ்ட்ரானா என்ற அந்த பெண்ணை மக்கள் "குரங்கு பெண்” என்றே செல்லமாக அழைத்தனர்.

அப்போது வித்தை காட்டும் ஒருவர், அவரை அமெரிக்க முழுக்க அழைத்து சென்று நிகழ்ச்சி நடத்தினார். 20 வயதான அந்த புரதான அபூர்வ மெக்சிகன் பெண் ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு சென்று மக்களை மகிழ்வித்தார்.
சிறு வயதிலிருந்தே பல்வேறு உடல் கோளாறுகளை சந்தித்த அவர், லென்ட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்பு ஒரு குழந்தையுடன் ரஷ்யாவில் வாழ்ந்தபோது 1860ம் ஆண்டு அவரும், அவரது குழந்தையும் இறந்துவிட்டனர்.

பின்னர் நோர்வே நாட்டில் பதப்படுத்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், மெக்சிகோ அரசின் வேண்டுகோளுக்கு பின்னர் சினாலோவிற்கு கொண்டுவரப்பட்டது.

காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த அபூர்வ பெண்ணின் உடல் கடந்த செவ்வாய் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அபூர்வ குரங்கு பெண்ணான இந்த பாஸ்ட்ரானாவைப் போல் இனி யாரையும் நாங்கள் பார்க்கப்போவதில்லை என்று மெக்சிகன் மக்கள் கூறினர்.

June 20, 2017

கோடைக்காலத்திற்கு ஏற்ற புத்திசாலித்தனமான சில ஐ-லைனர் ஐடியாக்கள்!


முகத்திற்கு மூலதனமாக இருக்கும் கண் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் மிகவும் சிறந்த மற்றும் கவர்ச்சியான கண்களைக் கொண்டு மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். 

எந்தவொரு பெண்ணுக்கும் அவள் தன்னுடைய கண்ணுக்கு செய்து கொள்ளும் மேக்கப் பற்றிய கர்வம் இருக்கும். ஐ-லைனர்களை கண்களுக்கு தீட்டுவதில் சிறந்த அனுபவமும் மற்றும் நிறைவும் இருக்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையெல்லாம் விருப்பமாக உள்ளனவோ, அவற்றையெல்லாம் இங்கே நீங்கள் பயன்படுத்த முடியும். இதோ ஐ-லைனர்கள் எங்கெல்லாம், எந்தவகையில் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி சில வழிமுறைகளை உங்களுக்கு கொடுக்கிறோம். படித்துப் பயன் பெறுங்கள்.

சிறகு போல தீட்டுங்கள் 

பூனை விழிகளைக் கொண்டு நாடகம் நடத்த வேண்டும் என்று நினைத்தால், சிறகு போன்ற வடிவில் ஐ-லைனர்களை மிகவும் அச்சாக தீட்டிக் கொள்ளுங்கள். இந்த வழிமுறை சற்றே எளிமையானது. மொத்தமான லைனரை முதலில் கண்ணின் மேல் மடல் பகுதியிலும், பின்னர் கீழ் பகுதியிலும் தீட்டி விட்டு, கண்ணின் வெளி முனைப்பகுதி வரை சிறகு போல நீட்டி விட்டால், நாடகத்திற்கு நீங்கள் தயார்! 

பட்டையாக தீட்டுங்கள் 

ஐ-லைனர்களை பட்டையாக தீட்டிக் கொள்வது இப்பொழுது பலரின் விருப்பமாகிக் கொண்டுள்ளது. இது கண்களுக்கு பெருமளவு கவர்ச்சியையும் பார்வைக்கு அர்த்தத்தையும் கொடுக்கிறது. கண்களின் இரு மடல்களிலும் சாதாரணமாக தீட்டுவதைப் போல ஐ-லைனரை தீட்டி விட்டு, அதன் மேலாக இலேசாக அழுத்தம் கொடுத்து லைனரால் தேய்க்கவும். குறிப்பாக கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியின் முனைகளில் இவ்வாறு தேய்க்க வேண்டும். இயல்பாகவும் மற்றும் தத்ரூபமாகவும் கண்களைத் தோற்றமளிக்கச் செய்ய விரும்பினால், கருமையான வண்ணத்தைப் பயன்படுத்துங்கள் மற்றும் அதை நன்றாக கலவையாக்கி லைனர் கொடுங்கள். 

360 டிகிரிகள் 

இது மிகவும் பிரபலமாக இருக்கும் மற்றுமொரு ஐ-லைனர் வழிமுறையாகும். சமமாகவும் மற்றும் சரியாகவும் கண்களைச் சுற்றிலும் லைனரை தீட்டி வைத்தால், நீங்கள் தயாராகி விட்டீர்கள். இதனை இரவு நேரங்களில் கூடும் போதும், சாதாரண நேரங்களிலும் மேக்கப் ஆக போட்டுக் கொள்ளலாம். 

மாறுபட்ட தொடர்புகள் 

ஒன்றுக்கொன்று மாறுபட்ட வண்ணங்களை இணைத்துக் கொள்வது இன்றைய ஹாட் டிரெண்டாக உள்ளது. வெள்ளை அல்லது அது போன்ற லைட்டான வண்ணத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை கண் மடல்களிலும் மற்றும் முன்நெற்றியின் மேலும் தடவுங்கள். பின்னர் நீங்கள் பயன்படுத்தும் லைனரை எடுத்து, வழக்கமாக தீட்டுவதைப் போல தீட்டிக் கொண்டு கண்ணாடியைப் பாருங்கள். உங்கள் உருவத்தில் பெருத்த சந்தோஷ மாற்றம் தெரியும். 

கேக் லைனர்கள் 

1930 மற்றும் 40-களில் பிரபலமாக இருந்த கேக் லைனர்கள், மீண்டும் பிரபலமாகத் துவங்கியுள்ளன இந்த நவீன யுகத்தில்! கேக் லைனர்கள் அதிகமான சக்தியை செலவு செய்யாமலேயே, மிகவும் தத்ரூபமான மற்றும் உறுதியான தோற்றத்தை உங்களுடைய முகத்திற்கு கொடுக்கின்றன. இந்த ஐ-லைனரை ஐ-லைனர் பிரஷ்ஷின் துணையுடன் மட்டுமே தீட்டிக் கொள்ள முடியும். 

கண்களுக்கு வண்ணம் சேருங்கள் 

உடைகள் அல்லது மேக்கப் என எந்தவொரு டிரெண்ட் மற்றும் வகை என எதுவாக இருந்தாலும் வண்ணங்கள் அதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருப்பு நிறத்திற்கு மேலாக வண்ணத்திலான ஐ-லைனர்களை அடித்துக் கொள்வது இந்த காலத்தில் பிரபலமாகி வருகிறது. எனவே, நீங்கள் எந்த வகை ப்ளவுஸ் அல்லது மேலாடையை அணிந்தாலும், அதே வண்ணத்தைக் கண்களுக்கு சேர்த்துக் கொண்டு உங்களை தத்ரூபமாகவும் மற்றும் கவர்ச்சியானவராகவும் காட்டிக் கொள்ளுங்கள்.

தம்பதியர் இடையே அடிக்கடி சண்டைகள் வரக்காரணம் ?


கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும்.

தம்பதியர் இடையே அடிக்கடி சண்டைகள் வரக்காரணம்
தற்போது எதற்கெடுத்தாலும் எதிரும், புதிருமாக முட்டி மோதிக் கொள்ளும் தம்பதியர் பெருகிவிட்டார்கள். எல்லாவற்றுக்குமே தீர்வு இருக்கிறது. பரஸ்பரம் புரிந்து கொள்வதில் இருக்கிறது பாதி வாழ்க்கை, விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது மீதி வாழ்க்கை. எப்போது கணவன், மனைவியின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும், எப்போது யார் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது புரியாமல்தான் அத்தனை பிரச்சினைகளும்.

இதற்கு ஒரே தீர்வு மனம் விட்டுப் பேசிக்கொள்வதுதான். ஆமாம், கணவனும், மனைவியும் கொஞ்சிப் பேச கொஞ்ச நேரம் ஒதுக்கினால், பிரச்சினைகள் தானே ஒதுங்கிப்போய்விடும். வாருங்கள் தம்பதியரின் புரிந்துணர்வை அதிகரிக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வோம்…

அலுவலக பிரச்சினைகளை கணவர் மனைவியிடம் கூறலாம். உடல்–மனநல பிரச்சினைகளை மனைவி கணவரிடம் கூறலாம். இப்படி பகிர்ந்து கொள்வது ஆறுதல் அளிப்பதுடன், அன்பை வலுப்படுத்தும். ‘நமக்காக ஒருவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையை வளப்படுத்தும்.

ஏதோ காரணத்தால் பிரச்சினை பெரிதாகும்போது யாராவது ஒருவர் மவுனம் காத்தால் தீர்வு விரைவில் எட்டப்படும். ஒருவர் மவுனத்தைப் புரிந்து கொண்டு மற்றவர் பேசுவதை குறைக்கலாம். பிறகு அந்த மவுனமே இருவரும் சிந்திக்கும் நிலையைத் தூண்டும். அதுவே தன்பக்க தவறை உணரும் வாய்ப்பாக மாறும். தவறுகள் உணரப்பட்டால் சமாதானம் மலரும்.

கர்வம் பார்க்காமல் மன்னிப்பு கேட்கப் பழகிவிட்டால் தம்பதியருக்குள் பிரச்சினைகள் மறைந்துவிடும்.

இருவருக்குமே தன்மான உணர்வுகள் உண்டு, இணைந்து வாழ்வதே இல்லறம். அதில் இருவருக்கும் சமபங்கு, உரிமை இருக்கிறது. ‘அவர்/அவள் இறங்கி வரட்டும்’, ‘ஆண் இல்லாமல் அவளால் என்ன செய்ய முடியும்?’ என்பது போன்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால், அது பிரிவினையில்தான் கொண்டுபோய்விடும். பிறகு பிரிவுதான் இருவருக்கும் பாடம் கற்பிக்கும்.

தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டால் உங்களுக்குள் பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் சிறிது இடைவெளி பராமரித்து பின்பு கூடிக்கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி கேவலமாக பேசுவது கூடாது.

தாம்பத்தியம்தான் தம்பதியரின் அடிப்படை உறவு. தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால், பெரிய பிரச்சினைகளும் தானாக ஓடி மறைந்துவிடும். கோபம், பொறாமை, வஞ்சனை, தலைக்கனம் போன்ற எல்லாவற்றையும் வெளியேற்றும் ஆற்றல் தாம்பத்தியத்திற்கு உண்டு. கணவன், மனைவி இருவருமே பாலியல் தேவைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே, இல்லற பிரச்சினைகள் பல இல்லாமல் போய்விடும்.

புரிதல் இல்லாமல் புலம்புவதைவிட்டு, வெளிப்படையாகப் பேசி, விட்டுக் கொடுத்து வாழ்வதே உறவு பேணும் கலை என்பதை உணருங்கள்.

June 17, 2017

இந்தியாவில் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள்.. அதிர்ச்சியளிக்கிறது புள்ளி விவரம்


டெல்லி: இந்தியாவில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்பது தேவைக்கு ஏற்ற வகையில் இல்லை என்பது புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய தொழிலாளர் சந்தை தற்போது ஒரு கட்டமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. 2010-11 மற்றும் 2014-15 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வேளாண் துறையில் அல்லாத துறைகளில் 33 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மெக்கின்ஸி குளோபல் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த துறைகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இதன் பொருளாகும்.
ஆனால், இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்ன தெரியுமா. இதே காலகட்டத்தில் வேளாண் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் 26 மில்லியன் அளவுக்கு சரிவடைந்துள்ளன. எனவே, 2010-11 மற்றும் 2014-5க்கு உட்பட்ட நான்கு வருட காலப்பகுதியில் நிகர வேலை வாய்ப்பு அதிகரிப்பு என்பது ஆண்டுக்கு 7 மில்லியன் என்ற அளவாக மட்டுமே உள்ளது.
இக்காலகட்டத்தில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு 456 மில்லியனிலிருந்து 463 மில்லியனாக அதிகரித்துள்ளது. மொத்த அளவில், வேளாண் அல்லாத துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதை போல தெரிந்தாலும் கூட, இந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை, வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஈடு செய்யும் அளவுக்கு இல்லை. மிக குறைவாக உள்ளது.
வேலை வாய்ப்பு ஆய்வு என்பது, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மற்றும் வேலைத் தொழிலாளர் குழுவின் வருடாந்திர ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை. எனவே இந்த ஆய்வு ஏறத்தாழ துல்லியமானது.
2011-2012ல் உலகெங்கிலும், பொருளாதார மந்த நிலை காணப்பட்டது. அக்காலகட்டத்தில் 11 மில்லியன் வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டது, குறைவாக இருந்தது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 22 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்பு வளர்ந்தது. வர்த்தகம், விருந்தோம்பல் (hospitality), கட்டுமானம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்த வேலைகள் பெருமளவில் உருவாக்கப்பட்டன, அதே நேரத்தில் சுரங்கம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகள் சரிந்துவிட்டன.
மொத்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம், 2011 ல் 55.4 சதவிகிதத்திலிருந்து 2015ல் 52.4 சதவிகிதம் என்று வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்த நிலை தொடர்ந்தால் வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

June 15, 2017

ரயிலில் தனியே பயணிக்கும் பெண்களுக்கு 10 டிப்ஸ்கள்


1.நீங்கள் தனியாக ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டால், டிக்கெட் முன்பதிவின்போதே பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் டிக்கெட் புக் செய்யுங்கள்.

2. ஏற்கனவே எந்தத் திட்டமிடாமல் இல்லாமல் அவசரமாக பயணம் செய்யும்போது, முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்ய நேரிடும். அப்படிப்பட்ட சூழலில்கூட பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக பெட்டியில் பயணம் செய்யலாம்.

3. படுக்கை வசதியுடன் டிக்கெட் முன்பதிவின்போது அப்பர் பெர்த் எனும் மேல்வரிசை படுக்கையினைத் தேர்வு செய்யலாம். இது தனியாக  செல்லும் ரயிலில் செல்லும்பெண்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும், பயணம் செய்ய உகந்ததாகும்.

4. நீங்கள் தனியாக பயணம் செய்யும் போது, உங்களுடன் பயணிப்பவர்களுடன் அதிகம் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். பேசியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களைப் பற்றிய எல்லா தகவலையும் அவர்களிடம் கூறாமல், ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லவும். உங்கள் தனிப்பட்ட விபரங்கள், முகவரிகள், தொடர்பு எண்கள் ஆகியவற்றை ஒருபோதும் எவரிடமும் பகிராதீர்கள்.

5. ரயில் பயணத்தின்போது செல்போனில் பேசநேர்ந்தால் மிக மெதுவாக அடுத்தவருக்கு கேட்காதவண்ணம் பேசவும். நீங்கள் சப்தமாக பேசினால் அதிலிருந்து அவர்கள் உங்களைப்பற்றி தகவல்களை தெரிந்து கொள்ளநேரிடும்.இவை தேவையில்லாத பிரச்சணைகளுக்கு ஆரம்பமாக அமையலாம்.

6. எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் உடனடியாக டிக்கெட் பரிசோதகரை அணுகி புகார் செய்யவும். மிகவும் அவசரம் என்றால் அந்த இடத்தைவிட்டு உடனே நகர்ந்துவிடவும்.

7. ரயிலில் பயணம் செய்ய தேவையான முகவரிச்சான்று இருக்கிறதா என்பதை ஒரு முறை செக் செய்து கொள்வது அவசியம். அப்படி நீங்கள் மறந்து விட்ட சூழலிலும் டிக்கெட் பரிசோதகரிடம் தகவலைத் தெரிவித்து அதற்கான கட்டணத்தை கட்டவும். பதற்றத்தில் மற்றவர்களிடம் உதவியை நாடி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

8. நீங்கள் கொண்டு செல்லும் பொருட்களைப் பத்திரமாக கையாளுங்கள்.மற்றவர்காளின் முன்னிலையில் உங்கள் பைகளை திறந்து மூடுவதை தவிர்ப்பது நல்லது.

9.. கண்ணுக்கு உறுத்திடாத சாதாரண உடைகளை அணியுங்கள்.

10. அதிக ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்வது, அணிந்து கொள்வதைத் தனியே பயணம் செய்யும் பெண்கள் தவிர்த்து விடுங்கள்.