Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

July 18, 2017

கணவன் மனைவி விவாகரத்து வழக்கு


நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?"

அப்பாவி கணவர்: "அய்யா! நான்
ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்பரம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க.

சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார்.

வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?

பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க.

வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?"

பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?

வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது.

பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்.

வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா?

பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க.

வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை?

பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு.

வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா?

பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க.

இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?"

பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன மாரடைப்பா வந்திரிச்சு

July 11, 2017

வண்டிக்கு ரெட்டை ஜடை ! என்ன டிசைனோ ? என்னா ஒரு வில்லத்தனம் ? ப்ளீஸ் படிங்க பாஸ்.....


ம் ஆட்கள் ஓப்பனிங் எல்லாம் நன்றாகத்தான் கொடுப்பார்கள். ஆனால், போகப் போக என்ன ஆகும் தெரியுமா?
 புதுசா ஆரம்பிச்ச டீக்கடையில் கஸ்டமர்களை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். கொஞ்ச நாளிலேயே கீழே விழுந்த வடையைக்கூட நமக்கு பிளேட்டில் வைத்து தருவார்கள். உங்களுக்கெல்லாம் கிருமி போஜனம் தாண்டி!

 புதுசா பைக் வாங்கிய பக்கிகள், பைக்குக்குக் கொசு கடிக்கக் கூடாது எனப் போர்வையெல்லாம் போத்துவார்கள். ஆனால், சில வாரத்திலேயே வண்டிக்கு ரெட்டைஜடை போட்டது போல் இண்டிகேட்டர்கள் தொங்கிப்போய் கிடக்கும். என்ன டிசைனோ?

 புது மொபைலில் சின்னக் கீறல் விழுந்தாலும் பாத்ரூமுக்குள் சென்று அழுதுவிட்டு வருவார்கள். சில வாரங்களில், புது மொபைல் வாங்கும் நோக்கில் வைத்திருக்கும் மொபைலைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுவார்கள். என்னா ஒரு வில்லத்தனம்!

 புதிதாய் ஆரம்பித்த வாட்ஸ் அப் குரூப்பில் டைமிங்கில் கவுன்டர் அடிப்பதே சிரமம். நொடிக்கு நொடி மெசேஜ்கள் பறக்கும். சில வாரங்களில் குட்மார்னிங் அனுப்பினால் பதிலுக்கு ஒருவன் மறுநாள் சாயங்காலம் குட்ஈவ்னிங்னு மெசேஜ் வரும். ஹலோ... யாருனா இருக்கீங்களா?

 புதிதாய் நடிக்க வந்த ஹீரோயின்கள் ‘கிளாமர் எனக்கு செட் ஆகாது. கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன்’ என பேட்டி கொடுப்பார்கள். போகப் போக என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும் மக்களே!

 புதிதாய் சென்னைக்கு வேலைக்கு வந்தவர்கள் டிராக் பேன்ட்டில் கோடு போட்ட சட்டையை இன் ஷர்ட் பண்ணிக்கொண்டு வித்தியாச ரோலில் திரிவார்கள். முதல் மாசம் சம்பளம் கைக்குக் கிடைத்ததும் மன்சூர் அலிகான் போல் இருந்தவர்கள் சல்மான் கான் போல் மாறிவிடுவார்கள். எத்தனைப் பேரைப் பார்த்திருக்கேன்!

 காதலிக்க ஆரம்பித்த சமயம் சார்ஜ் போட்ட மாதிரியே போன்ல பேசி காது வெந்து போய் அலைவார்கள். மூணே மாதம், காதலி போன் செய்தால்கூட காதில் விழாதது போல் இருப்பார்கள். கொசுத்தொல்லை அதிகமா இருந்துச்சுனா சைலன்ட் மோட்.

 புதிதாய் வேலைக்குச் சேர்பவர்கள் ஐந்து நிமிஷத்துக்கு முன்னாடியே வேலைக்கு வந்துவிடுவார்கள். நான்கே மாதம், சாவகாசமாய் டீக்கடையில் லெமன் டீ அடித்துவிட்டு அரைமணி நேரம் லேட்டாக வரும் வித்தையைக் கற்றுக்கொள்வார்கள். நான்லாம் வேலைக்குச் சேர்ந்த நாளில் இருந்தே லேட்டுதான் பாஸ்!

 இன்டெர்நெட் கனெக்‌ஷன் புதுசா போட்டவர்கள், அறிவை வளர்த்துக்குவோம்னு நினைச்சு பல அறிவு சம்பந்தமான தளங்களைப் பார்ப்பார்கள். இரண்டே வாரத்தில் பலான வெப்சைட்டுகளை ஓப்பன் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வேண்டாம்டா... தாத்தா சொல்றதைக் கேளுங்கடா!

July 1, 2017

ஜக்கு - மக்கு ஜோக்ஸ்!


மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!

ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?

மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு

ஜக்கு: இது கூட தெரியலையா?

மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்!

-------------------

மக்கு: இதான் என்னோட குழந்தை

ஜக்கு: ரொம்ப அழகா இருக்கே! என்ன பேரு?

மக்கு: அதைத்தான் நானும் கேக்கறேன், ஆனா அது பேசறதே புரியமாட்டேங்குது.
---------------

கிரிக்கெட் போட்டியில் மக்கு!

நடுவர் மக்குவிற்கு எல்.பி.டபிள்யூ அவுட் கொடுக்கிறார். மக்கு திட்டிக் கொண்டே வருகிறான்.

ஜக்கு: ஏன் திட்ற, பந்து பேட்ல பட்டுச்சா?

மக்கு: இல்லை!

ஜக்கு: பின்ன பந்து ஸ்டம்பை விட்டு வெளியே போற பந்தா?

மக்கு: இல்ல கால்ல பட்டு அவ்வளவு தூரம் போகுது அதுக்கு போய் எல்.பி. கொடுப்பானா?

ஜக்கு: ஏண்டா மக்கு காலைல ஏன் உங்க அப்பா உன்னைப் போட்டு அடிச்சாரு?

மக்கு: ஆமாம்! கோழிக்கு தண்ணி வச்சேன்!

ஜக்கு: அதுக்கு போயா அடிச்சாரு?

மக்கு: சுடுதண்ணி வைடா அப்பத்தான் கோழி முட்டை போடும்போது அவிச்ச முட்டையா போடும்னு எங்க தாத்தா சொன்னதைப் போய் நம்பித் தொலைச்சேன்.
----------------

மக்கு நாய் வாங்கச் செல்கிறான்...!

கடைக்காரர்: இந்த நாயோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா, அதோட ஒரு காதை திருகினீங்கன்னா நீங்க சொல்றதக் கேக்கும் இன்னொரு காதைத் திருகினீங்கன்னா இப்ப டைம் என்னன்னு சொல்லும்.

மக்கு: 2 காதையும் திருகினா?

நாய்: கடிச்சுக் கொதறிப்புடுவேண்டா ராஸ்கல்!
---------------

மக்கு: என்னோட அதிர்ஷ்டமான நாள் 7ஆம் தேதி, பேங்க்ல போய் 7000 ரூபா எடுத்துகிட்டி ரேசுக்குப் போனேன். அங்கேயும் 7 குதிரைங்க.

ஜக்கு: ஜெயிச்சுதா?

மக்கு: 7வதா வந்துச்சு.
ஜக்கு: யாரோ ஒரு மாசமா தினம் காலிங் பெல்லை அடிச்சுட்டு ஓடிப்போயிடறாங்க! பெரிய தொல்லையாப் போச்சு.

மக்கு: நீ ஏன் காலிங் பெல்லை வெளில வச்ச?
-------------------

மக்கு: டிரெயின்ல கடைசி கோச்ல உக்காந்ததால டீ, காபி, டிபன் எதுவும் வர மாட்டேங்குது.

ஜக்கு: புகார் கொடுக்க வேண்டியதுதான?

மக்கு: கொடுத்தும் ஒண்ணும் பிரயோஜனமில்லை.

ஜக்கு: என்ன புகார் கொடுத்த?

மக்கு: கடைசி கோச்சை எடுத்து நடுவுல போடச்சொல்றேன்,ஒரு பய கேக்கமாட்டேன்கிறான்.
---------------

ஜக்கு: அக்கவுண்டண்ட் வேலைக்குப் போனியே என்ன ஆச்சு?

மக்கு: செலெக்ட் ஆகல! ஆனா வருஷத்துக்க்கு 84,000 சம்பளம்!

ஜக்கு: ஏன் நல்ல சம்பளம்தான!

மக்கு: நல்ல சம்பளம்தான், வருஷத்துக்கு 84,000ம்னா மாசத்துக்கு எவ்வளவுன்னு கேட்டேன்.

June 27, 2017

சிரிங்க... சிரிங்க... சிரிச்சுட்டே இருங்க


1) மனைவி : நீ தான் என்னோட புருஷனா வரப் போறேனு ஸ்கூல்ல படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

கணவன் : அப்படியா...! ஆச்சிரியம்மா இருக்கே ..!!

மனைவி : ஆமா .!! நீயெல்லாம் பெரியவளாகி பன்னி மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லுவாங்க...!!

கணவன் ???????

2) டாக்டர் : என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?

பேசண்ட் : பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!

டாக்டர் : ??????

3) மனைவி : ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!

கணவன் : பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி...!

மனைவி : ?????

4) தோழி 1 : அவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?"

தோழி 2 : "நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."

தோழி 1 : ?????

5) நண்பர் 1 : "என்னாடா ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

நண்பர் 1 : "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "

நண்பர் 1 : ??????

6) மாணவிகள்: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்ப்யூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?

மாணவர்கள்: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் "புக்"கையே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?

மாணவிகள்: ?????

7) சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார்.. நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.. அதான்

சர்தார் 1 :????

8) மகன் : அப்பா நம்ம வீட்டில் காக்கா கத்தினா சொந்தகாரங்க வருவாங்காளா??

அப்பா : ஆமாம் டா செல்லம்

மகன் : அப்படினா எப்ப திரும்ப அவங்க போவாங்க அப்பா ?

அப்பா : உன் அம்மா கத்தினா போய்டுவாங்க டா

மகன் : ?????

9) டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

டாக்டர் : ?????

10) நோயாளியின் கணவன் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''

டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?

நோயாளியின் கணவன் : ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

டாக்டர் : ??????

June 14, 2017

ஜக்கு - மக்கு ஜோக்ஸ்!


ஜக்கு: ஏண்டா மக்கு ஒரு கால் பிளாட்பாரத்திலயும், ஒரு கால் ரோடுலையும் வச்சு நடக்கற?

மக்கு: நல்லவேளை ஞாபகப் படுத்தினடா ஜக்கு, நான் கூட எங்க நொண்டியாயிட்டேனோன்னு பயந்தே போயிட்டேன்.
-------------------

ஜக்கு: என்னடா 5 மணிக்கு வரேன்னுட்டு ஆறரை மணிக்கு வர்ற?

மக்கு: ரோடுல ஒத்தன் 500ருபா நோட்டைத் தொலைச்சுட்டு தேடிக்கிட்டு இருந்தான்!

ஜக்கு: பரவாயில்லையே! தேடி எடுத்துக் கொடுத்தியா?

மக்கு: இல்லை அவர் போற வரைக்கும் நோட்டு மேலேயே நின்னுகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு.
---------------------

மக்கு: ஏன் எல்லாம் ஓடறாங்க?

ஜக்கு: இது பேர் ஓட்டப்பந்தயம் 'கப்' கிடைக்கணம்னு ஓடறாங்க.

மக்கு: யார் கப் வாங்குவாங்க?

ஜக்கு: யார் பர்ஸ்ட் வராங்களோ அவங்க கப் வங்குவாங்க!

மக்கு: அப்பறம் எதுக்கு எல்லாரும் ஓடறாங்க?
மக்கு: என் பையன் தங்கமானவன்டா!

ஜக்கு: எப்படி சொல்ற?

மக்கு: சிகரெட், தண்ணி, பொம்பள... எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

ஜக்கு: உன் பையனுக்கு என்ன வயசு?

மக்கு : ஒரு வயசு.
----------------------

ஜக்கு: தெரியாம கவர்ல 4 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டிட்டேன். 2 ரூபாக்கு ஒட்டினாலே போதும்.

மக்கு: அதனால என்ன? இன்னும் 2 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கு

ஜக்கு: எதுக்கு அதான் 4 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஒட்டியிருக்கேனே

மக்கு: இன்னொரு 2 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வாங்கி, கவர்ல ஒட்டி நடுப்பற மைனஸ் ஸ்டாம்புன்னு எழுதிடு!
----------------

ஜக்கு: ஏய் மக்கு எங்க போய்கிட்டிருக்க?

மக்கு: தொவரம் பருப்பு வாங்க மீனாட்சி மெடிக்கல்ஸ் போயிட்டு இருக்கேன்.

ஜக்கு: பருப்பு வாங்க எதுக்குடா மெடிக்கல் ஷாப்பு?

மக்கு: மீனாட்சி + மெடிகல்ஸ்னு போட்டுருக்கானே.
--------------------

ஜக்கு: வாடா சும்மா பீச்சுக்கு போயிட்டு வரலாம்...

மக்கு: நா வர்லப்பா... அங்க ஒரே மண்ணா இருக்கும்!

June 3, 2017

ஒரு பறவை, ஒரு பிராணி .. ஒரு காமடி பீசு இரு சர்ச்சைகள்!


ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி தனது பணிக்காலத்தின் கடைசி நாளில் கூறிய இரு கருத்துகள் நாட்டில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டன. ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த அவர், "பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹிங்கோனியா என்ற இடத்தில் அரசே நடத்தி வரும் பசுப்பாதுகாப்பு மையங்களில் பல பசுக்கள் மர்மமாக இறந்ததது குறித்த வழக்கு 2011ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அது தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, "மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பசுவைத் தேசிய விலங்காக அறிவிப்பது குறித்து பரிசீலிக்கவேண்டும்" என்று கூறினார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர்..
அதையடுத்து அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். வழக்கு விசாரணைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், "இவ்வாறு கூறியது எனது யோசனையே தவிர, உத்தரவல்ல" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக நீதிபதிகள் நீதிமன்றத்தில் கூறுவது உத்தரவு, தீர்ப்பு, ஆணை என்றுதான் எடுத்துக் கொள்ளப்படும். அவர்கள் தனிப்பட்ட முறையில் பேட்டியிலோ, செய்தியாளர் கூட்டத்திலோ, பொதுக் கூட்டத்திலோ கூறுவது வேண்டுமானால் யோசனை என்று கருதலாம். எனினும், நீதிமன்றத்தில் கூறியது தொடர்பாக நீதிபதி சர்மா பின்னர் விளக்கியிருப்பது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் தவிர்க்கும் முயற்சி என்றுதான் கருத வேண்டும்.

பசுவின் பிரச்சினை
"இதை அரசியலாகப் பார்க்காதீர்கள். பசுவின் பிரச்சினையாகப் பாருங்கள்" என்று கூறியிருக்கிறார். பசுவின் பிரச்சினையாகப் பார்ப்பதாக இருந்தால், நாட்டில் பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பால் வளம் பெருக நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுக்கள் சுற்றுச் சூழலாலும் நோய்த் தொற்றினாலும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கலாம்.

மயிலை காக்க வேண்டும்
ஒரு வேளை சர்ச்சைக்குரியதாக இல்லாவிட்டாலும் பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க இயலுமா என்பது கேள்விக் குறியே. காரணம், இந்தியாவின் அழிந்து வரும் இனமாகவும் வன உயிரினம் என்பதாலும் இருப்பதால்தான் புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலும் அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அரசின் அடிப்படை நோக்கம். அதனால், அவற்றை தேசிய உயிரினங்களாக அறிவித்தனர்.
பசுக்கள் அப்படியில்லை. கால்நடைகளின் பெருக்கம், எண்ணிக்கை நாடு முழுவதும் பரவலாகவே இருக்கிறது. தவிர, பசு வன உயிரினம் அல்ல. வீட்டு விலங்கு. அதனால், அதைக் காப்பதில் இயல்பாகவே மக்களுக்கு அக்கறை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அதை தேசிய விலங்காக அறிவிப்பது பயனற்றது.

இந்தியாவின் பண்பாடு
பன்றியைக் கொன்று இறைச்சி உண்பதை சில மதத்தினர் ஏற்பதில்லை. அதற்காக பன்றியைத் தேசிய விலங்கு என அறிவிக்க வேண்டும் என்றா கோருகிறார்கள். பசுவதையைப் பிரசாரம் செய்வது மதவாத அரசியலுக்குத் தூண்டுகோலாகிவிடுவது கவலை தருகிறது.
காரணம், எந்த மதத்தினராக இருந்தாலும், இந்தியாவின் பண்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டுதான் இந்த மண்ணின் மைந்தர்களாக வசிக்கிறார்கள். பசு இறைச்சி உண்ணாத முஸ்லிம்களும் பலர் உண்டு. பசு இறைச்சி உண்கிற இந்துக்களும் உண்டு. எனவே, இப்போதைய நிலை நீடித்தாலே போதும்.

 மயில்கள் கர்ப்பம்
நீதிபதி சர்மா கூறிய இன்னொரு கருத்து நகைப்புக்குரியதாக ஆகிவிட்டது. நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது, கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு விசாரணையில் மயில்கள் உடலுறவு கொள்வதில்லை என்று கூறியிருப்பதாக தீர்ப்பின் நகலை அளித்திருக்கிறார்.
அதில், கேஷ்புரா என்ற கிராமத்தில் 17 வயது இளைஞன் 12 மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற வழக்கில் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரம்மச்சாரி மயில்கள்
"மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் அது உடலுறவு கொள்ளாத உயிரினம். ஆண் மயில் விடும் கண்ணீரைப் பருகும் பெண் மயில் கருவுறும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான அறிவியல் ஆதாரத்தை நிருபர்கள் கேட்டதற்கு, "அறிவியல் நோக்கத்துடன் பார்க்காதீர்கள். பாகவத புராணத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

உடல் கழிவுகள்
உயிரியல் விஞ்ஞானத்தின்படி பறவைகள் உடலுறவு கொள்ளாமல் கருவுற இயலாது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கண்ணீரில் விந்தணுக்கள் இருப்பதாக எந்த விஞ்ஞானமும் கூறவில்லை. கண்ணீர், வியர்வை, சிறுநீர் ஆகிய மூன்றும் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் என்று அறிவியல் நிரூபித்துள்ளது. அப்படியே விந்தணுவைப் பருகுவதால் எந்தப் பெண்ணினமும் கருவுறவும் சாத்தியமேயில்லை.

விஞ்ஞானம் சொல்வதென்ன
ஆண் உயிரின் விந்தில் உள்ள கருமுட்டை பெண் உயிரின் கருமுட்டையுடன் இணையும்போதுதான் கருவுருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எந்தத் திரவத்தை அருந்தினாலும், உடலுக்கு ஊறு இல்லாத நிலையில், அதன் நீர்ச்சத்து உடலால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படுமே தவிர, கருப்பைக்கே செல்லாது என விஞ்ஞானம் தெளிவுபடுத்துகிறது.

சர்ச்சை கருத்துக்கள்
சமூகத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பது தவறில்லை. ஆனால், பொதுவாக இப்படிக் கூறுவது நகைப்புக்குரியதாகவோ சர்ச்சைக்குரியதாகவோ அமையும்.

புராண கதைகள்
சில சித்த மருத்துவர்கள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர் பசுவின் கோமியம், பசுவின் சாணம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். அதே சமயம் அது குறித்து விஞ்ஞான முறையிலான ஆய்வுகள் கூடாது என்று அவர்கள் மறுக்கவில்லை.
இந்து மதத்தில் மட்டுமின்றி, கிரேக்கர்களின் புராணங்களில் பறக்கும் குதிரை, சீனப் புராணங்களில் வரும் நெருப்பைக் கக்கும் டிராகன் போல புனைகதைகள் உண்டு.

அரசியல் வேண்டாம்
இதுபோன்றவற்றைப் படித்து ரசிக்கலாம். நிலாவில் பாட்டி வடை சுட்டதைப் பல காலமாகக் கதை கேட்ட சிறுவர்கள் நிலாவில் ஆர்ம்ஸ்டிராங் கால் பதித்ததையும் கேட்கிறார்கள். கற்பனையை ரசிக்கிறார்கள். விஞ்ஞானத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். மதம் தொடர்பான விஷயங்களை அரசியலுக்குள் இணைப்பது ஆபத்தை விளைவிக்கும்.

June 1, 2017

ஆண் மயில் செக்ஸ் வச்சிக்காதா.. அறிவியல் வாத்தியார் உயிரோட இருக்காரா? நெட்டிசன்கள் பொளேர்


ஆண் மயில் பெண் மயிலுடன் உறவு கொள்ளாது. அதனால்தான் அது தேசிய பறவையாக உள்ளது என்று சொல்லி ராஜஸ்தான் நீதிபதி நெட்சன்களிடம் மாட்டிக் கொண்டார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, "ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை. அது ஒருபோதும் பெண் மயிலுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று அறிவியலுக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒன்றை உளறிக் கொட்டினார்.
இதற்கு நம்ம நெட்டிசன்கள் நீதிபதியை சமூக வலைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில உங்களுக்காக..


சட்டபுத்தகத்திற்கு பதிலாக..
"ஆண் மயில் பிரம்மச்சாரி அதன் கண்ணீர் துளிகளால் தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - நீதிபதி
ஐ திங் இவர் சட்டப்புத்தகத்துக்கு பதிலா செக்ஸ் புத்தகம் படிச்சுட்டார்னு நினைக்கிறேன்" என்று ஆசிக் இலாஹி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 



கிளிகளின் புலம்பல்
"மயில் காட்டுல குஜாலாதான் இருக்கு! உண்மையில கிளிங்க நாங்கதான்டா பிரம்மச்சாரி! கிளிஜோசியம்னு ஒண்டியா அடைச்சி வைச்சிடுறாங்க" என்று குட்டி கிரி பதிவிட்டுள்ளார்.

 





புக்குல வச்சா குட்டி போடுதே.. அப்படியா..
"மயில் கண்ணீரால குட்டி போடும்னு சொல்றப்போ நோட்புக்குக்கு உள்ள வச்சா குட்டி போடும்னு நாம நெனச்சது ஒன்னும் தப்பில்லையே" என்று அஸ்வின் அசி நக்கலடித்துள்ளார்.

 






அறிவியல் வாத்தியார் உயிரோட இருக்காரா?
"மயில் உறவு கொள்ளாது. ஆண் மயிலின் கண்ணீரைக் குடிப்பதன் மூலம்தான் பெண் மயில் கருத்தரிக்கிறது. அதனால்தான் மயில் தேசியப் பறவையாக உள்ளது. - ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மாவுக்கு அறிவியல் பாடம் எடுத்த வாத்தியார் இன்னமும் உயிரோட இருக்காரா தல?" என்று கேட்டுள்ளார் லெமூரியன் வாய்ஸ்.

May 17, 2017

சிரி... சிரி... சிரி... சிரி...


* பிச்சைக்காரன் 1: நான் பிச்சைக்காரன் என்று சொன்ன பின்பும் பேங்க்கில் அக்கவுண்ட் தொடங்க ரேசன் கார்டு இருக்குதா, வாக்காளர் அட்டை இருக்குதான்னு கேட்டாங்க.
பிச்சைக்காரன் 2: அப்புறம் எப்படி கணக்கு ஆரம்பித்தாய்?
பிச்சைக்காரன் 1: மூன்று வருட இன்கம்டேக்ஸ் ரிட்டனைக் காட்டினேன்.


* ஆசிரியர்: மேஜை மீது பத்து ஈக்கள் இருந்தன. நான் அதில் ஒன்றை அடித்தேன். மீதி எத்தனை ஈக்கள் இருக்கும்?
மாணவன்: அடித்தது மட்டும்தான் இருக்கும்.


* "கொஸ்டின் பேப்பர்லே ஏதாவது சந்தேகம் இருந்தா, புரியலேன்னா கேளுங்க?''
"நான் படிச்சுட்டு வந்த கொஸ்டின் எல்லாம் வரலையே சார்?''

* "ஒருவழியாய் படிச்சு டிகிரி வாங்கியாச்சு. அடுத்து என்ன பண்ணப் போற?''
 கும்பகோணம் "டிகிரி' காபி கடை  வச்சு நடத்தலாம்னு இருக்கேன்!


* "என்னது... உங்க வீட்டுக்கு வந்த திருடன் "கத்தி' காட்டியும் நீங்க பயப்படலையா? எப்படி சார்?''
"பதிலுக்கு நான் கத்திக் காட்டினதும் அவன் பயந்து ஓடிட்டான்!''

* டாக்டர்: உங்க மனைவியை தினமும் நடக்கச் சொல்லுங்க.
வந்தவர்: நீங்களே சொல்லுங்க டாக்டர். அவ என் பேச்சை கேட்டு நடக்க மாட்டா.
டாக்டர்: !!!!!!

* மனைவி: எதுக்கு நம்ப வீட்டுல கேபிள் டி.வி.யை கட் பண்ணிட்டீங்க?
கணவன்: நீதானே சொன்ன... சீரியல் பார்க்கலைனா தலை வெடிச்சுடும்னு...
மனைவி: !!!!!!

* அவர்: அந்த ஆளுக்கு உடம்புல ஏகப்பட்ட சுகர் இருக்கு.
இவர்: நிஜமாவா?
அவர்: ஆமாம். டாக்டர் அவரை சுகர் கம்பெனி ஷேர்கூட வாங்க கூடாதுன்னு சொல்லிட்டாரு.

May 16, 2017

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கணினிகளுக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு! - சும்மானாச்சிக்கும்


 ரேன்சம்வேர் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை வைத்து விளையாடி வருகின்றனர் நெட்டிசன்ஸ். வைரஸையே அச்சுறுத்தும் மீம்ஸ்கள் சமூக வளைதளங்களில் குவிந்து வருகின்றனர்.

வழக்கமாக மீம்ஸ்கள் வெளியிட காமெடியன்களின் படங்களை பயன்படுத்தும் நெட்டிசன்கள் இப்போதெல்லாம் செல்லூர் ராஜூவின் படத்தையும் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர்.
ரேன்சம்வேர் வைரஸால் 150 நாடுகளிள் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரேன்சம்வேர் வைரஸையும் ஹேக்கர்களையும் கலாய்த்து மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில...

பாத்து போட்டு குடுங்கயா...
உங்க சிஸ்டம பிளாக் பண்ணிட்டோம்.. 300 டாலர் கொடுத்தாதான் டேட்டா வரும்.. 30 ரூபாய் தர்றேன் அன் பிளாக் பண்றியா? யோவ் சாஃப்ட்வேர்லாம் வச்சி ஹேக் பண்ணிருக்கோம் கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கயா...

எது ரசம் சோறு மோரா?
புதுசா ஏதோ வைரஸ் வந்து இருக்குன்னு சொன்னியே என்ன அது? ரேன்சம்வேர்! எது ரசம் சோறு மோரா? யோவ் ரேன்சம்வேர் யா..

ஒன்னும் இல்ல தம்பி
ஒன்னும் இல்ல தம்பி ஒரு 300 டாலர் கட்டி ரெக்கவரி பண்ணிருங்க.. என ரேன்சம்வேர் வைரஸை கலாய்க்கிறது இந்த மீம்

அடேய் யார்ரா அது?
அடேய் யார்ரா அது ஏடிஎம் க்ளோஸ் பண்றாங்கன்னு வாட்ஸ்அப்ல மெசேஜ் அனுப்பறது..?

நிலவேம்பு கசாயம் உத்தரவு
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கணினிகளுக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு...

April 25, 2017

கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை தின்று ஏப்பம் விட்ட யானை


சிரிப்பதா, திகைப்பதா என்று தெரியாத அளவுக்கு அசாமில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை, பசிகொண்ட யானை தின்று ஏப்பம் விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாம் மாநிலம் சோனிட்புர் மாவட்டத்தில் உள்ள தரஜூலா டி எஸ்டேட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மென்று தின்ற யானை, சிறிது நேரத்தில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டும் வாந்தி எடுத்துவிட்டுச் சென்றது.

காடுகளை அழித்து அப்பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதிக்குள், உணவுக்காக தேடி அலைந்த யானை ஒன்று நுழைந்துள்ளது. அங்கே, தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவில், மளிகை சாமான் முதல் ஹார்ட்வேர் சாமான்கள் வரை விற்பனையாகும் அந்த ஊரின் 'காய்' என்று அழைக்கப்படும் நம்ம ஊர் சூப்பர் மார்க்கெட்டு ஒன்று யானையின் கண்ணில் பட்டது.

அங்கே, கடையின் உரிமையாளர் ராஜேந்திர துகர், மறுநாள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க ரூபாய் நோட்டுகளை கட்டுகளாகக் கட்டி வைத்திருந்தார்.

தனது உணவுத் தேடலில் ஒரு நல்ல உணவைக் கண்டுபிடித்ததாக நினைத்த யானை, பணக் கட்டுகள் வைத்திருந்த பகுதிக்குச் சென்றது. அங்கு 26 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகளும், ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

அங்கிருந்து யானையை விரட்ட அப்பகுதி மக்கள் செய்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கடையின் உள்ளே சென்ற யானை சிறிது நேரம் கழித்து திரும்பிச் சென்றது.

அப்போது கடைக்குள் சென்ற ஊழியர்கள், யானை ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நோட்டுகளை வாந்தி எடுத்திருந்ததைப் பார்த்தனர். அங்கிருந்த ரூ.26 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காணவில்லை. கடைக்குள் இருந்த அரிசியையும் யானை எடுத்துச் சாப்பிட்டு சென்றதையும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

யானைகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும், மக்களால் அபகரிக்கப்பட்டுவிட்டதன் எதிரொலிதான் இந்த சம்பவங்கள். யானைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் அபகரித்துக் கொண்டு, தங்களது வாழ்விடங்களுக்கு யானைகள் வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் என்று அம்மாநில வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானை, பசிகொண்டதால் பணத்தின் ருசிகண்டது. ஆனால், 10 ரூபாய் நோட்டு மட்டும் அதற்குப் பிடிக்கவில்லை போலும்!

April 23, 2017

சிரி... சிரி... சிரி... சிரி...


• மானேஜர்: உங்களுக்கு புரமோஷன் வேணும்னா ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுமையா இருக்கணும். இருப்பீங்களா?
குமாஸ்தா: ஸாரி சார்! என்னால அவ்வளவு நாளெல்லாம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இருக்க முடியாது!


• ஏட்டு:  ஏம்பா, இந்தக் காலத்தில் போய் சைக்கிள் திருட்டுப் போனதைப் பற்றி புகார் கொடுக்க வந்துவிட்டாயே?
நபர்:  சரிங்க சார்! அப்ப  வேறு சைக்கிள் வாங்க பண உதவியாவது பண்ணுங்க!


• "இது "லவ்' படம்தானே.... நீங்க திகில் படம்னு சொல்கிறீர்களே...?''
"படம் ஓடுமா ஓடாதாங்கிற திகில் இருக்கிறதே!''

• "என் சின்ன பையனுக்கு விரல் சூப்புற பழக்கம் இருந்துச்சு... பெரிய பையனின் டவுசரை அவனுக்கு மாட்டிவிட்டேன். இப்ப விரல் சூப்புற பழக்கம் அவனுக்கு இல்லை...''
"என்னடி சொல்றே?''
"டவுசர் லூஸா இருக்கிறதால, அதைக் கீழே விழாமல் இழுத்து இழுத்துவிட வேண்டியிருந்ததால் விரல் சூப்புறதையே விட்டுட்டான்!'


• "எனக்கும் என் காதலனுக்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்து ஆயிருக்குடீ''
"என்ன ஒப்பந்தம்?''
"என் கல்யாணத்துக்கு அவன் வரக்கூடாது; அவனோட கல்யாணத்துக்கு நானும் போகக் கூடாதுங்கிற ஒப்பந்தம்தான்!''


• "காலையிலே டிபன் சாப்பிட நினைச்சேன். கையில் காசில்லாமல் போச்சு.''
"அப்புறம்?''
"டீ  பன் சாப்பிட்டேன்!''



• "உங்க பையன், இப்ப ஒழுங்கா "ஹோம் வொர்க்' செய்யுறானே? எப்படி?''
"ஹோம் வொர்க்' செய்யலேன்னா... "செல்ஃபி கட்'னு சொல்லி வெச்சிருக்கேன்''.

• "ஸ்கூலுக்கு போறதாகச் சொல்லிட்டு ஊர் சுத்தறீயே?''
"இல்லையே? எங்க ஸ்கூலுக்கு ஊரைச் சுத்தி தான் போகணும்!''

மலேசியாவை சிவகங்கை மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்த வட்டவழங்கல் அலுவலருக்கு கோடான கோடி நன்றி!


மலேசியா நாட்டை சிவகங்கை மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்த வட்டவழங்கல் அலுவலருக்கு சிவகங்கை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப் படுகிறது.
கடந்த 1-ந் தேதி ஸ்மார்ட்கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அரசு சார்பில் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், ஆதார் கார்ட் ஆகியவற்றில் தவறுகள் இல்லை என்றால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். அந்த அளவிற்கு சூப்பராக 'எழுத்துப் பிழை இல்லாமல்' இருக்கும். பல அடையாள அட்டைகளில் யாருடைய புகைப்படம் இருக்க வேண்டுமோ அவர்களுடையது கண்டிப்பாக இருக்காது. பக்கத்து வீட்டாரின் புகைப்படம் இருப்பது இன்னும் தமாஷாக இருக்கும்.

வழங்கல்
பெயர் மாற்றம், புகைப்பட மாற்றத்தைத் தாண்டி இப்போது மற்றொரு நாட்டையே சிவகங்கை மாவட்டத்தின் கீழ் கொண்டு வந்துவிட்டனர் நமது சிவகங்கை மாவட்டம் திருப்புத்துர் வட்ட வழங்கல் அலுவலர்.

  ஸ்மார்ட் கார்ட்
அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். சுரேஷ் என்பவர் ஸ்மார்ட் கார்டு பெற்றுள்ளார். அந்த அட்டையில் "தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, குடும்ப அட்டை, குடும்பத் தலைவரின் பெயர்: ஆர். சுரேஷ், தந்தை/கணவரின் பெயர்: இராமசாமிகுருக்கள், பிறந்தநாள்: 30/06/1968" என்று இருந்தது.

சிவகங்கையில் மலேசியா
இதுவரை எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. முகவரியை பார்த்தப் பிறகுதான் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். முகவரியில் 36, கோலாலம்பூர், மலைசியா, முறையூர், சிவகங்கை, தமிழ்நாடு, 630501 என்றிருந்தது. சிவகங்கையில் எங்கே இருக்கிறது மலேசியா, கோலாலம்பூர் என்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எல்லோரிடமும் கேட்டு சுற்றி வருகிறாராம் சுரேஷ்.

 நன்றி
மலேசியா கோலாலம்பூரை சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டு வந்த சிவகங்கை மாவட்டம் திருப்புத்துர் வட்ட வழங்கல் அலுவலருக்கு மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்...

April 19, 2017

சிரி... சிரி...


* "கெட்டதிலும் நல்லது நடந்திருக்கே. என்ன சொல்றீங்க?''
"கிளினிக் வாசல்லயே உங்கள நாய் கடிச்சிருக்கு. உடனே டாக்டரை பார்த்திடலாம்ல.''
"யோவ்... அந்த டாக்டரே நான்தான்ய்யா!''

* "செல்லம் உன் கல்யாண நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருடா.''
"கார் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல?''
"கவரிங்ல கார் வராதும்மா''

* கணவன்: இன்னுமா காலையில சமையல் ஆகலை? நான் ஓட்டலுக்குப் போறேன்.
மனைவி: 5 நிமிஷம் இருங்கோ
கணவன்: அதுக்குள்ள ஆயிடுமா?
மனைவி: இல்லை. நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வரேன்.

* "வீட்டிலே பொரியலை கூட்டா வைச்சுக்குவேன். கூட்டை சாம்பாரா ஊத்திக்குவேன். சாம்பாரை ரசமா குடிச்சுக்குவேன்.''
"அப்போ ரசத்தை?''
"கை கழுவி விடுவேன்.''

April 17, 2017

ஏட்டைய்யா இங்கிருந்த ரோட்டை காணமய்யா: வடிவேலு ஸ்டைலில் போலீசில் புகார்


தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்று காணாமல் போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒரு படத்தில் வைகைப்புயல் வடிவேலு கிணற்றை காணவில்லை என்று புகார் கொடுப்பார். அதே ஸ்டைலில் தெற்கு டெல்லியை சேர்ந்த மக்கள் சாலை ஒன்றை காணவில்லை என்று சி.ஆர். பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாலையை காணவில்லை என்று அவர்கள் தங்களின் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையை காணவில்லை என்று கல்காஜி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலக்நந்தா பகுதியை சேர்ந்த 33 பேர் கொளுத்தும் வெயிலில் காணாமல் போன சாலையை தேடினார்கள். மேலும் சாலையை நேற்று மாலை 6 மணிக்குள் கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

1.5 கிலோமீட்டர் வரையிலான அந்த சாலை வரைபடத்தில் உள்ளது நிஜத்தில் இல்லை என்கிறார்கள் மக்கள். அந்த இடத்தில் அரசு பள்ளி ஒன்றும், டிடிஏ காலனியும் வந்துவிட்டதாம்.

April 15, 2017

படத்தில் நடிக்கிறேன், என் ஹீரோயின் நயன்தாரா: சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் அறிவிப்பு


ஹீரோவாகப் போவதாகவும், தனக்கு ஜோடி நயன்தாரா என்றும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் திரையுலக பிரபலங்கள் வருவது புதிது அல்ல. இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணனே விளம்பரத்தில் நடிக்க வந்தார்.
தனது கடையின் பிராண்ட் அம்பாசிடரான சரவணன்.

தமன்னா, ஹன்சிகா
கோலிவுட்டின் இரண்டு இளம் ஹீரோயின்களான தமன்னா, ஹன்சிகாவுடன் விளம்பரப் படத்தில் வந்தார் சரவணன். விளம்பரத்தில் நடனம் ஆடவும் முயற்சி செய்திருந்தார். இந்நிலையில் அவர் சோலோவாக ஹேர்ஸ்டைலை மாற்றி புதிய விளம்பரத்தில் வருகிறார்.

மீம்ஸ்
சரவணனை விளம்பரத்தில் பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டனர். கடன் வாங்கியாவது உன் கடையில துணி வாங்குறேன்யா ஆனால் தயவு செய்து விளம்பரத்தில் மட்டும் நடிக்காதையா என்று மீம்ஸ் போடப்பட்டது.

ஆதரவு
விளம்பரத்தில் சரவணன் வந்ததை பார்த்த சிலர் உழைப்பால் முன்னேறியவர் அவர் கடையை விளம்பரப்படுத்த விளம்பர படத்தில் நடிப்பதில் என்ன தவறு என்று கேட்டு அவருக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தனர்.

ஹீரோ
திருச்செந்தூர் முருகனை இன்று தரிசித்த சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் விரைவில் படத்தில் நடிக்கவிருக்கிறேன். என் ஹீரோயின் நயன்தாரா என்றார்.

April 11, 2017

விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தை கிண்டலடித்த கேடி ராகவன்... சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்


டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டத்தை பாஜகவைச் சேர்ந்த கேடி ராகவன் பேஸ்புக் பக்கத்தில் கிண்டலடித்து பதிவிட்டார்.

பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 29 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள்.

இதனை கிண்டலடிக்கும் வகையில் " எங்கே போகிறோம்...? தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்கவந்தால் ஆடையை அவிழ்த்து காட்டி சவால்....... கடனை திருப்பி கேட்டால், அதற்க்கும் சாலையில் ஆடையை அவிழ்த்து சவால்... #50ஆண்டுகழகஆட்சிகளின்சாதனைகள்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. அது தொடர்பான சில பேஸ்புக் பதிவுகள்:



சட்டமன்றத்தில் சாமியார்
நிர்வாணமாக போராடுவது தவறு - கே டி ராகவன் சொல்றான்.
நிர்வாண சாமியாரைச் சட்டமன்றத்தில் உரையாற்ற விடுவது மட்டும் சரியா கேடி?


பரம்பரைக்கு தகுதியில்லை
நிர்வாணமாகப் போராடுவது தவறு - கே.டி.ராகவன் நிர்வாணம் குறித்துப் பேச, உங்கப் பரம்பரைக்கே தகுதியில்லை ராகவா!




முதலாளிகிட்ட சொல்லு
தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராடுவது தவறு - கே.டி.ராகவன்
அத உன்னோட முதலாளி கிட்ட சொல்லுய்யா ... ...


வார்ப்பு அப்படி
நிர்வாணமாகப் போராடுவது தவறு - கே.டி.ராகவன்
ராகவன் ஜி உங்களைப்போன்ற ஆன்டைகளுக்கு ஆன்களின
நிர்வான வாழ்வாதார போராட்டம் தவறாகத்தான் தெரியும் ஏன்ன உங்க வளர்ப்பு&வார்ப்பு அப்படி...!


அகோரி போல நிர்வாணமா?
நிர்வாணமாக போராடுவது தவறு -
கே டி ராகவன்.......
நிர்வாணமா போராடுறது தான் உங்களுக்கு பிரச்சனையா?......
அகோரி போல நிர்வாணமா அலைஞ்சா காலில் விழுந்து கும்பிட மோடி ஓடோடி வந்திருப்பார் இல்ல.......



March 22, 2017

தூங்குறதுக்கு சம்பளம் 9 லட்சமாம்! என்ன தலைசுத்துதா? உள்ளே படிங்க!


தற்போதைய உலகத்தில் விஞ்ஞான வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், போன்றவற்றால் மனிதன் வாழ்க்கை மிகவும் வேகமாக செல்கிறது.

எப்போதும் பரபரப்பான வாழ்க்கையில் தூக்கம் என்பதை மறந்தே போய்விட்டான் மனிதன். அப்படியே தூங்கினாலும் சிலருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அதே போல் சில பேருக்கு வேலைக்கு சென்றால் தூக்கம் வந்துவிடும். ஆனால் தூங்குவதே வேலை என்றால்? கசக்குமா, கரும்பு தின்ன கூலியான்னு கேட்கிறீங்க புரியுது.

தூங்கும் வேலையை சிறப்பாக செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். அது எங்கே தெரியுமா?

சீனாவில் பிரபல உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘‘நாவ் பாய்ஜின்’’ தான் இந்த அரிய வாய்ப்பை வழங்குகிறது. சீன வலைத்தளங்களில் உலகின் மிக சொகுசான வேலை என்ற பாராட்டையும் இது பெற்றுள்ளது.

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிறுவனத்தின் பொருட்களை உட்கொண்டு, தூக்கத்தில் அது எவ்வாறு செயல்படுகிறது என்று சோதித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது சீனாவில் இந்த பிரபலமடைந்து வருகிறது. தற்போதைய உலகில் தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்தே தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

March 3, 2017

சி ரி... சி ரி... சி ரி... சி ரி...


வீட்டுக்காரி: என்னம்மா! டி.வி. மெகா சீரியல் கதையைச் சொல்ற?

வேலைக்காரி: இன்னிக்கு சொல்றதுக்கு எதுவும் ஊர் வம்பு இல்லை அதான்.

வீட்டுக்காரி: ?????

 ""நம்ம கல்யாண கேசட்டை ஏன் அடிக்கடி போட்டுப் பார்க்குறீங்க?''

""நான் கடைசியாச் சிரிச்சதை பார்த்தேன்.''

""இவருக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கு, டாக்டர். எப்படியாவது சரிபண்ணுங்க.

""இவருக்கு நீங்க சொந்தமா?''

""சொந்தம் எதுவுமில்லை. என்கிட்டே வாங்கின கடனை மறந்துட்டார். அத வசூல் பண்ணத்தான் டாக்டர்.''

டாக்டர்: போஸ்ட்மார்ட்டம் பண்ணறதுக்காக இங்கே ஸ்ட்ரெச்சர்லே ஒரு பாடி இருந்ததே நீங்க பாத்தீங்களா?

அவன்: நான்தாங்க அது.

ஆசிரியர்: தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இதிலிருந்து என்ன தெரியுது?

மாணவன்: நீங்க எதையோ விதைச்சிருக்கீங்கன்னு தெரியுது, சார்.

""இலவச கல்யாண விழாவுல நாலு பெண்கள் எக்ஸ்ட்ரா வந்துட்டாங்க. ஜோடி கிடைக்கலை.''

""ம்... அப்புறம்?''

""தலைவர் கூலா தாலி கட்டிட்டார்.''

""தலைவர் என்ன ஊழல் செய்யும்போது நான் ஒரு சாதாரண குடிமகன்னு சொல்லி ஊழல் செய்யறார்?''

""பப்ளிக்கா ஊழல் செய்றாராம்.''

""இந்தத் தேர்தல்ல நான் ஜெயிக்கற மாதிரி விடியற்காலைல கனவு கண்டேன். பலிக்கும்தானேடா?''

""தலைவரே, நான் நம்பின பழமொழி இது ஒண்ணுதான். அதுவும் போச்சா. சே.''

January 30, 2017

ரஜினி சார் இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!


ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை

அவற்றில் சில துளிகள்…
முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார்! மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார்.

சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு!
அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு!

படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு!

பாபா-ல மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு!

லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு!
இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பார்க்குறீங்க…?

தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குறீங்களா?

இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா?

அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா?

இப்ப திருப்தியா? போதாது என்றால் சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் தன் பேத்தி வயதில் இருக்கும் பெண்களுடன் நடித்து தமிழர்களை மகிழ்விப்பார்.

ஆனா, அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேக்க போறீங்க நீங்க.

நன்றி கெட்ட உலகமடா இது..

நெட்டிசன்களின் குறும்பு செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது.

January 8, 2017

சின்னம்மாவா? சின்ன அம்மாவா?- சசிகலா முதல்வர் ஆனால்!


அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சர் ஆவார் என இப்போதே பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை அவர் முதலமைச்சரானால், ஊருக்குள் என்னென்ன நடக்கும்னு சும்மா ஒரு கற்பனை. கற்பனை மட்டும்தான் பாஸ். ஏன்னா இதைவிட பெருசாகக்கூட ரியல்ல நடக்கலாம் ஆங்க்...

சசிகலா முதலமைச்சர் ஆனதுமே, பாரதப் பிரதமர்கிட்ட ஒரு மேட்டரை சொல்றதா இருந்தாலும் சரி! பஞ்சாயத்து போர்டு  பிரசிடென்ட் கிட்ட ஒரு மேட்டரை சொல்லுறதா இருந்தாலும் சரி! கடிதம் எழுதும் முறையானது முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நேராக அவரவர்களின் வீட்டுக்கே சென்று 'வலியுறுத்தும்' முறை அமலுக்கு கொண்டு வரப்படும்.

தன்  முதல் மேடைப்பேச்சிலேயே இந்தியத் துணைக்கண்டத்தையே வியக்கவைத்த மாபெரும் பேச்சாற்றலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, சசிகலாவிற்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அ.தி.மு.க. தொண்டர்களால் கோரிக்கை வைக்கப்படும். அதில் ஒரு குழு கிராமி விருதுக்கும் சசிகலாவின் பெயரைப் பரிந்துரைத்து 'கிலி' ஏற்படுத்தும்.

வாய் திறந்து பேசாமலேயே பல சாதனைகளைப் புரிந்த மிஸ்டர் பீன், சார்லி சாப்ளின் ஆகியோரின் புகழ்கள் ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் தவறாது நினைகூறப்பட்டு பாராட்டப்படும். அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க கழகத்தினர் சார்பாக தினசரி பாடம் எடுக்க வழிவகைகளும் செய்யப்படும்.

ஜெயா டிவியில் 'இன்னோவா' நாஞ்சில் சம்பத் தலைமையில் 'சின்னம்மாவா? சின்ன அம்மாவா? எப்படி அழைக்கவேண்டும் கழகம்' என்கிற டாபிக்கில் தீவிர பண்டைத்தமிழ் இலக்கிய பட்டிமன்றமும் நடத்தப்படும்.

பொதுச்செயலாளராக நியமிச்சாச்சு. முதலமைச்சராகவும் ஆயாச்சுனா தொண்டர்களுக்கு வேற என்ன வேலை? அதான் அதேதான். ஒவ்வொருவராக வீட்டிற்குச் சென்று, 'சின்னம்மா பிரதமர் ஆகவேண்டும்' என வலியுறுத்துவார்கள். இதற்காகத் தன் எம்.எல்.ஏ. பதவியையும் தாரைவார்த்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் அறிக்கை விடுவார்கள். பிரதமர் ஆகுறதுக்கு எதுக்கு எம்.எல்.ஏ. பதவியைக் கொடுக்கணும்னுலாம் கேள்வி கேட்கக்கூடாது பாஸ். எல்லாம் அப்படித்தான்!

இதுவரை சினிமாவில் சின்னம்மா கேரக்டரில் வந்து கொடுமைப்படுத்திய நடிகைகளை எல்லாம் கூண்டோடு  கொத்தாக அள்ளிப்போட்டுக் கொண்டுவந்து, பாஸிட்டிவ் கேரக்டர்கள் கொடுத்து நடிக்க வைக்கப்படுவார்கள். சின்னம்மா பாத்திரத்துக்கு இருக்கிற களங்கமான இமேஜை மாற்றி அமைக்கும் பணிகளும் நடைபெறும்..

தமிழ்நாட்டின் தலைநகரமான 'சென்னை' டம்மியாக்கப்பட்டு, கொஞ்ச நாளைக்கு 'மன்னை' என்கிற பெயர் தொடர்ந்து  ட்ரெண்டிங்கில் இருக்கும்.

அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் மாதிரி புதுசா ஆரம்பிக்கிற எல்லாத் திட்டமும் சின்னம்மா பெயரில் சீரும் சிறப்புமாகத் தொடங்கப்பட்டாலும், படலாம்ங்கிறது சொல்லி வேறயா தெரியணும்.